Friday, October 07, 2005

நெளியும் நண்பர்கள்- மண்புழு வளர்ப்பு
-------------------------------------

மும்பை போன்ற நகரங்களின் மிகப்பெரிய தலைவலி- திடக் கழிவு நிர்வாகம். மும்பையில் மட்டும் ஒரு நாளுக்கு 6000 மெட்ரிக் டன் கழிவு உற்பத்தியாகிறது. மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் மிகத் திறமையாகச் செயல்பட்டால் 5500 மெட்ரிக் டன் கழிவை அப்புறப்படுத்த முடியும். மிச்சம் 500 டன் கழிவுகள்? ஆதாரம் www.ceeraindia.org/documents/bmc.htm
எடுத்த கழிவுகளை புதைக்க landfil இடங்கள் தேடுவது மற்றொரு தலைவலி. 25 வருடங்களில் ஒரு இடம் நிறைந்து போகும். பின்னர் மற்றதைத் தேடவேண்டும். கழிவு நிறைந்த இடத்தை மீண்டும் புதுப்பிப்பது என்பது மற்றொரு தலைவலி. அவ்வளவு எளிதல்ல.
பல ஆலோசகக் குழுக்கள் பலதரப்பட்ட யோசனைகளை வழங்கியிருக்கின்றன. குப்பையை உருவாக்கும் இடத்திலேயே பிரித்தல் ( seggregation at source) என்பதைக்குறித்து அதிர்ச்சியூட்டும் விதமாக முனிசிபல் கார்ப்பரேஷன்கள் இன்னும் ஆலோசித்துமட்டுமே வருகின்றன. மக்களை படிப்பிக்கும் விதம் குறித்து கவலை கொள்கின்றனவாம்.. இது முதலில் கட்டாயமாக்கவேண்டும்.
மண்புழு வளர்ப்பு மூலம் கரிம கழிவுகளுக்கு ஒரு தீர்வு காணலாம் என்பதை அறியும்போது கொஞ்சம் வியப்பாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. மண்புழு வளர்ப்பு என்பது வேளாண்மைக்கு பயன்படும் என்றும், அது நல்ல கரிம உரம் தயாரிக்கும் குடிசைத்தொழில் என்று மட்டுமே நான் அறிந்திருந்தேன். பெரிய அளவில் கரிம உரம் தயாரிக்கவும், கழிவுகளை சுத்தப்படுத்தவும் இது உதவும் என்பதை இச்சுட்டியில் அறிந்தேன்.
http://www.morarkango.com/waste_management/index.html
மொரார்கா தன்னார்வலக்குழுவின் மண்புழு வளர்ப்பு பற்றிய செய்திகள் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், பொருளாதாரத்தில் கீழ்நிலையிலிருப்பவர்களுக்கு வேலை,மற்றும் பீடித் தொழிலாளர்களௌக்கு அவ்வேலையை நிறுத்தி,மாற்று வேலை கொடுக்கும் திட்டம் போன்றவற்றிற்கு உதவுவதாகவும் இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இக்குழு செய்திருக்கும் பணி குறித்து அறியும்போது , மாநகரங்களில் கழிவு நிர்வாகம் மேம்படச் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

வீடுகளில் கழிவு நிர்வாகம் குறித்துக் கூறுகையில், வெறும் ரூ.2500.00 கொண்டு எப்படி கழிவுகளை அகற்றலாம் என்பதையும், கரிம உரம் தயாரிக்கலாம் என்பதையும் சொல்கிறார்கள். IFFCO நிறுவனம், இவ்வுரத்தை நல்ல விலையில் வாங்கிக்கொள்ளவும் தயாராக இருப்பதால், கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் கூட்டுறவு நிறுவனங்கள் இதனை ஒரு தொழிலாகவும் எடுத்துச் செய்யலாம்.
பல மாடிக்கட்டிடங்கள் கொண்ட குடியிருப்புகளுக்கென பெரிய அளவில் கழிவு நிர்வாகம் செய்து தரவும் இந்நிறுவனம் தயாராக இருக்கிறது. ஓட்டல்கள், குடியிருப்பு வளாகங்கள் இதனால் பயன்பெறும் என்பதோடு, முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு கழிவுநிர்வாகத்தில் பளு பெருமளவில் குறையும்.
முன்னுதாரணமாக மும்பையில் சேரிச் சிறுவர்களைக்கொண்டு செய்யப்பட்ட ஒரு ப்ராஜெக்ட்டில் சிறுவர்கள் பிச்சையெடுப்பதை விட்டுவிட்டு இதனைத் தொழிலாக ஏற்று நடத்த முன்வந்தனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை ஒருவருடம் முன்பு வாசித்த ஞாபகம் வருகிறது.

இதனை பெரியளவில் வர சில சக்திகள் தடுப்பதாகவும், அரசியல் ஆதாயம் கருத்தில் கொண்டு புழு வளர்ப்பு தடைப்படுவதாகவும் கேள்வி. கழிவிலுமா கமிஷன் அடிக்கணும்? பாவிகளா...

1 comment:

  1. கன்ஸ்யூமர் கலாச்சாரம் போற்றப்படும் இக்காலத்தில் அதனால் ஏற்படும் கழிவுகளை சூழலைப் பாதிக்காவன்னம் எப்படி மறு சுழற்சி செய்வது என்பதை படித்தவர்கள் உட்பட பலர் அறிந்திருப்பதில்லை. அரசும் அதைப் பெரிய பிரச்சினையாகக் கருதுவதாகத் தெரியவில்லை.
    விழிப்புணர்வு வரத்தக்க நீங்கள் எழுதிய இப்பதிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete