Saturday, December 24, 2005

பின்னூட்டங்களுக்கு யார் பொறுப்பு?

பின்னூட்டங்களின் கருத்துகளுக்கு வலைப்பதிவின் ஆசிரியர் பொறுப்பாகவேண்டும் என இந்திய தகவல் தொடர்புச் சட்டம் இருப்பதாக ( அல்லது வரப்போவதாக?) பத்ரியின் பதிவில் படித்த ஞாபகம். தணிக்கை செய்தபின்னரே பின்னூட்டங்கள் பதிவில் வருவது நல்லது எனவும் நானும் சிந்தித்தேன். இத்தகைய கிறுக்குத்தனங்கள் இந்தியாவில் மட்டுமே சாத்தியமெனவும் பொருமிக்கொண்டிருந்தேன்.
ஜெர்மனியும் விதிவிலக்கல்ல என இப்பதிவு கூறுகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா குறித்த முதல் பத்தியை விடுங்கள். இரண்டாம் பத்தியிலிருந்து இறுதிவரை படித்தால், கோட்டிக்காரத்தனம் என்பது உலகப் பொதுச் சொத்து எனப் புரிகிறது.
பத்ரி, ரவி ஸ்ரீனிவாஸ் போன்றோர் இதுகுறித்து விளக்கம் தந்தால் நல்லது

No comments:

Post a Comment