Monday, November 14, 2005

மும்பை நாடகவிழா (பார்க்காமல் எழுதிய விமர்சனம்)

மும்பை நாடகவிழா (பார்க்காமல் எழுதிய விமர்சனம்)
-----------------------------------------------------
எந்த நேரத்துல " நாடகவிழா பாத்துட்டு வந்து எழுதறேன்"ன்னு சொன்னனோ தெரியலை... நுழைவுச்சீட்டு தருகிறேன் எனச்சொல்லியிருந்த ஆட்கள் சமத்தியா ஏமாற்றிவிட்டார்கள். தீபாவளீக்கு ஊர் சென்று திரும்பும்போது ." ஒரு சீட்டு என் நண்பன் கிட்டே இருக்கு. இந்தா அவன் தொலைபேசி எண்" எனத் தந்த நண்பனுக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லிவிட்டு, அவரைப் பிடிக்கப் போனால்,... குடும்பத்தோடு குஜராத்தில் தீபாவளிக்குப் போயிட்டார். புழுங்கிக்கொண்டிருந்தபோது. மிட் டே பத்திரிகை " நாடகம் பரவாயில்லை" என்ற ரீதியில் எழுதியிருந்ததைப் படித்ததும் ஒரு நிம்மதி. "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்"?!

அநியாயத்திற்கு விளம்பரம்.. சஞ்ஜனா கபூர் பண்பலை ரேடியோவில் மணிக்கு ஒரு முறை வந்து  நாடகத்தைப்பத்திப் பேசாமல், அடைமொழியும், பண்புச்சொற்களுமாக அடுக்கி ஒரு நிமிடத்திற்குப் பேசினார். கேட்டே வாழ்க்கை வெறுத்துவிட்டது.

ஜிகினா தொழில்நுட்ப வேலைகள் நிறைந்திருந்தது என்பது நம்ம பாரிவையாளர்களுக்கு புதியது. மைக் முன்பு காள் காள் எனக் கத்டுவது நாடகம் எனப் புரிந்துகொண்டிருந்தவர்கள், முதன்முறையாக நாடகம் பார்த்தார்கள் என்கிறது ஒரு விமர்சனம். பார்வையாளர்களில் பலர் நாடக விற்பன்னர்கள். அவர்களே ப்ரிஅமித்துப் போஇ " எவ்வளவு செலவு? இதுல பத்து ல ஒருபகுதி கிடைச்சிருந்தா நான் எங்க்யஓ போயிருப்பேன்" எனப் பெருமூச்சு விட்டனர். ஒளித் தொழில் நுட்பம் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல். நம்ம ஆட்கள் நாலு கலர்கலரா விளக்கு வைச்சு நாடகம்னு போட்டுட்டு "மக்களுக்கு ரசனையே பத்தாது" என்பார்கள் பேட்டிகளில்.
"லாப்டாப் கணனிகளுக்கு நாடகத்துல என்ன வேலை?" என்றார் ஒரு நாடக நடிகர் அப்பாவித்தனமாய். பத்து லாப்டாப் வைத்து நாடகத்தின் போக்கை அவர்கள் சிறப்பாக ஆழுமை செய்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. "படுதாக்கு பின்னாடியிருந்து மெல்லமா கூப்புடவேண்டியதுதானெ?" நாம என்னிக்கு உருப்படப் போறோம்?
ஆனால், ஒன்று சொல்லவேண்டும். இது மக்களுக்கு நாடகம் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியைக் கொடுத்திருக்கும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மரபு கெடுக்காமல், எப்படி நவீன உத்திகளைக் கையாண்டு நல்ல படைப்பைத் தரமுடியும் எனக் காட்டியிருக்கிறார்கள். இனிட்யாவது, நவீன நாடகம் என்றல் புதுக்கதையாகத்தன் இருக்கவேண்டும் எனவும், மரபு நாடகம் எல்லாம் பார்ப்பது பத்தாம்பசலித்தனம் என நினைப்பதும் கொஞ்சம் குறையும். அதற்காகவாது சஞ்ஜனா கபூருக்கு நன்றிகள்.

 

 

2 comments:

  1. Anonymous6:38 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. you failed to get a ticket and we failed to get a excellent article ..anyway thanks for the post

    ReplyDelete