Saturday, April 23, 2005

நாடக ரசிப்பும் தமிழ் நாடகங்களும்

நாடக ரசிப்பும் தமிழ் நாடகங்களும்
--------------------------------

ரசனை என்பது ஒரு தனி மனித தளம். ஆயின் எவ்வாறு தமிழ் நாடகங்கள் தொய்வுற்றிருக்க பிற மாநிலங்களில் நாடகங்கள் வலுவடைந்திருக்கின்றன?
இக்கேள்வியை சற்றே திரித்து "மராத்தியில் எவ்வாறு நாடகம் இன்னும் வலுவாக இருக்கிறதென?" எனது நண்பரும், நாடக ரசிகருமான திரு.சி.ºÅ¡ñ அவர்களுடன் கேட்டிருந்தேன். அவர் சொன்னதில் இùவிடயங்கள் முக்கியமானதாகப் பட்டது.
1. நாடக ஆசிரியர்கள், அவர்களது படைப்புகள் பள்ளிகளிலேயே சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. கல்லூரிக்கு வரும்போது மாணவர்கள் குறைந்தபட்சம் பு.லெ. தேஷ்பாண்டே குறித்து அறிந்திருக்கின்றனர். பலர் டென்Tடுல்கரின் நாடகங்கள் படித்திருக்கின்றனர் அல்லது பார்த்திருக்கின்றனர். எனவே, தற்கால நாடகம் குறித்து அவர்களால் இயல்பாகப் பேச முடிகிறது.
2. மகாராஷ்டிராவில் மராத்தி சினிமா அவ்வளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. பாலிவுட் ஆசீர்வாதம்.. ஆயின், மராத்திய கலாச்சார,மொழிக்கு ஏற்ப இயல்பாக மராத்தி நாடகங்கள் அமைந்துவிட்டன. ஒரு சீரியலைவிட, பொதுஜன மராட்டியானவன், நாடகத்தை பார்க்கவும், அது குறித்துப் பேசவும் விரும்புகிறான். அவ்வாறு உரையாடப் பலர் கிடைக்கின்றனர். இது மும்பையிலிருந்து , ஓஸ்மனாபாத் மாவட்ட கிராமம் வரை பொதுவானது.
3. மராத்திய மொழி அறிவாளர்கள், எழுத்தாளர்கள், மராத்திய பத்திரிகைகள் மராட்டிய நாடகங்களைப் பற்றி பேசுகின்றனர். விமர்சிக்கின்றனர். தமிழ்நாட்டில் இலக்கியத்துறையில் ஒரு செங்குத்துப் பிளவு (verticalization) காணப்படுகிறது. எழுத்தாளர்கள், கலை இலக்கியத்துறை சார்ந்தவர்கள் எத்தனைபேர் நாடகம் குறித்து பேசுகின்றனர் மக்களிடம்?
4. நாடகம் பார்ப்பதென்பது தனிமனித அளவில் மட்டுமல்லாமல், சமூக அளவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குடும்பமாக நாடகம் பார்க்கச் செல்வதும், நண்பர்களூடன் செல்வதும் சகஜமாகப்போனதால், நாடகத்திற்கு வருமானம் அவ்வளவு பஞ்சமில்லை. புது நாடக முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.

இது குஜராத்தி நாடகங்களுக்கும் பொருந்தும்.

நாடக நடிகர்கள் சீரியலில் செல்வது இங்கும் உண்டு. குஜராத்தி நாடகங்களில் முக்கியமான நடிகை அபாரா மேத்தா ,பல ப்ரபலமான ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார்.ஆனால், அவர் குஜராத்தி நாடகமேடையை இன்னும் விட்டுவிடவில்லையே? தின்யார் கான்Tட்ட்ராக்டர், வர்ஷா உஸ்காங்கர்,ஷபானா ஆஸ்மி ,தமிழில் பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டே... பலரைச் சொல்லலாம்.

தமிழ் மக்கள் நாடகம் பார்க்க வருவார்களானால், பொருளாதாரச் சிக்கல் இக் குழுக்களுக்குக் குறையும். போட்டியில் நல்ல நாடகங்களூம் காணக் கிடைக்கும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், மக்கள் பிற மாநிலங்களில் நாடகத்தை சமூகத்திலிருந்து விலக்கிவிடவில்லை. இந்த ஆதரவு இருக்குமானால் தமிழ்நாடகங்கள் மேலும் வளரும்.

The world will never starve for want of wonders; but only
for want of wonder. G.K.Chesterton

இந்த மேற்கோளைத் தமிழ் நாடகத்திற்குப் பொருத்தி எழுதினால்..
The Tamil world will never starve for want of Good plays ; but only
for want of play.
மக்களிடம் நல்ல நாடகத்திற்கான விருப்பம் வளரவேண்டும். Who will bell the cat and how?

No comments:

Post a Comment