Saturday, April 18, 2015

மொண்ணை ஆணையும் இடி தாங்கியும்.

இடி தாங்கி என்பதனைப் பார்த்திருப்போம். பல கட்டிடங்களின் உச்சியில் கூராக நிற்கும் உலோக குச்சியை, தடிமனான தாமிரப் பட்டையால் தரையில் இணைத்திருப்பார்கள். மேகத்தில் எலக்ட்ரான்கள், நெகடிவ் சார்ஜ் அயனிகள் இருப்பின், உலோகக் குச்சியில் மின்புலம் தூண்டப்பட்டு , எதிரான சார்ஜ் கொண்ட அயனிகள் கூரான முனையிலிருந்து கசிந்து காற்றில் வெளியேறி, மேகத்தின் மின்புலத்தை சமனப்படுத்தும்.
ரைட்டு. இது ஆறாம் கிளாஸ் பிஸிக்ஸ். எதற்காக கூரான முனை? கரோனா டிஸ்ச்சார்ஜ் என்பதன் மூலம் கூரான முனையிலிருந்து அயனிகள் கசியும்.. இதுவும் ஆறாம் கிளாஸ்.
எதுக்குவே இதைச் சொல்லறீர்? என்கிறீர்கள்.
ஒரு சுவாரஸ்யமான பாலிடிக்ஸ் , பிஸிக்ஸ் பின்னணி.
இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர்  அமெரிக்க பெஞ்சமின் ப்ரான்க்ளின். அவரது இடிதாங்கியை இங்கிலாந்து பரவலாக கூர் முனையுடன் கட்டிடங்களில் நிறுவியது.
ப்ராங்க்ளின் அமெரிக்க விடுதலைக்கு இங்கிலாந்துடனான போரில் முக்கிய பங்கு வகித்தார். இங்கிலாந்து தோல்வி.
இங்கிலாந்து  ராஜா ஜியார்ஜ் III க்கு கோபம் வ்ந்துவிட்டது. ப்ராங்க்ளினின் படைப்பான கூர் கம்பிகள் மீது அவர் வெறுப்பு திரும்பியது.
இங்கிலாந்தின் கட்டிடங்களில் பொருத்தப்பட்ட அனைத்து கூரான கம்பிகளையும் மொண்ணையாக்க்கும் படி ஆணையிட்டார் - தனது அரண்மணை உட்பட smile emoticon
இந்த மொண்ணை ஆணையை கிண்டல் செய்து ஒரு பாடல் எழுதப்பட்டதாம்.
While you, great George,for knowledge hunt
And sharp conductors change for blunt
The nation's out of joint.
Franklin a wiser course pursues
And all your thunder useless views
By keeping to the point!
லொள்ளு அங்..!

No comments:

Post a Comment