Sunday, May 19, 2013

6174 நாவல் விவாதிக்கப் படுவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் இருக்கும் அறிவியல் கருத்துக்களும், தமிழ்ப் புதிர்களும் அலசப்படுமானால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் திருத்திக்கொள்ளவும் பயனாக இருக்கும். கதைக் களம், போக்கு, கதையின் தொடர்ச்சி, தொய்வில்லாமல் போகுதல், திருப்பங்கள் போன்றவை குறித்துப் பல கருத்துக்கள் வந்துள்ளன. எழுதிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இனி வரும் கதைகளில் நான் இவற்றில் கவனம் செலுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

6174 கதையை அறிவியல் புனைகதை என்று வகைப்படுத்துவது சரியா என்பது எனக்கும் ஒரு கேள்வியாக இருக்கிறது. எது அறிவியல் புனைகதை என்பது வரையறுக்கப்படுதல் முதலில் அவசியம். 6174 நாவல் குறித்தான உரையாடல்கள் , பரிந்துரைகள்,  ரிவ்யூக்கள் கீழ்க்கண்ட  சுட்டிகளில் இருக்கின்றன.

http://www.facebook.com/6174thenovel

http://discoverybookpalace.com/search.php?search_query=6174&x=31&y=11

http://udumalai.com/?page=search&serach_keyword=6174

பிரபல கதாசிரியர் ஜெயமோகன் “21012ன்  10 சிறந்த தமிழ் நாவல்கள்” என்ற பட்டியலில் 6174 நாவலுக்கும் ஓரிடத்தை அளித்தது அவரது பெருந்தன்மை.


அனுபவமிக்க, மரியாதைக்குரிய எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள், அவரது சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் 6174க்கு 20வது இடத்தை அளித்திருக்கிறார். அவர் தரும் ஊக்கத்திற்கும் ஆசிகளுக்கும் எனது வணக்கங்கள்.

http://www.eramurukan.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

No comments:

Post a Comment