Monday, November 21, 2005

கஸாக்கிண்டெ இதிகாசம்: O.V.Vijayan's Novel

கஸாக்கிண்டெ இதிகாசம்:

மிகச் சிறந்த கதைகள், சுய அனுபவத்தை கற்பனையில் ஏற்றி, கதாபாத்திரத்தை ஒரு குறியீடாக
அமைக்கையில் உருவாவதுண்டு. ழட்டுமொத்தமான கதைச் சூழல், பலப்பல கதாபாத்திரங்கள்
இவ்வாறு குறியீடாக அமைவது அரிது. அதிலும் அரிது, அக்கதைச் சூழல் , ஆசிரியர் முன்பு
தீர்மானித்திருந்த அமைப்பை விட்டு விலகி, 360 பாகை திரிந்து, பின்னும் சுய அனுபவம்
ஏறிய கதையாக அமைவது.

கஸாக்கிண்டெ இதிகாசம் sவ்வாறு அமைந்தது என்கிறார் ஓ.வி.விஜயன் முடிவுரையில்.

கதை அமைவது கஸாக் என்னும் மலைக்கிராமத்தின் சூழலில். கஸாக் என்னும் கிராமமே அவர்
1956க்குப் பிறகு ,கல்லூரி வேலை போனதும், தமக்கையாரின் ஆசிரியப்பணி அமைந்த
கிராமமான தசராக் கிராமத்தின் தாக்கமான பெயரில் உருவானது. அங்கு, அவருக்குப் பல
செய்திகளைத் தந்த நண்பர்களான முல்லா மற்றும் காசி (khazi) வார்த்தைகளை
நினைவுகூறுகிறார் விஜயன்.

கம்யூனிஸக் கொள்கைகளில் நாட்டம் கொண்டிருந்த ஓ.வி.விஜயன், இக்கதையை முதலில்
கம்யூனிசக் கொள்கைத் தாக்கத்தில் எழுத முயன்றார். உலகளவில் மார்க்ஸிச இயக்கத்தை
வெகு உன்னிப்பாகக் கவனித்து வந்தவர், பெல்ஜியப் புரட்சியில் Imre nagy
கொலைசெய்யப்பட்டதில், மார்க்ஸிச இயக்கத்தின் மேலிருந்த நாட்டத்தைக் கைவிட்டார். அதன்
அடிப்படையில், அவர் தனது புதிய கதையின் போக்கையே மாற்றியமைக்க நேர்ந்தது. ஒரு
முக்கிய திருப்பம் மலையாள இலக்கியத்தில் இக்கதையால் வந்ததென தனது முடிவுரையில்
குறிப்பிடுகிறார். அதுவரை மலையாள இலக்கியத்தில் எழுதிவந்த நடை கஸாக்கிண்டெ
இதிகாசத்தில் மாறியது. எளிய மலையாளம், நிகழ்வுகளை மாயநிகழ்வியல் பிiனணியில்
எழுதுவது போன்றவை பின்னிப் பிணைந்து முதன்முதலில் வந்தது இக்கதையில்தான். இதனைப்
பற்றிக் மலையாள இலக்கியம் அறிந்தவர்கள் கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.


இக்கதை மலையாள இலக்கியத்தில் மிகப் பிரபலமான பின், பல தீவிர வாசகர்கள் மேலும்
கதை பற்றி உணர்வதற்கு அக்கிராமத்திற்கே சென்றனர். அங்குள்ள மக்கள், தங்களுக்குக்
கிடைத்த புது அடையாளத்தை ஏற்றுக்கொண்டதோடு, வருபவர்களின் இலக்கியத் தேடல்களைத்
தங்கள் வாழ்வின் பகுதியாகவே ஏற்றனர். ஆர்.கே.நாராயணனின் மால்குடி கிராமமும் இவ்வாறு
அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

தசராக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞன் , ஓ.வி.விஜயனை ஒருமுறை இறுகத்
தழுவி " கிளியேட்டன் மரிச்சுப்போயி" எனத் தேம்பியழுததாகக் குறிப்பிடும் விஜயன், கதையில்
வரும் அப்புக் கிளி என்னும் கதாபாத்திரம் அக்கிராமத்தில் இருந்த ஒரு நபரைக் கொண்டு
உருவாக்கப்பட்டதில்லை எனினும், கதையின் தாக்கம் அக்கிராமமக்களிடம், எந்த அளவிற்கு
உண்டாயிருந்தது என்பதற்கு இதனை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் எனக் குறிப்பிடுகிறார்.
கிராம மக்கள், கதையில் வரும் கதாபாத்திரங்கள் தங்கள் கிராமத்தில் இருக்கும்
மக்களைக்கொண்டே உருவாகின என்பதில் உறுதியாயிருந்தனர். இப்புதிய ஒப்பீடு, அடையாளம்
காணுதல், ஒரு cult உருவாதல் என்பது இதிகாசங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் ,
கஸாக்கிண்டெ கத ஒரு இதிகாசம் என்பதில் ஐயமில்லை.

கதையெனப் பார்த்தால், நாலுவரிகளில் அடக்கிவிடலாம். .
படித்த இளைஞன், பள்ளியில்லாக் கிராமமொன்றில், ஒரு ஆசிரியர் பள்ளி ஒன்றிற்கு வேலை
கிடைத்து வருகிறான். மதறாஸா மட்டும் உள்ள அக்கிராமத்தில், பழமைவாதத்தினைச் சமாளித்து
அவன் கல்வியறிவூட்ட முனைகிறான். இறுதியில் பழமைவாதம், செந்நாடா என்னும்
கூட்டமைப்பு வெற்றிகொள்கிறது. அவனை வேலையிலிருந்து நீக்குமுன், தானே ராஜினாமா
செய்துவிட்டு கிராமத்தை விட்டுச் செல்கிறான். கம்யூனிச சங்கங்கள் அவனுக்காக உதவ
முன்வந்து போரிடத் தயாராவதை மறுத்துவிட்டு, தான் எடுத்த முடிவின்படி ஊர்விட்டுச்
செல்கிறான்.

கதாபாத்திர வலிமை, காட்சியமைப்பு, சூழல், நேர்த்தியாக எண்ணங்களைப் ப்ரதிபலிக்கும் திறன்,
நடை இவையே இக்கதையிi வலிமை

மார்க்ஸிச அமைப்புகளுடனான அவரது அப்போது மலர்ந்த வெறுப்பு, கதையில் மார்க்ஸிய
அமைப்புகள் கதாநாயகனுக்கு உதவவரும்போது, அவi அவர்களுடன் பேசும் விதத்தில்
தெரிகிறது.

பத்மா என்னும் தோழியின் வருகை .. முதலாளித்துவத்தைக் குறித்து அவர்கொண்டிருந்த
அவநம்பிக்கையைக் காட்டுவதாகத் தோன்றுஸிறது. அதென்னமோ, இந்த பத்மா என்னும் பெயர்
பிரபலமான கதைகளில் வருவது என்ன ஒரு co incidence எனப் புரியவில்லை. சல்மான்
ரஷ்டியின் Midnight children படித்தவர்கள் இதனை உணரலாம்.
பத்மாவுடனான ரவியின் உரையாடல் இவ்வாறு போகிறது.
"நீ அந்த சாமியாரிணியைப் பார்த்தாயோ? அவள் உன்னைப்பற்றி விசாரித்தாள்"
" ஓ"
"அவளது அழகு பிரமிப்பூட்டுகிறது"
" அமெரிக்காவில் நீ லெஸ்பியனிசத்தை ஆதரிப்பதை இப்போதுதான் உணர்கிறேன்"
..... பத்மாவிடம் ரவி (கதாநாயகன்) அலட்சியமாகப் பேசுவதற்காகக் காரணம் தேவையில்லை.
ஆனால், அமெரிக்கா என்னும் காரணம் மிக மிக வலுவானது.

இறுதிக்காட்சியில் மழையின் வருணனை, பேருந்திற்காகக் காத்திருக்கும் ரவியின் காலடியில்
நெருடும் பாம்பு.. உடலெங்கும் மழைநீரில் புளகித்து, வளருவதாகத்தோன்றும் புற்கள் என
வளரும் . மாயத் தோற்றம்... விஜயனின் முத்திரை.. இதுபோலவே கோடச்சி என்பவள் வீட்டில் சாராயம் அருந்தும் வேளையில் ரவிக்கு உண்டாகும் மாயத்தோற்றம்.... சில சமயங்களில் எது கதையோட்டம், எது மாயத்தோற்றம் என்பது புரிபடவில்லை.


கஸாக்கிண்டெ இதிகாசம் படிக்க நினைப்பவர்களுக்கு, நண்பன் குரியாக்கோஸின்
அறிவுரையையே மீண்டும் சொல்கிறேன்.
"மூணுபிராயஸமெங்கிலும் வாயிக்கியா. அப்போழே கிட்டுள்ளு"
அன்புடன்
க.சுதாகர்

No comments:

Post a Comment