Saturday, March 05, 2005

NaatuppuRappaadalkaL-2

சில நாட்கள் முன்பு நாட்டுப்புறப்பாடல்களின் முன்னோடியென அமரர். திரு. அன்னகாமு அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன்.1950-60களில் நடைபெற்ற அவரது நாட்டுப்புறப் பாடல்கள் திரட்டு முயற்சிகள், அதற்கு ஏற்பட்ட இன்னல்கள் பற்றி விவரங்கள் தேடும் முயற்சியிலிருந்தேன். அதிர்ஷ்டம் எனச் சொல்லவேண்டும். பேராசிரியர் இராமானுஜம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பல விவரங்கள் கிடைத்தன.

பேராசிரியர் இராமானுஜம் , காந்திகிராம ஆசிரியர் கல்லூரியில் அன்னகாமு அவர்களின் மாணவர். காந்திகிராமத்தில் வாழ்ந்தவர்.அன்னகாமு அவர்களுடன் கிராமங்களுக்குச் சென்று, பாடல்களை எழுதிப் பதிவு செய்த மாணவர்களில் ஒருவர். அவர் குறிப்பிட்ட சில செய்திகள் இவை.

அன்னகாமு அவர்கள் 50களில் நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.மதுரைமாவட்ட கிராமங்களில் நேரில் சென்று, பாடல்களைத் திரட்டினார். குறிப்பாக ஆலம்பட்டி,முருகன் பட்டி, கன்னிவாடி போன்ற கிராமங்கள் ( காந்திகிராமத்தைச் சுற்றிய கிராமங்கள் இவை).
பாடல்களைப் பதிவு செய்வதில் பல இன்னல்கள் ஏற்பட்டன.
1. நாட்டுப்புறப்பாடல்கள் , தன்னிச்சையான உணர்வின் வெளிப்பாடு. பாடும் இடம், காலம், பாடுபவரின் உணர்வு அனைத்தும் கலந்த புலப்பாடு. அவ்வாறு பாடுபவர்களுக்கு பிறர் நகலெடுக்கப் பாடுவதில் தயக்கம் வெட்கம் இருந்தது.அதனால், பாடல்களைப் பதிவு செய்வதற்கு, அவர்கள் அத்தயக்கத்தினை மீறி வந்து பாடுவதற்கு பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருந்தது.. அவர்கள் மொழியில் பேசி, நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
2. ஒலிப்பதிவு இல்லாததாலும், மொழியின் மாறுபாடுகளாலும், வரிகளை ஒழுங்குபடுத்துவதில் உண்டான சிரமங்கள் பல. அன்னகாமு அவர்கள், கிராம வழக்குப்படி வழங்கிய மொழிச்சொற்களைச் சிதைக்காமல் அப்படியே கையாளுவதில் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அதனால், நாலு மாணவர்களோடு சேர்ந்து தானும் கிராம மக்கள் பாடும்போது எழுதியெடுப்பார். அனைவரின் எழுத்துப்படிவங்களையும் ஒப்பிட்டு, அன்னகாமு அவர்கள் எந்தச் சொல் எந்த இடத்தில் வரவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவார்.
3.எழுதியபின், அதன் மெட்டுகளை வரிசைப்படுத்துவதில் முதலில் சிரமமிருந்தது.
இதில் மறைந்த திருமதி. சியாமளா பாலகிருஷ்ணன் அவர்கள்(நாட்டிய மேதை பத்மா சுப்ரமணியம் அவர்களின் அண்ணி) பெரும்பங்கு ஆற்றினார். கிராமங்களில் பாடல்களைப் பாடும்போது , அருகிலிருந்து கேட்டு, மெட்டுகளை அப்படியே உள்வாங்கி, பாடல்களை அந்த இசைவடிவு மாறாமல் ஒருங்கமைத்துக் கொடுத்தார். அவரது அபார இசையறிவால், பாடல்கள் மெட்டு, சிதையாமல் பொலிவுடன் பதிவு செய்யப்பட்டன.

சில நாட்டுப்புறப்பாடல்களின் திரட்டுகளில், வரிகள் சரியாக அமையாதிருந்தால், திரட்டியவரே, சில வரிகளை தானே எழுதி அல்லது மாற்றியமைத்து பாடல்களைப் பதிவு செய்திருந்த காலமது. அக்காலக்கட்டத்தில், வார்த்தைகள் சிதைந்திருப்பினும், பாடல் வழக்கிலிருந்த வார்த்தைகளையே அன்னகாமு அவர்கள் பதிவு செய்தார். அவரது திரட்டுகள் உண்மையான பாடல்களைக்கொண்டிருந்தன.
திரைப்படங்களிலும் நாட்டுப்புறப்பாடல்கள் வந்திருந்தாலும், பெருமளவில் திரைக்கேற்ப மாற்றப்பட்டிருந்தன. சில திரைப்படப்பாடல்கள் நாட்டுப்புறப்பாடல் பண்ணிலும், மொழியமைப்பிலும், பாடலாசிரியர்களால் எழுதப்பட்டிருந்தன.இவ்வழக்கம் 70 களிலும் தொடர்ந்தது.

அன்னகாமு அவர்களது வாழ்க்கைப்பின்னணி குறித்து மேற்கொண்டு தகவல் கிடைக்கப்பெறும்போது மேலும காண்போம்

1 comment:

  1. ¿¡ðÎôÒÈôÀ¡¼ø¸û ÀÄ þó¾¢Â ¦Á¡Æ¢¸Ç¢Öõ ¯ñÎ. Á¨Ä¡Çò¾¢ø ÀÆõÀ¡ðÎ ±ýÀ÷. Ááò¾¢Â¢ø ¯ñÎ. â§É - §º¡Ä¡ôâ÷ À̾¢¸Ç¢ø º¢Å¡ƒ¢Â¢ý Å£Ãò¨¾ôÀüÈ¢ ( ¿õÁ °÷ ạ §¾º¢íÌ À¡¼ø¸û §À¡Ä) §¸ðÊÕ츢§Èý. «ÚŨ¼ ÓÊó¾Ðõ À¡Îõ À¡¼ø¸û Ááò¾¢Â¢ø, ÀﺡÀ¢Â¢ø ¯ñÎ ( †Ã¢Â¡ñŢ¢Öõ).
    Ááò¾¢Â¢ø ¿¡õ§¾ù À¡¼ø¸û ±É ( ¿õÁ °÷ âõ âõ Á¡Î) Á¡ð§¼¡Î ¨ÅòÐô À¡ÎÅ¡÷¸û.
    þýÛõ ¿¢¨È þÕì¸ìÜÎõ.
    «ýÒ¼ý
    ¸.;¡¸÷

    ReplyDelete