Sunday, November 20, 2005

ஓ.வி.விஜயன் -சிறுகதைகள்:

ஓ.வி.விஜயன் மலையாளத்தில் அரசியல் கட்டுரைகள், கதைகள், நாவல்கள், குறுநாவல்கள், சி
றுகதைகள் என எழுதிக் கலக்கியதோடு, ஒரு கார்ட்டூனிஸ்டாகவும் இருந்திருக்கிறார் என்பது
எனக்குப் புதிய செய்தி. அவரது நகைச்சுவையுணர்வு கதைகளில் கரு நகைச்சுவையாக (black
humour) இழையோடுவதை உணரமுடிகிறது.

Magical realism, myth எனப் பம்மாத்துப் பண்ணும் சில எழுத்தாளர்கள் ஓ.வி.விஜயனைப்
படிப்பது நல்லது. அவரது சிறுகதைகளைப் படித்ததும், தமிழ் எழுத்தாளர்களில் இருவரை எ
ண்ணத்தோன்றியது.
ஒன்று லா.ச.ரா
மற்றொருவர் தஞ்சை பிரகாஷ்

சில நண்பர்களுக்கு இந்த ஒப்பீட்டில் எதிர்ப்பு இருக்கலாம். இது எனது எண்ணம் மட்டுமே.

எண்ணெ (oil) என்னும் கதையில் ஒரு கிராமத்திற்கு மலைக்கு அப்பாலிருக்கும் வெளியிலி
ருந்து குடியேறிய வணிகக் குடும்பம் எவ்வாறு கலப்பட எண்ணெயால் அக்கிராமத்தையே மு
டமாக்க்குகிறது என்பதைப் பின்புலமாக அமைகிறது. அவ்வணிகக் குடும்பம் , கிராமத்து மக்
களுக்கு தேவையான பணத்தை வட்டிக்குக் குடுத்தும், மருத்துவ உதவியும் செய்து மக்களின்
நன்மதிப்பைப் பெறுகிறது. வணிகனின் கலப்பட எண்ணெயால் ஒர் தலைமுறையே முடமாகும்
போது, அவர்கள் பலனளிக்காத மருந்து தருவதை உதவியெனவே கருதும் கிராமமக்கள்,உண்ந
மயறிந்தும், செய்நன்றியால் வாய்மூடி மொளனிக்கிறார்கள். எதிர்ப்பவர்களை எவ்வாறு ஆசைக
஡ட்டி ,அக்குடும்பம் வளைத்துப் போடுகிறது என்பதை இறுதிவரை காட்டும் வலிமிகுந்த கதை.

இதனை ஒரு உருவகக் கதையாகக் கொள்ளலாம். பாலியல் உணர்வு தூக்கிநிற்கும் இக்கதையை
முதலில் படித்தபோது ஏமாற்றமாயிருந்தது. குரியாக்கோஸ் சொன்னபடி மீண்டும் மீண்டும்
படித்தபோது, விஜயனின் நேர்த்தியான கதைசொல்லும் விதம் கொஞ்சம் புரிந்தது.

மாஜிக்கல் ரியலிஸம், பாலியல் உணர்வு என்னும் இரு இழைகள். அவற்றை குறுக்கும் நெ
டுக்குமாக வைத்து, வேண்டிய இடத்தில் மட்டும் மாறுபட்ட உணர்வு ,காட்சிகள் என்னும் நிறங்களை ஏற்றி, நெய்யப்பட்டிருக்கும் இக்கதைச் சேலை, ஒரு கைதேர்ந்த கதைசொல்லுபவனின் அற்புத நெசவு..

Foetus என்னும் கதை முழுக்கமுழுக்க mythical புலம் சார்ந்தது. இக்கதையைக் குறியீடுகள் அமைத்துக்கொள்ளாமல் படித்துணர்வெதென்பது கடினம். முதலிலேயே அதன் புலம் அறியாமல் குறியீடுகள் கொள்வதும் கடினம். எனவே குரியாக்கோஸ் சொன்னபடி"மூணுபிராயஸெமிங்கிலும் வாயிக்கியா" . குரூர பாலியல் தோற்றங்கள் சிறிது அருவெறுப்பு ஏற்படுத்துமெனினும், கதையின் ஓட்டத்திற்கும், ஆழத்திற்கும் தேவையெனவே தோன்றுகிறது.

Wart என்னும் கதையிலும் குறியீடுகளே பிரதானம். பாலியல் காட்சிகள் சில வலியவே வந்திருப்பதாகப் படுகிறது. கேரளத்தின் மலைவனப்பு, காட்சிகள் அமையும் விதம்... அங்கேயே கொண்டு போய் காலத்தையும் சேர்த்து நிறுத்திவிடுகிறது. கதாநாயகன் தன் மகனுடன் கோவில் குளமருகே பொழுதுசாயும் நேரம் அமரும் காட்சி 'சந்தனக்குறியொண்ணு சார்த்தி, கையில் துளசிதளமுமாய், அம்பலத்திண்ட குளக்கரையிலே அங்கனே கிடக்கும்' உணர்வுகள் வார்த்தைகளினூடே எழுந்து வருவது நிஜமா அல்லது மாஜிக்கல் ரியலிசப் பொய்ப் பிம்பங்களாவென அறியா மயக்கம்... ப்ரமாதம்.

ஆங்கிலமொழிபெயர்ப்பே இப்படியிருந்தால் மூலம்..? சே இதுதான் கேரளாவில் இருக்கும்போது பொண்ணுகளை ஜொள்ளுவிட்டு நடக்காமல் ஒழுங்கா மலையாளம் படிச்சிருக்கணும்-கிறது.

No comments:

Post a Comment