Thursday, April 28, 2005

மனநலமும் காவல்துறையும்

மனநலமும் காவல்துறையும்
சாம்னாவில் வந்த சிவசேனாவின் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கல்லூரி மாணவ/மாணவியர் "எங்கள் ஆடைகளை நோக்குவதை விட்டுவிட்டு உருப்படியாக எதாவது செய்யுங்கள்" எனச் சொல்லப்போக, வேண்டாத விவாதங்கள் பத்திரிகைகளை நிரப்புகின்றன. "கலாச்சாரச் சீரழிவு ஆடையின் குறைப்பில் தொடங்குகிறது" என்பது ஒரு கட்சி. "ஆடை குறைப்பு செய்யாத பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்கள்" என்கிறது இன்னொன்று. பத்திரிகைகளுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தாகிவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்கு அவர்களுக்குக் கவலையில்லை.
அடிப்படை நோயை விட்டுவிட்டு எங்கோ ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது.

உளவியல் அடிப்படையான தேர்வு காவல் துறைக்கு அவசியம் கொண்டுவரவேண்டும் என்பது என் எண்ணம். வன்முறைகளை தினமும் பார்த்துக்கொண்டிருக்கும் மனதில் அதன் கறைபடியாமல் பணியாற்ற வேண்டும் என்பதற்கு , அத்தகைய மன நிலை அடித்தளத்தில் உண்டான மனிதர்களே தேர்வு செய்யப்படவேண்டும்.

உடல் நிலை கண்காணிப்பு எத்தனை அவசியமோ, அத்தனை அவசியம் மனநிலைக் கண்காணிப்பும் சீரமைப்பும். வருடம் ஒரு முறை மருத்துவச் சோதனை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தும் மேநிலை காவல்துறை அதிகாரிகள் , கட்டாய மனநிலை சோதனை குறித்து ஏனோ இதுவரை பேசவில்லை. மனநிலை ஆலோசனை என்பது காவல்துறையில் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான்.

இரு நாட்களுக்கு முன்பு மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய சர்வே யில் ,"பாதுகாப்பு/உதவிதேவையென்றால் நீங்கள் காவலர்களை அணுகுவீர்களா ?" என்ற கேள்விக்குப் பல பெண்கள் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். குழந்தைகளையும் தனியாக விளையாட விடுவதற்கு இப்போது தயங்குவதாகவும் கூறியுள்ளனர்.
ஒரு தனிமனிதனின் செய்கை காவல்துறையின் ஒழுங்கையே கேள்விக்குறியாக்கியிருக்கும் பட்சத்தில், அத்துறை, தனது நடப்பினையும், காவலர்களின் ஒருங்கிணைந்த நலப்பாதுகாப்பையும் குறித்து முழுக்கவனத்துடன் ஒரு மீள்பார்வை செய்யவேண்டியது அவசியம். இது போன்ற சÁÂங்களில காவல்துறை அதிகாரிகள் பேசுகிறார்களே ஒழிய, இன்னும் ஒன்றையும் உருப்படியாகச் செய்யக்காணோம்.

No comments:

Post a Comment