Saturday, April 14, 2018

தேர்ச்சியெனும் பொறி


தினமணி.காம்-ல் வரும் “நேரா யோசி” கட்டுரைத்தொடரின் 15வது அத்தியாயம். 


எதிரி 15 தேர்ச்சியெனும் பொறி



விஷூவல் பேஸிக்- சுனிதாவை அடிக்க ஆளே கிடையாது”;  நீதாம்ப்பா அந்த கண்ட்ரோல்ரூம்ல ராஜா. எத்தனை ஆபீஸர் வந்தா என்ன? ஆப்பரேட்டர் நீ இல்லாம ஃபாக்டரியே நின்னு போயிரும்

கேட்கையில் மிதமிஞ்சிய கிறக்கத்தைத் தரும் சொற்கள். எனது பணியை , என் தேர்ச்சியை, திறமையை பிறர் பாராட்டும் தருணம் பெரியது. என்னை நானே அடையாளம் கண்டுகொண்டு, ’சபாஷ்டாஎன்று முதுகில் தட்டிக்கொண்டு புத்துணர்வுடன் வேலை பார்க்க்க் கிளம்பும் தருணம்.

இதுவரை எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருக்கு. ஆனால், நாம் நம்மை அறியாமலேயே ஒரு பொறியை நம் காலில் மாட்டிக்கொள்கிறோம் என்பது கசப்பான உண்மை.
ஒரு துறையில் தேர்ச்சி பெறுவதற்கு 10000 மணி நேரப் பயிற்சி தேவை என்று ஒரு யதார்த்த நிகழ்வுகளின் தொகுப்பு, அதன் அடிப்படையிலான புள்ளியியல் விவரம் சொல்கிறது. உடல், மனம், மூளை இவற்றின் இணைந்த நிகழ்வுகளின் அடிப்படையில் வரும் திறமை, மெருகேற்றம் 10000 மணி நேரப்பயிற்சியில் நிச்சயமாக மேலோங்கி நிற்கும். எனவே, ஒருவருக்கு ஒரு துறையில் ஆர்வத்தின் மூலமாக, அல்லது அவரது இயல்பான திறமையின் மூலமாக தேர்ச்சி எளிதில் வந்துவிட்டால்,அதற்குக் கிடைக்கிற நேர்மறைப் பின்னூட்டம், பாராட்டுக்கள் அவரை மேலும் திறம்படச் செய்ய உந்துகின்றன. பத்தாயிரம் மணிநேரப் பயிற்சி இன்றி, ஒரு மாதப் பயிற்சியிலேயே அவர் தேவைப்பட்ட தேர்ச்சியை அடைந்து விடுகிறார் என்றால், அவரை மேற்சொன்னவாறு புகழ்கிறது உலகு.

இதில்தான் மறைமுகமாகப் பொறி வருகிறது. எனக்கு விஷூவல் பேஸிக் என்ற கம்ப்யூட்டர் மொழி தெரியுமென்றால், அதில் எனது தேர்ச்சி புகழப்பட்ட்து என்றால், அதனையே மேலும் மேலும் செய்யத் தோன்றும். மூளை, அதிகமாக அலட்டிக்காமல், அதிகப் பயனைப் பெற முயல்கின்ற சோம்பேறி என முன்னே பார்த்திருக்கிறோம். தேர்ச்சி பெற்ற ஒரு துறையில் அதிக முயற்சி தேவையில்லை. தேவைப்பட்ட பரிசு, பாராட்டு கிடைத்துவிடும். ஏன், புதிதாக மற்றொன்றைக் கற்கவேண்டும். விடு, விஷுவல் பேஸிக்ல அடுத்த ப்ராஜெக்ட் எடுத்துக்கோ.

இப்படித்தான் சுனிதா இன்று ஒரு டைனோசார் ஆக மாறியிருக்கிறாள். உலகு, அந்தப் ப்ரோக்ராமிங் மொழியை விடுத்து அடுத்த லெவலுக்குப் போனதை அவள் கண்டாலும், கவனிக்கவில்லை. விளைவு? இரண்டு வருடங்களுக்கு மேல் அவளது கம்பெனிநீ மிக்க் கடினமான உழைப்பாளி. உனது திறமை, விசுவாசம் மிக அதிகமாகவே பாராட்டப்படவேண்டியவை. ஆனால், சுனிதா…”  

இரண்டு மாதம் நோட்டீஸ் கொடுத்தார்கள். அவள் வாங்கியிருந்த சம்பளத்திற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. பெங்களூர் வீட்டிற்கு மாதத்தவணை கட்டுவதில் மூச்சடைத்துப் போனது.

இருவத்து நாலாம் வயதில் , ஒரு கம்பெனியில் கண்ட்ரோலர் ரூம் ஆபரேட்டராக ஜெயந்த் சேர்ந்தபோது கிடைத்த சம்பளம் அன்று போதுமானதாக இருந்த்து. இரு முறை ,  இரவெல்லாம் கண்விழித்து, பெரும் இடர்களைச் சமாளித்து பாராட்டுப் பெற்றான். உன்னை விட்டா அந்த கண்ட்ரோலரை இயக்க யாராலும் முடியாதுஎன்ற அதிகாரிகளின் சொற்கள், கண்ணை மறைக்க,  அவன் அடுத்த்தாக என்ன செய்தால், ஆபீஸராக முன்னேறலாம்? என்ற எண்ணமே இன்றி திறம்பட்ட ஆபரேட்டராக இருந்தான்.

ஐந்து வருடத்தில் தொழில் நுட்பம் மாறியது. கம்பெனி, வேறு கண்ட்ரோலரை வாங்கியது.  அதிகமான   திருகுமானிகளோ, இயக்கும் லீவர்களோ இன்றி , ஒரு கீ போர்டு, ஸ்கிரீன், ஜாவாவில் எழுதப்பட்ட மென்பொருள் என அடக்கமாக வந்த கண்ட்ரோலரை இயக்க ஜெயந்த் தடுமாறினான். “ தம்பி, நீ வீட்டுக்குப் போகலாம்என்று ஒரு மாலை நேரத்தில், சமோசா, டீ, பூங்கொத்து எனக் கொடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டான். புதிதாகச் சேர்ந்திருந்த இளைஞனின் சம்பளம் ஜெயந்த்தின் சம்பளத்தில் நேர் பாதி.

ஒரு துறையில், ஒரு காலகட்டத்தில் இருக்கும் தேர்ச்சி எப்போதும் பாராட்டப்படாது. ’மாறுதல்  ஒன்றே நிலைத்திருக்கும்என்ற சொல் கவர்ச்சியான சொற்கட்டு மட்டுமல்ல, வலிமிகுந்த யதார்த்தம். இதனை அறியாது அப்படியே நின்றவர்கள் , நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.

தனிமனிதர்கள் என்றல்ல, பல பெரிய கம்பெனிகளுக்கும் இதுதான் நிலை. ப்ளாக்பெர்ரி , பத்து வருடங்களுக்கு முன் பெருமளவில் அலுவலகத் தொடர்புக்காகப் ப்யனபடுத்தப்பட்ட்து. எனது கம்பெனியின் உலகளவில் நடக்கும் கூட்டத்தில்ப்ளாக் பெர்ரி எப்படி நம் வியாபாரத்தை வலுப்படுத்தும்?” என்பதாக ஒரு தனிக் குழு ஆலோசனையே நடைபெற்றது. ஸ்மார்ட் ஃபோன்களின் வரவைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் , மாறாமல் இருந்த ப்ளாக்பெர்ரி, இப்போது  எங்கே?

ஏழு வருடமுன்பு வரை, மிக அதிக அளவில் விற்ற அலைபேசிகளைத் தயாரித்து முன் நின்ற நிறுவனம் நோக்கியா. “ உலகில் அதிக அளவில் காமெராக்களைத் தயாரிக்கும் நிறுவனம் எது? என்ற புகழ் பெற்ற கேள்வியின் விடைநோக்கியா.  (செல்போன்களில் காமெராக்களைப் பதித்து விற்றதில் உலக சாதனை புரிந்த்து நோக்கியா). இதெல்லாம் 4 வருடங்கள் முன்பு. இன்று நோக்கியா?  மைக்ரோஸாஃப்ட்-ஆல் வாங்கப்பட்டுச் சிதைந்து போனது.

110 வருடங்களாகத் தொழில் நுட்பத்தில் கண்டுபிடிப்பும், அதன் பயன்பாட்டுத் தயாரிப்புமாக முன்னணியில் இருந்த நிறுவனம் ஜெராக்ஸ். ஒளிநகலென்பதை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜெராக்ஸின் பெயர், ஓளிநகலெடுப்பதின் வினைச்சொல்லாகவே மாறியது. ஜப்பானிய போட்டியாளர்களுடன் சந்தையைச் சந்திக்கத் தடுமாறிய ஜெராக்ஸ், மாறும் உலகைன் இயல்பைப் புரிந்துகொள்ளாமல், பின் தங்கி,  இறுதியில் அதன் ஒளிநகல் துறையை, ஃபுஜி ஃபிலிம் கம்பெனிக்கு விற்றது.

மேற்சொன்ன அனைத்திலும் பொதுவானது என்ன? உலகம் மாறுவதைப் புரிந்துகொள்ளாமை; அறிந்திருந்தாலும், தனது நிலையில் மாற்றம் ஏற்படுத்தாமை. “எனது துறையில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்என்ற பொய்யான பாதுகாப்புணர்வு, நாளை வரவிருக்கும் அபாயத்தை உணர முடியாமல் தடுத்துவிடுகிறது. நிகழ்வு முன்னே நிற்கையில், அதிர்ச்சியில் தடுமாறுகையில், முன்னேற்பாடில்லாமையால் முழுகிப் போகிறார்கள்.

நாமிருக்கும் நிறுவனங்களே புதிய மாற்றத்திற்குத் தயாராகலாம். அந்த நேரத்தில், மாற்றத்தை எதிர்க்காமல், “நாம் வாழ அல்லது முன்னேற என்ன செய்யணும்?” என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்வது நலம். நம்மால் கேட்க முடியவில்லை என்றால், துறையறிந்த ஒரு விற்பன்னரிடம், தகவலைக் கொடுத்து, ஆலோசனை கேட்கலாம். பாதுகாப்பற்ற உணர்வு, அச்சத்தை விளைவித்து, மாற்றங்களை எதிர்க்கத் தூண்டும். அது பரிமாற்றப் பகுப்பாய்வின்படி, நம் பெர்ஸனாலிட்டியில்சைல்ட்எனப்படும்  உணர்வு பூர்வமாக இயங்கும் குழந்தை நிலையைக் குறிக்கும். ஒரு எதிர்வினை, குழந்தை நிலையிலிருந்து வருவது வரவேற்கத்தக்க ஒன்றல்ல.

இந்த மாய பாதுகாப்புணர்வினை, தேர்ச்சியினால் கிடைக்கும் நிறைவினை competency trap தேர்ச்சியெனும் பொறி எனலாம். இதில் மாட்டிக்கொள்ளாமல், “ரைட்டு, இன்னிக்கு பாராட்டு கிடைத்திருக்கிறது. நல்லது. ஆனால், இப்ப நம்ம துறை எப்படி மாறிகிட்டிருக்கு. நாம என்ன செஞ்சா முன்னேறலாம்?” என்ற கேள்வியை அடிக்கடி நம்முள்ளே சிந்தையில் கேட்பது நேரா யோசிப்பதன் ஒரு அடையாளம்.

No comments:

Post a Comment