Welcome! This blog is about the ripples on my mind pool by the impact of life. Your comments would be greatly appreciated
Friday, March 03, 2006
மும்பை சேரிகள் -II
ஷெர்வின் ஸை - தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவத்துறை மென்பொருள் வல்லுநர். அவரது பெற்றோர் பிலிப்பைன்ஸிலிருந்து கனடாவில் குடியேறிய சீனர்கள். சீனா குறித்தான ஆவலில் ,செர்வின் பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் சில தகவல்கள் கிடைத்தன.
பனிக்காற்று பேயாக வெளியில் அடித்துக்கொண்டிருக்க, அவரது அறையில் சூடாக காபி குடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தேன்.
" சீனாவைக் குறித்து அமெரிக்கா பயப்படுவதற்கு பொருளாதார வளர்ச்சி, மிலிடரி சக்தி மட்டுமல்ல, மற்றொரு விசயமும் இருக்கிறது" என்றார் செர்வின் காபியை உறிஞ்சியபடியே.
"சீனா, தனது ஏற்றுமதியில் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகையை டாலர் பாண்ட் (Bonds) களில் முதலீடு செய்து வைத்திருக்கிறது. மற்றொரு தொகையை தனது உள்நாட்டு வளர்ச்சிக்கு செலவிடுகிறது (infrastructure). சிறிது தொகையே , வேலைசெய்யும் மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்கு செலவிடுகிறது. குறைந்த வருமானத்தை பல ஆண்டுகளாகத் தந்துகொண்டிருப்பதாலும், பொருட்களின் விலையைக் குறைத்தே வைத்திருப்பதாலும், தனது நாணயத்தினை இன்னும் குறைவான மதிப்பீட்டில் வைத்திருப்பதாலும், சீனர்கள் குறைந்த சம்பளத்தில் வாழமுடிகிறது. எனவே, பெரும்பாலான சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்கள் தயாரித்துக்கொடுக்க முடிகிறது. இந்த competitive advantage பலவருடங்களுக்கு நீடிக்கும்.
திடீரென, சீனா US bondகளை சந்தையில் விற்கிறது என வைத்துக்கொள்வோம். டாலர் தடாலென வீழும். அமெரிக்க வியாபாரத்தை இது பெருமளவில் பாதிக்கும். short term தாக்கங்கள் மிக அதிகமாக இருப்பதோடு, உலகளவில் பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவை சந்திக்கும். எனவே நிக்கி, சிங்கப்பூர் பங்குச்சந்தை, ஹான்செங்,NYSE, LSE, NASDAQ என பல பங்குச்சந்தைகளின் சிம்ம சொப்பனம்.. இந்தக் காட்சி." என்றார்.
" எந்த அளவில் இது சாத்தியம்?" என்றேன்.
" ஒரு அணுகுண்டு தாக்குதலுக்கு சமம் இது. மிகப்பயங்கர விளைவுகளை ஏற்படுத்த முடியும். ஆனால் நடக்குமா என்றால் சந்தேகம்தான்."
" பின் ஏன் பயப்படவேண்டும்? சீனாவும்தான் இதில் அடிபடும்" என்றேன் கேணத்தனமாய்.
" சுதாகர். மரணத்தைவிட மரணபயம் கொடியது" என்றார் செர்வின் சிரித்தபடி.
கொஞ்சம் புரிந்தது. ஏழ்மை என்பது வளர்ச்சிக்கு மூலதனம். அது இருக்கும்வரை competitive advantage இருக்கும். எவனிடம் வியாபார பலம் இருக்கிறதோ அவன் உலகாள்வான். இது கம்யூனிசம் தழைக்கும் சீனாவானாலும், தன்னோக்கு அரசியல் தழைக்கும் சனநாயக இந்தியாவானாலும் ஒன்றுதான். ஏழை ஏழையாகவே இருக்கும்வரை, அவன் அதிகம் கேட்காமல், அடிப்படைத் தேவைகள் தீர்வதில் சந்தோஷம் அடைவதில், எனது B.M.W கார் செல்லமுடியும். அவன் கேட்கத் தொடங்குகையில், போட்டிக்கு ஆட்கள் வந்துவிட்டால், அவனது தேவைகளைக் குறைத்துக்கொள்வான். எனவே, நகரமயமாக்குதலும், எளிய மக்கள் அங்கு புலம்பெயர்தலும் தலைவலியாக இருந்தாலும் வியாபார நோக்கில் அது தேவைதான்.
சீனா, உள்நாட்டுக் கட்டுமாணப்பணிகள் செய்து, சேரிகளை ஒழிக்கிறது - ஷாங்காய், பீஜிங், குவாங்ஷோ போன்ற சில நகரங்களில் மட்டுமே. வெளிநாட்டு முதலீடு வரவேண்டுமானால் வறுமை தெரியக்கூடாது என்ற "நல்லெண்ணத்தில்".
நமது அரசியல்வாதிகள் இன்னும் மோசம். எவன் எக்கேடு கெட்டால் என்ன? சேரிகள் விமானநிலையமருகே இருந்தாலென்ன இல்லாட்டி போனாலென்ன என் வேலை நடக்கிறது - என்னும் மெத்தெனப் போக்கு.
இரண்டிலும் சேரி வாழ் மக்கள் அதே நிலைதான். சேரிகள் மாறியிருக்கின்றன சீனாவில் சில இடங்களில். இங்கு அதுவும் இல்லை.
.ஏன் மும்பையில் இத்தனை சேரிகள், ஏழ்மை என இப்போது கொஞ்சம் புரிகிறது எனக்கும்.
மும்பை சேரிகள்
___________________
உருப்படாதது நாராயணன் மும்பை சேரிகள் குறித்து எழுதியிருந்தார்.மணியனின் பதிவு சிறப்பாக அமைந்திருந்தது. சேரியில் வாழ்ந்திராவிட்டாலும், எனது மும்பை வாழ்வின் ஆரம்பக்காலங்களில் சேரிகளின் மிக மிக அருகில் வாழ்ந்ததாலும், அங்கு வாழும் மக்களின் சிலரின் நட்பு கிடைத்ததாலும் இச்சேரி வாழ்வு குறித்து ஓரளவு எனக்குத் தெரியும். சில இடங்கள் தவிர்த்து பெரும்பாலும் பொதுவாகச் சேரிகள் எனவே இக்கட்டுரையில் அழைத்திருக்கிறேன். முகமூடியின் பதிவுகளில் அவர் சுட்டியிருக்கும் பாதுகாப்பு நோக்கம்தான் இதற்கும்!
சேரிவாழ்வு குறித்து எழுதுமுன் சில விளக்கங்கள் அவசியம். மும்பை slum என்பதை சேரியென நான் இங்கு விளித்திருக்கிறேன். மும்பையில் சேரி என்பது குடில்/குடிசை என்றல்ல. வறுமை என்பதற்கும் எளிமைக்கும் உள்ள வித்தியாசம். சேரியின் வீடுகள் தகரடப்பாக்கள், திருடிக்கொண்டுவந்த செங்கல்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள் கொண்டு கன்னாபின்னாவென ஏதோ அமைக்கப்பட்ட ஒரு குடியமைப்பு. இவை ஒரு சீராகவும் அமைந்திருக்காது. ஏதோ ஒரிடத்தில் இருக்கவேண்டுமென்பதால் அமைக்கப்பட்டவை. ஒரு வீட்டின் கழிவுநீர் மற்றவீட்டினுள்வழி புகுந்து செல்வது சாதாரணம். "எப்பவேணுமானாலும் கலைக்கச் சொல்லலாம்" என்ற பயத்தின் அடிப்படையில் அமைந்தவை. பெரும்பாலான சேரிகள் சட்டத்திற்கு புறம்பாக, அனுமதிக்கப்படாத இடங்களில் அமைக்கப்பட்டவை. இக்குடியிருப்புகள் ஒரு மதம் /மொழி/இனம் சார்ந்தவர்கள் கூட்டாக அமைத்தவை. இவற்றிற்கும் கிராமங்களில் இருக்கும் குடிசைகளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.
எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால் சேரிகள் என்றால் வறுமையில் வாடுபவர்கள், அன்றாடங்காய்ச்சிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் வாழும் இடமல்ல. இவற்றின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களின் அடியூடு. தாராவி போன்ற இடங்களில் பெரும்பணம் புரளும் மனிதர்கள் சேரிகளில் வாழ்ந்து ஆதிக்கம் செய்து வருகின்றனர். பெரும்பாலான சேரிக்குடியிருப்புகள் அங்கு வாழ்பவர்களுக்குச் சொந்தமில்லை. அரசியல் செல்வாக்கு மிகுந்த லோக்கல் தாதாக்களின் கையில் இவை இருக்கின்றன. பலரும் அங்கு வாடகை கொடுத்து விலங்குகளுக்கும் கீழான நிலையில் கொத்தடிமைகள் போல வாழ்வதைக் கண்கூடாகக் காணலாம். இக்குடியிருப்புகளில் வாடகை முன்னமே தரவேண்டும் ( ஒரு வருடத்திற்கு இவ்வளவு என விவரம் இருக்கின்றது). சில இடங்களில் மாத வாடகை. தராவிட்டால் தாதாக்களின் தொல்லை.
பெரும்பாலான சேரிவாசிகள் புலம் பெயர்ந்தவர்கள். உ.பி, பீஹார், பங்களாதேஷ், தமிழ்நாடு இவைதான் சேரிகளின் அடையாளங்கள். இன அடிப்படையில் சில இடங்களில் சேரிகள் வளர்ந்தன. 1993 கலவரங்களுக்குப் பின் இவை கொஞ்சம் நீர்த்துப்போனாலும், மும்ரா, கோரேகாவ் , கோவண்டி போன்ற இடங்கள் இன்னும் இன/மத அடிப்படையிலேயே பலம் பெற்றிருக்கின்றன.
இங்கு காலம்காலமாக வாழும் மக்கள் சேரிகளிலிருந்து வளர்ச்சி பெறமுடியாது. மிக மிகக் கடினம். சேரிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகள் அவர்களை வளர விடமாட்டார்கள். அரசியல் பொருளாதார ஆதாயம். இவ்வளவு மலிவு விலையில் வோட்டுகளும், வேலையாட்களும் எப்படிக் கிடைப்பார்கள்? இந்த விகாரமான தன்னோக்கு அரசியல் மட்டுமே மும்பையின் அவல நிலைக்கும், இச்சேரிகளின் வளர்ச்சிக்கும் காரணம். இன்னும் சொல்லப்போனால் சில கட்சிகள் தங்கள் கூட்டணியரசு பலம்பெற்றிருக்கையில், மும்பையின் புறநகர்ப்பகுதிகளில் முன்பு வாழ்ந்திருந்தவர்களை விரட்டிவிட்டு, சேரிகளை அவர்கள் அடியாட்கள் அமைக்க உதவினர். குடிநீர், மின்சார இணைப்புகள் அக்குடியிருப்ப்புகளுக்கு விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டன. பின்னர் ஓவ்வொரு கட்சியின் ஆட்சிக்காலத்திலும், " இந்தக் குறிப்பிட்ட வருடத்திற்கு முன் வந்தவர்கள் சேரிகளில் இருக்க அனுமதிக்கப்படுவர்" என cut off வருடங்கள் வரையறுக்கப்பட்டன. 1970- 1990,95,2000 என வருடங்களின் வரையறுப்பு எல்லைகள் நீண்டுகொண்டே போயின. அனைத்தும் வோட்டுகளுக்காகவும், அடிமட்ட விலையில் அக்கட்சிகளுக்கு இம்மக்கள் வேலை செய்வதற்காகவும் மட்டும். இக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் தொழிற்பேட்டைகளும், அவர்களுக்குச் சொந்தமான ஆட்டோ ரிக்ஷாக்களுமே இம்மக்களுக்கு வேலைக்கான வழி. மீறமுடியாது... வேலைக்கான போட்டியும் அப்படி.
பொருளாதாரத்தில் இச்சேரிகள் கட்சிகளுக்கும் வணிகர்களுக்கும் எப்படி உதவுகின்றன எனப்பார்ப்போம்.
Monday, February 27, 2006
அறியாமையில் மறையும் வரலாற்றுப் பொக்கிஷம்
__________________________________________________
அகமதாபாத் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது.போன வாரம் சென்றபோது , மீண்டும் சொந்த ஊருக்குப் போகும் போது வருமே அந்த உற்சாகம் தொத்திக்கொண்டது. நாலு வருடங்கள் வாழ்ந்த ஊர். அதென்னமோ தெரியவில்லை.. இதுவரை நான் பார்த்த தமிழர்கள் அகமதாபாத் பிடிக்கவில்லை எனச் சொன்னதில்லை.
இத்தனைக்கும் மாசு அப்பிக்கிடக்கும் காற்றும், தூசியும், அனல் பறக்கும் கோடையும், ஒழுங்கு என்பதே இல்லாத சாலைப்போக்குவரத்தும் அகமதாபாத்தின் ஆழமான முத்திரைகள். இதெல்லாவற்றையும் தாண்டி அது ஈர்க்கிறதென்றால் -அது புதிர்தான்.
அகமதாபாத்தின் இஸ்லாமிய கட்டிடக்கலையின் வேலைப்பாடுகள் நெரிசல் மிகுந்த சாலையோரம் சர்வசாதாரணமாகத் தென்படும். புகழ்பெற்ற ஜூம்மா மசூதிச் சன்னல், ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் சின்னத்தில் இன்று ஜொலிக்கிறது. என்ன கொடுமையென்றால், வரலாற்றுச் சின்னங்கள் இப்படி அலட்டலில்லாமல் பொதுப்படையாகக் கிடப்பது என்பது இப்போது அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது என்ற நிலையாக மாறியிருப்பதுதான்.
ஊசலாடும் மினாரெட்டுகள் (swinging minarets) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரே மாதிரியான இரு மினாரெட் தூண்கள் மிக்க கலைவடிவுடன் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். ஒன்றில் ஆட்கள் ஏறி, அசைத்தால், இருபது அடி தூரத்தில் இருக்கும் மற்ற மினாரெட் ஊசலாடும்.. இந்த அதிசய மினாரெட்டுகள் அகமதாபாத்தில் பல இருந்தன. ஆங்கிலேயர் காலத்தில், இந்த அதிசயத்தின் ஆணிவேர் காண, அதனைத் தோண்டி நிரந்தரமான பழுதுகளை ஒரு மினாரெட் இணையில் (pair) ஏற்படுத்திவிட்டனர். மற்றொரு மினாரெட் செட் ஒன்று அகமதாபாத் காலுப்பூர் இரயில்வே நிலையத்தின் அருகே இருக்கிறது. இப்போதெல்லாம் ஏறி மினாரெட்டை உலுக்க முடியாது. கீறல்கள் விழுந்துவிடும் என தடை விதித்துவிட்டனர்.
அத்தோடு முடிந்தது அதன் பாதுகாப்பும், பராமரிப்பும்.. இருளடைந்து கிடக்கும் அம்மினாரெட்டுகள் அருகே இம்முறை சென்று பார்த்தேன். இரயில்வே பிளாட்பாரம் முடியும் எல்லையில் புதர்கள் மண்டி , வேலிக்குள் அடைந்துகிடக்கிறது மினாரெட் அதிசயம். அதன் அருகே இரயில்வே நிர்வாகத்தின் அலுவலகம்.. சோம்பலாக குழல்விளக்கொளியில் குளித்து நிற்க... நம்பினால் நம்புங்கள்.. இப்படி ஒரு அதிசயம் ஒரு விளக்கும் இல்லாமல் பேய் பங்களா மாதிரி இருளில் அழுந்திக்கிடக்கிறது.
ஜனவரியில் பிலடெல்பியாவில் நான் சந்தித்த ஒரு பெண், தனது பெற்றோர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றார். இந்த ஊசலாடும் மினாரெட்டுகள் பற்றிச் சொன்னபோது அவர் வியப்பில் ஆழ்ந்தார். " இப்படி ஒன்று இருக்கிறதா? யாரும் சொல்லவேயில்லையே? இரண்டு வருடம் முன்னால்தான் அகமதாபாத் போய் வந்தேன்" என்றார். இதுதான் நமது பொக்கிஷங்கள் குறித்த அறிவு. இதற்கு பிலடெல்பியா போகவேண்டாம். மும்பையில் அந்தேரி போனால்கூடப் போதும்.
அகமதாபாத்திலேயே பலருக்கும் இதுகுறித்துத் தெரியாது. " என்னமோ மசூதி அல்லது சமாதியாயிருக்கும்" என்பார்கள். இதுமட்டும் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ இருந்திருந்தால் சுற்றுலாப் பயணிகள் மொய்த்திருக்க எக்கச்சக்கமாக விளம்பரப்படுத்தி தூள் கிளப்பியிருப்பார்கள். மினாரெட்டுகளையும் நன்றாகப் பராமரித்திருப்பார்கள். ஹூம்..மினாரெட்டுகளுக்கு அதிர்ஷ்டமில்லை.
என்றுதான் நமக்கு "பழமை இருந்தநிலை" தெரியுமோ?
தேவை- பெற்றோர்களுக்கு ஒரு பள்ளி
__________________________________________
எனது மகனின் பள்ளியில் இன்று விசேட பயிற்சி முகம் இருக்கவே, அவனுடன் நானும் சென்றிருந்தேன்.( வீட்டுல இருந்து என்ன வெட்டிமுறிக்கிறீங்க? அவனையாச்சும் பள்ளிக்கூடத்துல விட்டுட்டு திரும்ப கூட்டிட்டு வாங்களேன்" -யார் குரல் என்பதை நான் சொல்லத்த்தேவையில்லை).
ஒரு துறுதுறு சிறுமி என் கவனத்தை ஈர்த்தது. அவளது அக்காவுக்கு பயிற்சி முகாம் போலும்.. தந்தையின் கை பிடித்து நின்றிருந்த குழந்தையின் கண்களில் ஒரு தயக்கம்..வேதனை..
" ஸே குட்மார்னிங் டூ டீச்சர்" தந்தை உரத்த குரலில் அக்குழந்தையை அன்புடன் வற்புறுத்த, அது முகத்தைத் திருப்பிக்கொண்டது. சாதாரணமான விசயம்தான்.. மனிதர் விட்டிருக்கலாம்.
அத்தனை பேர் முன்பாக அக்குழந்தையின் தோள்களை வலுக்கட்டாயமாகத் திருப்பினார். நெற்றி சுருங்கியதில் உலர்ந்த சந்தனப் பொடி கொஞ்சம் நொறுங்கி மனிதர் டீஷர்ட்டில் விழுந்தது. "ஐ ஸே.... ஸே குட்மார்னிங்" .. அந்த ஹால் முழுதும் கொஞ்சம் திரும்பிப் பார்த்தது. வசவு தொடங்கியது.
"எத்தனை தடவை சொல்லிக்கொடுத்திருக்கிறேன். ஸ்கூலுக்கு வந்தா எல்லார்கிட்டயும் சிரிச்சுப் பேசணும். ஹலோ ஆண்ட்டி, அங்கிள்னு சொல்லணும்னு? வாய்ல கொழுக்கட்டையா இருக்கு. சனியனே"
ஆசிரியை " விடுங்கள் சார். குழந்தைதானே. ஹலோ பேபி, கைஸீ ஹை தும்?" எனக் கொஞ்சிவிட்டு அவசரமாக அங்கிருந்து நடந்துவிட்டார்." இல்லேங்க. இதுக்கு இன்னும் ஒழுங்கா இருக்கணும்னு நினைப்பே வரலை. எப்படிப் பேசணும்னு தெரியலைன்னா என்ன படிக்கச்சு என்ன கிழிக்கப்போறா?" வசவு பாலக்காட்டுத் தமிழில் வலுத்தது.
அம்மனிதர் தனது மற்ற குழந்தையை பரீட்சை ஹாலில் பார்த்து விட்டு வரச் சென்ற பொழுதில், அவளை நான் அணுகினேன்.
" என்னம்மா? உம்பேரு என்ன?" எனக் கேட்டதில் அவள் சற்றே நிமிர்ந்து பார்த்தாள். உதடு துடித்தது. பேசவில்லை.
" என்னாச்சு உனக்கு? என்னவேணும்?" என்றேன்.
" எனிக்கு ஆத்யம் மூச்சா போணும்" என்றது குழந்தை விக்கி விக்கி.
"டாய்லெட் அங்கேயிருக்கு பாரு" எனக் காட்டியவுடன், அவசர அவசரமாக விரைந்த அக்குழந்தையைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.
குழந்தையின் தேவை புரியாத மடமனிதர்கள் , ஒழுங்கு சொல்லிக்கொடுக்கிறார்களாம்.. "ஹலோ, குட்மார்னிங், " எனச் செயற்கையாகச் சொல்லத் தூண்டுகிறவர்களுக்கு , தாய்மொழியில் குழந்தை தனக்கு என்ன வேண்டும் என்பதைச் வெளிப்படுத்துவதைக் கேட்க நேரமில்லைபோலும். குழந்தை தனது தேவைகளை வெளிப்படுத்துவதை அவமானமாகக் கருதுவது எந்தவகையில் டிசிப்ளின் ஆகிறது? இயற்கை உபாதையில் தத்தளிக்கும் ஒரு சிறுமி எப்படி சிரித்தபடி ஹலோ எனச் சொல்லமுடியும்? செயற்கையாகப் புன்னகைக்க ஒரு மலருக்குச் சொல்லிக்கொடுக்கும் விபரீதப் பாடங்களை எப்படி தணிக்கை செய்வது? பள்ளிக்கூடத்தில் ஒரு வகையான அழுத்தமென்றால், இந்த அரைகுறைப் பெற்றோர்கள் படுத்தும் பாடு..
பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் எனச் சொல்லிக்கொடுக்க எதாவது பள்ளிக்கூடம் இருக்கிறதா?
Sunday, February 26, 2006
வந்துட்டான்யா.... வந்துட்டான்யா...
__________________________________
ஜனவரி முழுதும் வெளிநாட்டுப் பயணங்கள். சரி முடிந்தது என நிமிர்ந்தால், இந்த மாத முழுதும் மீண்டும் உள்ளூர்ப் பயணங்கள். அரக்கப்பரக்க அமெரிக்கா சென்றதில் நண்பர்கள் பலருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. நமது திருமலைராஜனுடன் மட்டும் பேசமுடிந்தது -அதுவும் தொலைபேசியில். அடுத்த முறை ஒழுங்காகத் திட்டமிட்டுச் செல்லவேண்டுமெனத் தீர்மானித்திருக்கிறேன். (ஒவ்வொரு முறையும் இதே கதைதான்!)
அமெரிக்க விசா காலத்தீர்வையானதால் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. டாக்டர்.கோவர்த்தன் மேத்தாவிற்கே இன்ன பாடு படுத்தினார்கள் என்றால் என்னளவில் எப்படியிருந்திருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை. வெறுப்பேத்திவிட்டார்கள். "என்ன வேலை உனக்கு?" என ஆரம்பித்தவர்கள் " குரோமோட்டாகிராபி என்றாலென்ன? மாஸ் ஸ்பெக்ட்ட்ரோமீட்டர் என்றால் யார் அல்லது என்ன?எனக்குப் புரியும்படி சொல்லு" எனப் பாதுகாப்பான கூண்டில் மறுபுறமிருந்து ஒருவர் கேட்டதில் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். இரண்டு நிமிஷத்தில் சொல்லமுடிகிற விஷயமா அது? நான் உளற ஆரம்பித்ததும், என்னமோ என் தலையெழுத்து நன்றாக இருந்ததில் "இனிமே இந்த வரிசையில் பத்துவருடத்திற்கு வராதே" என முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள். கிளம்ப ஒரு நாள் இருக்கும்போது விசா கிடைத்ததால் பலருக்கும் முன்பே சொல்ல முடியவில்லை. பல்குத்திக்கொண்டு ஹாய்யாக இருந்த நேரத்தில் சிலரைக் கண்டு அறுத்து எடுத்திருக்கலாம்.. பிழைத்துப்போனார்கள் நம் நண்பர்கள்.
இந்தக்கூத்திற்கெல்லாம் முந்திய நாள் எனது நண்பனின் தொலைபேசி வந்தது. " லே மக்கா. நீ ப்ளாக் எல்லாம் எழுதுவியா?' என்றான். அவனுக்கு படிக்கிற பழக்கம் பள்ளிக்கூடத்திலேயே கிடையாது.வலைப்பதிவு பக்கம் எட்டிக்கூடப்பார்க்கமாட்டான். " ஆமாடே" என்றேன். " அதுல அமெரிக்கா பத்தி தப்பா எதனாச்சும் எழுதியிருக்கியா? இருந்தா அழிச்சுருல" என்றான். விழித்தேன்.
"தப்பான்னா?"
" இராக் , ஒசாமா பத்தி, அமெரிக்க சமூகத்தைப்பத்தி எதாச்சும் காட்டமா எழுதியிருந்தா விசா கிடைக்காதாம்." என்றான்.
'இதெல்லாம் ஓவர். கொஞ்சம் விட்டாபோதுமே, சி.ஐ.ஏ உக்காந்து வேலை மெனக்ககெட்டு "எவண்டா தமிழ்ல தப்பா எழுதியிருக்கான்னு" பார்த்துக்கிட்டிருக்கு-ங்கிற லெவல்ல வம்பு பரப்புவது தவறு' என அவனுக்கு எடுத்துச்சொன்னேன்.
மறுத்தான். "மக்கா, வலையில் வன்முறை, வம்பு பரப்புவது பத்தி படு சீரியசாக அமெரிக்கா கவனித்து வருகிறது. முக்கியமா அமெரிக்கர்களை வெறுக்கும் வகையில் எழுதப்படுவது, அமெரிக்க கலாச்சாரத்தை உதாசீனப்படுத்துவது போன்றவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். பாத்துடே" என்றான். என்னமோ, என் வலைப்பதிவு அவர்களுக்கு அறுவையாக இருந்திருக்கிறது போலும்.. விட்டுவிட்டார்கள்.
இந்த முறை விமான ரூட் - படு கேணத்தனமாக அமைத்திருந்தார்கள். போய் வந்ததும் டிராவல் ஏஜன்ஸியை ஒரு பிடி பிடித்தேன். மிலான் விமான நிலையத்தில் 4 மணிநேரம்... நியூயார்க்கில் 3 மணிநேரம் காத்திருப்பு.. டாம்ப்பா போக இப்படி தவளை மாதிரி தத்தி தத்திப் போனது ஒரு லூசுத்தனமென்றால், திரும்பிவந்தது இன்னும் பைத்தியக்காரத்தனம்.. பிலடெல்பியாவிலிருந்து நேரே மிலான்/பிராங்க்பர்ட் - மும்பை எனப் போவதை விட்டுவிட்டு, பிலடெல்பியாவிலிருந்து நேரே கீழே அட்லாண்டா ( 4 மணிநேரம்காத்திருப்பு)-மிலான் -மும்பை என ஒரு எலும்பு ஒடியும் பயணம்.. கொடுமை மிலான் விமானதளம் - கழிவறைகள் மும்பையை விட மோசம்.
பொதுவாக இந்த காத்திருப்பு நேரங்களில் கொஞ்சமாக ஆட்களைப் பிடித்து அறுத்து பொழுதுபோக்குவேன். எதாவது விமான நிலையத்தில் கொஞ்சம் லூசு மாதிரி ஒரு ஆள் உங்களோடு இலக்கியம்/ கவிதை/சமூகம் எனப் பேசத்தொடங்கினால் "நீ சுதாகர்தானே" எனத் தைரியமாகக் கேட்டுவிடாதீர்கள். என்னைப்போல பலரும் இருக்கிறார்கள் என்பதை மிலான் நிரூபித்தது.
அதுபற்றி அப்புறம் எழுதுகிறேன்.
Sunday, January 01, 2006
சாத்தான் ஓதிய வேதத்திலிருந்து
கிரிகேரியன் காலண்டர் புத்தாண்டை சீனர்களும், யூதர்களும் இஸ்லாமிய நாடுகளும் கொண்டாடுவதில்லை என்றார் வி.ஹெச்.பி பிரமுகர் ( அதானே பார்த்தேன்?). புத்தாண்டு கொண்டாடுபவர்கள் அனைவரும் ரோட்டில் சீட்டியடித்து, குடித்து ஆடுகிறார்கள் என்ற அளவில் அனைவரும் பேசியது வருத்தமளித்தது. முறைதவறி நடப்பவர்களை தண்டிக்கவேண்டுமென்பது சரி. அதற்காக கொண்டாடுவதே தவறென்பது எப்படி சரியாகும்? புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலாச்சாரம் போய்விடுகிறது என்பவர்கள் நவராத்திரி ஆட்டங்களின் பின் குஜராத்திலும் ,மும்பையிலும் கருக்கலைப்பு அதிகமாயிருக்கிறது என்ற புள்ளிவிவர ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதை எப்படி ஜீரணித்துக்கொள்ளப்போகிறார்கள்? கலாச்சாரச் சீரழிவு என்பது கொண்டாடுவதின் நடைமுறையாக்கலில் இருக்கிறது. கொண்டாட்டத்தில் அல்ல.
"கோயில்களில் நள்ளிரவு பூஜைகளும், விசேஷ ஆராதனைகளும் புத்தாண்டு தினத்ன்று நடப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது." என்றார் அவர். சரியானதே.புத்தாண்டு என்பது பண்டிகையல்ல ( கிறிஸ்துவர்களைத் தவிர்த்து). அன்று என்ன விசேஷமென கோயில்களில் கூட்டமென்பது நல்ல கேள்வி.
அறிவுறுத்தப்படவேண்டுமென்பது ஒத்துக்கொள்ளப்படவேண்டியதுதான். அதற்காக வலிந்து " கொண்டாடவே கூடாது' என்று சொல்வதை சில நாடுகளில் இருக்கும் பழைமை வாத தீவிரவாதத்துடன் சரியாகவே ஒப்பிடலாம். தனிமனிதனாகப் பார்த்து திருந்துவதென்பது சாத்தியம். அதற்கான வழிமுறைகளை அமைத்துக்கொடுப்போம். மதுக்கடைகளை தணிக்கை செய்வதும், 18 வயது நிறையாத மாணவ மாணவியர் கூத்தாடுவதை தடுப்பதும் அவசியம்.
பெரியார்தாசன் சொன்ன கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 'இன்னிக்கு இதைச்செய்தேன் எனச் சொல்வதைவிட இதைச் செய்யவிரும்புகிறேன் என திட்டமிடுவதாக நாட்குறிப்புகள் அமைவது நல்லது.' என்றார். சரியான ஆலோசனை.
"குடித்துவிட்டு கூத்தாடுவதும், ரோட்டில் கூவிக்கொண்டு போவதும், குப்பையாக்குவதுமாடா புத்தாண்டு?" என கறுப்புஅங்கி பூதம் கேட்டது சிந்திக்கவேண்டியது. அமைதியாக எதையும் ரசிப்பதென்பது நமக்கு தெரிவதில்லை. எதிலும் கூச்சலும், அமளியுமே நமக்கு கொண்டாட்டமெனத் தெரிகிறது போலும்.
ஒரு மாணவர் பொன்மொழி உதிர்த்தார் " கேர்ல் ஃப்ரெண்டோட சுத்தறதுதான் இன்னிக்கு முக்கியம்". என்ன தெளிவு?!
"போனவருஷம் இயற்கையின் சீற்றத்தில் தவித்தவர்களுக்கு ஒரு உதவியாச்சும் செஞ்சேன்னா , அதுதாண்டா புத்தாண்டு." என்றது பூதம். கொஞ்சம் ஓவர் என்றாலும், யோசிக்கவேண்டிய விசயம்தான்.
ஒரே ஒரு நபர் மட்டுமே கொஞ்சம் தெளிவாகச் சொன்னார் " போனவருடம் புத்தாண்டு உறுதிமொழியில், இரு குழந்தைகளை படிக்க உதவி செய்வேன் என எடுத்திருந்தேன். நிறைவேற்ற முடியலை. இந்த வருஷமாவது ஒரு குழந்தையை படிக்கவைக்கணும்-னு இருக்கேன்". இப்படி ஒருத்தர் சொல்வதற்காகவாவது, இத்தனை கும்மாளங்களை சகித்துக்கொண்டு ,ஒரு புத்தாண்டும் அதன் உறுதிமொழிகளும் வரவேற்கப்படவேண்டியவையே.
எல்லாம் சரி... இந்த அறிவுரைகளை அள்ளிவழங்கும் விஜெய் டி.வி , இன்றாவது மற்ற சேனல்கள் போல புத்தாண்டுநிகழ்சிகளில் இன்ன சினிமா நடிகர்/நடிகையுடன் பேட்டி, சினிமாப் பாடல்கள் என ஆபாசக்குப்பைகள் இல்லாமல், நாடக மேதை, விஞ்ஞானி, கணித நிபுணர், பொறியியல் நிபுணர் என ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினால், ஓதிய வேதத்தின் பின் இருப்பது சாத்தான் இல்லை என நிருபிக்கலாம். இல்லையென்றால் இது வெறும்
"ஊருக்குத்தான் உபதேசம்"
Saturday, December 31, 2005
ஒரு புத்தாண்டு பிரார்த்தனை
உமக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் நானும் தவறாது ஒரு புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதனை சரியாகச் செய்திட அருளும் எனக் கேட்கிறேன். நீவிர் ஒவ்வொருவருடமும் என்னைக் கைவிட்டுவிடுகிறீர். மனச்சாட்சியாக " நீதான் செய்யத்தவறுகிறாய்' எனச் சொல்லிவிடுகிறீர். போகட்டும்.
இந்தவருடம் சில வேண்டுதல்கள் மட்டும் முன்வைக்கிறேன். அதிகமில்லை. மூன்றே மூன்றுதான்.
1. எங்கள் அரசியல்வாதிகளில் ஒருவரையாவது மனிதனாக்கும்.
2. வருமான வரிக் கணக்கீடுகளைப் புரிந்து கொள்ளும் அறிவைத்தாரும்.
3. செய்தித்தாள்களில் சினிமா நட்சத்திரங்களின் அரைகுறை ஆடை அவலங்கள் மட்டுமன்றி செய்தியையும் வரவையும்.
சில உதிரிகள்.
1. எனது மகன் கார்ட்டூன் சேனல் தவிர மற்றதையும் பார்க்க வையும்.
2. ஒரு தொலைக்காட்சித் தொடரிலாவது கன்னத்தில் அறைவது, அழுவது என்றில்லாமல் ஒருநாள் வர வையும்.
3. போக்குவரத்து நெரிசலின்றி ஒரு நாளாவது நான் அலுவலகம் போக அருளும்.
எங்கே போய்விட்டீர்? ஹலோ? ஹலோ?...
Sunday, December 25, 2005
எதற்கும் இலக்கு- பெண்கள்
சமீபத்தில் காவலன் ஒருவன் காவல் நிலையத்திலேயே ஒரு பெண்ணை பலவந்தப்படுத்திய செய்தியும் பின்னர், மற்றொரு காவலாளி விமான நிலையமருகே காவல் நிலையத்தில் சேரிச்சிறுமியொருத்தியை பலவந்தப்படுத்திய செய்தியும் வந்து மக்களிடையே வெறுப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது.
இப்போது, சில நாட்களுக்கு முன், மும்பையிலிருந்து லக்னோ செல்லும் ரயிலில் ஒரு பெண்ணை, அவள் கணவன் கண்ணெதிரேயே சின்னபின்னப்படுத்திய குண்டர்களின் அட்டூழியம் நடந்திருக்கிறது. இது வரை அவர்கள் பிடிபடவில்லை.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு செய்தி.. பஞ்சம் வந்ததால் வாங்கிய கடனைத் திருப்பித் தர இயலாத விவசாயியின் மனைவியை வன்புணர்ந்த கொடுமை, மகராஷ்டிராவில் சில தாலுகாக்களில் நடந்ததாக வெளிவந்திருக்கிறது. கடன் கொடுப்பதும், திருப்பித்தருவதும் தொழில் முறை என்பது காலம் காலமாக விவசாயத்தையும், கடன் கொடுத்துதவும் தொழிலையும் செய்துவரும் சமூகத்தினர் நன்கறிந்த ஒன்று. இதுபோன்ற ஒழுங்கீனம் இருந்ததாக இதுவரை கேட்டதில்லை. மிக அடிப்படையான சமூக ஒழுங்கு' தொழில் தருமம் என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருவது அதிர்ச்சிக்குரியது.
ஆக, இராணுவம், தீவிரவாத வெறிச்செயல் என்பதெல்லாம் ஒரு வெளிப்பாடே தவிர, சமூகத்தில் உள்ளிருப்பது மிருகம்..மிருகம் மட்டுமே.
பெண்களும், குழந்தைகளும் சீரழிக்கப்படவேண்டும் என்பது எல்லாவற்றிலும் வந்துள்ள புதிய நெறிபோலும்.
என்ன நடக்கிறது இங்கே?
Saturday, December 24, 2005
பின்னூட்டங்களுக்கு யார் பொறுப்பு?
ஜெர்மனியும் விதிவிலக்கல்ல என இப்பதிவு கூறுகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா குறித்த முதல் பத்தியை விடுங்கள். இரண்டாம் பத்தியிலிருந்து இறுதிவரை படித்தால், கோட்டிக்காரத்தனம் என்பது உலகப் பொதுச் சொத்து எனப் புரிகிறது.
பத்ரி, ரவி ஸ்ரீனிவாஸ் போன்றோர் இதுகுறித்து விளக்கம் தந்தால் நல்லது
Friday, December 23, 2005
பாகிஸ்தானுக்கு இந்திய உதவி
குறிப்பு: இவ்வலைப்பதிவின் ஆசிரியர் திரு.டே பொருளாதாரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். நல்ல கட்டுரைகளை எழுதியுள்ளவர்.
Thursday, December 22, 2005
புதிய வலைப்பதிவு
புதியதாய் ஆங்கில வலைப்பதிவு ஒன்றை துவக்கியிருக்கிறேன். http://sudhathoughts.blogspot.com
சில தலைப்புகளை மட்டும் அங்கே உள்ளிடலாம் எனவிருக்கிறேன். நண்பர்களின் ஆதரவையும் பின்னூட்டத்தையும் நன்றியுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
க.சுதாகர்
Sunday, December 18, 2005
ஒரு கடிதம்..- A short story
'அம்மா...
நீ நல்லாயிருக்கியா?
எதிர்வீட்டு முத்துராசு நேற்றுதான் இங்கே வந்தான். அவங்க அப்பா அவனைக் கொண்டுவந்து விடும்போது
உன்னைப்பத்திச் சொன்னாரு. இராத்திரி தூக்கம்வராம விசும்பிக்கொண்டிருந்தவன் "அம்மா ஞாபகம் வந்துச்சு"ன்னு
விக்கிக்கொண்டே சொன்னான். சின்னப்பய. 'நானும் முதல்ல அப்படித்தான் இருந்தேன். போகப்போக சரியாயிடும்'-னு
சொல்லி சமாதானப்படுத்தி வைச்சேன். அவங்க அம்மா கொடுத்த புளி,உப்பு முளகாய் முட்டாயை சூப்பிக்கொண்டே
தூங்கிப்போனான்.
எனக்கு இப்போ பெரிய சுத்தியல் கொடுத்திருக்காங்க. முதல்ல கல் உடைக்க சின்ன சுத்தியல்தான். வெயில்ல உக்கார்ந்து, கொஞ்சம் பெரிய கல்லாப் பாத்து பொறுக்கி எடுத்து உடைக்கணும். வெயில் சுள்ளுன்னு உரைக்கும். போனவாட்டி எழுதினேம்லா..
இப்போ பெரிய சுத்தியல்.. பெரியவங்க கணக்கா தூக்கி அடிக்கணும். விலாப்பக்கம் முதநாள் வீங்கி வலிச்சுச்சு.
வெள்ளையம்மா, சாராயத்தை விலாவில தடவினா.. 'வலி குறையும்'-னு சொன்னா. இப்போ பரவாயில்லை.
வெள்ளையம்மா நல்லவம்மா. ராத்திரி தூங்கும்போது பக்கத்துல படுத்துக்குவா. 'வலிக்கா ராசா?'ன்னு உன்னமாதிரியே
கேட்டுட்டு, தலைய தடவி விடுவா. ரொம்ப வலிச்சா 'சேசுவே, கிருபையாயிரும்'னு' வேண்டிக்கச் சொன்னா. 'அவரும்
நம்மமாதிரியே கல்லு உடைச்சாரா?'ன்னு கேட்டேன். கிட்டத்தட்ட அது மாதிரித்தான் கஷ்டப்பட்டாருன்னு சொன்னா.
அவரும் பாவம்மா.
வெள்ளையம்மா ஒண்ணும் வெள்ளையாயிருக்கமாட்டாம்ம்மா! சும்மா பேருதான் அப்படி. ..அத மாதிரித்தான். அவள சில ராத்திரி மேஸ்திரி எங்கனயோ கூட்டிட்டுப்
போறாரு. அதுதான் கோவமா வருது.
நீ போனதடவ என் கடுதாசியப் பாத்துட்டு,மேல்வீட்டம்மா கிட்ட சொல்லி அழுதியாம்மா? சின்னராசு அம்மாகிட்ட
அவங்க பால் வாங்கும்போது சொன்னாங்களாம். அழாதம்மா. நான் நல்லா சம்பாரிப்பேன். பெரிய பெரிய கல்லெல்லாம்
உடைச்சு ஒரு நாளைக்கு பத்து ரூவா வரை சம்பாதிப்பேன் பாரு. அடுத்த தரவ உன்ன எப்பப் பாப்பேன்னு தெரியல.
இங்கேயிருந்து வடக்காம கூட்டிட்டுப் போவப்போறாங்களாம். ஆந்திராக் காரங்க இருக்காங்க. கோவில்பட்டி தெலுங்கு
மாதிரியில்ல இவங்க பேசற தெலுங்கு. கொஞ்சம் கொஞ்சம் வெளங்குது.
நேத்திக்கு பெரியய்யா வந்து சம்பளம் கொடுத்தாரு. அஞ்சு ரூவா. 'நீ இதுவர வேலைசெஞ்சதுக்கு'-ன்னு சிரிச்சுகிட்டே
சொன்னாரு. 'நான் வந்து ஒரு வருசம் ஆயிருச்சுய்யா'ன்னேன். 'அதுதான் தினமும் சோறு திங்கேல்லா?'ன்னு கேட்டாரு.
'போனவாரம்கூட மீன் வருவல் போட்டேம்ல்லால? வக்கணயாத் .தின்னுட்டு இன்னும் காசுகேக்கிய..மூதி'ன்னு திட்டினாரு. 'அம்மாவுக்கு பணம் அனுப்பணும்'னேன். 'அப்புறம் அனுப்பலாம்'-னுட்டாரு. போவட்டும் அவரு கிடக்காரும்மா. உனக்கு பணம் அனுப்புதேன். சரியா?
அய்யப்பன் தெரியும்லாம்மா? போன மாசம் ,நாசிக் பக்கத்துல, மலை ரோடு போடற வேலைல போனான். நாலுநாளு
முந்தி, பாறை உடைக்க வெடி வைச்சப்போ, கல்லு தெறிச்சு, மண்டை பொளந்து செத்துப்போயிட்டானாம்.
வெள்ளையம்மா சொல்லி அழுதுச்சு. அவன அங்கேயே எரிச்சுட்டாங்களாம். அவங்கம்மாகிட்ட இப்ப சொல்லாத.
முதலாளி என்ன வெளிய அனுப்பிருவாரு. அவங்க வீட்டுக்கு ஆயிரம் ரூவா கொடுக்கப்போறதா, மேஸ்திரி
வெள்ளையம்மா கிட்ட சொல்லிக்கிட்டிருந்தாரு. 'ரயில்ல போகும்போது தண்டவாளத்துல விழுந்து செத்துட்டதாப் பின்ன
சொல்லிக்கலாம். எதாச்சும் அழுகின அனாதப்பொணத்தைக் காட்டி இதான் அய்யப்பன்-ன்னு சொல்லி அமுக்கிரலாம்'ன்னு மேஸ்திரி பெரியய்யாகிட்ட சொன்னாரு. நான் காணாமப் போனா இப்படித்தான் உனக்கும் ஆயிரம் ரூவா கொடுப்பாங்க.பொணம் எதனாச்சும் காட்டுவாங்க. அதான் நான்னு நம்பிராத என்ன? ஆயிரம் ரூவா உனக்கு கிடச்சா நல்லதுதான்.என்னம்மா?
மணிக்குட்டி இப்போ பெரிசாயிருக்கும்லா? 'அது சொறிநாய்"ன்னு கதிரேசன் சொன்னதுக்கு, அவன் கன்னத்துல
அறைஞ்ச்சேன்னு மணிக்குட்டிகிட்ட சொல்லிரு.என்ன?
வடக்காம போயிட்டு பொறவு எழுதுதேன். இத எழுதற அக்கா நான் சொல்லச்சொல்ல அழுதுகிட்டே எழுதுது. அது
எதோ இஸ்கோல்ல படிக்காம்.
இப்படிக்கு
ராசுக்குட்டி.
பி.கு
ஆறு வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டிலிருந்து வேலைக்கு வந்த சிறுவர்களிடம் நாசிக் அருகே பேசியபோது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவு.
Tuesday, November 29, 2005
மஹாநாயக் -by Vishwas Patil ( contd)
______________________
தில்லி செங்கோட்டையில் 1857ல் பகதூர் ஷா, கடைசி முகலாய மன்னர் ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டதில் தொடங்குகிறது கதை.. அதே செங்கோட்டையில் 1940களில் மூன்று ராணுவ அதிகாரிகளை
அரசுத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி முன் நிறுத்துகிற காட்சி விரிகிறது. குற்றம்?
நேதாஜியின் படைக்கு ஆதரவாகச் செயல்பட்டதுதான். புலாபாய் என்ற பிரபலமான வழக்கறிஞர் அவர்களுக்கு
வாதாடுகிறார்.. ஒரு நாடகத்தனமான தொடக்கம் என்றாலும், விறுவிறுப்பு ஏறுகிறது. கொஞ்சம் "Freedom at midnight" வாசனை அடிக்கிறது.
பின் , சுபாஷ் சந்திரபோஸின் இளமைக்காலம் விவரிக்கப்படுகிறது. அவர் விவேகானந்தரின் அறிவுரைகளில் தூண்டப்பட்டு, ஒரு புரட்சிக்காரனாகவே பள்ளி,கல்லூரிகளில் ஆவதைக் காட்டுவதில் சற்றே செயற்கைத்தனம் தெரிகிறது. சுபாஷ், தனது நண்பர்களுடன் பத்ரிநாத் மலைக்கும் அப்பாலிருக்கும் ஒரு மலைக்குகையில் வசிக்கும் ஒரு துறவியைத் தேடிப்போகிறார். விவேகானந்தருடன் பழகியிருக்கும் அத்துறவி, சுபாஷிடம் " இக்காட்டில் உன் வலிமையை வீணாக்காதே. மக்களுக்காக , அவர்கள் விடுதலைக்காகப் போராடு" எனச் சொல்வதாகவும், அதன் பின் சுபாஷ் சந்திரபோஸ் கல்கத்தா மீளுவதாகவும் கூறப்படும் செய்தி ஆதாரமானதுதானா?எனச் சந்தேகம் வருகிறது. அத்துறவியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விஷ்வாஸ் பாட்டில் எடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வு முயற்சியில் நம்பிக்கை இருப்பினும், சில இடங்களில் உண்மைப் பெயர்களையும் இட்டிருக்கலாம்.. கதை கலந்த வாழ்க்கை வரலாறு என்று இருப்பதால், எது கதை, எது நிஜம் எனச் சில இடங்களில் புரிபடவில்லை.
மெல்ல மெல்ல அவர் காங்கிரஸில் தீவிரப் பிரசாரம் செய்வதும், காங்கிரஸ் ப்ரஸிடென்ண்ட் ஆவதும் காட்டப்படுகிறது. இந்த இடங்கள் வரலாறு பூர்வமாக கோர்வையாக எழுதப்பட்டிருக்கிறது. திரிபுரி காங்கிரஸ் மாநாடு , போஸ்- காந்தியின் கொள்கையளவிலான மறுதலிப்பு, அரசியல் பின்னணி.. வாசிக்க அருமை..
ஆனால், மசாலா இன்னும் சேர்ந்திருக்கிறது.. தென் மாநில ஆளுநராக இருக்கும் இராஜாஜி , உ.பிரதேசத்திலிருந்து வந்திருந்த ஒரு காங்கிரஸ் தலைவரை அடக்க எத்தனிக்கையில் " நீ சும்மாயிரு, லுங்கிவாலா" என அவர் இராஜாஜியை அவமதித்ததாக எழுதப்பட்டிருக்கும் காட்சி.. உண்மையாயிருக்க சாத்தியமில்லை. என்னதான் ஆவேசப்பட்டிருப்பினும், அந்நாளைய அரசியல்வாதிகள், தொண்டர்கள் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் இத்தகைய மொழி பேசியிருக்க சாத்தியமில்லை எனவே நினைக்கிறேன்.
எமிலி என்னும் ஆஸ்திரியப்பெண்ணுடனான காதல்.. சுபாஷின் வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமையவில்லை. மாறாக, ஒரு சாதாரண மனிதனின் யதார்த்த வாழ்வின் தாக்கங்கள் , வளர்சிதை மாற்றங்களெனவே இதனைக் காட்டியிருக்கிறர் விஷ்வாஸ் பாட்டில். அந்த அளவில் கதைக்களம் சிதையாமல், சுபாஷ் என்னும் மனிதனின் ஆசாபாசங்கள், அவரது சிறு தவறுகள் நேர்த்தியாக , யதார்த்தமாகச் சுட்டிக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
நேருவின் காந்திப் பித்து..ஆச்சார்யா கிருபளானி,கோவிந்த் வல்லப் பந்த் போன்ற மிதவாதிகளின் போஸ் எதிர்ப்பு, இடது சாரிகளின் முரண்,போஸின் தாய்நாட்டுப் பற்று , காந்தியுடனான போஸின் மோதல்கள்.. அலையலையாக வந்து, எவ்வாறு அவரது காங்கிரஸ் உறவை பிரித்தன. பின்னர் கல்கத்தாவிலிருந்து இரகசியமாக ஆப்கானிஸ்தான்/பெஷாவர் சென்று அங்கிருந்து ஜெர்மனியில் ஹிட்லருடன் தொடர்புகொள்ளும் இடம்.. அருமையாக விளக்கியிருக்கிறார்.
ஜப்பானிய ராணுவத்தினரின் சுபாஷ் குறித்தான வாக்குமூலங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இது நமக்கு அறியாத கதை. மணிப்பூர் இயக்கம் என்பது ஜப்பானிய ராணுவ வல்லுநர்கள் முதலில் திட்டமிட்டுப் பின் கைவிடப்பட்ட ஒன்று. சுபாஷ் ( ராணுவ திட்டமிடுதல் பற்றிய பயிற்சி இல்லாமல்) , அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை பற்றிப் பேசி, பிரதம மந்திரியை மணிப்பூர் ஆக்கிரமிப்பிற்குச் சம்மதிக்க வைக்கிறார். சுபாஷின் இந்திய விடுதலை வெறி, அவர்களை அசர வைக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தினருக்கு , பர்மாவில் கைப்பற்றிய ஒரு பகுதி, அந்தமான் நிகோபார் தீவுகள் முதலியன ஜப்பானியரால் கொடுக்கப்படுகின்றன. 'இந்தியாவில் கைப்பற்றும் அனைத்துப் பகுதிகளும் , போஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கே அளிக்கப்படும்.' என்னும் உறுதியும் கொடுக்கப்படுகிறது. அவர்களது நம்பிக்கைக்கு ஒரே காரணம்... சுபாஷ் சந்திர போஸ்.
'வரலாற்றில் எங்கும் இது போல 40 லட்சம் பேர் கொண்ட நட்புப் படைக்கு எவரும் இத்தனை மரியாதை தந்ததாகத் தெரியவில்லை.' என்கிறார் பாட்டில்.
இந்திய தேசிய இராணுவத்தின் ஒவ்வொரு முன்னேற்ற அடியையும் கவனித்து எழுதியிருக்கிறார். கொஹிமா,மணிப்புரி போர்க்களங்கள், பேச்சுக்கள், ஜப்பானின் சரணடைதலில் போஸிற்கு ஏற்பட்ட பின்னடைவு. .படிக்கையில் நெஞ்சு கனப்பது நிஜம். ( இதனை விவரிக்க விரும்பவில்லை. படித்துப் பாருங்கள். ஆசிரியரின் உழைப்பு தெரியும்)
டைபியில் (Teipei) , விமான விபத்தின் பின், அவரது உடலை இந்தியா கொண்டுசெல்ல அனுமதிக்காத தைவான் இராணுவ அதிகாரிகள் , அங்கேயே எரியூட்டியதாக எழுதியிருக்கிறார். இது, போஸின் மறைவு குறித்தான பல மர்மங்களையும், கட்டுக்கதைகளையும் வெளிக்காட்டும்... இதாவது, அம்மாமனிதனின் இறப்பு குறித்தான மர்மங்களை வேரறுத்து, உலகிற்கு அவரது தீவிர நாட்டுப்பற்றை வெளிக்காட்டட்டும். இச்சம்பவம் குறித்தான வரலாற்று உண்மைகளை விஷ்வாஸ் பாட்டில் தனது குறிப்பில் எழுதியிருக்கலாம்.
இப்பேற்பட்ட மகாமனிதரைப்பற்றி அதிகம் நமக்குச் சொல்லாத பாடத்திட்டத்தின் மேலும், அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அரசியல் கருதி பாரத ரத்னா விருது கொடுக்க நினைத்த நம் அரசியல் வாதிகள் மேலும் கோபம் வருவது நியாயம்தான்.
தமிழில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.அந்நூல் குறித்தான தகவல் எனக்குத் தெரியவில்லை. பத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இறுதியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பு indialog பதிப்பில் வெளிவந்துள்ளது.( ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்காக விஷ்வாஸ் பாட்டிலுக்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாகத் தகவல். அருந்ததி ராய் 3 கோடி வாங்கும்போது இது குறைவுதான் என்கிறார்கள் மராத்தி மொழிவல்லுநர்கள். இந்தக் கணக்கும் அரசியலும் நமக்குப் புரிவதில்லை!) இந்நூல் குறித்து மேலும் அறிய விரும்புவோர் இச்சுட்டியில் non fiction பகுதியில் காணலாம்.
மஹாநாயக்' -(Great Hero)-fictional biography of Subhash Chandra Bose
"சுபாஷ்! இரு. ரத்தம்!"
பதறிய ஜவஹர்லால், சுபாஷின் விரலில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க கைக்குட்டையைத் தேடினார்.
"பரவாயில்லை , ஜவஹர்" , கையை விலக்கிக்கொண்ட சுபாஷ் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்," உனக்கு ரோஜா மலரையும், எனக்கு முட்களையும் கடவுள் விதித்திருக்கிறார்".
இதுபோன்ற வாசகங்களைக் கொண்ட புத்தகங்களை மிகக்கவனமாகவே நான் படிப்பது வழக்கம். மசாலா அதிகமாகவும், சரக்கு குறைவாகவும் கொண்ட வரலாறு அடிப்படையாகக் கொண்ட பல புத்தகங்கள் இத்தகைய வாசகங்கள் கொண்டும், பளபளப்பான அட்டைகள், கறுப்பு வெள்ளை மங்கலான புகைப்படங்கள் கொண்டும், சந்தையாக்கலில் ஜல்லி செய்து வந்துவிடுகின்றன. 'வாங்கிவிட்டு "சே" என இன்னுமொருமுறை ஏமாற நான் முட்டாளில்லை.'என நினைத்து, புத்தகத்தைத் திரும்ப வைக்க எத்தனிக்கையில் ஆசிரியரின் பெயர் கொஞ்சம் தயங்க வைத்தது. திரு. விஷ்வாஸ் பாட்டில்...
மராத்திய எழுத்தாளர்களில் புகழ்பெற்ற ஒருவரான விஷ்வாஸ் பாட்டில் ,சாகித்திய அகாடெமி விருது 1992-ல் வாங்கியவர். அவரது ஜாதசதாதி(Jahadazadati)என்னும் மராத்தி நாவல் புகழுடன்,சாகித்ய அகாடெமி விருதும் வாங்கித்தந்தது. நடப்புகளை , மாற்றாமல் பதிவு செய்து, நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பின் , நிகழ்வுகளைக் கோர்த்து, கற்பனைவளம் சேர்த்து அவர் எழுதும் நாவல்கள் மராத்தியில் ப்ரசித்தி பெற்றவை.
சுபாஷ் சந்திர போஸ் என்னும் தியாகியை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியில் பார்ப்பதென்பது எளிதல்ல. நமக்குத் போஸ் குறித்து மிக மிகச் சிறிதளவே தெரிந்திருக்கிறது என்பதை இக்கதையைப் படித்தபின் உணரமுடிகிறது.
தன் வழக்கம்போலவே, போஸ் குறித்து எழுதுமுன் கடுமையான ஆய்வுகளை மேற்கொண்ட பாட்டில், தனது முன்னுரையில் , தான் சந்தித்த இடர்களை சிறிது குறிப்பிடுகிறார். சுபாஷ் சந்திரபோஸ்-ஸின் வாழ்க்கையும் அவரது மரணம் போலவே புதிராக இருக்கிறது. அவரது ஜெர்மன், ஜப்பான் உறவுகள் குறித்த கோப்புகள் ஜெர்மன், ஜப்பானிய, பாலி மற்றும் பெங்காலி மொழிகளில் இருப்பதாலும், பெரும்பாலானவை உலகப்போர் குறித்தான ரகசியத் தகவல்கள் அடங்கிய பெட்டிகளுக்குள் கிடப்பதாலும், மிகக் குறைவான வரலாற்று உண்மைகளே நமக்குத் தெரிகின்றன. அவற்றைத் திரட்டி, படித்துப் புரிந்து... கோர்வையாக ஒரு புத்தகத்தில் கொண்டுவர மிகக் கடின உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. அயராது உழைத்திருக்கிறார் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி.
சில நண்பர்களின் ஆதரவால், ஜப்பான் சென்று, உலகப்போரில் சுபாஷ் சந்திரபோஸுடன் சேர்ந்து போரிட்ட வீரர்களைச் சந்தித்து, அவர்களிடம் விவரங்களைச் சேகரித்திருக்கிறார். நண்பர்களின் துணையுடன் ஜப்பானின் நூலகங்களில் கிடைத்த ஆவணங்கள், அதன் பாராளூமன்ற கூட்டத்தொடர் கோப்புகள் போன்றவற்றையும் ஆதாரங்களாகச் சேர்த்திருக்கிறார். இதனூடே, பர்மாவில் இரண்டாம் உலகப்போரின்போது போரிட்ட அமெரிக்க வீரர்கள் பர்மாவிற்கு உலகப்போரின் 51ம் ஆண்டு நிறைவுக்கு வர, இவரும் அங்கே சென்று, அவர்களிடம் தகவல் சேர்த்திருக்கிறார்.
பர்மா தாய்லாந்து எல்லையில் சுமார் 1800 கிமீ தொலைவு அடர்ந்த காட்டுப்பாதையில் இந்திய சுதந்திர ராணுவம் முன்பு போரிட்ட இடங்களில் சென்று பார்த்திருக்கிறார்- தடயங்கள் மற்றும் இடங்களின் ஆதாரம் தேடியபடி. கொஹிமா, மணிப்பூர் அஸ்ஸாம் எல்லையில் போஸின் படைகள் போரிட்ட இடங்களில் தகவல் சேர்த்திருக்கிறார். மிக மிக அயராத, பொருள் மட்டும் காலச் செலவு வாய்ந்த ஆய்வுப்பணி.
இத்தனை ஆய்வுகளுக்கும் முயற்சிகளுக்கும் பின் இப்படியொரு கதை வந்திருப்பதை அறிந்த பின்.. வார்த்தைகளின் ப்ரயோகத்திற்காக மட்டும் அதனை விட்டுவைக்க மனம் வரவில்லை.
கதைக்குப் போவோம்
Saturday, November 26, 2005
நோபல்பரிசும் இந்தியரும் ( Nobel Prize and Indians)
___________________________
2005ம் ஆண்டிற்கான இயற்பியல்துறை நோபல்பரிசுக்காக கலாநிதி. சுதர்ஷன் அவர்களின் முயற்சியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டி ,நோபல் பரிசு பரிந்துரைக்குழுவிற்கு இந்திய மற்றும் அமெரிக்க அறிவியல் அறிஞர்களின் கடிதங்கள் சென்றிருக்கின்றன.நார்வே நாட்டின் இந்திய தூதுவரிடமும் இது குறித்து கருத்து கூறப்பட்டுள்ளது. நோபல் பரிசு பரிந்துரைக்குழு இக்கண்டனங்களையும் பின்னூட்டத்தையும் கவனித்து உருப்படியாக எதாவது செய்யும் என நம்புவோம்.
நன்றி ;ஹிந்துஸ்தான் டைம்ஸ்..
இது குறித்து முன்பு எழுதப்பட்ட வலைப்பதிவு
Monday, November 21, 2005
கஸாக்கிண்டெ இதிகாசம்: O.V.Vijayan's Novel
மிகச் சிறந்த கதைகள், சுய அனுபவத்தை கற்பனையில் ஏற்றி, கதாபாத்திரத்தை ஒரு குறியீடாக
அமைக்கையில் உருவாவதுண்டு. ழட்டுமொத்தமான கதைச் சூழல், பலப்பல கதாபாத்திரங்கள்
இவ்வாறு குறியீடாக அமைவது அரிது. அதிலும் அரிது, அக்கதைச் சூழல் , ஆசிரியர் முன்பு
தீர்மானித்திருந்த அமைப்பை விட்டு விலகி, 360 பாகை திரிந்து, பின்னும் சுய அனுபவம்
ஏறிய கதையாக அமைவது.
கஸாக்கிண்டெ இதிகாசம் sவ்வாறு அமைந்தது என்கிறார் ஓ.வி.விஜயன் முடிவுரையில்.
கதை அமைவது கஸாக் என்னும் மலைக்கிராமத்தின் சூழலில். கஸாக் என்னும் கிராமமே அவர்
1956க்குப் பிறகு ,கல்லூரி வேலை போனதும், தமக்கையாரின் ஆசிரியப்பணி அமைந்த
கிராமமான தசராக் கிராமத்தின் தாக்கமான பெயரில் உருவானது. அங்கு, அவருக்குப் பல
செய்திகளைத் தந்த நண்பர்களான முல்லா மற்றும் காசி (khazi) வார்த்தைகளை
நினைவுகூறுகிறார் விஜயன்.
கம்யூனிஸக் கொள்கைகளில் நாட்டம் கொண்டிருந்த ஓ.வி.விஜயன், இக்கதையை முதலில்
கம்யூனிசக் கொள்கைத் தாக்கத்தில் எழுத முயன்றார். உலகளவில் மார்க்ஸிச இயக்கத்தை
வெகு உன்னிப்பாகக் கவனித்து வந்தவர், பெல்ஜியப் புரட்சியில் Imre nagy
கொலைசெய்யப்பட்டதில், மார்க்ஸிச இயக்கத்தின் மேலிருந்த நாட்டத்தைக் கைவிட்டார். அதன்
அடிப்படையில், அவர் தனது புதிய கதையின் போக்கையே மாற்றியமைக்க நேர்ந்தது. ஒரு
முக்கிய திருப்பம் மலையாள இலக்கியத்தில் இக்கதையால் வந்ததென தனது முடிவுரையில்
குறிப்பிடுகிறார். அதுவரை மலையாள இலக்கியத்தில் எழுதிவந்த நடை கஸாக்கிண்டெ
இதிகாசத்தில் மாறியது. எளிய மலையாளம், நிகழ்வுகளை மாயநிகழ்வியல் பிiனணியில்
எழுதுவது போன்றவை பின்னிப் பிணைந்து முதன்முதலில் வந்தது இக்கதையில்தான். இதனைப்
பற்றிக் மலையாள இலக்கியம் அறிந்தவர்கள் கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
இக்கதை மலையாள இலக்கியத்தில் மிகப் பிரபலமான பின், பல தீவிர வாசகர்கள் மேலும்
கதை பற்றி உணர்வதற்கு அக்கிராமத்திற்கே சென்றனர். அங்குள்ள மக்கள், தங்களுக்குக்
கிடைத்த புது அடையாளத்தை ஏற்றுக்கொண்டதோடு, வருபவர்களின் இலக்கியத் தேடல்களைத்
தங்கள் வாழ்வின் பகுதியாகவே ஏற்றனர். ஆர்.கே.நாராயணனின் மால்குடி கிராமமும் இவ்வாறு
அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
தசராக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞன் , ஓ.வி.விஜயனை ஒருமுறை இறுகத்
தழுவி " கிளியேட்டன் மரிச்சுப்போயி" எனத் தேம்பியழுததாகக் குறிப்பிடும் விஜயன், கதையில்
வரும் அப்புக் கிளி என்னும் கதாபாத்திரம் அக்கிராமத்தில் இருந்த ஒரு நபரைக் கொண்டு
உருவாக்கப்பட்டதில்லை எனினும், கதையின் தாக்கம் அக்கிராமமக்களிடம், எந்த அளவிற்கு
உண்டாயிருந்தது என்பதற்கு இதனை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் எனக் குறிப்பிடுகிறார்.
கிராம மக்கள், கதையில் வரும் கதாபாத்திரங்கள் தங்கள் கிராமத்தில் இருக்கும்
மக்களைக்கொண்டே உருவாகின என்பதில் உறுதியாயிருந்தனர். இப்புதிய ஒப்பீடு, அடையாளம்
காணுதல், ஒரு cult உருவாதல் என்பது இதிகாசங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் ,
கஸாக்கிண்டெ கத ஒரு இதிகாசம் என்பதில் ஐயமில்லை.
கதையெனப் பார்த்தால், நாலுவரிகளில் அடக்கிவிடலாம். .
படித்த இளைஞன், பள்ளியில்லாக் கிராமமொன்றில், ஒரு ஆசிரியர் பள்ளி ஒன்றிற்கு வேலை
கிடைத்து வருகிறான். மதறாஸா மட்டும் உள்ள அக்கிராமத்தில், பழமைவாதத்தினைச் சமாளித்து
அவன் கல்வியறிவூட்ட முனைகிறான். இறுதியில் பழமைவாதம், செந்நாடா என்னும்
கூட்டமைப்பு வெற்றிகொள்கிறது. அவனை வேலையிலிருந்து நீக்குமுன், தானே ராஜினாமா
செய்துவிட்டு கிராமத்தை விட்டுச் செல்கிறான். கம்யூனிச சங்கங்கள் அவனுக்காக உதவ
முன்வந்து போரிடத் தயாராவதை மறுத்துவிட்டு, தான் எடுத்த முடிவின்படி ஊர்விட்டுச்
செல்கிறான்.
கதாபாத்திர வலிமை, காட்சியமைப்பு, சூழல், நேர்த்தியாக எண்ணங்களைப் ப்ரதிபலிக்கும் திறன்,
நடை இவையே இக்கதையிi வலிமை
மார்க்ஸிச அமைப்புகளுடனான அவரது அப்போது மலர்ந்த வெறுப்பு, கதையில் மார்க்ஸிய
அமைப்புகள் கதாநாயகனுக்கு உதவவரும்போது, அவi அவர்களுடன் பேசும் விதத்தில்
தெரிகிறது.
பத்மா என்னும் தோழியின் வருகை .. முதலாளித்துவத்தைக் குறித்து அவர்கொண்டிருந்த
அவநம்பிக்கையைக் காட்டுவதாகத் தோன்றுஸிறது. அதென்னமோ, இந்த பத்மா என்னும் பெயர்
பிரபலமான கதைகளில் வருவது என்ன ஒரு co incidence எனப் புரியவில்லை. சல்மான்
ரஷ்டியின் Midnight children படித்தவர்கள் இதனை உணரலாம்.
பத்மாவுடனான ரவியின் உரையாடல் இவ்வாறு போகிறது.
"நீ அந்த சாமியாரிணியைப் பார்த்தாயோ? அவள் உன்னைப்பற்றி விசாரித்தாள்"
" ஓ"
"அவளது அழகு பிரமிப்பூட்டுகிறது"
" அமெரிக்காவில் நீ லெஸ்பியனிசத்தை ஆதரிப்பதை இப்போதுதான் உணர்கிறேன்"
..... பத்மாவிடம் ரவி (கதாநாயகன்) அலட்சியமாகப் பேசுவதற்காகக் காரணம் தேவையில்லை.
ஆனால், அமெரிக்கா என்னும் காரணம் மிக மிக வலுவானது.
இறுதிக்காட்சியில் மழையின் வருணனை, பேருந்திற்காகக் காத்திருக்கும் ரவியின் காலடியில்
நெருடும் பாம்பு.. உடலெங்கும் மழைநீரில் புளகித்து, வளருவதாகத்தோன்றும் புற்கள் என
வளரும் . மாயத் தோற்றம்... விஜயனின் முத்திரை.. இதுபோலவே கோடச்சி என்பவள் வீட்டில் சாராயம் அருந்தும் வேளையில் ரவிக்கு உண்டாகும் மாயத்தோற்றம்.... சில சமயங்களில் எது கதையோட்டம், எது மாயத்தோற்றம் என்பது புரிபடவில்லை.
கஸாக்கிண்டெ இதிகாசம் படிக்க நினைப்பவர்களுக்கு, நண்பன் குரியாக்கோஸின்
அறிவுரையையே மீண்டும் சொல்கிறேன்.
"மூணுபிராயஸமெங்கிலும் வாயிக்கியா. அப்போழே கிட்டுள்ளு"
அன்புடன்
க.சுதாகர்
Sunday, November 20, 2005
ஓ.வி.விஜயன் -சிறுகதைகள்:
றுகதைகள் என எழுதிக் கலக்கியதோடு, ஒரு கார்ட்டூனிஸ்டாகவும் இருந்திருக்கிறார் என்பது
எனக்குப் புதிய செய்தி. அவரது நகைச்சுவையுணர்வு கதைகளில் கரு நகைச்சுவையாக (black
humour) இழையோடுவதை உணரமுடிகிறது.
Magical realism, myth எனப் பம்மாத்துப் பண்ணும் சில எழுத்தாளர்கள் ஓ.வி.விஜயனைப்
படிப்பது நல்லது. அவரது சிறுகதைகளைப் படித்ததும், தமிழ் எழுத்தாளர்களில் இருவரை எ
ண்ணத்தோன்றியது.
ஒன்று லா.ச.ரா
மற்றொருவர் தஞ்சை பிரகாஷ்
சில நண்பர்களுக்கு இந்த ஒப்பீட்டில் எதிர்ப்பு இருக்கலாம். இது எனது எண்ணம் மட்டுமே.
எண்ணெ (oil) என்னும் கதையில் ஒரு கிராமத்திற்கு மலைக்கு அப்பாலிருக்கும் வெளியிலி
ருந்து குடியேறிய வணிகக் குடும்பம் எவ்வாறு கலப்பட எண்ணெயால் அக்கிராமத்தையே மு
டமாக்க்குகிறது என்பதைப் பின்புலமாக அமைகிறது. அவ்வணிகக் குடும்பம் , கிராமத்து மக்
களுக்கு தேவையான பணத்தை வட்டிக்குக் குடுத்தும், மருத்துவ உதவியும் செய்து மக்களின்
நன்மதிப்பைப் பெறுகிறது. வணிகனின் கலப்பட எண்ணெயால் ஒர் தலைமுறையே முடமாகும்
போது, அவர்கள் பலனளிக்காத மருந்து தருவதை உதவியெனவே கருதும் கிராமமக்கள்,உண்ந
மயறிந்தும், செய்நன்றியால் வாய்மூடி மொளனிக்கிறார்கள். எதிர்ப்பவர்களை எவ்வாறு ஆசைக
ட்டி ,அக்குடும்பம் வளைத்துப் போடுகிறது என்பதை இறுதிவரை காட்டும் வலிமிகுந்த கதை.
இதனை ஒரு உருவகக் கதையாகக் கொள்ளலாம். பாலியல் உணர்வு தூக்கிநிற்கும் இக்கதையை
முதலில் படித்தபோது ஏமாற்றமாயிருந்தது. குரியாக்கோஸ் சொன்னபடி மீண்டும் மீண்டும்
படித்தபோது, விஜயனின் நேர்த்தியான கதைசொல்லும் விதம் கொஞ்சம் புரிந்தது.
மாஜிக்கல் ரியலிஸம், பாலியல் உணர்வு என்னும் இரு இழைகள். அவற்றை குறுக்கும் நெ
டுக்குமாக வைத்து, வேண்டிய இடத்தில் மட்டும் மாறுபட்ட உணர்வு ,காட்சிகள் என்னும் நிறங்களை ஏற்றி, நெய்யப்பட்டிருக்கும் இக்கதைச் சேலை, ஒரு கைதேர்ந்த கதைசொல்லுபவனின் அற்புத நெசவு..
Foetus என்னும் கதை முழுக்கமுழுக்க mythical புலம் சார்ந்தது. இக்கதையைக் குறியீடுகள் அமைத்துக்கொள்ளாமல் படித்துணர்வெதென்பது கடினம். முதலிலேயே அதன் புலம் அறியாமல் குறியீடுகள் கொள்வதும் கடினம். எனவே குரியாக்கோஸ் சொன்னபடி"மூணுபிராயஸெமிங்கிலும் வாயிக்கியா" . குரூர பாலியல் தோற்றங்கள் சிறிது அருவெறுப்பு ஏற்படுத்துமெனினும், கதையின் ஓட்டத்திற்கும், ஆழத்திற்கும் தேவையெனவே தோன்றுகிறது.
Wart என்னும் கதையிலும் குறியீடுகளே பிரதானம். பாலியல் காட்சிகள் சில வலியவே வந்திருப்பதாகப் படுகிறது. கேரளத்தின் மலைவனப்பு, காட்சிகள் அமையும் விதம்... அங்கேயே கொண்டு போய் காலத்தையும் சேர்த்து நிறுத்திவிடுகிறது. கதாநாயகன் தன் மகனுடன் கோவில் குளமருகே பொழுதுசாயும் நேரம் அமரும் காட்சி 'சந்தனக்குறியொண்ணு சார்த்தி, கையில் துளசிதளமுமாய், அம்பலத்திண்ட குளக்கரையிலே அங்கனே கிடக்கும்' உணர்வுகள் வார்த்தைகளினூடே எழுந்து வருவது நிஜமா அல்லது மாஜிக்கல் ரியலிசப் பொய்ப் பிம்பங்களாவென அறியா மயக்கம்... ப்ரமாதம்.
ஆங்கிலமொழிபெயர்ப்பே இப்படியிருந்தால் மூலம்..? சே இதுதான் கேரளாவில் இருக்கும்போது பொண்ணுகளை ஜொள்ளுவிட்டு நடக்காமல் ஒழுங்கா மலையாளம் படிச்சிருக்கணும்-கிறது.
Saturday, November 19, 2005
ஓ.வி.விஜயனின் கதைகள் - ஒரு கண்ணோட்டம்.
பிரபல எழுத்தாளர்களில் இருவரின் படைப்புகளைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வெகுநாளாக இருந்துவந்தது. ஒன்று தோப்பில் முகம்மது மீரான் , மற்றொருவர் ஒ.வி.விஜயன்.
வைகிங் ( பென்குவின் வெளியீடு)பதிப்பில் வந்திருக்கும் 'ஒ.வி.விஜயனின் படைப்புகள்' எ
ன்னும் பெருவெளியீடு (Omni edition) ஆங்கில மொழியாக்கத்தில் கிடைத்தது. ஆர அமரப்
படிக்கும் நேரமும் வெகுஅதிசயமாக ஒருவாரமாகக் கிடைத்தது அதிர்ஷ்டம் எனவே சொல்லவே
வண்டும்.
ஓ.வி.விஜயனின் கதைகள் குறித்து கொச்சியில் படிக்கும்போது கேட்டிருக்கிறேன். மலையாளம்
அறிந்திருந்தாலும் , படிப்பது, எழுதுவது எனக்கு வராது. அவரது படைப்புகள் பற்றி நான் அபிப்ராயம் கேட்ட ஒவ்வொரு மலையாளியும் ஒவ்வொருவிதமாகச் சொல்லி செமத்தியாகக் குழப்பிவிட்டிருந்தனர். சில பெண்கள் "யேயே...ய்! ஒரு பாடு செக்ஸாணு. ஸாதனம் அழுக்கா' எனச் சொல்ல, காவி கதர் முண்டு கட்டிநடக்கும் மார்க்ஸிய சிந்தனைவாதியும், பல்கலைக்கழக
அப்பொழுதைய SFI அமைப்பின் முக்கிய நபருமான குரியாக்கோஸ் , தாடி சொறிந்தபடி " உ
க்கிரன்,,, கேட்டோ ? செரிக்கும் மனசிலாக்கான் ஸ்ரமிக்கியா.மூணுப்ராயஸெமிங்கிலும் வாயிச்சு
நோக்கு. அப்போழே கிட்டுள்ளு" எனச் சொன்னது மற்றொரு விதம். அப்போது , 'தற்காலம்
வேண்டாம்' என ஒத்திப்போட்டிருந்தேன்.
இந்தப் பின்புலத்தில், பல வருடம் கழிந்து புத்தகம் கிடைத்ததும் கவனமாக எந்த தாக்கலும்
இன்றிப் படிக்கத் துணிந்தேன்.
புத்தகம் மூன்று பெரும்கதைகளையும், பல சிறுகதைகளையும், ஒரு பக்கத்தில் அடங்கும் வகை
யில்லாத கதைகள்/கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இதில் குருசாகரம் என்னும் சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற கதையும் அடங்கும். ஆங்கில மொழிபெயர்ப்பினை, பெரும்பாலான கதைகளுக்கு ஒ.வி.விஜயன் அவர்களே செய்திருக்கிறார். சில மலையாளச் சொற்பிரயோகங்கள் ஆங்கிலப்படுத்தப்படுகையில் அன்னியப்படுவதை உணர முடிகிறது.
பெரிய கதைகளான 'கஸாக்கிண்டெ இதிகாஸம்', 'குருசாகரம்' போன்றவற்றை முதலில் தள்ளி
வைத்துவிட்டு, சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கினேன்.
இன்னும் வரும்.
Friday, November 18, 2005
ஈயத்தைப்பார்த்து....
-------------------
தென்மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவரையுமே மதராஸிகள் எனச் சொல்லும் அறிவீனம் வட மற்றும் மேற்கு மாநிலங்களில் இன்னும் இருக்கிறது. மலையாளம் ஒரு மொழி எனவும், மலையாளி என்றால் கேரளச்சேர்ந்ததவர் என்னும் பொதுஅறிவு இன்னும் வளரவில்லை. அரசின் பண்பலை வானொலியில் கூட இரு நாட்களுக்கு முன் இரவு 9 மணி நிகழ்ச்சி நடத்தும் பெண்மணி மலையாளி தெரியாவிட்டால் தமிழ்நாடு கேரளாவில் சுமுகமாகப் போய்வரமுடியாது என திருவாய் மலர்ந்தருளினார். போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.
இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் மும்பைப் பதிப்பில் Unnatural politics please,we are Tamils என ஒரு கட்டுரை வந்திருக்கிறது. இதையெல்லாம் எப்படி பிரசுக்கிறார்கள் என இன்னும் எனக்குப் புரியவில்லை. குஷ்பு விவகாரம், ராமதாஸ் பேத்திகள் டெல்லியில் தமிழ் இல்லாத பள்ளியில் படிப்பது எனப் பல விஷயங்களைத் தொட்டிருக்கும் இக்கட்டுரையில் ஆழம் இல்லை. வேண்டாத சிந்தனைகளைத் தூண்டும் உணர்வே எதிரொளிக்கிறது. தொடங்குவதே "தமிழ்நாட்டில் 90களில் குஷ்புக்கு கோயில் கட்டப்பட்டது. அவ்வளவுக்கு பிரபலம் ஆனவரை இப்போது தமிழ் எதிரி என விரட்டுகிறார்கள் " என்னும்படியான பத்தியில்.
என்னமோ தமிழ்நாட்டில் அனைவரும்சேர்ந்து குஷ்புவுக்கு கோயில்கட்டி குடமுழுக்கு செய்ததுபோலவும், இப்போது ஒட்டுமொத்தமாக அனைவரும் அவரை தமிழினத்தின் எதிரி என ஓடஓட விரட்டுவதுபோலவும் சித்தரிக்கும் இக்கட்டுரையை தணிக்கை செய்யாமல் வெளியிட்டது ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ன் வடிகட்டிய முட்டாள்தனம். தென் மாநிலங்கள் குறித்தான சராசரி வட/மேற்கு மாநில வாழ் மக்களின் சிந்தனை என இதனைக்கொள்ளலாமா? இந்திப்படங்களில் மெகமூது 70 களில் தொடங்கிவைத்த மதராஸி இந்தி என்பதை இன்னும் தொலைக்காட்சித் தொடர்களில் சிரிப்பு (வலுக்கட்டாயமாக) வரவழைப்பதற்காக இழுக்கும் கேலிக்கூத்து தொடர்கிறது. எத்தனைபேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்? சேட் பேசும் "நம்பள் நிம்பள்' தமிழ் எல்லாம் 60 களிலேயே தமிழ்ப் படங்களில் முடிந்துவிட்டது. செருப்பால் அடித்துக்கொள்வதும், திட்டிக்கொள்வதுமே இப்போதைய நமது உயர்ந்த ஹாஸ்ய உணர்வு என இவர்களுக்குப் புரியவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ்த் திரையுலகம் கடமைப்பட்டிருக்கிறது.
அமிதாப் பச்சன் அடிபட்டுக்கிடந்தபோது பலர் கோயில்களில் சிறப்பு நேர்தல்கள் செய்ததையும்,அவருக்கு சிலைவத்து பூஜை இரு வருடங்களுக்கு முன் நடத்தியதையும், கங்குலி இந்திய கிரிக்கெட்டிற்கு மீண்டும் வந்து சேவைசெய்யவேண்டுமென கல்கத்தாவில் பூஜைகள் செய்ததையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியதை பார்த்துதான் இருக்கிறேன். அதற்காக, ஒட்டுமொத்தமாக பெங்காலிகள், வடவிந்தியர்கள் இப்படித்தான் என முத்திரை குத்துகிறோமா? முட்டாள்தனம் என்பது ஒரு இனத்திற்குச் சொந்தமில்லை என்பதை தமிழனும் குஷ்பு கோயில் மூலம் நிரூபித்திருக்கிறான். அவ்வளவே. இந்த அளவிற்கு தமிழர்கள் என்றாலே திரைப்பட நாயக/நாயகிகளுக்காக எதுவும் செய்வார்கள், இன,மொழி வெறியர்கள் எனப்படும்படி செய்திஊடகங்கள் விஷம் பரப்புவது ஆபத்தானது.
இதனைக் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு எழுதியிருக்கிறேன். கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. "kudos to your article dated..." என எழுதியிருந்தால் ஒரு வேளை எடுத்துக்கொள்வார்களாயிருக்கும்...
பி.கு: இந்த குஷ்பு கோயில் கட்டியவர்களை.........
Tuesday, November 15, 2005
கொங்குதேர் வாழ்க்கை
திரு. எஸ்.சிவகுமார் எழுதிய கொங்குதேர் வாழ்க்கை -பாகம் 1( பதிப்பகம் யுனைட்டட் ரைட்டர்ஸ்) படிக்கக் கிடைத்தது. இது வந்தது 2003ம் வருடம். எப்போதுமே நான் சோம்பேறி என்பதால், என்னை இப்போதும் மன்னிக்கவும்!
நூலின் முன்னுரைக்கு முன் எழுதிய ஒரு குறியீட்டுக்காட்சி
தமிழரின் இப்போதைய தலைமுறை (புதுக்குடி)அதன் மொழி, பண்பாட்டை அறியாது எங்கோ விரைகின்றது. இதனைக் கண்டு வேதனைப்படும் கிழவனாக ஒரு குறியீடு அமைத்திருக்கிறார். தான் கண்ட கவிதைச் செல்வத்தைப் புதிய தலைமுறைக்குக் கொடுக்க நினைக்கிறான் அக்கிழவன். அது ஏற்கப்படுமா என்ற தயக்கம் அவனுக்கு இழையோடுகிறது...
உணர்வு பூர்வமான இக்குறியீடு தேவையில்லையோ எனத் தோன்றுகிறது. ஏனெனில், தெளிவாக அவரது குறிக்கோளாக உள்ளே முன்னுரையில் சொல்கிறார்
" ...என் ஆர்வ்த்தையே அடிபடையாக வைத்துச் செய்திருக்கிறேன். மரபில் ஆர்வம் இல்லாத புதிய தலைமுறையினருக்கு இத்தொகுப்பு ஆர்வத்தை ஏற்படுத்துமானால் அதையே எனக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுவேன்"
'எடுக்கப்பட்ட பாடல்கள் ஒரு சுவைக்கான மாதிரிதான். இதனினும் உங்களுக்குப்பிடித்த பாடல்கள் இந்நூல்களில் இருக்கக் கூடும் ..'.
இது போல பல rider clause வைத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் பாடல்களின் தொகுப்பு அவரது தேர்வின் திறனைக் காட்டுவதாக ஒவ்வொரு பாடல் தேர்விலும் மிளிர்கிறது.
அகம், புறம் என திணைகளில் திணறாது இரண்டிலும் நேர்த்தியாக பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
முதலில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, காப்பியங்கள் எனப் போகிறது பாடல்களின் தேர்வு.
இரு சுவைகளை அதிகம் காட்டியிருப்பதாகப் படுகிறது.
ஒன்று :அவலச் சுவை
உதாரணமாக
பாரிமகளிர் பாடல் "அற்றைத்திங்கள் ",
கபிலர் பாடியது "தீநீர்ப் பொருங்குண்டு சுனைப்பூத்த குவளை.." ( பாரி இறந்ததும், பாரிமகளிரின் அறியாப் பருவம் கண்டு இரங்கிப்பாடியது)
சீவகசிந்தாமணி "வெவ்வாய்ஓரி முழவாக...." சீவகன் சுடுகாட்டில் பிறந்த போது விசயை பாடியபாடல்
அரிச்சந்திர புராணம் "பனியால் நனைந்தும்.."சந்திரமதி மகன் இறந்ததும் பாடிய பாடல்..
இந்த ரீதியில் போனால், பெரியபுராணத்தில் "மணமகனே பிணமகனாய்" என்னும் பாடலை எதிர் பார்த்தேன். நல்லவேளை அது வரவில்லை!
மற்றொன்று: காமச் சுவை
நீலகேசி --- துபடு துவரிதழ் துடிக்கும்.. ( நீலிப் பேய்மகளின் அழகிய உருவம்)
சீவக சிந்தாமணி, -'மீன்சேர் குழாமனைய மேகலையும்..(காந்தருவதத்தையின் அழகு)
நளவெண்பா, 'கொங்கைமுகங் குழையக் கூந்தல் ( நளன் தமயந்தி காதல் வர்ணனை)
கந்த புராணம்--- 'அன்னதொருகாலை'( முருகனை வள்ளி தழுவுதல்)
இன்னும் பல சொல்லலாம்.
இவை இலக்கிய நயத்திற்காக இடப்பட்டிருக்கின்றன என்றாலும், இலக்கியரசனை வளர பல சுவைகளையும் ஆசிரியர் எடுத்துத் தந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
கம்பராமாயணத்தில் குகன் பரதனைக் கண்டதும் கொள்ளும் கோபம், யுத்தகாண்ட தோற்றங்கள், வில்லிபாரத்தில் வரும் போர் வருணனைகள் , திருமங்கையாழ்வாரின் காதலால் இரங்கும் பெண்ணின் நிலை எனப் பலசுவைகளைக் காட்டியிருக்கலாம்.
சில பாடல்கள் எப்படியும் நம்மக்கள் எங்கேயாவது கேட்டிருப்பர் . "அற்றைத்திங்கள் ", "வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் '(சிலப்பதிகாரம்),'வெவ்வாய் ஓரி முழவாக '( சீவக சிந்தாமணி) , 'ஆயிரம் இராமன்நின் கேழ் ஆவரோ?' ( கம்பராமாயணம்) போன்றவை.. ஆனால் பாடல் முழுதும் தெரிந்திருக்காது. இந்த வகையில் அப்பாடல்களை எடுத்திட்டு, அதனை சிறிது விளக்கியும் இருப்பது ,படிப்பவருக்கு "அட நாம முந்தியே படிச்சதுதானே" என்னும் அனுபவத்தைத் தந்துவிடுகிறது. பின் அப்பாடல் முழுதும் படித்து முடிக்கும்வரை கீழே வைப்பது கடினம்.. இது என் அனுபவம்.
ஒரே நூலிலிருந்து ( எ.கா சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம்)ஆசிரியர் , பலப் பல திறனுடைய பாடல்களைக் காட்டியிருப்பது அவரது ஆழ்ந்த அனுபவத்தின் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
பாகம் 2 இன்னும் பார்க்கவில்லை. தேம்பாவணி, இரட்சணிய யாத்ரீகம் போன்றவை முதல் பாகத்திலில்லாததால் இரண்டாம் பாகத்தில் இருக்குமென நினைக்கிறேன்.
மொத்தத்தில் மரபு இலக்கியத்தில் அவ்வளவாகப் பரியச்சமில்லாதோர் துவங்குவதற்கு ஒரு நல்ல படி.
திரு.எஸ்.சிவகுமார் அவர்களின் அயராத உழைப்பிற்கும், நல்ல ஆக்கத்திற்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்
அன்புடன்
க.சுதாகர்
Monday, November 14, 2005
மும்பை நாடகவிழா (பார்க்காமல் எழுதிய விமர்சனம்)
மும்பை நாடகவிழா (பார்க்காமல் எழுதிய விமர்சனம்)
-----------------------------------------------------
எந்த நேரத்துல " நாடகவிழா பாத்துட்டு வந்து எழுதறேன்"ன்னு சொன்னனோ தெரியலை... நுழைவுச்சீட்டு தருகிறேன் எனச்சொல்லியிருந்த ஆட்கள் சமத்தியா ஏமாற்றிவிட்டார்கள். தீபாவளீக்கு ஊர் சென்று திரும்பும்போது ." ஒரு சீட்டு என் நண்பன் கிட்டே இருக்கு. இந்தா அவன் தொலைபேசி எண்" எனத் தந்த நண்பனுக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லிவிட்டு, அவரைப் பிடிக்கப் போனால்,... குடும்பத்தோடு குஜராத்தில் தீபாவளிக்குப் போயிட்டார். புழுங்கிக்கொண்டிருந்தபோது. மிட் டே பத்திரிகை " நாடகம் பரவாயில்லை" என்ற ரீதியில் எழுதியிருந்ததைப் படித்ததும் ஒரு நிம்மதி. "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்"?!
அநியாயத்திற்கு விளம்பரம்.. சஞ்ஜனா கபூர் பண்பலை ரேடியோவில் மணிக்கு ஒரு முறை வந்து நாடகத்தைப்பத்திப் பேசாமல், அடைமொழியும், பண்புச்சொற்களுமாக அடுக்கி ஒரு நிமிடத்திற்குப் பேசினார். கேட்டே வாழ்க்கை வெறுத்துவிட்டது.
ஜிகினா தொழில்நுட்ப வேலைகள் நிறைந்திருந்தது என்பது நம்ம பாரிவையாளர்களுக்கு புதியது. மைக் முன்பு காள் காள் எனக் கத்டுவது நாடகம் எனப் புரிந்துகொண்டிருந்தவர்கள், முதன்முறையாக நாடகம் பார்த்தார்கள் என்கிறது ஒரு விமர்சனம். பார்வையாளர்களில் பலர் நாடக விற்பன்னர்கள். அவர்களே ப்ரிஅமித்துப் போஇ " எவ்வளவு செலவு? இதுல பத்து ல ஒருபகுதி கிடைச்சிருந்தா நான் எங்க்யஓ போயிருப்பேன்" எனப் பெருமூச்சு விட்டனர். ஒளித் தொழில் நுட்பம் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல். நம்ம ஆட்கள் நாலு கலர்கலரா விளக்கு வைச்சு நாடகம்னு போட்டுட்டு "மக்களுக்கு ரசனையே பத்தாது" என்பார்கள் பேட்டிகளில்.
"லாப்டாப் கணனிகளுக்கு நாடகத்துல என்ன வேலை?" என்றார் ஒரு நாடக நடிகர் அப்பாவித்தனமாய். பத்து லாப்டாப் வைத்து நாடகத்தின் போக்கை அவர்கள் சிறப்பாக ஆழுமை செய்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. "படுதாக்கு பின்னாடியிருந்து மெல்லமா கூப்புடவேண்டியதுதானெ?" நாம என்னிக்கு உருப்படப் போறோம்?
ஆனால், ஒன்று சொல்லவேண்டும். இது மக்களுக்கு நாடகம் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியைக் கொடுத்திருக்கும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மரபு கெடுக்காமல், எப்படி நவீன உத்திகளைக் கையாண்டு நல்ல படைப்பைத் தரமுடியும் எனக் காட்டியிருக்கிறார்கள். இனிட்யாவது, நவீன நாடகம் என்றல் புதுக்கதையாகத்தன் இருக்கவேண்டும் எனவும், மரபு நாடகம் எல்லாம் பார்ப்பது பத்தாம்பசலித்தனம் என நினைப்பதும் கொஞ்சம் குறையும். அதற்காகவாது சஞ்ஜனா கபூருக்கு நன்றிகள்.
Friday, November 04, 2005
ஊடகங்களும் பிறமொழிப் படைப்புகளும்
-------------------------------------
ரவி‚ɢšРதமிழ் இலக்கியத்தை உலகளவில் மொழிபெயர்ப்பின் மூலம் மேற்கத்தியர்கள் அறிந்திருப்பது குறித்து சு.ராவின் கருத்தைக் குறித்து எழுதிய வலைப்பதிவின் தாக்கம் இது.
பிற கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களை உள்வாங்குவது குறித்து பேசுமுன் இரு முக்கியமான விடயங்களை நாம் கவனிக்கவேண்டும்.
ஒன்று : புரிந்து கொள்ளுதலில் ஊடகங்களின் பங்கு.
இரண்டு: அவ்வூடகங்கள் குறித்து நமது அணுகுமுறை.
ஊடகங்களின் பங்கு
பிற கலாச்சாரங்களை நாம் ஊடகம் மூலமே பார்க்கிறோம், உணரத் தலைப்படுகிறோம். இலக்கியம் ஒரு ஊடகமெனினும், புரிந்துகொள்ளுதல் என்பதான முயல்விற்கு அதற்கு மொழி, மொழியின் கையாடல் போன்ற ஊடகங்கள் தேவைப்படுகின்றன. குருசோவா, பீட்டர் புரூக்ஸ் போன்றோர் திரைப்படம் மற்றும் நாடக ஊடகங்கள் மூலமே பிற கலாச்சார நுணுக்ங்களை சிறப்பாக பலதரப்பட்ட பார்வையாளர் மத்தியில் கொண்டுபோக முடிந்தது.
°¼¸í¸û ÌÈ¢òÐ ¿ÁÐ «ÏÌÓ¨È"
ஐரோப்பிய கலாச்சாரத்தை விடுங்கள். நமது நாட்டு பிற மொழி இலக்கியங்கள் எத்தனை நாம் அறிந்திருக்கிறோம்? இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும், தகுந்த ஊடகங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டோ ம் என்ற குற்றச்சாட்டிலிருந்து நாம் மீளமுடியாது.
திரைப்படமென்றாலே ஆபாசமும், மசாலாவும் மட்டுமே என மலிந்திருக்க, நாடகங்கள் "வெகுஜன நாடகங்கள்' என்ற போர்வையில் அபத்தங்களை சிரிப்பு நாடகமென்ற பெயரில் துப்பிக்கொண்டிருக்கின்றன. நலமான முயற்சிகளை கவனமாக " இதெல்லாம் அறிவு ஜீவிகளுக்கு" எனத் தள்ளிப்போக்கிவிடுகிறோம்.
மலையாளத்தில் இருக்கும் வடக்கன் வீரகத எத்தனை தமிழருக்குத் தெரிந்திருக்கும்? அவை அப்படியே இலக்கிய வடிவில் தமிழில் கட்டாயப்பாடமாக்கிய்ருந்தாலும் நாம் அசட்டை செய்திருப்போம். ஒரு திரைப்படமாக M.T.வாசுதேவன் நாயர் கொண்டுவந்ததும் மலையாளத்திலேயே கொஞ்சம் அதிகமாக அது பேசப்பட்டது.
இலக்கியம் , கலாச்சாரப் பிண்ணனியின்றி உணரவியலாது. உணர்வதற்கு ஆரோக்கியமான ஊடகங்கள் வேண்டும். ஊடகங்கள் குறித்தான ஆரோக்கியமான புரிதல் வேண்டும். திரைப்படம் பொழுதுபோக்கு என்றும், அது வியாபார நோக்கம் மட்டுமே சார்ந்தது எனவும் சப்பைக்கட்டுவதை திரைப்படத் துறையினரும் நிறுத்தவேண்டும். அவ்வாறு வரும் திரைப்படங்களை மக்கள் வரவேற்பதையும் குறைக்கவேண்டும்.
நாடகங்கள் குறித்து நமது புரிதல் வெகுவெகு பாதாளத்தில் இருக்கிறது என்பது வருந்தத்தக்க விசயம். நாடகங்கள் குறித்து பேசுவதும், அலசுவதும் தமிழ்நாட்டில் மிகக்குறைவு.
ப்ருத்வி நாடகமன்றம் மும்பையில் இந்த முறை ஆங்கில நாடகக் குழுஒன்றின் படைப்பான ஷெக்ஸ்பியரின் measure for measure நாடகமேற்றியிருக்கிறது. ஏழு ஆண்டுகள் தொடர்ந்த முயற்சியின் விளைவாக அக்குழு முதன்முறையாக இந்தியாவில் மேடையேற்றியிருக்கிறது. பண்பலை வானொயிலும், செய்தித்தாள்களிலும் அடிக்கடி விளம்பரம் செய்து ப்ரபலப்படுத்திவிட்டார்கள். மாணவர்களுக்கும், வயோதிகர்களுக்கும் 50% தள்ளுபடி . இதெல்லாம் நம்மூரில் செய்ய என்ன தடை?
Sunday, October 23, 2005
நோபல் - ஒரு இந்தியக் கனவு
இயற்பியல் துறையின் நோபல் பரிசு 2005ம் ஆண்டு அறிவிக்கப்பட்டதும், ஹிண்டுஸ்தான் டைம்ஸ் " ஒரு இந்தியருக்கு கிடைக்க வேண்டிய பரிசு. ஏமாற்றியிருக்கிறார்கள்" என கொட்டையெழுத்தில் மும்பை பதிப்பில் வெளியிட்டிருந்தது.
இவர்கள் இழுத்திருக்கும் அறிஞர் கலாநிதி E.C.G.சுதர்ஷன் - அமெரிக்காவில் ஆய்வு செய்து வருகிறார். கிளாபர் குவாண்டம் ஒளியியல் பற்றிய கருத்துக்களை ஒரு அறிவியல் பேப்பராக வெளியிட்ட சிலமாதங்களுக்குள்ளாகவே சுதர்ஷனின் பேப்பர் வெளியாயிருந்தது. இருவரின் உழைப்பும் தனித்தனியாக நடந்தவை. கிளாபர் வெளியிட்ட கொள்கைகளில் இருந்த சிக்கல்களையும், தடைகளையும் சுதர்ஷன் பின்னாளில் எடுத்துக்காட்டி, சீர்திருத்தி வெளியிட்டார். அதன்பின் அவர் குவாண்டம் ஒளியியலிருந்து சற்றே விலகி பல ஆய்வுகளில் ஈடுபடத்தொடங்கினார்.
இன்றும் அவரது கொள்கைகள் குவாண்டம் ஒளியியலில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. நோபல் பரிசின் பரிந்துரைக்குழுவின் குவாண்டம் ஒளியியல் பற்றிய அறிக்கையில் சுதர்ஷனின் பங்கு குறித்து வெளியாயிருக்கிறது.
இந்தியாவில் கலாநிதி சுதர்ஷனைப் பற்றி அறிந்தவர்கள் " முன்னரே ஒரு முறை அவருக்கு நோபல் பரிசுக்கான பரிந்துரை செய்யப்பட்டது. அப்போதும் தரவில்லை. இப்போது மிக மிக அருகில் வந்தும் , பரிசு கிடைக்காமல் போனது துரதிருஷ்டம் மட்டுமல்ல ஒரு சோகமும் கூட " என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
சுதர்ஷன் அவர்களோ, இது குறித்து ஒன்றும் கருத்துகூற மறுத்துவிட்டு, தனது அறிவியல் தேடல்களில் ஆழ்ந்துவிட்டார் - தான் ஒரு ஆதர்சன அறிவியல் அறிஞர் என நிரூபித்துவிட்டு.
அத்துறையை விட்டு அவர் விலகியிருப்பதால், விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதால் எவரும், நோபல் பரிசு பரிந்துரைக்குழுவிடம் விண்ணப்பிக்கப் போவதில்லையாம்.
நோபல் - ஒரு இந்தியக் கனவாகவே இருந்துவிடுமோ?
அன்புடன்
க.சுதாகர்
மற்றொரு இழப்பும், அது குறித்த அறியாமையும்
சு.ரா மறைந்தது குறித்து சிலர் எழுதினர். அவரது படைப்புகளை எவ்வளவு தூரம் தமிழக சராசர வாசகன் அறிந்திருக்கக் கூடுமென்பது அனைவருக்கும் தெரிந்த புள்ளியியல் விவரம்.
தமிழகம், இழப்புகளைக் குறித்து அறியவேண்டுமெனில், இருப்பைக் குறித்து முதலில் அறிந்திருக்கவேண்டும். நாடக மேதை ஹெக்கோடு சுப்பண்ணா மறைந்தார் என்றால் பெரும்பாலோருக்குத் தெரியாது. வருந்தத்தக்க , வெட்கக்கேடான அறியாமை.
மேலும் இது குறித்து நான் எழுதாமல், வெங்கட் சாமிநாதனின் அமுதசுரபியில் வெளியான இக்கட்டுரையைப் படித்துப் பாருங்கள் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
Wednesday, October 12, 2005
மெளனத்தின் நாவுகள் -3
அபியின் சுயம் தேடலும் , சுயம் சார்ந்த வினாக்களும், தேடல் முயற்சிகளும் பற்றிய கவிதைகள், ஆழமிக்க சொற்கள் கொண்டவை. படிமங்களை அவர் தேர்ந்தெடுத்திருக்கிற விதம், ப்ரமிக்க வைக்கிறது.
யாரோ அழைத்தான ஞாபகத்தில் - என்ற கவிதை இதைப்பற்றியதுதான் என இறுதியிட்டுக் கூற முடியாது. நான் உணர்ந்த அளவில்,இது மனிதம் என்னும் பண்புகளின் கலவையினை உருவாகக் கொண்ட ஓர் உயிர் -( அது கடவுளின் தூதனாகவும் இருக்கலாம்..) , சமுதாயத்தால் எதிர்க்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டபின்னும் அயராது, எவரோ ஒரிடத்தில் தனது தேவையிருப்பதாக, நம்பிக்கையின் ஊற்றை தன்னில் புதுப்பித்துக்கொண்டு, அதனையே அருந்திக்கொண்டு, புத்துணர்வோடு புறப்படும் ஒரு பயணத்தின் சாராம்சம். அது சந்தித்த சவால்களையும், அதன் முயற்சிகளையும் பற்றிய இக்கவிதையின் சில வரிகளைப் பாருங்கள்.
அதன் தற்சமய நிலை குறித்துச் சொல்லுகையில்
" இறந்த காலத்தின் நிமிஷங்களைக்
கம்பி நீட்டி
எதிர்காலத்தின் ராகங்களை
வாசித்துக்கொண்டே
......
மாரிக்காலத்து ஏதோவொரு இரவில்
யாரோ கிசுகிசுத்து அழைத்தான
ஞாபகத்தில்
என் பயணம் தொடர்கிறது "
என பயணத்தினைக் குறித்துச் சொல்கிறார்.
இதுவரை அனுபவித்த இடர்களோவெனில்..
"எந்தெந்த காற்றையெல்லாமோ
சுவாச ருசி கண்டு
எந்தெந்த மூட்டங்க்களில் எல்லாமோ
மூச்சுத்திணறி
சோகத்தின் சுகக்கருவில்
மறுபடி நுழைந்து வளர்ந்து
மறுபடி வெளியேறி..."
சூரியன் மலைகளிடையே மறைவது என்ற நிகழ்வை,
மேற்குத்தேசத்தின் பொன்மாளிகையில்
வாய்பிளந்து நின்ற
விட்டிலின் வாயில்போய்
விளக்கு விழுந்தபின் "
என்னும் வரிகளில், மானிட வாழ்வில் விளக்குகள்( வழிகாட்டிகள்) விட்டில்களால்( சாமானிய மானிடப்பதர்களால்) அணைக்கப்படுவதை "ரிவர்ஸ் மெட்டஃபர் ( reverse metaphore) கொண்டும் அற்புதமாகக் காட்டியிருக்கிறார். எங்கும் படிமம் கலையவில்லை. எங்கும் வார்த்தைகளின் ப்ரயோகத்தால் கவிதையோட்டம், கரு நீர்க்கப்படவில்லை.
தனது வழிகாட்டுதல் யாருக்கோ தேவைபட்டிருப்பதாக "யாரோ அழைத்த ஞாபகத்தில்" நன்னம்பிக்கை கொண்டதினைக் காரணிக்கிறார் இவ்வாறு.
அடித்தளத்து கண்ணீரைப்
ப்ரகாசமிக்க சிரிப்புகளாக
மாற்றிவரும் இந்தத்திரி
யாருக்கோ தேவைப்பட்டிருக்கிறது.
இதுவே அதன் raison de etre.
இதுவரை தனது வழிகாட்டல்களை சரியாகக் கொள்ளாதாரைப் பற்றிச் சொல்கிறார்.
" உழாமல் விதைத்தும்
விதையின்றியே உழுதும்
ஏமாந்தவர் பிரிந்தபின்.."
தன்னைநோக்கி வருகின்ற எவரையோ ஆவலுடன் தான் காத்திருப்பதை
" இந்த வளமான பூமியைத் தேடி
விழிகளில் மேகங்கள் திரட்டி
இதயக்கூடை நிறைய விதைகளோடு
பரிசுத்தமான நோக்கங்கள் வழிகாட்ட
யாரோ வரும் காலடியோசை!"
ஏசுநாதர் பிறந்தபோது நட்சத்திரங்கள் வழிகாட்ட மன்னர்கள் வந்தது போலவே, இந்தக்காட்சி!
தன்னை இதுவரை அடையாளம் கண்டுகொள்ளாதாரைப் பற்றி வெதும்பிச் சொல்லும் வரிகளைப் பாருங்கள். ஏசுநாதரும், கலீல் கிப்ரானும், "நாம் இவர்களுக்கு எவ்வளவு நன்மை செய்தாலும், இவர்கள் அறியாமல் இருக்கிறார்களே " என இப்படி நினைத்திருப்பார்களோ என ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துவிடுகிறது.
"
சிலர்
சேற்றில் புதைந்த
என் வேர்களை முகர்ந்துவிட்டு
ஏக்கத்தோடு விரிந்த என் மலர்களை
நாடாது நடந்தனர்
என் சுவடுகளை
என் கைவிரல்களால் பதிக்கிறேன்
என்பதை அறியாமல்
என் பாதங்களின் பழுதுகளைப்
பரிகசித்துப் போனார்கள்"
எத்தனை அழுத்தமான வார்த்தைகள்.!
Tuesday, October 11, 2005
அறிவியல் இதழும் அண்ணாச்சியும்
_________________________________________
வின்செண்டு அய்யாத்துரை மும்பையில் வந்து முப்பது வருடங்களாகிறது. காட்கோபர் என்னுமிடத்தில் சுழலும் வாடகை நூலகம் வைத்து நடத்திவருகிறார்.
போனவாரம், யதேச்சையாக அவர் கடையில் தமிழ்புத்தகம் பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பிடித்துவிட்டார். ரொம்ப காலம் முன்னே பழக்கம் மாதிரி சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார். எனது கார் செப்பனிட்டு முடிக்க இன்னும் நேரமிருந்ததால் நானும் பேசிக்கொண்டிருந்தேன்.
"எழுவத்தொம்பதுல வந்தேன். அப்பெல்லாம் இந்தமாதிரி கூட்டம் கிடையாதுல்லா. இப்ப.. சே.. இந்த ஊரு வெளங்கும்கீயளா?" ( சாத்தான்குள வேதத்து ஆசிப் அண்ணாச்சி மாதிரிப் பேசுகிறாரே எனப் பார்க்கிறீர்களா? இவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி பக்கம் திரேஸ்புரம்).
வாட்ட சாட்டமாக ஒரு இளைஞன் நுழைந்தான். வின்செண்டுக்கு அவனைப் பிடிக்காது போலும். முகத்தைத் திருப்பிக்கொண்டு அவனைச் சகித்துக்கொண்டிருந்தார். புத்தகங்களைப் புரட்டியவன், ஏதோ தடியாக ஒரு ஆங்கில நாவலை எடுத்துக்கொண்டு , கையெழுத்திட்டு நகர்ந்தான்.
அவன் போனவுடன், வின்செண்டு " இப்ப வந்தாம்லா, பாத்தியளா?" என்றார், சாலையில் எட்டிப்பார்த்து , அவன் கேளாததை உறுதிசெய்துகொண்டே.
" உம் " என்றேன்
" நம்ம ஊரு பயல்தான். வெளங்காத மாடு. அப்பங்காரன் அம்பேர்நாத் வரை போயி ஷிப்ட்டுல வேலை பாத்து படிக்க வைக்கான். இவன் இங்கன சோவாறிட்டு திரிதான். படிக்கற புத்தகத்தைப் பாரு.. " கோபம் கொப்பளித்தது அவர் வார்த்தைகளில்.
" உங்களுக்கு என்ன கோபம் அண்ணாச்சி? அவன் பாட்டுக்கு படிச்சுட்டுப் போறான்.உம்ம கடைல நீரு வைச்சிருக்கற புத்தகம்தான அது? வேற அறிவியல் புத்தகம்னா வைச்சிருக்கீரு? " சீண்டினேன்.
"இதப் பாருவே" என ஒரு இதழைக் காட்டினார். அது செப்டம்பர் மாதத்திய சயண்டிஃபிக் அமெரிக்கன்- இந்திய பதிப்பு.
"இத எடுத்துப்படிக்கலாம்லா? இவன் கெமிஸ்ட்ட்ரிதான் படிக்கான் காலேஜ்ல"
"புதுசா வாங்கி வைச்சிருக்கீறா? போன மாசத்துப் புஸ்தகம்வே அது" என்றேன்.
"புது புக்கு நூறு ரூபா தெரியுமாவே? ஒரு மூதியும் தொடமாட்டேங்கு. அதை வாங்கறதுக்கு பதிலா, ஒரு டெபனேர் இல்லெ ஒரு சவ்வி, வுமன்ஸ் ஈரா-ன்னு வாங்கிறுவேன். பொட்ட புள்ளைக படிக்கும்"
அப்போதுதான் கவனித்தேன். ஒரு மாத இதழ் 100 ரூபாய். கிட்டத்தட்ட 2.5 டாலர். எத்தனை பேர் வாங்குவார்கள்?
" உம்மர மாதிரி நூலகத்துல வாங்கினா, பசங்க படிப்பான்கள். நீரு இப்படி கஞ்சத்தனம் பாத்துப்புட்டு, அப்புறம் அவன்களை நொட்டை நொள்ளைன்னா என்ன அர்த்தம்?" என்றேன்
" எனக்கு ஆசை இல்லன்னா இத ஏன் வாங்கி வைக்கேன். சொல்லுமே பாப்பம் ? என்றார் ஆவேசமாக.
" போனமாச புத்தகம் 10 ரூவாய்க்கு சர்ச் கேட் பக்கம் கிடைக்கும். ஒரு நாய் சீந்தாது. தூக்கிட்டு வந்து, சரி இந்த புள்ளைங்க உருப்படட்டுமேன்னு வைச்சா, சவத்து மூதி ஒண்ணும் தொட்டுக்கூடப் பாக்கலை" அவரது 10 ரூபாய் அப்படியே கிடப்பது அவருக்கு வயிறெரிகிறது.
100 ரூபாய் கொடுத்து சயண்டிஃபிக் அமெரிக்கன் வாங்க எத்தனை கல்லூரி மாணவ மாணவியரால் இயலும்? அல்லது பொது மக்கள்தான் 100 ரூபாய் கொடுத்து வாங்குவார்களா?
இந்திய பதிப்பு, அறிவியல் சிந்தனைகளை இந்திய மக்களிடம் பரப்ப வந்திருக்கிறது என்றெல்லாம் விளம்பரப்படுத்தினரே ? டெல்லி விமானநிலையத்தில் இன்னும் இருப்பதாக நினைவு.
உலகமயமாக்கலில், அறிவியலைக் கூட இறக்குமதி செய்து,அதற்கும் வளர்ந்த நாடுகளைப்போல பணம் கொடுக்கும் நிலையில் இருந்துவரும் சராசரி இந்தியனுக்கு, என்று அவன் வாங்கும் நிலையில் அறிவியல் புத்தகங்கள், பொருட்கள் கிடைக்கும்?
Sunday, October 09, 2005
மொளனத்தின் நாவுகள் -2
-------------------------
காமம் ..
வள்ளுவர், வாத்ஸ்யாயனர் முதல் வைரமுத்து வரை அனைத்து கவிஞர்களும் போற்றிய ஓர் அடிப்படை உணர்வு. பட்டினத்தார் போன்ற சித்தர்களும், துறந்த முனிவர்களும் "வேண்டாம்" என ஒதுக்கிப் பாடினாலும், அந்த ஒதுக்கல்களிலும் காமத்தின் வேகத்திற்கு ஓர் மரியாதை தென்பட்டது. காமம் மனிதனின் உணர்வுகளில் ஆழப்பதிந்து பிற உணர்வுகளைத் தாக்குமாதலால், முனிவர்களூம் அஞ்சி ஒதுக்கிய ஓருணர்வு.
அபி காமத்தை எப்படி அழைக்கிறார் எனப் பார்ப்போம்
" போ போ ராப்பிச்சைக்காரனே"
இதை விட வெறுப்பின் உச்சியில் நின்று காமத்தை விரட்டிய கவிதை படித்ததில்லை.
" எத்துணை இடினும்
நிரம்பாத
உன் ஓட்டைப் பாத்திர
நாற்றத்தில்
என் சுவாசங்கள் கூசுகின்றன"
சுவாசங்கள் கூசுமளவிற்கு ராப்பிச்சைக்காரனின் பேராசைக் கலசத்தின் நாற்றம் கவிஞரின் நாசியில்!..
"சிலரே தாங்கள் படைத்ததில்
உனக்குப் பங்களிக்கிறார்கள்.
பலரும் உனக்குப் பங்களிக்கவே
படைக்கின்றனர்"
உண்மையான வார்த்தைகள்.
காமத்தின் மேலுள்ள வெறுப்பு சித்தர் போலவுள்ள போதனையால் வந்ததல்ல. காமத்திற்கு கொடுக்க வேண்டிய இடம் கூடுதலாகவே கொடுக்கப்படுகிறது என்பதை சுட்டுகிறார். அபியின் நடுநிலைமை, உணர்வுகளையும் கூட்டிப் ப்ரதிபலிப்பதை இக்கவிதையில் காணலாம்.
Friday, October 07, 2005
-------------------------------------
மும்பை போன்ற நகரங்களின் மிகப்பெரிய தலைவலி- திடக் கழிவு நிர்வாகம். மும்பையில் மட்டும் ஒரு நாளுக்கு 6000 மெட்ரிக் டன் கழிவு உற்பத்தியாகிறது. மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் மிகத் திறமையாகச் செயல்பட்டால் 5500 மெட்ரிக் டன் கழிவை அப்புறப்படுத்த முடியும். மிச்சம் 500 டன் கழிவுகள்? ஆதாரம் www.ceeraindia.org/documents/bmc.htm
எடுத்த கழிவுகளை புதைக்க landfil இடங்கள் தேடுவது மற்றொரு தலைவலி. 25 வருடங்களில் ஒரு இடம் நிறைந்து போகும். பின்னர் மற்றதைத் தேடவேண்டும். கழிவு நிறைந்த இடத்தை மீண்டும் புதுப்பிப்பது என்பது மற்றொரு தலைவலி. அவ்வளவு எளிதல்ல.
பல ஆலோசகக் குழுக்கள் பலதரப்பட்ட யோசனைகளை வழங்கியிருக்கின்றன. குப்பையை உருவாக்கும் இடத்திலேயே பிரித்தல் ( seggregation at source) என்பதைக்குறித்து அதிர்ச்சியூட்டும் விதமாக முனிசிபல் கார்ப்பரேஷன்கள் இன்னும் ஆலோசித்துமட்டுமே வருகின்றன. மக்களை படிப்பிக்கும் விதம் குறித்து கவலை கொள்கின்றனவாம்.. இது முதலில் கட்டாயமாக்கவேண்டும்.
மண்புழு வளர்ப்பு மூலம் கரிம கழிவுகளுக்கு ஒரு தீர்வு காணலாம் என்பதை அறியும்போது கொஞ்சம் வியப்பாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. மண்புழு வளர்ப்பு என்பது வேளாண்மைக்கு பயன்படும் என்றும், அது நல்ல கரிம உரம் தயாரிக்கும் குடிசைத்தொழில் என்று மட்டுமே நான் அறிந்திருந்தேன். பெரிய அளவில் கரிம உரம் தயாரிக்கவும், கழிவுகளை சுத்தப்படுத்தவும் இது உதவும் என்பதை இச்சுட்டியில் அறிந்தேன்.
http://www.morarkango.com/waste_management/index.html
மொரார்கா தன்னார்வலக்குழுவின் மண்புழு வளர்ப்பு பற்றிய செய்திகள் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், பொருளாதாரத்தில் கீழ்நிலையிலிருப்பவர்களுக்கு வேலை,மற்றும் பீடித் தொழிலாளர்களௌக்கு அவ்வேலையை நிறுத்தி,மாற்று வேலை கொடுக்கும் திட்டம் போன்றவற்றிற்கு உதவுவதாகவும் இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இக்குழு செய்திருக்கும் பணி குறித்து அறியும்போது , மாநகரங்களில் கழிவு நிர்வாகம் மேம்படச் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
வீடுகளில் கழிவு நிர்வாகம் குறித்துக் கூறுகையில், வெறும் ரூ.2500.00 கொண்டு எப்படி கழிவுகளை அகற்றலாம் என்பதையும், கரிம உரம் தயாரிக்கலாம் என்பதையும் சொல்கிறார்கள். IFFCO நிறுவனம், இவ்வுரத்தை நல்ல விலையில் வாங்கிக்கொள்ளவும் தயாராக இருப்பதால், கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் கூட்டுறவு நிறுவனங்கள் இதனை ஒரு தொழிலாகவும் எடுத்துச் செய்யலாம்.
பல மாடிக்கட்டிடங்கள் கொண்ட குடியிருப்புகளுக்கென பெரிய அளவில் கழிவு நிர்வாகம் செய்து தரவும் இந்நிறுவனம் தயாராக இருக்கிறது. ஓட்டல்கள், குடியிருப்பு வளாகங்கள் இதனால் பயன்பெறும் என்பதோடு, முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு கழிவுநிர்வாகத்தில் பளு பெருமளவில் குறையும்.
முன்னுதாரணமாக மும்பையில் சேரிச் சிறுவர்களைக்கொண்டு செய்யப்பட்ட ஒரு ப்ராஜெக்ட்டில் சிறுவர்கள் பிச்சையெடுப்பதை விட்டுவிட்டு இதனைத் தொழிலாக ஏற்று நடத்த முன்வந்தனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை ஒருவருடம் முன்பு வாசித்த ஞாபகம் வருகிறது.
இதனை பெரியளவில் வர சில சக்திகள் தடுப்பதாகவும், அரசியல் ஆதாயம் கருத்தில் கொண்டு புழு வளர்ப்பு தடைப்படுவதாகவும் கேள்வி. கழிவிலுமா கமிஷன் அடிக்கணும்? பாவிகளா...
பிடித்த புத்தக அலசல்-மெளனத்தின் நாவுகள்
படித்த கவிதைகளை அலசுவதென்பது ஒரு அலாதியான இன்பம்..படித்த கவிதைகளில் தாக்கிய வரிகளைப் பற்றி எழுதுகிறேன். ( நானே சொந்தமாய் எழுதி அறுப்பதைவிட இது பரவாயில்லை).
மெளனத்தின் நாவுகள் - கவிதைத்தொகுப்பு .
இயற்றியவர் : அபி.
------------------------------------------------------------
"ஏதோ ஒரு விடையை
என்னுள் வாங்கியதால்
எத்தனையோ
வினாக்களுக்குத் தாயானேன்.
அவ்வினாக்களின் மூலம் தேடிப்போகிறேன்"
என்று தன் அலசல்களை அறிவித்தவர் அபி. "கடவுளின் சோதனைச்சாலை விடுத்து தன் சொந்தச் சோதனைச்சாலைக்கு செல்லும்" காரணமாக இதைச் சொன்னார்.
கவிஞர் மீராவுடன் இணைந்து பணியாற்றியவர். 70'ச் களில் தமிழ் கவிதையில் புதுக்கவிதைஎ
ன்ற பரிமாணத்தில் அவருக்கென தனிப்பாணியை வகுத்துக்கொண்டார். 60களில் தமிழ் இன உணர்வு கொந்தளித்தபின், எழுபதுகளில் சிறிது அடங்கி, பரீட்சார்த்த முறைகளை கவிஞர்கள் கையாளத்தொடங்கினர். கிப்ரானிய மொழி வீச்சும், எளிய வார்த்தைகளில் உணர்வுகளை செறிவாக்கிக் கொட்டும் வித்தைகளும் தமிழ்க்கவிதைகளில் இடம்பெறத்தொடங்கின. கண்ணீர்ப்பூக்கள், கறுப்பு மலர்கள் என மு.மேத்தா, காமராசன் போன்றோர் தொடங்கியவை, சாதாரணமாகக் கவிதை படிக்கத் தயங்கும் மக்களுக்கு புதுக்கவிதை படிக்க ஆர்வம் பிறப்பித்தாலும், ஒரு படி மேலே போய் உன்னதமான கவிதைஉத்திகளை சிறப்பாகக் கையாண்டதில் சிலருக்கே அபி போன்ற பெரும்பங்கு உண்டு. "மொளனத்தின் நாவுகள்" - அதன் சாட்சி.
படிமங்கள் கையாள்வதில் அவரது சிறப்பு. மீரா அவர்களும் , அப்துல்ரகுமான் அவர்களும்
அபியின் கவிதைத்தொகுப்பினை பிற பதிப்பகத்தார் வெளியிட தயக்கம் காட்டிய போது, கொ
தித்தெழுந்து , சொந்தமாகவே "அன்னம்"என்ற பதிப்பகத்தை சிவகங்கையில் தொடங்கினர் -எ
ன்பது வரலாறு. "பாலையும் நீரையும் பகுத்தறியாப் பாமரர்களே, அன்னம் பாலைப் பகுத்துக் காட்டுகிறது" என்ற உதாரணமோ- அன்னம் என்ற குறியீட்டுப் பெய்ர்?
புதுக்கவிதையின் புதுப் பரிமாணங்கள் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் , தமிழ் புதுக்கவிதை
யின் உண்மையான முன்னோடிகள் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள், அபியை அவசியம்
அறிந்துகொள்ளவேண்டும். இக்கவிதைத்தொகுப்பின் முன்னுரையை கவிக்கோ அப்துல்ரகுமான்
அவர்களும், முடிவுரையை கவிஞர் மீரா அவர்களும் வழங்கியிருக்கின்றனர்.
அபியைப் படிக்குமுன், அவ்வுரைகளைப்படிப்பது நல்லது. ஏனெனில். அபியின் வார்த்தைகளின்
எல்லைகளை வரையறுப்பது கடினம். சுழன்று சுழன்று ஆழம்காண இயலாத பரிமாண எல்லைக
ளுக்கு இட்டுச்செல்லும் சக்திவாய்ந்த வரிகள் அவை.
கலீல் கிப்ரானின் வலிகள் குறித்து வருந்திய கவிஞர் "அம்மானுடம்பாடியைத் துன்புறுத்தியபோது இருந்திருந்தால் நான் இப்படித்தான் பாடியிருப்பேன் " எனக் குறிக்கிறார்.
மதவாதிகளால் லெபனாலின் துன்புறுத்தப்பட்ட கலீல்கிப்ரான், அமெரிக்காவில்
சரண்புகுந்தபின்னும் லெபனானின் பஞ்சம் ஏற்பட்டபோது "டெஅட் அரெ ம்ய் பெஒப்லெ" என்று இரங்கல்
பாடினார். இதனை வியந்து
"உன் வேர்களை அருவெருக்கும்
நிலங்களை நோக்கி ஏன் உன் விழுதுகளை
அனுப்புகிறாய்?" என்றார் அபி.
வார்த்தைகளின் வீச்சைக் கவனியுங்கள்! எவ்வளவு உன்னத உதாரணம்!
அத்தோடு விடவில்லை அபி...
லெபனான், கிப்ரானின் கவிதைகளை தடை செய்தும், அவர் லெபனான் குறித்து கவலைப்பட்டதை,
"நீ பாசமுள்ள பறவையாய் இருந்தால்
உன் முட்டைகளை புற்றிலா இடுவாய்?"
என்கிறார்.
கிப்ரானுக்குக் கிட்டிய வதைகளை விவரிக்கிறார்...
"நீ நிற்கும்
சிலுவையின் நிழலில்கூட
ஆணிகள்..."
என்ன ஒரு ஆழம்...! இயேசுநாதரை சிலுவையில் அறையும் போது உலகில் விழுந்த வலிகள்
உறைந்த சொற்களாய்...
லெபனானைச் சபிக்கிறார் இவ்வாறு- அறம்பாடலாய்...
"லெபனானின் பள்ளத்தாக்குகள்
அழகின் கம்பீரமான உச்சரிப்புகளை
இழந்து போகட்டும்"
அதனால்தானோ, அதன்பின் இன்னும் ஒரு கிப்ரானை லெபனான் கர்ப்பம் தரிக்கவில்லை?
இன்னும் வரும்.
அன்புடன்
க.சுதாகர்
Monday, September 26, 2005
ஜெயஸ்ரீக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். அவர்தான் "இதைப்பத்தி யாரேனும் எழுதினாங்களா?" என்ற நியாயமான கேள்வியைக் கேட்டுவைத்தார். அவர் வலைப்பதிவு ஒன்றும் தொடங்காததால், நான் எழுதியடித்துவிட்டேன்.
மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறது எனப் பார்ப்போம். " ஆறாம் வகுப்பு முதல் பெண்குழந்தைகளுக்கு இலவசக்கல்வி" என்று மொட்டையாக டைம்ஸ் ஆப் இந்தியா நேற்று இட்டிருந்தது. இது சி.பி.எஸ்.ஸி பாடத்திட்டத்திற்கு மட்டுமே பொருந்துமா எனக் கேள்வியிருக்கிறது. அப்படியானால் மாநிலப் பாடத்திட்டக் கல்விக்கூடங்களில் பயிலும் மாணவிகள்?
இன்னொன்று, " ஒரு பெண்குழந்தை மட்டும் உள்ள குடும்பங்கள்" மட்டுமே இச்சலுகை பெறலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் வீட்டில் இரு பெண்குழந்தைகள் இருந்தால்? பெரும்பாலும் அவ்வாறு அமைய சாத்தியமிருக்கிறது. குடும்பக்கட்டுப்பாடு சரியாக அமலாக்கப்படவில்லையெனில் அதற்காகக் குழந்தைகளைத் தண்டித்து என்ன பயன்? சீனாவின் முன்னுதாரணத்தை தவறாகப் பயன்படுத்த முனைவதின் விளைவு இது.
வசதியாக இருக்கும் குடும்பங்களில் ஒரு குழந்தை கொண்டவர்கள் எப்படியாவது படிக்கவைக்கிறார்கள் என ( சும்மா ஒரு பேச்சுக்கு) வைத்துக்கொள்வோம். முரண் இதில் இவ்வாறு அமைகிறது. வசதியுள்ளவர்கள் செலவழிக்க வேண்டாம். ...
பல கல்விநுட்ப வல்லுநர்கள் இதில் உள்ள பிழைகளை இன்று சுட்டியுள்ளனர் ( ஹிந்துஸ்தான் டைம்ஸ் ). "அடிப்படைக் கல்வியே இங்கு தகிடதத்தம் போடுகிறது. அதை முதலில் கட்டாயமாக்குங்கள். ஒரு வருவாய்க்கோட்டிற்கு கீழ் இருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் அடிப்படைக்கல்வியை இலவசமாக்குங்கள்." என்கின்றனர் சிலர். இதில் நியாயம் இல்லாமலில்லை. அடிப்படைக் கல்வி என்பது குழந்தைகளின் பிறப்புரிமை என்று அரசு பேசியதாக ஒரு நினைவு. என்ன ஆயிற்று அது?
பெண்குழந்தைகளைக் கல்விபயில வைக்கும் நல்ல திட்டம் என்றளவில் வரவேற்கப்படவேண்டியது. ஆயின் செயல்முறையில் இருக்கும் இடர்களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது அரசு? மாநில அரசுகள் தங்கள் பாடத்திட்டம் கொண்ட பள்ளிகளில் அமலாக்க, நிதியுதவி கேட்குமெனில், மத்திய அரசு எவ்வாறு அதனை சமாளிக்கும்? இன்னும் ஒரு கல்வி வரி விதிக்கப்படுமா?
படிக்கவைக்க வசதியுள்ளவர்களையும் கொடுக்கவேண்டாம் எனச் சொல்லாமல், அந்தத் தொகையை, மற்றொரு ஏழைப்பெண் கல்விகற்க உபயோகிக்கும் முறை குறித்து அரசு இயந்திரம் சிந்திக்கவேண்டும்.
ஆசிரியர்கள் தங்கள் பணிகளை ஊக்கத்துடன் செய்ய அவர்களுக்கு வழங்கப்படும் வருமானத் தொகை சரியாகப் போய்ச்சேருகிறதா? என தணிக்கை செய்வது மேலும் தீவிரப்படுத்தப்படவேண்டும்.
ஏனெனில், ஏழ்மை கல்வியை கற்கும் மாணவிகளிடமிருந்து மட்டுமல்ல, கற்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்தும் பறித்துவிடுகிறது.
Sunday, September 25, 2005
மொழியும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும்
இந்தியில் கார்டூன் நிகழ்சிகள் என்றதும்,"சரி , இனிமே நம்ம பயல் தொலைக்காட்சி பக்கம் போறதை கொஞ்சம் நிறுத்துவான்" என மகிழ்ந்திருந்தேன். நினைப்பில் மண்ணை வாரிப்போட்டது டிஸ்னி சானல். ஒரு சிரமமும் இல்லாமல் அதே அளவு நேரம் தொலைக்காட்சிப் பெட்டி முன் பையன் இருக்கிறான். பார்த்த நிகழ்சிகளைக் குழந்தைகள் தங்களுக்குள் பேசி நடித்து விளையாடுவது உலக வழக்கு. நேற்று அவன் விளையாடுவதை சிறுது கவனித்தேன்.
அட்சர சுத்தமாக இந்தி வாக்குகள் சுளுவாக குழந்தைகளுக்கு வருகின்றன. " நீ சொன்னது உனக்குப் புரியுதா?" என்றால் அதன் அர்த்தமும் குழந்தைகள் சொல்கின்றனர். கார்ட்டூன் இந்தியில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் .slang போன்றவை கலக்காமல் பேசப்படுகிறது. விளைவு? நல்ல மொழிப் பயிற்சி அதிகம் முயற்சிக்காமலே வருகிறது. பாராட்டவேண்டும் இந்தியில் மொழிப்பெயற்ச்சி செய்கிறவர்களை.
தமிழிலிலும் கார்ட்டூன் பார்த்தேன். இயல்பாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு ச்ரளமாக slang கலந்து சொற்றொடர்கள் வருகின்றன. இதனால் தமிழ் வளராது போவது மட்டுமல்ல, "தமிழ் இப்படித்தான் பேசவேண்டும் " எனக் கருத்தும் இளைய தலைமுறையிடம் வந்துவிடும்.
மொழிப்பெயர்சி செய்பவர்கள் இவ்வாறு ஒரு கண்ணில் வெண்ணெய் , மற்றொன்றில் சுண்ணாம்பு என இல்லாமல் இருந்தால் தமிழுக்கு நல்லது.
முதலில் ஆண்களுக்கான சிகப்பழகு க்ரீம் வந்துவிட்டது என்ற நற்செய்தியை அறிவித்துவிடுகிறேன். இரு வாரங்களுக்கு முன் இது குறித்து குறிப்பாக எழுதியிருந்தேன். நண்பர் தெரிவித்த மார்கெட் ரகசியம் என்பதால் சிறிது அடக்கி வாசிக்க நேர்ந்தது.
"இது ஒரு புதிய மார்கெட் திறக்கும்" என சில நண்பர்கள் கருத்து தெரிவித்தனர். சில கருத்துக் கணிப்புகள் , ஆண்களில் பலர் சிகப்பழகு அவர்களுக்கு சமூக அங்கீகாரம் தருவதாக எண்ணுவதாக குறித்திருந்தன. உலகமயமாக்கலில், எந்த சமுதாயம் சிலரது தோல் நிறம் கொண்டு தங்கள் முதலீடுகளைத் தீர்மானிக்கிறது எனப் புரியவில்லை.
எந்த சமுதாயத்தில் இவ்வாறு ஆண்கள் சிகப்பழகை விரும்புகிறார்கள் எனபது இனி வரும் விளம்பரத்தில் காணலாம் - மிகத் தவறான கருத்த்து மதிப்பீடுகளின் வெளிப்பாடாக.
அண்ணாசாலையில் "நீங்க ஃபேர் ஆக வேணாடமா? எங்க க்ரீம் யூஸ் பண்ணிப் பாருங்க" என த்ரிஷா, கிரண் ஆகியோரது அறிவுறுத்தல் விளம்பரங்களை எதிர்பார்க்கலாம்.
இது உருப்படற வழியாத் தெரியலை.
Saturday, September 17, 2005
நாலெழுத்து வார்த்தையும் முஷரஃப்பும்
நாலெழுத்து வார்த்தையும் முஷரஃப்பும்.
------------------------------------------------------------------------
நீங்கள் நினைத்த அந்த நாலெழுத்து வார்த்தையினும் கெட்டது இது. RAPE என்பதற்கு, தமிழில் கற்பழிப்பு என்பதைவிட மிக வல்லிய வாக்கு இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. அதன் நிகழ்வைவிடக் கொடியது அதனைக்குறித்தான அவதானிப்புகளும், எண்ணங்களும். ஒரு சமுதாயம் எப்படி தன் பெண்களை குறித்து சிந்திக்கிறது என்பது அதன் அரசியல் வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன.
பாக்கிஸ்தானில் பஞ்சாயத்தால் பல மிருகங்களால் கற்பழிக்கப்படவேண்டும் என தண்டனை விதிக்கப்பட்ட பெண் அமெரிக்கா சென்று "பாக்கிஸ்தானில் நீதி கிடைக்காது" என வெதும்பிச் சொன்னதைக் குறித்து ,முஷரப் பேசியது மிகத் தரக்குறைவு.
ஒரு நாட்டின் பிரதான பொறுப்பில் உள்ளவர் பேசும் பேச்சல்ல இது.
"பாக்கிஸ்தானியப் பெண்கள் வெளிநாடு சென்று ( அமெரிக்கா, கனடா எனக் குறிப்பிட்டு)குடியேற்றமும், டாலர்களும் கிடைப்பதற்காக, வேண்டுமென்றே கற்பழிப்பில் தன்னிச்சையாக ஈடுபடுகின்றனர்" என்று அவர் சொல்லியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
பாக்கிஸ்தானில் பெண்கள் இயக்கங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளது நியாயமான கோபங்களின் வெளிப்பாடு. ஆயின் இது போதாது.
ஆணாதிக்க உணர்வும், பெண்களை மிகக்கேவலமாக கருதும் எண்ணமும் கொண்ட ஒரு நாட்டுத்தலைவரிடம் என்ன பெரிதாக எதிர்பார்த்துவிடமுடியும்?
வேலியே பயிரை மேய்ந்த அவமானம் ஒருபுறமிருக்க,அதனைக் குறித்தான சிந்தனையும் பேச்சும் அதனைவிட அருவெறுப்பாக இருக்கிறது. முஷரஃப் காஷ்மீர் குறித்து கவலைப்படுவதை விட்டுவிட்டு கராச்சியிலும், லாகூரிலும் தனது ஆட்சியின் தரம் குறித்து கவலைப்படட்டும்.
முதலில் மனிதனாக அவர் வாழ முயலவேண்டும். பாக்கிஸ்தானியாக வாழ்வதை பற்றி அவர் பிறகு யோசிக்கலாம்.
காக்கைச் சிறகினிலே -2
நேற்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பச்சி கர்க்காரியாவின் கட்டுரை
சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் பெண்ணுரிமை இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் கலந்துகொண்டதைக் கண்டித்து அமைந்திருந்த அக்கட்டுரையின் நியாயமான கோபங்கள் சம்பந்தப்பட்டவர்களை குற்ற உணர்வில் ஆழ்த்தியிருக்கும்.
கறுப்பாக இருப்பது ஏதோ குறைபாடு என்பது போலவும், அவ்வாறு இருப்பவர்கள் சிவப்பாக்கும் க்ரீம்கள் உபயோகிப்பதன் மூலம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வர் என்பது போலவும் அமைந்து வரும் விஷமத்தனமான விளம்பரங்களின் சொந்தக்காரர்கள் நடத்தும் விழாக்களில் அதுவும் சிகப்பு மட்டுமே அழகு எனக்காட்டும் அழகுப்போட்டிகளில் பெண்ணியவாதிகள் கலந்துகொண்டு கைதட்டுவது எந்தவிதத்தில் அவர்களின் தார்மீகப் பொறுப்புணர்வைக் காட்டுகிறது?
'உழைத்துப்படித்து முன்னேறுவது என்பதைவிட சிகப்பாக இருந்தால் போதும்; அழகாக இருந்தால் போதும்; பேரும் புகழும் தானாகவே தேடிவரும்; சினிமாவில் வாய்ப்பு கிட்டும்' என்பது போல அமைந்து வரும் விளம்பரங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன. (இது குறித்தான எனது வாதங்களை அண்மையில் எழுதினேன்). இதில் சினிமாக்காரர்களும் ( ப்ரியதர்ஷன் போன்ற இயக்குனர்களுக்கெல்லாம் இது வேணுமா?)அடக்கம்.
பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவிகளின் மனதைத் திசைதிருப்பும்படி அமையும் இவ்விளம்பரங்கள் ஒரு புறமென்றால், மற்றொரு சோப்பு விளம்பரம் ஒரு படி மேலே செல்கிறது. பெண்ணை சோப்பு வாங்க அனுப்பும் அம்மா, அய்யோ இவள் வேறெதாவது சோப்பு வாங்கிவந்துவிட்டால், சருமத்துக்கு கேடாகும்.. அப்புறம் அவளுக்கு கல்யாணமே நடக்காது ( எப்படி இருக்கிறது கதை? பெண்ணுக்கு வயது ஏழு இல்லை எட்டு இருக்கும்) என அல்லாடுவதாக அமைந்திருந்தது. யார் சொன்னார்களோ "கல்யாணமே நடக்காது" என்னும் வரிகள் இப்போது மாற்றப்பட்டிருக்கின்றன. என்ன செய்தாலும் விஷம் விஷம்தானே.
இது போன்ற விளம்பரங்களும் அவை விற்கும் விஷங்களும் முற்றிலும் புறக்கணிக்கப் படவேண்டும். ஒரு தலைமுறையின் சிந்தனையையே மாற்றும் கொடிய சக்திகள் இவை.
Saturday, September 10, 2005
பாரதி ஸாங்க்ஸ் லிஸன் பண்ணினீங்களா?
பாரதி நினைவுநாள் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ராகமாலிகா இன்று வந்தது. வழக்கம் போல விஜய் ஆதிராஜ் தமிங்கிலத்தில் தொடங்கினார். அதில் பேசிய சொற்றொடர்களைக் கேளுங்கள்.
"பாரதி எல்லாருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் இல்லையா?
அவர் ஆயிரக்கணக்கான பாடல் எழுதியிருக்கார். அவரோட நிறைய ஸாங்க்ஸ் படங்கள்ல கம்ப்போஸ் பண்ணியிருக்காங்க.
இந்த எபிஸோட் அவரை ரிமெம்பெர் பண்ற மாதிரி அமைச்சிருக்கோம்
அவரோட திரைப்பட(?) டூயட் ஸாங்க்ஸ் ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல பாடுவாங்க.
நீங்க எந்த ஸாங்க் பாடப்போறீங்க?
வெரிகுட்.
ஒரு சின்ன ப்ரேக்."
பிற நிகழ்சிகளில் ஆங்கிலம் கலப்பதை விடுங்கள். இன்றாவது, பாரதி நினைவு நிகழ்சி என்ற ஒரு மரியாதையாவது காட்டியிருக்கலாம். இசைக்கு மொழி கிடையாது என்று ஒரு சாக்கு சொல்லிவிடலாம். ஆனால், பாடலுக்கும், கவிதைக்கும் மொழியின் ஆழம் அடர்வு உண்டு. அந்த அளவிற்காவது பாரதியின் பாடல் என ஒரு மரியாதை இருந்திருக்க வேண்டும்.
இதைச் சொல்லப்போனால் " இது ஜனரஞ்சகமான, பொதுமக்களுக்குப் போய்ச் சேரும் நிகழ்ச்சி. இதிலெல்லாம் ரொம்பவும் மொழித் தரம் என்றெல்லாம் பார்க்க முடியாது " எனப் பதில் வரும். அதற்காக இப்படியா?
தேவுடா!
மெல்லத் தமிழினி.....
போன வாரம் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்குமாய் ஒரு அவசரப் பயணம். சென்னைஎக்ஸ்பிரஸ் சென்ட்Tரலில் வந்து சேர்ந்த்ததுமே ஒரு புதிய உற்சாகம். குப்பையாக மும்பை சாலைகளைக் கண்டு வெறுத்துப் போயிருந்த எனக்கு சென்னை என்றாலே கொஞ்சம் நிம்மதிதான்.
மவுன்ட் ரோட்டில் ஒரு பெரிய விளம்பரப்பலகை. "செல்ஃபோன் எதுக்கு. டாக் பண்ண்றதுக்கு" என ஒரு நடிகை சொல்லியவாறு ... தமிழ் வாசிக்கத் தெரியாத என் மகனுக்கு அதனை வாசித்துக்க் கட்டுவதில் சிரமமே இருக்கவில்லை. " அப்பா, இது இங்க்லீஷ்ல இருக்கு. நீ தமிழ்ல என்ன எழுதியிருக்குன்னு சொல்லு" என்றான். ஒரு வருடம் முன்னால் புனே நகரில் தேசிய வேதியியல் ஆராய்வுச் சாலையில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.
எனது நண்பர் டாக்டர் தேஷ்பான்டேயின் மகன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைகிடைத்து சென்னை செல்ல நேர்ந்தது. " அவனுக்கு தமிழ் தெரியாதே" என்றார் கவலையாய். " ஒன்றும் பயமில்லை சார். ஒரு மாதத்தில் தேறிவிடுவான். மேலும் அலுவலகத்தில் ஆங்கிலம் இருக்கும். கவலையை விடுங்கள் " என்று சொல்லியிருந்தேன். இரு வாரங்களுக்கு முன் அவரது வீட்டில் அவர் பையனைச் சந்தித்தபோது " மொழிப் பிரச்சனை இருக்கா?" என்றேன். இல்லை என்றான் சிரித்தபடி. " அவங்க தமிழ்-ல பேசினாலும் எனக்குப் புரியும். பாதிக்கு மேல தமிழ்ல இங்லீஷ்தானே இருக்கு ? "
தமிழ் இலக்கணம், இலக்கியம் தெரியாது எனக் கவலைப்படுவதை விட இது மிகத் தீவிரமாக கவனிக்கப் பட வேண்டிய விசயம். சராசரி மனிதன் பேசும் தமிழில் தமிழ் எத்தனை சதவீதம் இருக்கிறது? ஆங்கிலம் கலக்காது பேசுவது "செந்தமிழில் பேசுவது" என்று அர்த்தமில்லை.
எளிய தமிழில் கடு கட்டியான செந்தமிழ் வாக்குகள் இல்லாமலே சரளமாக பேசலாம். இந்த மொழிப்பூனைகளுக்கு மணிகட்டுவது நம்மால் மட்டுமே முடியும்.
அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யமாட்டர்கள். அவர்கள் அளவில் மொழிப்பற்று என்பது நெடுஞ்சாலையிலும், ரயில்வண்டி நிலயங்களிலும் இந்தி மொழிப் பெயர்களை தார் போட்டு அழிப்பது என்ற அளவோடு நின்றுவிடுகிறது.
நாம் ஒழுங்கான தமிழில் வீட்டிலும் வெளியிலும் பேசவில்லையெனில் 'மெல்லத் தமிழினி..."
பி.கு அதே தொலைபேசி நிறுவனத்தின் விளம்பரம் மும்பையில் எப்படி தெரியுமா? சரியான இந்திச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள்.!
Friday, September 09, 2005
சிந்திக்க ஒரு நொடி
-------------------
நாராயண் மாத்ரே-ஐ கொஞ்ச நாளாய்த்தான் எனக்குப் பழக்கம். பெரிய உரத்தொழிற்சாலையில் பணியாற்றும் அவரைப் பார்த்ததும் சட்டெனப் பிடித்துவிட்டது. வழுக்கைத்தலையும், சிறிய மூக்குக்கண்ணாடியுமாய், முதிர்ந்த உயர் நடுத்தரமட்டத்து தலைமுறையின் ஒரு உதாரணம் அவர்.
போனவாரம் எனது அலுவலக மின்னஞ்சல் தொடர்பு சிறிது பாதிக்கப்பட்டிருந்ததை அவருக்கு ஒரு மின்னஞ்சலில் விளக்கியிருந்தேன். நேற்று சந்தித்தபோது சட்டெனக் கேட்டார் "நீங்கள் கான்வெண்ட்டில் படித்தவரில்லை சரியா?"
ஆம் என்றேன்.
"உங்கள் தாய்மொழியில் பள்ளியில் படித்திருப்பீர்கள்" என்றார்
"ஆம்" என்றேன் சற்றே வியப்புடன்.எதாவது தவறாக எழுதிவிட்டேனோ?
கேட்டுவிட்டேன்.
சிரித்தார் " இல்லை. தவறு இல்லாமல் இலக்கண சுத்தமாக இப்போது இளைஞர்கள் எழுதுவதில்லை. அதுவும் மின்னஞ்சல் என்றால் கேட்கவே வேண்டாம்."
"நீங்கள் சொல்வது சற்றே மிகைப்பட்டதாகத் தோன்றுகிறது" என்றேன். " உங்கள் மற்றும் எனது தலைமுறையினருக்கு ஆங்கில மீடிய கான்வெண்ட் படிப்பு என்றால் ஒரு நிறப்பிரிகையுள்ள கண்ணாடி மூலமே பார்க்கிறோம். சிலருக்கு இருக்கும் தாழ்வுமனப்பான்மையை மறைப்பதற்கு அனாவசியமாக எல்லாவற்றிலும் மட்டம்தட்டி குற்றம் காண்கிறோம். அனைவரும் இப்படி எழுதுவதில்லை. சிலருக்கு பொறுமை இல்லாமை, நேரப்பற்றாக்குறை, அவசரம் ... அதனால் பிழைகள் வரலாம். பொருட்படுத்தாதீர்கள்" என்ற என் பேச்சைக் கேட்டவாறே அவரது கணனியின் திரையைக் காட்டினார்.
"இந்த மின்னஞ்சலைப் படியுங்கள்" என்றார். அது ஒரு தனியார் நிதிக்கம்பெனியிலிருந்து வந்திருந்தது. பெரும் பேரும் புகழும் உலகளவில் பெற்றிருக்கும் நிதிக்கம்பெனியின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபரின் மின்னஞ்சல். நம்பமுடியாத அளவிற்கு பிழைகள்.
"பிழைகளை விடுங்கள். வார்த்தைகளில் ஒரு மதிப்போ, மரியாதையோ கூடத் தென்படவில்லை.சுதாகர் " என்றார் மாத்ரே. "நான் ஒரு வாடிக்கையாளன் என்ற அளவில் ஒரு மரியாதை எதிர்ப்பார்ப்பது தவறா? சொல்லுங்கள்" என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
Slangs சரளமாக உபயோகித்துப் பழகியிருக்கக் கூடும் அந்த இளைஞன்... வார்த்தைகளி, சொற்றொடர்களில் ஒரு இணைப்பு இல்லை. நேராக விசயத்திற்கு வந்திருந்தான். இரண்டே வார்த்தைகளில் தனது கம்பெனி ஏன் நிதி வழங்குவதில் தயக்கம் காட்டுகிறது என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறான். மிக மிக நாசூக்காகச் சொல்ல வேண்டியது. யார் படித்தாலும் கோபம் மூளும்.
"நமது இளைஞர்களுக்கு எப்படி சிந்திக்கவேண்டுமென்பதும், சிந்திப்பதை எப்படி வார்த்தைகளில் கொணரவேண்டுமென்பதும் கற்பிக்கப் படவில்லை. நான் படிக்கும்போது லாஜிக் என்றொரு வகுப்பு உண்டு. சிந்திக்கும் முறை, வழி பற்றிச் சொல்லிக்கொடுப்பார்கள் " என்றார் மாத்ரே, மூக்குக்கண்ணாடியைத் துடைத்தபடியே.
"இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. ஒரு மனிதனின் தவறை அவன் தலைமுறை முழுதும் ஏற்றுவது சரியல்ல. எத்தனை எம்.பி.ஏ பட்டதாரிகள் இப்போது வருகிறார்கள்? எல்லோருமா இப்படி தவறு செய்கிறார்கள்?" என வாதாடினேன்.
" நான் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே காட்டினேன். என்னுடன் வருகிறீர்களா? மும்பையின் பிரபலமான கல்லூரிகளுக்குச் செல்வோம். எத்தனை பேருக்கு தெளிவான சிந்தனையும், அதனை வெளிப்படச் சொல்லும் திறமை இருக்கிறது எனப் பார்ப்போம்" என்றார் மாத்ரே.
"நான் படித்தது கிராமத்தில். மராத்தி மீடியம்தான். அதில் வருத்தமோ வேதனையோ இல்லை. மாறாக இப்போது எனது ஆசிரியர்களுக்கு நன்றி சொல்கிறேன். Wren &Martin இலக்கணமும், மனப்பாடச் செய்யுள்களும், கணித வாய்ப்பாடுகளும் இப்போதும் எனக்குக் கைகொடுக்கிறது. நாலு இலக்க எண்களைக் கூட்டவும், வட்டி, கழிவுத்தொகை கணக்குகளுக்கும் எனக்கு எக்ஸெல் தேவையில்லை. இவர்களுக்கு லாப்டாப் இல்லாமல் முடியாது." மாத்ரேயின் சொற்களில் உண்மையிருக்கிறது.
புதிய பாடத்திட்டங்களை ஒழுங்காக உருவாக்குவதிலும், அதனைச் செயல்படுத்தவும் தோல்வியடைந்த நாம், பழைய பாடத்திட்ட முறையிலிருந்த நல்ல விசயங்களையும் கைவிட்டுவிட்டோ ம். தெளிவாகச் சிந்திக்கவும், சிந்தித்ததைக் கோர்வையாகச் சொல்லவும், எழுதவும் நமது இளம் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டோ ம்.
இந்தியாவின் இப்போதைய முன்னேற்றத்திற்கு இந்த தெளிவான சிந்தனையும், திறம்படச் செயல்படும் திறனும் முக்கியகாரணம் என்பதை வளர்ந்து வரும் தலைமுறைக்கு உணர்த்தவேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்தில் பேச்சுப்போட்டியும், எழுத்துப்போட்டியும், போட்டியளவில் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கிட்டும் என்பது இல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்பப் பயிற்சியளிக்கவேண்டும். கணிதம் என்றாலே "எங்கே எக்ஸெல்?" என்னும் அளவிற்கு மூளைச் சோம்பேறிகளை உருவாக்குவதில் பெரும் அபாயம் இருக்கிறது. கணனித்துறைக்கு வெறும் coderகள் மட்டும் வேண்டுவதில்லை. ஆராய்ந்து அறிந்து, செயல்படுத்தும் திறமையும் முக்கியம் என்பதை பெரும்பாலும் பெற்றோர் உணருவதில்லை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் PTA போன்ற அமைப்புகள் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இல்லையெனில், பெயர் சொல்லவே திக்கித்திணறும் இந்தியாவை இன்னும் பத்துவருடங்களில் காணலாம்.
Saturday, August 27, 2005
காக்கைச்சிறகினிலே
" தெரியுமோ, புதிய சிகப்பழகு சாதனங்களை இந்த முறை நாங்கள் அதிகமாக விளம்பரம் செய்தது தென்ன்னகத்தில். அதில்தான் வருமானம் கூடியது. முக்கியமாக கறுப்பாக மக்கள் இருக்கும் தமிழ்நாடு, ஆந்திராவில் தான் வியாபாரம் அதிகம்.." கடுப்பானேன் நான்."கறுப்பு சிகப்பு எல்லாம் ஜாதி பார்ப்பது போல. இதில் என்ன இருக்கிறது?வேறு காரணங்கள் இருக்கலாம். சும்மா சொல்லாதீர்கள்."
" வியாபாரமே நிறத்தில்தான் சார்" என்றார்.
"எத்தனை முறை நீங்கள் சிகப்பாக இல்லையா? எனக்கேட்கிறோமோ, அத்தனைக்கு மக்கள் எங்கள் விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். சிகப்பழககு கிரீம்,பவுடர் வாங்குகிறார்கள் "
ஓரளவு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்றாலும், மேலும் மறுத்தேன். " இது அநியாயம். மக்களுக்கு இல்லாத ஒரு தாழ்வு மனப்பாங்கை வளர்த்து உங்கள் பொருளை விற்கிறீர்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்"
சிரித்தார். "நாங்கள் வளர்க்கவில்லை. கண்டுபிடிக்கிறோம். முக்கியமாக ஒரு புள்ளிவிவரத்தைக் காட்டுகிறேன். வெளியே சொல்லக்கூடாது "என்றவர் ஒரு மார்கெட்டிங் நிறுவனத்தின் ஆய்வுக் கட்டுரையைக் காட்டினார் ( confidential என்பதால் கம்பெனியின் பெயரையும், அவரது பெயரையும் குறிப்பிடவில்லை)
தமிழ்நாட்டில்,ஆந்திராவில் 14-18 வயது மாணவர்கள் மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. நகரங்கள் வருமான,போக்குவரத்து, செய்தித் தொடர்பு, மக்கள் நெருக்கம், பள்ளி கல்லூரிகளின் எண்ணிக்கை போன்ற பல அளவுகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதில் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் கல்யாணமாகாத இளைஞர்/பெண்கள், ஒரு குழந்தை கொண்ட குடும்பங்கள் என தரம் பிரிக்கப்பட்டு, ஆய்வுக் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வளர்க்கிற, உங்களை தொய்யச் செய்கிற முக்கியமான காரணத்தைக் கூறுமாறு ஒரு கேள்வி. அதற்கு "ஆங்கிலத்தில் பேச இயலவில்லை " என 70% கூறியிருக்கின்றனர். "நான் கறுப்பாக இருக்கிறேன்" என்பதை 45% மாணவர்கள் குறையாகச் சொல்லியிருக்கின்றனர். ( சிலர் பல காரணங்களை வரிசைப்படுத்தியதால் இரு தரப்பிலும் அவர்களது காரணங்கள் சேர்க்க்பட்டிருகின்றன).
"சிகப்பாக இல்லை எனப் பெண்களைப்போலவே ஆண்களும் நினைக்கின்றனர். குறிப்பாக +2, கல்லூரி மாணவர்கள் இதில் அதிகம். " என்றார் நண்பர்.
"மாணவிகள் சிலர், தாங்கள் கறுப்பாக இருப்பதால் சில மாணவிகள் தங்களிடம் பேசுவதில்லை எனவும் , மேடைப்பேச்சு, நாடகம் போன்றவற்றில் ஆசிரியர்கள் தங்களைச் சேர்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்" என்கிறது அந்த ஆய்வு.
கிராமச்சூழ்நிலையில் உள்ள பள்ளி கல்லூரிகளில் இது அதிகமில்லை. நடுத்தரமான நகரங்கள், சென்னை, கோயமுத்தூர், விசாகப்பட்டினம், நெல்லூர் என வரும் நகரங்களில் இது அதிகம்.
"கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு பெயர்நத குடும்பத்தில் வளரும் மாணவர்கள், மாணவிகளிடம் இம்மனப்பாங்கு அதிகம் காணப்படுகிறது. "குடும்பச் சூழ்நிலையும் நகரச் சூழலும் மாறுபடும் போது உண்டாகும் தடுமாற்றம் இது " என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
" முகப்பூச்சு பவுடர் உபயோகிக்கும் ஆண்கள் ( மாணவர்கள் ) தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் அதிகம் " என்கிறது ஆய்வு. "இது வாசனைக்கோ அன்றி வியர்வைக்கோ இல்லை. முகம் வெளுப்பாகத் தோன்றவேண்டும் என்ற அடிப்படை எண்ணமே இந்த உபயோகத்திற்குக் காரணம்" என்றார் நண்பர். விரைவில் ஆண்களுக்கு என விசேஷமாக முகப்பூச்சு பவுடர் கொண்டுவர சில கம்பெனிகள் யோசித்துக்கொண்டிருக்கின்றன. மார்க்கெட் அப்படி.
மேலும் வரும்...
Sunday, August 14, 2005
சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம்
--------------------------------------
இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ஸில் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. நமது 70 களின் பசுமைப்புரட்சி பற்றி இன்றும் மார்தட்டிக்கொள்வதின் அபாயத்தை விளக்கியிருக்கிறார் அதன் ஆசிரியர் சைக்கத் நியோகி. 70 களின் தீவிரம் இன்று இல்லை என்பது வருந்தத்தக்க நிதர்சனமான உண்மை. உணவுப் பொருட்கள் இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கிறது அக்கட்டுரை.
CMIE -ன் உணவுப்பொருள் விளைச்சல் குறித்த 2004-05 -ன் புள்ளிவிவரங்கள் கவலைதருகிறது.
உதாரணமாக அரிச உற்பத்தி 1.3% குறைவாகவும், பருப்பு போன்றவைகளின் உற்பத்தி 1.4% குறைவாகவும் இருப்பது(2003-2004 உற்பத்தியுடன் நோக்கும்போது) குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சராசரி இந்தியனுக்கு கிடைத்த உணவுப்பொருள் 1990-ல் 510 க்ராம். இது 95-ல் 495 கிராம் ஆகவும், 2003-ல் 436 ஆகவும் குறைந்து வருகிரது. இதேபோல பருப்பு வகைகள் 91-ல் 41.6 கிராம் எனவும் 2003-ல் இது 29.1 கிராம் எனவும் குறைந்து வந்திருக்கிறது.
உணவுப்பொருட்களின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. விளைநிலங்களின் அளவு கூடுவதில்லை எனவும், நிலங்களின் உற்பத்தித்திறன் குறைந்து வருகிறது எனவும் விவசாயத் துறை வல்லுநர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். விளைநிலங்கள் , ஒரு மனிதனுக்கு 1991 ல் 0.34 ஹெக்டேர்இருந்தது. இது 2001 -ல் 0.31 ஹெக்டேர் ஆகக் குறைந்திருக்கிறது. இருக்கும் நிலத்தில் அதிக மகசூல் தரும் விளை பயிர்களை வளர்ப்பதில் உள்ள பெரும் தடைகல் - விவசாயிகளுக்குத் தேவையான செய்திகள், சரியான ஊடகங்கள் வழியே சென்று சேருவதில்லை. விவசாயத் துறையில் வல்லுநர்கள் அளவில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது (M.s.Swaminathanக்கு அடுத்த தள அமைப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் குறைவு ). மேலும் ஊக்கத்தோடு புது முயற்சிகள் எடுப்பதில் உள்ள தயக்கம் ( இஸ்ரேலுடன் ஏற்பட்ட விவசாயத் தொழில் நுட்பப் பரிமாற்ற அமைப்புகளின் முயற்சிகள் என்னவாயிற்று?), உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் சுயநலப்பாங்கும், அவற்றிற்கு எதிரான புரட்சிகளும் விவசாயத்துறையில் புதுக்காற்று வீசுவதற்கு நல்ல தளம் அமைக்கவில்லை.
இந்நிலையில், பண்பளவில் மாற்றப்பட்ட பயிர்கள் ( genetically modified குத் தமிழில் என்னவென தெரியவில்லை, மன்னிக்கவும்), பருத்தியைத் தாண்டி பிற பயிர் ரகங்களில் விவசாயிகளைக் கவரவில்லை. இதிலும் மோன்ஸோன்ண்டா நிறுவனத்தின் பண்புமாற்றப்பட்ட பயிர்களின் விதைகள் குறித்தான வாதங்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை.
நோய்களையும், புழுக்களையும் எதிர்க்கும் புதுப்பயிர் ரகங்கள் பல பயிர்களில் இந்தியாவில் வருவதில் உள்ள சிரமங்களைக் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் இது.
நமது இளைய தலைமுறை, விவசாயத்திலும் ஈடுபாடு கொள்ள வேண்டிய தூண்டுதலை பள்ளிகளும், கல்லூரிகளும் அளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன. கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் "இஞ்சினீயர், டாக்டர், மென்பொருள் வல்லுநர் " என்னும் கனவுகளோடு மட்டுமே இருப்பதில் "ஒரு தலைமுறையே தவறு செய்துவிட்டதோ?' எனத் தோன்றுகிறது.
விவசாயம் குறித்து இளைய தலைமுறைக்கு புதிய கருத்துக்களையும், அதன் முக்கியத்துவத்தையும் விளக்குவற்கு இன்னும் நேரம் கடந்துவிடவில்லை. தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட புரட்சி வேண்டாத mms-ல் நின்றுவிடாமல், கிராமத்தில் வேளாண்மையின் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த முடியுமானால், நமது வளர்ச்சி சீராக அனைத்துத் துறைகளிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
Sunday, July 31, 2005
உயிர்களிடத்து அன்பு வேணும்
---------------------------
எனது பக்கத்து வீட்டுக்காரர் இந்திரநில் பாண்டே சொந்தத் தொழிற்சாலை வைத்து நடத்திவருபவர். செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் தொழிற்சாலையில் மிகச்சேதம். அன்று மதியம் கிளம்பி இரவு தடுமாறி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்(வீட்டிலிருந்து அலுவலகம் 3 கி,மீட்டர்தான். மூன்று கிமீ செல்வதற்கு பத்து மணிநேரம் ஆகியிருக்கிறது).
மனிதர் அடுத்த நாள் , அருகில் இருக்கும் ஆரே பால்பண்ணைப் பகுதியில் ( இது நமது ஆவின் போல மும்பைக்கு பால் வழங்கும் மிகமுக்கியமான நிறுவனம்) மாட்டியிருந்தவர்களை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி நெடுஞ்சாலை வரை கொண்டு விட்டுவந்தார். ஆரே நிறுவனப் பகுதியில்தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் ( பாலாஜி டெலெபிலிம்ஸ் - ஏக்தா கபூர் புகழ்) ஸ்டூடியோக்கள் வைத்திருக்கின்றன. ராயல் பாம் ( Royal palm) போன்ற நவீனக் கட்டுமானங்கள் வந்துகொண்டிருக்கும் அழகிய இடம்.இது மலைக்காட்டுப் பகுதி. பால்பண்ணையில் ஆயிரக்கணக்கான மாடுகள் கட்டிவைக்கப்பட்டிருக்கும்.
அன்று, வெள்ளம் வருமுன்னரே மாடுகளையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு எடுத்துச்சென்றிருக்கவேண்டும். செய்யவில்லை. குறைந்தபட்சம், அவற்றைக் கட்டியிருக்கும் கயிறுகளையாவது அவிழ்த்துவிட்டிருக்கவேண்டும். அதுவும் செய்யவில்லை. விளைவு மிகப் பயங்கரம்.
"குறைந்தது 700 மாடுகள் செத்து மிதக்கின்றன" என்றார் பாண்டே, மூக்கில் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்தபடியே. அதிர்ந்துபோனோம்.
"இது பரவாயில்லை. மற்ற தபேலா ( தனியார் மாட்டுப் பண்ணை)க்களில் கூட்டம்கூட்டமாக மாடுகள் மரித்திருக்கின்றன. அவற்றை புதைப்பதற்குக்கூட யாரும் வரவில்லை. நாற்றம் அப்படி குடலைப்பிடுங்குகிறது" என்றார் பாண்டே, தோளைக்குலுக்கி அந்தக்காட்சியை நினத்து அதிர்ந்தபடி. தோல் உரிக்கக் கொண்டு போகும் வசாய் போன்ற இடங்களிலும்" இனிமே மேற்கொண்டு சடலங்களைக் கொண்டுவராதீர்கள்" எனச் சொல்லிவிட்டார்கள். சடலங்களின் நிலையும் , துர்நாற்றமும் அப்படி. இன்னும் உடல் ஊதிய நிலையில் ஆரே காட்டில் சிக்கிக் கிடக்கின்றன பல சடலங்கள். இதில் மனித சடலங்களும் அடக்கம். யார் போய் இக்காட்டில், இம்மழையில் எடுப்பது?
உயிர்வதைத் தடுப்பு தன்னார்வல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தபேலா உரிமையாளர்களை அணுகியபோது புகைப்படம் கூட எடுக்கவிடாமல் துரத்தப்பட்டார்கள். செய்தித்தாள்கள் மூன்றாம்பக்கத்தில் இச்செய்தியைப் பிரசுரித்தன.
முக்கியமாக , இச்சடலங்கள் அழுகுவதால், நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது ( பரவிவிட்டது என்கிறார்கள்). அழுகும் சடலங்களைத் தின்ன காட்டுவிலங்குகள் அருகிலிருக்கும் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, மலைக்காடுகளிலிருந்து வருவதற்கும் சாத்தியம் இருக்கிறது.
"போய்யா, அவனவன் உயிருக்குப் பயந்து ஓடிக்கிட்டிருக்கான். இதுல மாட்டை காப்பாத்தணுமாமில்ல?" என்று சொல்லிக்கொண்டிருந்தார் தமிழ்க்காரர் ஒருவர் , நேற்று காய்கறிக்கடையில்.
பாரதி இருந்திருந்தால் இன்னும் வருத்தப்பட்டிருப்பான்.
Saturday, July 30, 2005
தமிழா தமிழா
----------------
மழையால் வந்த சேதம் போதாதென, வதந்திகள் உயிர்ப்பலி வாங்கிய அவலம் மும்பையைப் பெரிதும் தாக்கியிருக்கிறது. சுனாமி வருகிறதென சில விஷமிகள் பரப்பிய வதந்தியில் கடற்கரையினருகே நேரு நகர்ப் பகுதியில் வசித்து வந்த மக்கள் பதறி ஓட, அந்த அமளியில் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம்.
நேருநகர்பகுதியில் வசிப்பவர்களில் பெருவாரியில் தமிழ்மக்கள்.அன்றாடங்காய்ச்சிகள். அது சேரிப்பகுதியென்பதால் குறுகலான வழிகள் ஓடும் பாதையைல் நெரிசலைக் கூட்டியிருகின்றன. சுனாமி பற்றிக் கேள்விப்பட்ட தமிழ்மக்கள் என்பதால் பீதி அதிகமானது.
காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கின்றது. வதந்தியைப் பரப்பியவகளில் சில அறவாணிகளூம், நடனமாதுக்களும் முக்கியமான குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மேது கொலைக்குற்றம் சாட்டப்படுள்ளது. காவல் ஆணையர் "வதந்திகளை நம்மப வேண்டாம் " என மீடியா மூலம் வேண்டுகேள் விடுத்துள்ளார். கனமழையில் வேலை செய்யாத மொபைல் போன் கம்பெனிகள், காவல்துறையின் வேண்டுகோள்களை குறு செய்திகள் மூலம் பரப்பி புண்ணியம் கட்டிக்கொண்டுள்ளன.
தாராவி, நேருநகர் குர்லா, செம்பூர் போன்ற இடங்களில் பெருவாரியாக வாழும் தமிழ்மக்களுக்கு எந்த தமிழ் சங்கமும் முன்வந்து உதவி செய்ததாக செய்தி இல்லை. தமிழ்ப் பத்திரிகைகளும், தமிழ் டி.வி சேனல்களும் "மாண்புமிகு அமைச்சர் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் " போன்ற செய்திகளுடன் கொசுறாக மும்பையில் மழை என்றும் , சில புள்ளி விவரங்கள் தந்ததோடு நிறுத்கிக்கொண்டு விட்டன. முன்பின் தெரியாத மக்களின் உதவியிலும் தியாக மனப்பாங்குமே மும்பையை இயற்கையின் சீற்றத்தில் போராடிப் பிழைக்கவைத்தன என்பது கண்கூடு.
சராசரி மும்பைவாழ் மனிதன் வெள்ளத்தின் மேலே பத்தடி உயர்ந்து நிற்கிறான்.
Wednesday, July 27, 2005
பேய்-யெனப் பெய்யும் மழை
-------------------------
குஜராத்தில் அங்கலேஷ்வரில் நேற்று அலுவலக மீட்டிங் -கில் இருந்தபோது வீட்டிலிருந்து செல்போனில் அவசரமாக அழைப்பு வந்தது. சாதாரணமாக இவ்வாறு வருவதில்லை.
" நீங்கள் இன்னும் மும்பைக்கு கிளம்பிவிவ்லையென்றால் அங்கேயே இருந்துவிடுங்கள். மும்பையில் பயங்கர மழை..நெடுஞ்சாலையில் போக்குவரத்து நின்றுவிட்டது.மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது." என்ற செய்தி அதிர்ச்சியாக இல்லையெனினும் கவலை தந்தது. எப்படிப் போயிச்சேரப்போகிறோம்? என்பதை விட, ஏங்கே, நடுவழியில் நின்று விடுவோமோ? என்ற பயம் தொத்திக்கொண்டது.
" ஒரு துளிக் கூடப் பெய்யலை சார். சும்மா பயமுறுத்தியிருக்காங்க" என்ற டிரைவர், விரார் என்ற இடம் வந்தபோது, மழையின் திடீர்த் தீவிரம் கண்டு பயந்துதான் போனான். " முன்னால ஒண்ணும் தெரியலை சார். நிறுத்திரலாமா? " என்றவனின் குரலில் அச்சம் தெரிந்தது. ராட்சத லாரிகள் பாறைகளில் முட்டிக்கொண்டு அங்கங்கே சுளுக்கி நின்றிருந்தன.
போரிவல்லி வந்தபோது நெடுஞ்சாலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை லாரிகளும், கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன. " சாயங்காலம் நாலு மணிக்கு இங்கே நிறுத்தினேன் " என்றார் ஒரு கார் ஓட்டுனர். நான் அவரிடம் கேட்டபோது இரவு பத்து மணி. ஓரமாக பல கார்கள் நிறுத்தப்பட்டு ப்லிங்கர்கள் அணைந்து எரிந்துகொண்டிருந்தன. உரிமையாளர்கள் வண்டிகளை அப்படியே போட்டுவிட்டு கால்நடையாகப் போயிருந்தார்கள். பேருந்துகள் மிகச்சிலவே இயங்கியிருந்தன. புறநகர் ரயில்கள் நின்றுவிட்டிருந்தன. மக்கள் அங்கங்கே இறங்கி சுமார் மூன்று நான்கு ரயில் நிலையங்கள் நிறுத்தத்திற்கான தொலைவு நடந்து வந்துகொண்டிருந்தார்கள் சாரை சாரையாய். ஒரு நபர் பத்து கிலோமீட்டர் தொலைவு நடந்திருக்கக் கூடும்- அதுவும் கொட்டுகிற மழையில்.
"இப்படி ஒரு மழை பத்து வருசமாகப் பார்த்ததில்லை" என்றார் எங்கள் காலனி இரவுக் காவலாளி." இங்க வீட்டுப் பக்கம் கழுத்தளவு தண்ணி. குழந்தைகளைக் கூட்டிகிட்டு என் பொஞ்சாதி எங்க போயிருக்குன்னு தெரியலை. விடிஞ்சதும் தேடப் போணும்" என்றார் கவலையிடன்.
அலுவலகங்களில் பலர் தங்கிவிட்டனர். இதில் மின்சாரம் வேறு துண்டிக்கப்பட்டுவிட்டது. பள்ளிக் குழந்தைகள் வகுப்புகளிலேயே தங்கியிருக்க, அம்மா ,அப்பாகள் அலுவலகங்களில்.
செல்போன்கள் வேலை செய்யவில்லை. மாட்டிக்கொண்ட மக்கள் வீடுகளுக்குத் தொடர்பு கொள்ள முயன்று வெறுப்புல் திட்டித் தீர்தார்கள். "அவசரத்துக்கு உதவலைன்னா இது எதுக்கு?" என்ற ஞனானோதயம் மழைச்சாரலின் அடியில் உதிக்க, பலரும் ஒரு ரூபாய் பி.சி.ஓ க்களைத் தேடிப் போனார்கள். ஆறுதலான செய்தி, எம்.டி.என்.எல் -இன் பொதுத் தொலைபேசிகள் இயங்கின என்பதுதான். வீடுகளில் கார்ட்லெஸ் போன் வைத்திருந்தவர்கள் மின்சாரம் இல்லாது , போன் இருந்தும் உபயோகமில்லாமல் தவித்தனர்.
ந்யூயார்க்கில் மின்சாரம் இல்லாது 2003-இல் மக்கள் தவித்தபோது, செல்போன்கள் நின்றூவிட, இதே நார்மல் தொலைபேசிகள் மட்டும் இயங்கின என்ற செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. எம்.டி.என்.எல், பி.ஏச். என்.எல் இதை விளம்பரத்திற்கு பயன்படுதலாம்.
21 மணி நேரத்திற்குள் சான்டாகுரூஸ் விமான தளத்தில் 833 மிமீ மழை பதிவாகியிருந்தது. புற நகர் கட்டுமானங்கள் தாங்கும் சக்திக்கு இது மிக மிக அதிகம். இருப்பினும், மக்கள் பீதியடையாமல் பொறுமையாக சாலையில் வரிசையாக்ச் சென்றனர் என்பதும், கார்கள், லாரிகள் சாலையில் நின்றுகொண்டிருந்த மக்களை யார் எவரென்ப் பார்க்காது செல்லும் அளவு தூரத்திற்கு ஏற்றிச் சென்றனர் என்பதும், சில கடைகளி, வெளியே போகமுடியாமல் மாட்டிக்கொண்ட நபர்களுக்கு டீ, ரொட்டி தந்து உதவினர் என்பதும் மும்பையில் இன்னும் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு சான்று.
இதையெல்லாம் விட, இன்று காலை ,இவ்வளவு மழைக்கும் பிறகும் அலுவலகம் செல்ல 5.30 பஸ்ஸிற்காகக் காத்துநின்ற பெண் பளீரெனக் கண்ணில் பட்டாள் - மும்பையில் மட்டுமே இது சாத்தியம்.