Saturday, May 07, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -1

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -1

சில வாரங்களுக்கு முன்பு 1947 முதல் நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டிய அமரர் திரு. அன்னகாமு அவர்களின் முயற்சி குறித்து எழுதியிருந்தேன். "ஏட்டில் எழுதாக் கவிதைகள்" என அவரது திரட்டு வெளியிடப்பட்டது. மிகக்குறைவாகவே பதிக்கப்பட்ட அந்நூலினைப் படித்த அனுபவம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்நூலின் தோற்றுவாய்ப் பாடல் நாம் வெகுவாக அறிந்த திரைப்படப்பாடலாக வெளிவந்தது.
"பாடறியேன், படிப்பறியேன்,
பள்ளிக்கூடம் தானறியேன்.."

"நாட்டுப்புறப்பாடலென்னும் பாற்கடலை நக்கிக்குடிக்கத் துணிந்த பூனையின் கதை" இது என ஆசிரியர் அன்னகாமு தன் முயற்சி பற்றிக் கூறுகிறார். அவருடன் இருந்து நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டிய மாணவர்கள் அவரது அவையடக்கம், மென்மையான பண்பு முதலியவற்றை இன்னும் நினைவுகூறுகின்றனர்.
இந்நூலிற்கு சிறப்புரை திரு.கிவா.ஜ தந்திருக்க, தலையுரை திரு. அவினாசிலிங்கம் தந்திருக்கிறார்.

திரட்டிய பாடல்களை பதினாறு அத்தியாயங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. பாடல்களின் பொருள் வகையில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. கடவுள் துதியிலிருந்து, மாழை,நாட்டுச்சிறப்பு, பிறப்பு வளர்ப்பு, திருமணம், தொழிற்பாட்டு, திருமணம், குழந்தைகளின் விளையாட்டு, நவீனங்கள், களியாட்டங்கள், கதைப்பாட்டுக்கள், சோதனைகள், வேதாந்தப்பாடல்கள், ஆதிவாசிப்பாடல்கள் , முடிவில் மங்களம் என வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு வகைப்பாடலுக்கும், ஆசிரியர் தனது விளக்கங்களையும், அப்பாடலின் தோற்றக்கதையினையும் இயன்றவரை வழங்கியிருக்கிறார்.
நாட்டுப்புறப்பாடல்கள் /கருப்பொருளை ஏதோவொரு நிகழ்வின் அடிப்படையிலும் சொல்ல முயற்சிப்பதால், தோற்றப்பின்னணி அறியப்படின்,பாட்டின் அறிதலின் சுவை கூடுகிறது.

இப்பாடல்களைக் குறித்து மேலும் காண்போம்

No comments:

Post a Comment