Friday, November 18, 2005

ஈயத்தைப்பார்த்து....

ஈயத்தைப்பார்த்து....
-------------------

தென்மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவரையுமே மதராஸிகள் எனச் சொல்லும் அறிவீனம் வட மற்றும் மேற்கு மாநிலங்களில் இன்னும் இருக்கிறது. மலையாளம் ஒரு மொழி எனவும், மலையாளி என்றால் கேரளச்சேர்ந்ததவர் என்னும் பொதுஅறிவு இன்னும் வளரவில்லை. அரசின் பண்பலை வானொலியில் கூட இரு நாட்களுக்கு முன் இரவு 9 மணி நிகழ்ச்சி நடத்தும் பெண்மணி மலையாளி தெரியாவிட்டால் தமிழ்நாடு கேரளாவில் சுமுகமாகப் போய்வரமுடியாது என திருவாய் மலர்ந்தருளினார். போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் மும்பைப் பதிப்பில் Unnatural politics please,we are Tamils என ஒரு கட்டுரை வந்திருக்கிறது. இதையெல்லாம் எப்படி பிரசுக்கிறார்கள் என இன்னும் எனக்குப் புரியவில்லை. குஷ்பு விவகாரம், ராமதாஸ் பேத்திகள் டெல்லியில் தமிழ் இல்லாத பள்ளியில் படிப்பது எனப் பல விஷயங்களைத் தொட்டிருக்கும் இக்கட்டுரையில் ஆழம் இல்லை. வேண்டாத சிந்தனைகளைத் தூண்டும் உணர்வே எதிரொளிக்கிறது. தொடங்குவதே "தமிழ்நாட்டில் 90களில் குஷ்புக்கு கோயில் கட்டப்பட்டது. அவ்வளவுக்கு பிரபலம் ஆனவரை இப்போது தமிழ் எதிரி என விரட்டுகிறார்கள் " என்னும்படியான பத்தியில்.

என்னமோ தமிழ்நாட்டில் அனைவரும்சேர்ந்து குஷ்புவுக்கு கோயில்கட்டி குடமுழுக்கு செய்ததுபோலவும், இப்போது ஒட்டுமொத்தமாக அனைவரும் அவரை தமிழினத்தின் எதிரி என ஓடஓட விரட்டுவதுபோலவும் சித்தரிக்கும் இக்கட்டுரையை தணிக்கை செய்யாமல் வெளியிட்டது ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ன் வடிகட்டிய முட்டாள்தனம். தென் மாநிலங்கள் குறித்தான சராசரி வட/மேற்கு மாநில வாழ் மக்களின் சிந்தனை என இதனைக்கொள்ளலாமா? இந்திப்படங்களில் மெகமூது 70 களில் தொடங்கிவைத்த மதராஸி இந்தி என்பதை இன்னும் தொலைக்காட்சித் தொடர்களில் சிரிப்பு (வலுக்கட்டாயமாக) வரவழைப்பதற்காக இழுக்கும் கேலிக்கூத்து தொடர்கிறது. எத்தனைபேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்? சேட் பேசும் "நம்பள் நிம்பள்' தமிழ் எல்லாம் 60 களிலேயே தமிழ்ப் படங்களில் முடிந்துவிட்டது. செருப்பால் அடித்துக்கொள்வதும், திட்டிக்கொள்வதுமே இப்போதைய நமது உயர்ந்த ஹாஸ்ய உணர்வு என இவர்களுக்குப் புரியவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ்த் திரையுலகம் கடமைப்பட்டிருக்கிறது.

அமிதாப் பச்சன் அடிபட்டுக்கிடந்தபோது பலர் கோயில்களில் சிறப்பு நேர்தல்கள் செய்ததையும்,அவருக்கு சிலைவத்து பூஜை இரு வருடங்களுக்கு முன் நடத்தியதையும், கங்குலி இந்திய கிரிக்கெட்டிற்கு மீண்டும் வந்து சேவைசெய்யவேண்டுமென கல்கத்தாவில் பூஜைகள் செய்ததையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியதை பார்த்துதான் இருக்கிறேன். அதற்காக, ஒட்டுமொத்தமாக பெங்காலிகள், வடவிந்தியர்கள் இப்படித்தான் என முத்திரை குத்துகிறோமா? முட்டாள்தனம் என்பது ஒரு இனத்திற்குச் சொந்தமில்லை என்பதை தமிழனும் குஷ்பு கோயில் மூலம் நிரூபித்திருக்கிறான். அவ்வளவே. இந்த அளவிற்கு தமிழர்கள் என்றாலே திரைப்பட நாயக/நாயகிகளுக்காக எதுவும் செய்வார்கள், இன,மொழி வெறியர்கள் எனப்படும்படி செய்திஊடகங்கள் விஷம் பரப்புவது ஆபத்தானது.

இதனைக் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு எழுதியிருக்கிறேன். கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. "kudos to your article dated..." என எழுதியிருந்தால் ஒரு வேளை எடுத்துக்கொள்வார்களாயிருக்கும்...

பி.கு: இந்த குஷ்பு கோயில் கட்டியவர்களை.........

7 comments:

  1. Anonymous11:33 PM

    Anna

    Don't blame other state medias. our medias also writing the same 'தமிழ்நாட்டில் 90களில் குஷ்புக்கு கோயில் கட்டப்பட்டது'. some fools are doing these nonsense.

    another one about the media hype about Rajini. before 2004 election they all created 'All tamils are ready to vote rijini'.

    What to do?

    ReplyDelete
  2. Anonymous8:58 AM

    nice article. stephen what you are telling about our media is right. see Mr.Sudhkar except kerala media all are same.

    ReplyDelete
  3. //மெகமூது 70 களில் தொடங்கிவைத்த மதராஸி இந்தி என்பதை இன்னும் தொலைக்காட்சித் தொடர்களில் சிரிப்பு (வலுக்கட்டாயமாக) வரவழைப்பதற்காக இழுக்கும் கேலிக்கூத்து தொடர்கிறது.//

    நம்மூர்லருந்து போன ஸ்ரீதேவியும் செஞ்சுகிட்டு இருக்கிறதுதான் கஷ்டமே!

    ReplyDelete
  4. Thanks Stephen, Murugan and Balan,
    The media has a responsibility to disseminate the right information to the public. To fill pages, they cannot give any info without a proper base. My objection was only to that point. HT could have sorted out the points and given the same info in two articles- one on politics and another on filmy madness of Tamilnadu.
    Stephen , you rightly said about Rajini hype . Kerala has a different taste for news ; so, these petty things would not catch their attention.
    anpudan
    K.Sudhakar

    ReplyDelete
  5. Anonymous8:59 PM

    We all have the same feeling. Here(Calcutta) our colleauges has the same view. I tried to explain.

    Our tamil media is worst than any others. They are spoiling our values. see NDTV news. mostly there coverage about tamil nadu's bad face.(political fight, blind acts & Raijini film news. (last month chenni flood time they broadcost a indecent commed told by a Hindi man(chennai based) about jayalalitha).

    They are always showing Bihar and Tamil Nadu in a worst way.

    ReplyDelete
  6. சரியாச் சொன்னீங்க.

    எப்பத்தான் திருந்தப்போறாங்களோ?

    ReplyDelete
  7. Anonymous11:44 AM

    ada malayalathan pondatia gulfku barla wela seya anuppitu awan anga nalla awal anupra panathula wazhran ketta naaa....nga 100% padichavangraan awanellam oruporutta edukkadhingaya. nanri.

    ReplyDelete