Saturday, July 30, 2005

தமிழா தமிழா

தமிழா தமிழா
----------------

மழையால் வந்த சேதம் போதாதென, வதந்திகள் உயிர்ப்பலி வாங்கிய அவலம் மும்பையைப் பெரிதும் தாக்கியிருக்கிறது. சுனாமி வருகிறதென சில விஷமிகள் பரப்பிய வதந்தியில் கடற்கரையினருகே நேரு நகர்ப் பகுதியில் வசித்து வந்த மக்கள் பதறி ஓட, அந்த அமளியில் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம்.
நேருநகர்பகுதியில் வசிப்பவர்களில் பெருவாரியில் தமிழ்மக்கள்.அன்றாடங்காய்ச்சிகள். அது சேரிப்பகுதியென்பதால் குறுகலான வழிகள் ஓடும் பாதையைல் நெரிசலைக் கூட்டியிருகின்றன. சுனாமி பற்றிக் கேள்விப்பட்ட தமிழ்மக்கள் என்பதால் பீதி அதிகமானது.
காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கின்றது. வதந்தியைப் பரப்பியவகளில் சில அறவாணிகளூம், நடனமாதுக்களும் முக்கியமான குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மேது கொலைக்குற்றம் சாட்டப்படுள்ளது. காவல் ஆணையர் "வதந்திகளை நம்மப வேண்டாம் " என மீடியா மூலம் வேண்டுகேள் விடுத்துள்ளார். கனமழையில் வேலை செய்யாத மொபைல் போன் கம்பெனிகள், காவல்துறையின் வேண்டுகோள்களை குறு செய்திகள் மூலம் பரப்பி புண்ணியம் கட்டிக்கொண்டுள்ளன.

தாராவி, நேருநகர் குர்லா, செம்பூர் போன்ற இடங்களில் பெருவாரியாக வாழும் தமிழ்மக்களுக்கு எந்த தமிழ் சங்கமும் முன்வந்து உதவி செய்ததாக செய்தி இல்லை. தமிழ்ப் பத்திரிகைகளும், தமிழ் டி.வி சேனல்களும் "மாண்புமிகு அமைச்சர் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் " போன்ற செய்திகளுடன் கொசுறாக மும்பையில் மழை என்றும் , சில புள்ளி விவரங்கள் தந்ததோடு நிறுத்கிக்கொண்டு விட்டன. முன்பின் தெரியாத மக்களின் உதவியிலும் தியாக மனப்பாங்குமே மும்பையை இயற்கையின் சீற்றத்தில் போராடிப் பிழைக்கவைத்தன என்பது கண்கூடு.
சராசரி மும்பைவாழ் மனிதன் வெள்ளத்தின் மேலே பத்தடி உயர்ந்து நிற்கிறான்.

No comments:

Post a Comment