Sunday, May 19, 2013

6174 நாவல் விவாதிக்கப் படுவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் இருக்கும் அறிவியல் கருத்துக்களும், தமிழ்ப் புதிர்களும் அலசப்படுமானால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் திருத்திக்கொள்ளவும் பயனாக இருக்கும். கதைக் களம், போக்கு, கதையின் தொடர்ச்சி, தொய்வில்லாமல் போகுதல், திருப்பங்கள் போன்றவை குறித்துப் பல கருத்துக்கள் வந்துள்ளன. எழுதிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இனி வரும் கதைகளில் நான் இவற்றில் கவனம் செலுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

6174 கதையை அறிவியல் புனைகதை என்று வகைப்படுத்துவது சரியா என்பது எனக்கும் ஒரு கேள்வியாக இருக்கிறது. எது அறிவியல் புனைகதை என்பது வரையறுக்கப்படுதல் முதலில் அவசியம். 6174 நாவல் குறித்தான உரையாடல்கள் , பரிந்துரைகள்,  ரிவ்யூக்கள் கீழ்க்கண்ட  சுட்டிகளில் இருக்கின்றன.

http://www.facebook.com/6174thenovel

http://discoverybookpalace.com/search.php?search_query=6174&x=31&y=11

http://udumalai.com/?page=search&serach_keyword=6174

பிரபல கதாசிரியர் ஜெயமோகன் “21012ன்  10 சிறந்த தமிழ் நாவல்கள்” என்ற பட்டியலில் 6174 நாவலுக்கும் ஓரிடத்தை அளித்தது அவரது பெருந்தன்மை.


அனுபவமிக்க, மரியாதைக்குரிய எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள், அவரது சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் 6174க்கு 20வது இடத்தை அளித்திருக்கிறார். அவர் தரும் ஊக்கத்திற்கும் ஆசிகளுக்கும் எனது வணக்கங்கள்.

http://www.eramurukan.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

முனைவர் வேலுமணி அவர்களுடனான சந்திப்பு


தொழில் சார்ந்த வாழ்வில் பெருவெற்றி பெற்ற பலரும், தமது நேரத்தை வீணே செலவிடாமல் இருப்பதில் குறியாக இருப்பார்கள். அதுவும் விற்பனைத் துறையிலிருந்து போயிருக்கிறோமென்றால், நமது நேரத்தை விடுங்கள், நம்மை ஒரு மனிதனாகவே பலரும் மதிக்கமாட்டார்கள் வெகு சிலரே நாம் நமது நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும் அதைத் திறம்படப் பயன்படுத்தவும் நிஜமான அக்கறையோடு பேசுவார்கள், நடந்துகொள்வார்கள்.. இப்படிப்பட்ட யதார்த்த்த்தில்தான் போன வாரம் நான் முனைவர். திரு. வேலுமணி அவர்களைச் சந்த்தித்தேன்.
தைரோகேர் நிறுவனம், இந்தியாவில் , மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று. 90களில் மிக சாதாரண நிலையில் தொடங்கப்பட்டு, இன்று இந்தியாவின் பெரும் க்ளினிகல் டயாக்னாஸ்டிக் சங்கிலித் தொடர் ஆராய்வு நிலையங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் தைரோகேர் நிறுவனத்தின் அதிபரான முனைவர். வேலுமணி அவர்களைக்குறித்து கேள்விப்பட்டிருப்பினும், அவரை சந்திப்பது இதுவே முதல் முறை. அவரைச் சந்திக்குமுன் எனது டெக்னிகல் உரையாடல்களும், டெமோவும் முடிந்துவிட்டிருந்தன. நாங்கள் பேசியதைச் சுருக்கமாக அவரிடம் ரெண்டு நிமிடத்தில் சொல்வதற்குத் தயாராகியிருந்தோம். ஒரு சராசரி சி.இ.ஓ எப்படி மேலோட்டமாக டெக்னிகல் விஷயங்களைக் கேட்பாரோ, அந்த அளவில் அவரிடம் உரையாடலை எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால், அவரோ கருவிகளின் அறிவியல் தொழில்நுட்பத்தின் ஆழ அடிப்ப்படைகளை “நீ சொல்வதிலிருந்து இப்படித்தான் நான் புரிந்துகொண்டிருக்கிறேன். “ என்று சொல்லியவாறே தொடங்கியபோது வியந்து போனோம். இவ்வளவு சுருக்கமாகவும், தெளிவாகவும், அந்த அளவு உயர்நிலையிலிருக்கும் ஒரு மனிதர் பேசுவது மிக அரிது. எனது முறை வந்தபோது ஆய்வுச்சாலை மென்பொருள் குறித்து நாங்கள் பேசினோம்என்றேன். அவர் சுவாதீனமாகத் தலையைத் தடவியவாறே “மென்பொருள் என்றால் என்ன? மூன்றே வார்தைகளில் சொல்லணும்என்றார். “சார். மூன்று மணி நேரம் பேச்ச்சொன்னால் பேசுவேன். மூணு வார்த்தைகளில் என்றால் ஐ ஆம் சாரி என்ற மூன்று வார்த்தைகள் மட்டும்தான் வருதுஎன்றேன். அவர் சிரித்தபடி “மிகவும் அடித்தளத்திலிருந்து யோசி. பயன்படுத்துபவனுக்கு என்ன வேணும்? பயன்படுத்த எளிதான திரையமைப்பு, அவனுக்கு வேண்டியதைத் தேடுவதற்கு எளிதான தேடல் இயந்திரம், மிக எளிதான அறிக்கை தயாரிக்கும்  ரிப்போர்ட்டிங்க் கருவி. இந்த மூணுதான் ஒரு ஆய்வுச்சாலையில் முக்கியமானது. இதுக்கு ஏற்றமாதிரி உன்னோட மென்பொருளில் என்ன இருக்குன்னு சொல்லு. எல்லாருக்கும் ஆர்வம் வரும். சும்மா, என்னோடது ஏ.எஸ்.பி டாட் நெட் ப்ளாட்ஃபார்ம்,பேக் எண்ட் ஆரக்கிள், க்றிஸ்டல் ரிப்போர்ட் கனெக்டிவிடி, ஆண்ட்ராய்ட் அப்ஸ்.ன்னு படம் போடறது ஒரு பிரமிப்பை, கவர்ச்சியைத் தருமே தவிர, ரொம்ப நேரம் பயன்படுத்துபவனை இழுத்துப் பிடிச்சு வைக்காதுஎன்றார். சற்றே யோசித்துப் பார்த்தேன். உண்மைதான். ஸ்பெஸிஃபிகேஷன் எண்களிலும், தொழில் நுட்பத்தின் வலைப்பின்னல்களின் அழகிலும் நாம் மயங்கலாம். பயன்படுத்துபவர்கள் அதில் நாட்டமுடையவர்களாவார்களா என்று சொல்லமுடியாது. பவர்பாயிண்ட் ப்ரெசெண்ட்டேஷன்களும், டெமோக்களும் நமது அறிவையும், அனுபவத்தையும் காட்டலாம். ஆனால், வாங்குபவனுக்குத் தேவையானதைக் காட்டுமா என்றால் சந்தேகம்தான். மிக அடிப்படையான அளவிலேயே வாங்குபவர்களின் விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. அந்த்த் தளத்தை உதறிவிட்டு, நாம் தொழில்நுட்ப, அறிவியல் தளங்களில் இருந்து பேசுவது , அவர்களை நிறைவு கொள்ளச்செய்துவிடாது.மாறாக, அன்னியப்படுத்திவிடும் அபாயம் அதில் உண்டு.
அதன்பின், அவர் பேசுவதில் சற்றே கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினேன். கணிதம் படித்த அவர், கெமிஸ்ட்ரியும் , பயாலஜியும் புரிவதற்கு ஆறாம் வகுப்புப் பாடப் புத்தகத்திலிருந்து தொடங்கி படிப்படியாக சொந்தமாகவே படித்து விற்பன்னராக ஆனதைச் சொன்னதைக் கேட்கையில், வியப்பாக இருந்த்து. அது எப்படிக் கைகூடியது? என்பதை மராத்தியில் இரு வார்த்தைகளில் சொன்னார் “நாம் எதிலும் வெற்றி பெறுவதைத் தடுக்கும் தடைகள் இரண்டு. ஒன்று “ எனக்கு நேரமில்லை , இரண்டாவது “ போகுது. போரடிக்குது” “

 ஊன்றிக் கவனியுங்கள். முதலாவது , நாம்  நம்மையே ஏமாற்றிக்கொள்ள சொல்லிக்கொள்ளும் சப்பைக்கட்டு .   ’காலையில் எழுந்து ஆபீஸ் போவதற்கே நேரமில்லை. பின்னே ஆபீஸில் பிழியப்பிழிய வேலை. சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தா எப்படா படுக்கைல விழுவோம்னு இருக்கிற களைப்பு. ஞாயித்துக்கிழமை அக்கடான்னு ரெஸ்ட் எடுக்கறதுக்கும், சொந்த வேலைகளைக் கவனிக்கற்துக்குமே சரியாப்போகுது. இதுல எங்க மேல படிக்க.? உழைக்க?’ – நாம் எல்லாருக்கும் கிடைத்திருக்கும் சால்ஜாப்பு. மிகச் சரியாக நாம் உறுதிப்படுத்தும் காரணங்கள். அவை பொய்யில்லை. மாயம். Not lies - just illusions. இதைத் தாண்டி முன்னேற உழைப்பவனே வெற்றியடைகிறான்.
இரண்டாவது, நமது மனம் விரும்பும் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு. இனர்ஷியா(inertia) என்னும் பதம் இயற்பியலில் மிக முக்கியமானது. ஒரு பொருளுக்குக் கொடுக்கப்படும் ஆற்றல், இனர்ஷியாவிற்கு அதிகம் இருந்தால்தான் ஒரு இயக்கம் ஏற்படும். இது எட்டாம் வகுப்பு இயற்பியல். ஆனால் எண்பது வயதிலும் நமக்கு இது புரிவதில்லை. சோம்பேறித்தனம் என்ற இனர்ஷியாவை நாம் தாண்டும் வரையில் வெற்றி நோக்கிய இயக்கம் இருக்காது. ஒவ்வொருமுறையும் சோம்பேறித்தனம் என்ற இனர்ஷியாவைத் தாண்டி நமது உந்து சக்தி இருக்குமானால், வெற்றி நோக்கிய இயக்கம் நிச்சயம்.
மிகவும் சுவாரசியமான ஒரு பதத்தை அறிமுகப்படுத்தினார் முனைவர் வேலுமணி.. நமது நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதன் ஒரு அழகான அலகு அது .MAIH என்னும் அப்பதத்தைக் குறித்து அடுத்த வாரம் எழுதுகிறேன்.