Friday, March 03, 2006

மும்பை சேரிகள் -II

மும்பை சேரிகள் -II
ஷெர்வின் ஸை - தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவத்துறை மென்பொருள் வல்லுநர். அவரது பெற்றோர் பிலிப்பைன்ஸிலிருந்து கனடாவில் குடியேறிய சீனர்கள். சீனா குறித்தான ஆவலில் ,செர்வின் பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் சில தகவல்கள் கிடைத்தன.

பனிக்காற்று பேயாக வெளியில் அடித்துக்கொண்டிருக்க, அவரது அறையில் சூடாக காபி குடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தேன்.
" சீனாவைக் குறித்து அமெரிக்கா பயப்படுவதற்கு பொருளாதார வளர்ச்சி, மிலிடரி சக்தி மட்டுமல்ல, மற்றொரு விசயமும் இருக்கிறது" என்றார் செர்வின் காபியை உறிஞ்சியபடியே.
"சீனா, தனது ஏற்றுமதியில் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகையை டாலர் பாண்ட் (Bonds) களில் முதலீடு செய்து வைத்திருக்கிறது. மற்றொரு தொகையை தனது உள்நாட்டு வளர்ச்சிக்கு செலவிடுகிறது (infrastructure). சிறிது தொகையே , வேலைசெய்யும் மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்கு செலவிடுகிறது. குறைந்த வருமானத்தை பல ஆண்டுகளாகத் தந்துகொண்டிருப்பதாலும், பொருட்களின் விலையைக் குறைத்தே வைத்திருப்பதாலும், தனது நாணயத்தினை இன்னும் குறைவான மதிப்பீட்டில் வைத்திருப்பதாலும், சீனர்கள் குறைந்த சம்பளத்தில் வாழமுடிகிறது. எனவே, பெரும்பாலான சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்கள் தயாரித்துக்கொடுக்க முடிகிறது. இந்த competitive advantage பலவருடங்களுக்கு நீடிக்கும்.
திடீரென, சீனா US bondகளை சந்தையில் விற்கிறது என வைத்துக்கொள்வோம். டாலர் தடாலென வீழும். அமெரிக்க வியாபாரத்தை இது பெருமளவில் பாதிக்கும். short term தாக்கங்கள் மிக அதிகமாக இருப்பதோடு, உலகளவில் பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவை சந்திக்கும். எனவே நிக்கி, சிங்கப்பூர் பங்குச்சந்தை, ஹான்செங்,NYSE, LSE, NASDAQ என பல பங்குச்சந்தைகளின் சிம்ம சொப்பனம்.. இந்தக் காட்சி." என்றார்.
" எந்த அளவில் இது சாத்தியம்?" என்றேன்.
" ஒரு அணுகுண்டு தாக்குதலுக்கு சமம் இது. மிகப்பயங்கர விளைவுகளை ஏற்படுத்த முடியும். ஆனால் நடக்குமா என்றால் சந்தேகம்தான்."
" பின் ஏன் பயப்படவேண்டும்? சீனாவும்தான் இதில் அடிபடும்" என்றேன் கேணத்தனமாய்.
" சுதாகர். மரணத்தைவிட மரணபயம் கொடியது" என்றார் செர்வின் சிரித்தபடி.

கொஞ்சம் புரிந்தது. ஏழ்மை என்பது வளர்ச்சிக்கு மூலதனம். அது இருக்கும்வரை competitive advantage இருக்கும். எவனிடம் வியாபார பலம் இருக்கிறதோ அவன் உலகாள்வான். இது கம்யூனிசம் தழைக்கும் சீனாவானாலும், தன்னோக்கு அரசியல் தழைக்கும் சனநாயக இந்தியாவானாலும் ஒன்றுதான். ஏழை ஏழையாகவே இருக்கும்வரை, அவன் அதிகம் கேட்காமல், அடிப்படைத் தேவைகள் தீர்வதில் சந்தோஷம் அடைவதில், எனது B.M.W கார் செல்லமுடியும். அவன் கேட்கத் தொடங்குகையில், போட்டிக்கு ஆட்கள் வந்துவிட்டால், அவனது தேவைகளைக் குறைத்துக்கொள்வான். எனவே, நகரமயமாக்குதலும், எளிய மக்கள் அங்கு புலம்பெயர்தலும் தலைவலியாக இருந்தாலும் வியாபார நோக்கில் அது தேவைதான்.
சீனா, உள்நாட்டுக் கட்டுமாணப்பணிகள் செய்து, சேரிகளை ஒழிக்கிறது - ஷாங்காய், பீஜிங், குவாங்ஷோ போன்ற சில நகரங்களில் மட்டுமே. வெளிநாட்டு முதலீடு வரவேண்டுமானால் வறுமை தெரியக்கூடாது என்ற "நல்லெண்ணத்தில்".

நமது அரசியல்வாதிகள் இன்னும் மோசம். எவன் எக்கேடு கெட்டால் என்ன? சேரிகள் விமானநிலையமருகே இருந்தாலென்ன இல்லாட்டி போனாலென்ன என் வேலை நடக்கிறது - என்னும் மெத்தெனப் போக்கு.
இரண்டிலும் சேரி வாழ் மக்கள் அதே நிலைதான். சேரிகள் மாறியிருக்கின்றன சீனாவில் சில இடங்களில். இங்கு அதுவும் இல்லை.

.ஏன் மும்பையில் இத்தனை சேரிகள், ஏழ்மை என இப்போது கொஞ்சம் புரிகிறது எனக்கும்.

No comments:

Post a Comment