Friday, November 04, 2005

ஊடகங்களும் பிறமொழிப் படைப்புகளும்

ஊடகங்களும் பிறமொழிப் படைப்புகளும்
-------------------------------------
ரவி‚ɢšŠ தமிழ் இலக்கியத்தை உலகளவில் மொழிபெயர்ப்பின் மூலம் மேற்கத்தியர்கள் அறிந்திருப்பது குறித்து சு.ராவின் கருத்தைக் குறித்து எழுதிய வலைப்பதிவின் தாக்கம் இது.
பிற கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களை உள்வாங்குவது குறித்து பேசுமுன் இரு முக்கியமான விடயங்களை நாம் கவனிக்கவேண்டும்.
ஒன்று : புரிந்து கொள்ளுதலில் ஊடகங்களின் பங்கு.
இரண்டு: அவ்வூடகங்கள் குறித்து நமது அணுகுமுறை.
ஊடகங்களின் பங்கு
பிற கலாச்சாரங்களை நாம் ஊடகம் மூலமே பார்க்கிறோம், உணரத் தலைப்படுகிறோம். இலக்கியம் ஒரு ஊடகமெனினும், புரிந்துகொள்ளுதல் என்பதான முயல்விற்கு அதற்கு மொழி, மொழியின் கையாடல் போன்ற ஊடகங்கள் தேவைப்படுகின்றன. குருசோவா, பீட்டர் புரூக்ஸ் போன்றோர் திரைப்படம் மற்றும் நாடக ஊடகங்கள் மூலமே பிற கலாச்சார நுணுக்ங்களை சிறப்பாக பலதரப்பட்ட பார்வையாளர் மத்தியில் கொண்டுபோக முடிந்தது.
°¼¸í¸û ÌÈ¢òÐ ¿ÁÐ «ÏÌÓ¨È"
ஐரோப்பிய கலாச்சாரத்தை விடுங்கள். நமது நாட்டு பிற மொழி இலக்கியங்கள் எத்தனை நாம் அறிந்திருக்கிறோம்? இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும், தகுந்த ஊடகங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டோ ம் என்ற குற்றச்சாட்டிலிருந்து நாம் மீளமுடியாது.
திரைப்படமென்றாலே ஆபாசமும், மசாலாவும் மட்டுமே என மலிந்திருக்க, நாடகங்கள் "வெகுஜன நாடகங்கள்' என்ற போர்வையில் அபத்தங்களை சிரிப்பு நாடகமென்ற பெயரில் துப்பிக்கொண்டிருக்கின்றன. நலமான முயற்சிகளை கவனமாக " இதெல்லாம் அறிவு ஜீவிகளுக்கு" எனத் தள்ளிப்போக்கிவிடுகிறோம்.
மலையாளத்தில் இருக்கும் வடக்கன் வீரகத எத்தனை தமிழருக்குத் தெரிந்திருக்கும்? அவை அப்படியே இலக்கிய வடிவில் தமிழில் கட்டாயப்பாடமாக்கிய்ருந்தாலும் நாம் அசட்டை செய்திருப்போம். ஒரு திரைப்படமாக M.T.வாசுதேவன் நாயர் கொண்டுவந்ததும் மலையாளத்திலேயே கொஞ்சம் அதிகமாக அது பேசப்பட்டது.

இலக்கியம் , கலாச்சாரப் பிண்ணனியின்றி உணரவியலாது. உணர்வதற்கு ஆரோக்கியமான ஊடகங்கள் வேண்டும். ஊடகங்கள் குறித்தான ஆரோக்கியமான புரிதல் வேண்டும். திரைப்படம் பொழுதுபோக்கு என்றும், அது வியாபார நோக்கம் மட்டுமே சார்ந்தது எனவும் சப்பைக்கட்டுவதை திரைப்படத் துறையினரும் நிறுத்தவேண்டும். அவ்வாறு வரும் திரைப்படங்களை மக்கள் வரவேற்பதையும் குறைக்கவேண்டும்.

நாடகங்கள் குறித்து நமது புரிதல் வெகுவெகு பாதாளத்தில் இருக்கிறது என்பது வருந்தத்தக்க விசயம். நாடகங்கள் குறித்து பேசுவதும், அலசுவதும் தமிழ்நாட்டில் மிகக்குறைவு.
ப்ருத்வி நாடகமன்றம் மும்பையில் இந்த முறை ஆங்கில நாடகக் குழுஒன்றின் படைப்பான ஷெக்ஸ்பியரின் measure for measure நாடகமேற்றியிருக்கிறது. ஏழு ஆண்டுகள் தொடர்ந்த முயற்சியின் விளைவாக அக்குழு முதன்முறையாக இந்தியாவில் மேடையேற்றியிருக்கிறது. பண்பலை வானொயிலும், செய்தித்தாள்களிலும் அடிக்கடி விளம்பரம் செய்து ப்ரபலப்படுத்திவிட்டார்கள். மாணவர்களுக்கும், வயோதிகர்களுக்கும் 50% தள்ளுபடி . இதெல்லாம் நம்மூரில் செய்ய என்ன தடை?

No comments:

Post a Comment