Sunday, March 19, 2006

நேதாஜியின் மரணம் - இன்னும் மர்மம்?

நேதாஜியின் மரணம் மர்மமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதைய முகர்ஜி கமிஷன் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்னும் ஆர்வத்தைக் கிளப்பியிருக்கிறது.
சில ஆராய்வுகள் அவர் டைப்பியில் ஆகஸ்ட் 18 1945 அன்று விமானவிபத்தில் இறந்ததாகக் கூறுகின்றன. இதனை காங்கிரஸ் அரசுகள் தீவிரமாகப் பரப்பிவந்தன. 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிஷன் தன் முதலறிக்கையைச் சமர்பித்தது. அது நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாகவே அறிவித்தது. பின் வந்த கமிஷனும் அதனையே சொன்னது.
இரண்டிலும் இருந்த ஓட்டைகளை சிலர் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தனர்.
1. ஷா நவாஸ் கமிஷன் , தைவான் போகாமலேயே ( மிக முக்கிய தடையங்கள் கிடைத்திருக்கக் கூடிய இடம்), தன் அறிக்கையை சமர்ப்பித்தது.
2. ரஷ்ய ஆவணங்கள் கிடைக்காத நிலையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் இன்னும் தடையங்கள் கிடைத்திருக்கக் கூடும். நேதாஜி தைவானிலிருந்து ரஷ்யாவிற்குச் சென்றார் என ஒரு கருத்து உண்டு. அங்கு அவர் போர்க்கைதியாக இருந்ததாகவும் அதன் ஆவணங்கள் உண்டு எனவும் நம்பப்பட்டது. பின்னர் அவர் ரஷ்யாவில் கொலை செய்யப்பட்டதாக ஒரு வதந்தி. மற்றொன்று அவர் ஃபைசியாபாத் நகரில் ஒரு துறவியாக 1985 வரை வாழ்ந்ததாகவும், அவரது படையின் முக்கிய அதிகாரிகள் வருடம்தோறும் அவரது பிறந்த நாளன்று அவரை சந்தித்ததாகவும் வதந்தியுண்டு.

இதற்கெல்லாம் சான்றுகள் இல்லை என இதுவரை அரசாங்கம் சொல்லிவந்தது. முகர்ஜி கமிஷனின் நாட்களை நீட்டிக்கவேண்டும் என்னும் கோரிக்கையை ஹிண்டுஸ்தான் டைம்ஸில் பணிபுரிந்த தர் முன்வைத்ததை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர் இது அரசால் நீட்டிக்கப்பட்டு, அதன் அறிக்கை நடப்பாண்டில் பாராளுமன்றத்தில் தாக்கம் செய்யப்படும் எனத் தோன்றுகிறது. இதில் காங்கிரஸ் தனது அரசியல் ஆதாயம் கருதி "அறிக்கையை அடக்கிவாசிக்கும்" என்ற அச்சம் பலருக்கு உண்டு.
மேலும் அறிய இச்சுட்டிகளைக் காணுங்கள்.
http://www.missionnetaji.org
http://in.rediff.com/news/2006/mar/17spec.htm

No comments:

Post a Comment