Sunday, January 11, 2009

பசுத்தோல் போர்த்திய..

பசுத்தோல் போர்த்திய..
இந்தியாவில் பிறந்த ஆங்கிலப் புத்தகௌலகில் சிறப்பாகப் பேசப்படுமொரு பெண்மணி எழுதிய புத்தகங்களை இதுவரை படிக்கவில்லையே என்னும் வருத்தம் இருந்து வந்தது. இப்போது இல்லை..மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அவர் கார்டியனில் எழுதியபோது நான் இங்கிலாந்தில் இருந்தேன். "சே, என்ன மனிதர்கள் இவர்கள் ?"என்று தோன்றிவிட்டது.

அவர் எழுதியபோது பல தகவல்கள் வெளிப்படவில்லை. தாக்குதல் தீவிரவாதத்தனமானது என்பது மட்டும் டெளிவு. இது போதாதா, தீவிரவாதத்தைக் கண்டிக்க?

இதுபோன்றவர்களின் அதிமேதாவித்தனத்தை மெச்சாமல் அவர்களுக்கு உரிய இடத்தைக் காட்டுவது நல்லது என நினைக்கிறேன். எதற்காக இவர்கள் இப்படி எழுதிகிறார்கள்? புகழ்... மற்றவன் சாவிலும் சலசலப்பை ஏற்படுத்தித் தன் பெயர் வரவேண்டும் என்னும் தாரள குணம். இவர்கள் எழுதியது எவ்வளவு நல்ல கதையாக இருந்தால் என்ன ?ஏன் புலிட்சர் & புக்கர் பரிசு கிடைத்தல் என்ன? மனிதத்துவம் இல்லாதவர்களின் வார்த்தைகளைக் படிக்காமல் போனால் ஒன்றும் குறைந்துவிடுவதில்லை என நினைக்கிறேன்.

எனது நண்பர்களில் சிலர் இதனை ஏற்கவில்லை.
"குளத்தோடு கோவிச்சுகிட்டு கழுவாமப் போனா.."
" கலை, இலக்கியம் நாடு கடந்தது"
இது போன்ற வார்த்தைகள் வந்தாலும், வருமானாலும், நான் கவலைப்படப் போவதில்லை.

தன் வீட்டின் ஒரே வருமானமும் தனது பணி ஓய்வுக்குப் பின் நின்றுவிட, "தனது மகன் வேலைக்குப் போய்விட்டான், இனிமே கவலையில்லை" என்றும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த தந்தை, மகனின் ரத்தம் தோய்ந்த உடலைப் பெற்றுக்கொள்ளும்போது உதடு துடிக்க மராட்டியில் எதோ சொல்வது தொலைக்காட்சி அறிவிப்பாளரின் ஓசையில் கேட்கவில்லையெனினும்...

வலித்தது, உணர முடிகிறது. எந்த இலைக்கியம் அவருக்கு ஆறுதல் கூறிவிட முடியும்? எந்த இலக்கியம் இதைவிட பாதிப்பை ஏற்படுத்திவிட முடியும்?

பிற மனிதனின் வலியறியாது பேசுபவர்களை முற்றிலும் புறக்கணிப்பது, அவர்களுக்கு மரியாதை ( பெயர்/ நினைவு) தர மறுப்பது என்பது பைதியக்காரத்தனமாகப் படலாம். ஆனால், அவர்கள் முய்ற்சியே , நாம் அவர்களைப் பற்றி பேசுவதும், நினைப்பதும்தானே? அதனை தர மறுத்தால் அவர்கள் முயற்சியை முறியடித்ததாக ஆகுமல்லவா?

ஒரு வரம் முன்பு ஒரு வினாடி வினாவுக்கு தயார்செய்து கொண்டிருந்த என் மகன் இப் பிரபல ஆசிரியரது நாவல்கள் குறித்துக் கேட்டான். "தெரியாது" என்றேன். அவனையும், இக்கேள்விக்கு தெரியாது எனவே பதில் சொல்லவும் சொன்னேன். வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. இத்தீவிரவாதத்டை முறியடிக்கவேண்டும்.

ஹேமந்த் கர்கரே, சாலஸ்கர், மற்றும் பெயர்தெரியாத வீரர்களுக்கும், உயிர்துறந்த அப்பாவி மனிதர்களுக்கும் நாம் செய்யும் சிறு முட்டாள்தனமான வீரவணக்கம்.

2 comments:

  1. You are right. You are lucky, you never read her books, but i had the chance of reading it. The book got attracted because of the stupid view imposed by author. You see, those elite people are joining together, this is not good for future Indian authors.

    ReplyDelete
  2. Anonymous7:09 PM

    Thanks Yuva,
    I see a heartening trend in Indian English writings now... people focus on current issues ( One night in a call centre?) and are not much bothered about getting name and fame by creating a controversy.
    Looking at the madness, I take refuge in P.G.Wodehouse - the all time favorite of many!
    Regards
    Sudhakar

    ReplyDelete