Friday, March 30, 2018

நேரா யோசி அத்தியாயம் 14 – பல்முனை இயக்கம்.


”கணேசன் மாதிரி வேலை பாக்கணும். நம்மகிட்ட பேசிட்டிருக்கறப்பவே, லெட்ஜர்ல எண்ட்ரி போட்டுருவாரு. நாம வேலைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அவர் வேலையை முடிச்சுட்டு, பாஸ் கேபின்ல போய் ஒக்காந்துருவாரு. ஏன் ப்ரமோஷன் கிடைக்காது?”

கைக்கு கை: வாய்க்கு வாய்-ன்னு இருக்கணும். பேசிக்கிட்டே இருக்கும்போது நம்ம வேலையைப் பாத்துகிட்டே போணும்

ஒரே நேரத்தில் பல்வகை இயக்கத்தைச் செய்பவர்க்களை உலகம் வியக்கிறது. முன்னேறும் தகுதியில் இது ஒன்று எனச் சிலாகிக்கிக்கிறோம்.காணும்போது, அவர்கள் பல வேலைகளை ஒரேநேரத்தில் செய்து முடித்துவிடுவதைப் போலத் தோற்றமளிக்கிறது.
ஆனால் இது ஒரு பிறழ்வு என்கிறார்கள் வல்லுநர்கள். மல்ட்டி டாஸ்க்கிங் என்பது மூளையையும் உடல் உறுப்புகளையும் அதிகப் பளு தந்து அயர்வடையைச் செய்யும் தவறான பழக்கம் என்பது பல உளவியல் ஆய்வாளர்களின் முடிவு.

அஷ்டாவதானி, தசாவதானி என்று எட்டு / பத்து வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர்களை வியக்கும் நமக்கு, அவர்கள், அந்த்த் திறமையால் பெற்ற பயன்களைப் பற்றித் தெரியாது.  வாழ்வில்  ஒரே வேலையைத் தடுமாற்றத்துடன் செய்பவர்க்ளைப் போல சராசரியான வெற்றிகளையே அடைந்திருக்கிறார்கள். பல வேலைகளை ஒரேநேரத்தில் செய்வதிலுள்ள சிக்கல் என்ன?

ஒரு வேலையை நம் மூளை கிரகிக்கும்போது, ஹிப்போகேம்பஸ் என்ற பகுதி முன் அனுபவங்கள், முன்பு பெற்ற தகவல்களை முன்னெடுத்து, சமீபத்தில் பெற்ற தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறது. புரிதல், அறிதல், புரிதலின் வேறு பரிணாமங்கள்,  முன்பு தவறாகப் புரிந்ததினை, அல்லது தற்போது தவறாக வரும் தகவல்களை இவ்வொன்றையும், மூளை படுவேகமாக கிரகித்து எதிர்வினையாற்ற முயல்கிறது.

ஆனால் மூளை என்பது ஒரு சோம்பேறி. எத்தனை குறைவான ஆற்றல் செலவிட்டு, அதிகமாக பலன்கிடைக்கும் ? என்ற கணக்கிலேயே எப்போதும் அது இருக்கும். எனவே பல சமிக்ஞைகள் ஒரே நேரத்தில் கிடைத்தால், தானியங்கு நிலையில் எத்தனை பணிகளைச் செய்ய முடியுமென தீர்மானித்து, அந்தந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கும். இயல்பாக காபி டம்பளரை எடுத்தபடியே மில்லியன் டாலர் ப்ரச்சனைகளை அலசுபவர்களுக்குக், கை செய்யும் வேலை பற்றிய கவனம் அதிகமிருக்காது. சிலர் போனில் பேசும்போது, காகித்த்தில் ஏதோ வரைந்தபடியே இருப்பார்கள். அல்லது தலைக்கு மேல் கையைத் தூக்கி, நெற்றியை வருடியபடி.. இந்த ஆக்க நிலை அனிச்சைச் செயலை மூளை தானியங்கி நிலைக்குத் தள்ளி விடுகிறது.

எல்லாச் செயலையும் இப்படி மூளையால் அனிச்சைச் செயலுக்குத் தள்ள முடியாது. உணர்வும், மூளையின் சில பகுதிகளும் கவனத்தினை அதிகம் கையாள வேண்டியிருக்கிறது.

உதாரணமாக,  ஒருவரை ஒரு போன் உரையாடலின் போது,  நாலிலக்க எண்கள் இரண்டைப் பெருக்கிக் காட்டச் சொல்லுங்கள். மிகக் கடினம்.

சமையலறையில், பொருட்களைத் தேடும்போது, இந்தப் பெருக்கலோ, கூட்டலோ கடினம். ‘இருடா, வேலைல இருக்கேன்லஎன்று பதில் வரும். அதேநேரம், உப்புமாவுக்கு ரவை வறுத்துக்கொண்டிருக்கையில், மூளையால் இந்தப் பெருக்கலைப் போட்டுவிட முடியும். மூளை, ஆக்க நிலை அனிச்சைச் செயலாக, ஒரு தானியங்கி நிலையில் கைகளை, வாணலியில் வேலை பார்க்க விட்டுவிடுகிறது. தேடும்போது, கவனம் வேண்டியிருக்கிறது. காண்பதை கிரகித்து, முன் நினவுகளின் தகவல்நிலையில்,அந்தப்பொருளைப் பொருத்திப்பார்த்துஇதுதான்/ இது இல்லைஎன்று சொல்லவேண்டியிருக்கிறது. இதற்கு மூளைக்கு கவனம், ஆற்றல் குவியம் தேவைப்படுகிறது. எனவே பெருக்கல் அந்த நேரத்தில் இயலாத ஒன்று.

இதனை கானேமான்சிஸ்டம் 1 மற்றும் சிஸ்டம் 2ன் வேலைத்திறன்என்பதாகத் தனது நூலில் குறிப்பிட்டார். எதனை சிஸ்டம் 1க்குத் தரவேண்டும், எதனை 2க்குத் தரவேண்டுமென்பதை சிறுபாலர்கள் அறியமாட்டார்கள். அவர்களது மூளை இந்தப் பதப்படுத்தலில் இன்னும் ஈடுபடாத நிலையில், சிஸ்டம் ஒன்றிலிருந்தே பதில் சொல்ல எத்தனிப்பார்கள்.  எனவே, கேள்வி கேட்டால், டக்கென தவறாகப் பதில் சொல்லும்போது, “அவசரக் குடுக்கை, நல்லா யோசிச்சுப் பதில் சொல்லுஎன்றெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது. இது அவர்களது மூளை பல்திறம்பட்ட வேலைகளில் ஒரே நேரத்தில் ஈடுபட எத்தனிப்பதால் வருவது மட்டுமல்ல; அவர்களுக்குத் தூண்டும்பொருளின் ஆழம் புரியாத்தால், எந்த நிலையிலிருந்து பதில் சொல்லவேண்டுமெனத் தெரியாத்தில் வரும் குழப்பம்.

அனுபவம் பெற்ற பின்னும் இது தொடர்வதற்குக்க் காரணங்கள் இரண்டு.

1. எதிர்வினையாற்ற வேண்டிய பதட்டம், அழுத்தம், உணர்வுக் கொந்தளிப்பு, நம்மை ‘child’ மனநிலையிலிருந்து பதில் சொல்ல வைக்கிறது. இந்த அநிலையில் கேள்விகளை உள்வாங்கி, சரியாகப் புரிந்து, பகுத்தாய்ந்து, நிலைத்தகவல்களிலிருந்து தகவலைத் தேடி, பொருத்திப் பார்த்து,நிலமைக்குத்தக்கவாறு எதிர்வினையாற்றும் முதிர்வு அந்த நேரத்தில், சைல்ட் மன நிலைப்பாங்கால் மழுங்கடிக்கப் படுகிறது. இது உணர்வு பூர்வமான மன நிலை எதிர்வினை. இது பற்றி விரிவாகப் பின் ஆராய்வோம். 

2. பல்திறம்பட்ட செயலாற்றம்.  ஒரே நேரத்தில் பலதரப்பட்ட வேலைகளில் மூளை ஈடுபடும்போது, அது குவியத்துடன் ஆற்ற வேண்டிய வேலை ஒன்றினை மட்டுமே முக்கியமாக ஏற்றுக்கொண்டு, பிறவற்றைத் தானியங்கி நிலையில் தள்ளிவிட எத்தனிப்பதை சற்று முன் கவனித்தோம்.  எனவே, ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே மூளையால், குவியத்துடன், உணர்வுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற முடியும். ஒரே நேரத்தில் குவியம், உணர்வு வேண்டிய பலவேலைகள் வரும்பொழுது, மூளை சிலவற்றைக் கவனத்திலிருந்து கழற்றி விட்டுவிடுகிறது. இதன் விளவு, தோல்விகள், ஏமாற்றம், கோபம். இயலாமை உணர்வு.

ஒரே நேரத்தில் பல வேலைகள் வரும்போது, நாமே தன்னுணர்வுடன் எதனை முக்கியமாக, உடனுக்குடன் செய்யவேண்டிது? எனத் தீர்மானித்து, ஒரு பட்டியலிடுவது நன்று. அடுத்தடுத்த சவாலான வேலைகளை, மூளை தானே நினைவிலிருந்து மறக்கச் செய்கிறது. எனவேதான், பட்டியலிடுவது அவசியம்.

பல் வேலைகள் வரும்போது, அவற்றின் முக்கியத்தின், அவசியத்தின் அடிப்படையில் பட்டியலிட்டுச் செயலாற்ற முனைவது, நேரா யோசிப்பதின் ஒரு இன்றியமையாத அங்கம்.

Reference:


No comments:

Post a Comment