Sunday, January 11, 2009

பசுத்தோல் போர்த்திய..

பசுத்தோல் போர்த்திய..
இந்தியாவில் பிறந்த ஆங்கிலப் புத்தகௌலகில் சிறப்பாகப் பேசப்படுமொரு பெண்மணி எழுதிய புத்தகங்களை இதுவரை படிக்கவில்லையே என்னும் வருத்தம் இருந்து வந்தது. இப்போது இல்லை..மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அவர் கார்டியனில் எழுதியபோது நான் இங்கிலாந்தில் இருந்தேன். "சே, என்ன மனிதர்கள் இவர்கள் ?"என்று தோன்றிவிட்டது.

அவர் எழுதியபோது பல தகவல்கள் வெளிப்படவில்லை. தாக்குதல் தீவிரவாதத்தனமானது என்பது மட்டும் டெளிவு. இது போதாதா, தீவிரவாதத்தைக் கண்டிக்க?

இதுபோன்றவர்களின் அதிமேதாவித்தனத்தை மெச்சாமல் அவர்களுக்கு உரிய இடத்தைக் காட்டுவது நல்லது என நினைக்கிறேன். எதற்காக இவர்கள் இப்படி எழுதிகிறார்கள்? புகழ்... மற்றவன் சாவிலும் சலசலப்பை ஏற்படுத்தித் தன் பெயர் வரவேண்டும் என்னும் தாரள குணம். இவர்கள் எழுதியது எவ்வளவு நல்ல கதையாக இருந்தால் என்ன ?ஏன் புலிட்சர் & புக்கர் பரிசு கிடைத்தல் என்ன? மனிதத்துவம் இல்லாதவர்களின் வார்த்தைகளைக் படிக்காமல் போனால் ஒன்றும் குறைந்துவிடுவதில்லை என நினைக்கிறேன்.

எனது நண்பர்களில் சிலர் இதனை ஏற்கவில்லை.
"குளத்தோடு கோவிச்சுகிட்டு கழுவாமப் போனா.."
" கலை, இலக்கியம் நாடு கடந்தது"
இது போன்ற வார்த்தைகள் வந்தாலும், வருமானாலும், நான் கவலைப்படப் போவதில்லை.

தன் வீட்டின் ஒரே வருமானமும் தனது பணி ஓய்வுக்குப் பின் நின்றுவிட, "தனது மகன் வேலைக்குப் போய்விட்டான், இனிமே கவலையில்லை" என்றும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த தந்தை, மகனின் ரத்தம் தோய்ந்த உடலைப் பெற்றுக்கொள்ளும்போது உதடு துடிக்க மராட்டியில் எதோ சொல்வது தொலைக்காட்சி அறிவிப்பாளரின் ஓசையில் கேட்கவில்லையெனினும்...

வலித்தது, உணர முடிகிறது. எந்த இலைக்கியம் அவருக்கு ஆறுதல் கூறிவிட முடியும்? எந்த இலக்கியம் இதைவிட பாதிப்பை ஏற்படுத்திவிட முடியும்?

பிற மனிதனின் வலியறியாது பேசுபவர்களை முற்றிலும் புறக்கணிப்பது, அவர்களுக்கு மரியாதை ( பெயர்/ நினைவு) தர மறுப்பது என்பது பைதியக்காரத்தனமாகப் படலாம். ஆனால், அவர்கள் முய்ற்சியே , நாம் அவர்களைப் பற்றி பேசுவதும், நினைப்பதும்தானே? அதனை தர மறுத்தால் அவர்கள் முயற்சியை முறியடித்ததாக ஆகுமல்லவா?

ஒரு வரம் முன்பு ஒரு வினாடி வினாவுக்கு தயார்செய்து கொண்டிருந்த என் மகன் இப் பிரபல ஆசிரியரது நாவல்கள் குறித்துக் கேட்டான். "தெரியாது" என்றேன். அவனையும், இக்கேள்விக்கு தெரியாது எனவே பதில் சொல்லவும் சொன்னேன். வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. இத்தீவிரவாதத்டை முறியடிக்கவேண்டும்.

ஹேமந்த் கர்கரே, சாலஸ்கர், மற்றும் பெயர்தெரியாத வீரர்களுக்கும், உயிர்துறந்த அப்பாவி மனிதர்களுக்கும் நாம் செய்யும் சிறு முட்டாள்தனமான வீரவணக்கம்.

மும்பை குறித்த பதிவுகள்

மும்பை குறித்து 26/11க்குப் பிறகு எழுதப்பட்ட வலைப்பதிவுகளை முழுதும் படிக்கவில்லையெனினும் சில பதிவுகளைக் காண நேர்ந்தது.
வீடு தீப்பிடித்து எரியும் போது பீடிக்கு நெருப்பு கேட்ட கதையாய் சிறிதும் சிந்திக்காமல் எழுதப்பட்ட சில பதிவுகளைக்குறித்து சில வார்த்தைகள்.
மும்பையில் சில வருடங்கள் இருந்ததால் அதன் வாழ்க்கையைக் குறித்து அறிந்ததாக எழுதும் இவர்கள் பார்வை வருந்தத்தக்கது.
சில கருத்துக்களைக் கவனிப்போம்.
1. விலைவாசி அதிகம். அதனால் "பெங்களூரில் சில ஆயிரங்களில் வசதியாக இருந்த என்போன்ற மத்திய தர வர்க்கங்கள் வீடு கிடைக்காமல் திண்டாடியதற்கு" மும்பைக்காரர்கள் ஏளனமாகப் பார்த்தனராம். என்ன கதை யிது? மும்பையில் பெரும்பாலும் மத்திய தர மக்கள்தான் வசிக்கின்றனர். பெங்களூரிலும், சென்னையிலும் இல்லாத ஆடம்பர வாழ்வா இவர்கள் இங்கு எல்லாரிடமும் கண்டுவிட்டனர்? மும்பை ரயிலில் அனுதினமும் செல்லும் மக்களைப்பார்த்தால் தெஇரியும் - எவரிடம் பணம் கொழிக்கிறது என்று. மக்கள் நெருக்கடி, இடமில்லாமை, பில்டர்களின் லாபி... மும்பையில் அதிகம். சென்னையில் இப்போது வேளச்செரியிலோ, பெங்களூரிலோ இப்போது இவர்கள் முன்பு போல வீடு வாங்கமுடியுமா?
2005 யில் மழை கொட்டியபோதும் பங்குச்சந்தை குறித்து மட்டும் பேசினராம்... மக்கள் எழுதுமுன் கொஞம் யோசிக்கவேண்டும். சராசரி மும்பைக்கர் மனித நேயம் என்பதை உலகிற்குக் காடிய நாட்கள் அவை. சான்றுகள் ஆயிரம். மீண்டு உயிர்த்து வருவது என்பது மும்பைக்கே உரிய தனித்தன்மை. 1993 குண்டு வெடிப்பிலும் சரி, 2005 மழையிலும் சரி, 2007 ரயில் குண்டு வெடிப்பிலும் சரி, மும்பை அடிபட்ட அளவு எந்த நகரும் அடிபடவில்லை. அகமதாபாத்-ஐ சேர்க்கலாம் ஒரு வகையில்.மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளையும் மும்பையில் இருந்து பார்த்தவன் என்ற அனுபவத்தில் இதை எழுதுகிறேன்.

"தாஜ் ஓட்டலில் உயர்மட்டத்தினர் மட்டும் அடிபட்டதற்கு இன்ன குதி குதிக்கின்றனர்" ஹலோ, என்ன கதை யிது? பழரசம் விற்பவன் சி.எஸ்.டி ரயில் நிலையத்தில் மரிக்கவில்லையா?எத்தனை ஏழைமக்கள் ரயில் நிலையத்தில் அநியாயமாகச் சாகவில்லையா? இவர்கள் எல்லாம் உயர் மட்டத்தினரோ?
தாஜ் குறிவைக்கப்பட்டது. அத்தோடு நரிமன் இல்லமும்...
என்ன பாதுகாப்பு மும்பையில்? மும்பையில் மத்தியதர மனிதன் கட்டும் வரி அதிகம். அடிப்படையான பாதுகாப்பு கேட்பது தவ்றாகப் பட்டது என்றால் என்ன சொல்ல?
மும்பை கட்டும் தனிநபர் , கார்பொரேட் வரிக்கு, அதற்கு என்ன கிடைத்திருக்கிறது?

காஷ்மீரத்தையும், குஜராத்தையும் கண்டுகொள்வதில்லையாம்... கார்கில் போர் நடந்த போது மும்பை மக்கள் செய்ததும் சிந்தித்ததும் தினசரி ரயில் பயணங்களில் நான் அறிவேன். கார்கில் சண்டையின்போது , விராரில் புதிதாக வந்த ராணுவ வீரர் குடும்பத்தை, அந்தனை நெரிசலிலும், இடம் கொடுத்து, மரியாதையுடன் தாதரில் இறக்கிவிட்ட எனது நண்பர்கள் கூட்டம் இன்னும் விரார் 7.40 மணி ரயிலில் செல்கிறது. ஒருசேரச் சென்று மும்பை சென்ட்ரல் நிலையத்தில் ரத்ததானம் செய்ய நின்றதும், கம்பார்ட்மென்டில் உண்டியல் குலுக்கி( அவர் ஒரு தகவல் தொடர்பு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் மேல் அதிகாரி), இராணுவ வீரகள் குடும்பத்தினருக்கு கணிசமான தொகை அனுப்பியதும் இன்றும் நினவிருக்கிறது. என்னால் அவர்களைக் காட்டவும் முடியும். ரயில் சினேகம் என்பது எதுவரை என்பதை மும்பை வாழ்வு காட்டும்.சராசரி மும்பை மனிதன் நெரிசலில் நசுங்கி மாள்கிறான் எனினும், மனிதநேயம் இங்கு இன்னும் இருக்கிறது, மும்பை குப்பையில்- மற்ற சுத்தமான நகர்ங்களை விட..
நான் இங்கு 20 வருடங்களாக வாழ்பவன். மும்பையை பல காரனங்களுக்காக வெறுக்கவும் முடியும். மதிகவும் முடியும்.
பணம் சும்மா கொட்டவில்லை இங்கு. உழைக்கிறார்கள். உழைக்க விடுகிறார்கள்.

மும்பையை வெறுக்கப் பலகாரண்க்கள் இருக்கலாம். அதற்காக, ஒரு நகரம் ரத்தம் சிந்தும்போது, இந்தியன் அல்லது ஒரு மனிதன் என்ற அளவிலாவது நின்று உதவிகரம் நீட்டாமல் இது நொட்டை இது நொள்ளை எனக் குற்றம் சொல்வது கீழ்த்தரமானது.

பி.கு. சராசரி மும்பைக்கர் இதையும் கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்கு ரயிலில் தொத்தி போய்க்கொண்டே யிருப்பான். அதுதான் அவனது வெற்றி.