Monday, April 14, 2014

அவார்டுக்கு எப்படி எழுதுவது?

ரைட்டு. இனி எழுத்து எப்படி இருக்கவேண்டுமென்று பார்ப்போம். விருதுக்கு என்றால், முன், பின் நவீனத்துவ, சர்ரியலிஸ பாணிகளை விழுங்கிவிட்டிருக்க வேண்டும். புக்கர் கிடைத்த புத்தக்ங்கள் வாசிக்கவும். 

“அவன் காலையில் வாசலுக்கு வந்து தெருவைப் பார்த்தான்” என்று ஒரு வரியில் எழுதக் கூடாது. 

வரிக்கு வரி சமூக அவலத்தினை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்து, அதிர்ச்சியை, படிப்பவன் மூஞ்சியில் அறைவது போல் கொடுக்கவேண்டும். மேற்கண்ட வார்த்தையை ஞானபீடம் வேண்டுமென்றால் “ கிராமத்தின் அந்த சாலை, வெறியுடன் புணர்ந்து விலகிச் சென்ற மனிதர்கள் விட்டுச் சென்ற படுக்கை போல அலங்கோலமாக்க் கிடந்தது. தெருவின் ஓரமான சாக்கடையில் நிர்வாணமாய் ஒரு குழந்தை குத்திட்டு மலங்கழித்துக் கொண்டிருக்க, அதன் பின் , வைக்கோல் போரில் பண்ணையார், வேலைக்காரியை ***** ( எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கூசுகிற மாதிரி எழுதுங்கள். அவார்ட் வேணுமா வேண்டாமா?). மூடியது போலத் திறந்திருந்த கதவை மூடியபடி திறந்து வெளிவந்த அவன், எதிரே இருந்த யாளித் தூணைக் கவனித்தான். காலங்காலமாக அது அங்கு இருந்து வருவதை அவன் அறிவான். ஒவ்வொரு முறையும், அந்த யாளியுன் முகம் கோபமாக அன்றி, ஏதோ யானை விழுங்கி, மலச்சிக்கலில் திணறும் முகமாகவே அவனுக்குப் பட்டது. இந்த சிந்தனையை அவன் பகிர்ந்தபோது, முதலாளித்துவ பூர்ஷ்வாக்கள் யாளியின் கால்களுக்கு இடையில் அவனைக் கட்டி வைத்தனர். யாளியின் மூத்திர நெடியில் அவன் மூச்சு கொதித்த்தை அவர்கள் உணர்ந்தவரில்லை எனினும், அந்த சதுர வட்டத்துளினின்று அவன் கட்டுடைத்து வெளியேறும் நாள் அருகிவிட்டது என்பதை, காலைச் சூரியனின் கறுநிற ஒளி நிழலில் கண்டிருந்தனர். “

இப்படியெல்லாம் எழுதுவதை விட்டுவிட்டு, நான் புரிய்ற மாதிரித்தான் தமிழ்ல எழுதுவேன் என்று அடம் பிடித்தீர்களென்றால்... welcome to the victims group.

No comments:

Post a Comment