Monday, April 14, 2014

தமிழ் நாவல்? கோட்டி பிடிச்சிறுச்சா?

நண்பர் திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர் நாவல் எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார். அதுவும் தமிழ் நாவல்.

நல்லா இருந்த ஒரு மனுசன் இப்படி நிம்ஹான்ஸ் கேஸ் ஆகிப்போய்விடுவாரோ என்ற பயத்தில்தான் இந்த பதிவை எழுதுகிறேன். 

முதலில் எதற்கு எழுதுகிறோம்? என்று தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஞானபீட, சாகித்ய அகாடமி கனவு என்றால் முதலில் பேனாவை மூடி வைத்துவிடுங்கள். முன்னேற்பாடுகள் பல செய்யவேண்டும் அதற்கு.

1. யாருக்கும் புரியாத, ஆனால் பரிசு வாங்கியிருக்கிற கதைகளை வாங்கிவையுங்கள். படிக்கவெல்லாம் சொல்லவில்லை. நீங்கள் படிக்க அவர்கள் எழுதவுமில்லை. அந்த பெயர்களை அங்குமிங்கும், பேஸ்புக்கில் அவ்வப்போது எடுத்து விடவேண்டும்.

2.முடிந்தால் த.மி.தா நினைவு பள்ளியின் 7 பி செக்சனில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும், ஜெய்ப்பூர் லிட்டெரெரி பெஸ்டிவலுக்கும் போய்வரவும். அருந்த்தி ராய், எதோவொரு பெங்காலி எழுத்தாளர் கூட எடுத்த போட்டோக்களை பேஸ்புக்கில் போட்டு :என்ன பாக்கியம் செய்தேன்? என்று எமோஷனலாக எழுதவும்.

3. குறிப்பிட்டு ஒரு மத த்தை தாக்கி எழுதவும். அருந்ததி , மேதா போன்றவர்கள் எழுதிய ரிவ்யூக்களுக்கு ரிவ்யூ எழுதவும். இதை சொந்த காசில் சூனியம் வைத்து ப்ரசுரிக்கவும். எவரும் படிக்கமாட்டார்கள். அது பத்தி நமக்கு என்ன கவலை? இந்த ப்ரசுரங்களை சோஷியல் மீடியாக்களில் ப்ரகடனம் செய்யவும்.

4. வாய்ப்பு கிடைத்தால் மோதியை அடிக்கவும். இல்லை அவர் நல்லவர்னு நினைக்கறேன் என்று சொல்பவர்களை அடிக்கவும். இப்போ ஒரு நல்ல சான்ஸ். க்ரூஸ் என்பவரை ரவுண்டு கட்டி அடிக்க முனைந்திருக்கிறார்கள். உடனே சேர்ந்து, அவர் மீது துப்பிய எச்சிலில் எனது எச்சிலும் இருக்கிறது என்பதை டி.என்.ஏ பரிசோதனை மூலமும் நிறுவ வேண்டும்.

இப்படி செய்தால் ஒரு வட்டம், அல்லது வட்டத்தினை புகழ்ந்து நிற்கும் மற்றொரு முட்டாள் வட்டம் இவற்றில் சேரமுடியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், இந்துத்வ எதிர்ப்பு என்ற வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருக்கவும். இளிச்ச்ச் வாயன் எவனாவது கிடைத்தால் அவன் சுவற்றில் உங்கள் வெறுப்பை நக்கலாகவோ, தார்மீக கோபத்தோடோ தெரிவிக்கவும். ஆங்! இப்ப நீங்க அங்கீகரிக்கப் பட்டுவிட்டீர்கள்.

'சரி, என்னவே எழுதணும்? அதை சொல்றதை விட்டுட்டு என்னமோ சளம்பிக்கிட்டிருக்கீரே?” என்று கேட்காதீர்கள். என்ன எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல. யார் சார்ந்து எழுதுகிறோம் என்பதுதான் தமிழ்ச் சூழலில் முக்கியம்.

1 comment:

  1. Anonymous2:41 AM

    Interesting Sir. Funny and realistic also

    ReplyDelete