Friday, March 10, 2006

மூலக்கூறிலிருந்து மருந்து வரை III

மூலக்கூறிலிருந்து மருந்து வரை III
ஒரு மூலக்கூறை மருந்தாகத் தேர்வு செய்ய மருந்து ஆராய்வுக் குழு ஆய்வு செய்யும் ( Drug discovery department). லட்சக்கணக்கான மூலக்கூறுகளிலிருந்து பல்லாயிரம் மூலக்கூறுகள் முதலில் சல்லடை செய்யப்படும். பின்னர் அவை மேலும் சலிக்கப்பட்டு சில ஆயிரங்கள் பட்டியலிடப்படும். இந்த சல்லடை என்பது பல ஆய்வுகளுக்குப் பின்னர் கிடைத்த சில அனுபவங்கள். உதாரணமாக ஒரு மூலக்கூறு மிக எளிதில் உயிரியல் திரவங்களில் வேதிவினை புரிந்து வேறு மூலக்கூறாக மாறிவிடலாம்.அவ்வாறு மாறுகையில் அதன் மருத்துவ சக்தி போய்விடக்கூடும். இந்த செய்தி கிடைக்கையில் அம்மூலக்கூறு கைவிடப்படும். மற்றொன்று வினை புரியாது நின்றாலும், தயாரிக்கப் படாத பாடு பட வேண்டிவரும். எனவே கைவிடப்படலாம். இவ்வாறு சில மூலக்கூறுகள் பட்டியலில் தேர்வு செய்யப்பட எத்தனை காலம் ஆகலாம்? மூச்சை அடக்கிக்கொள்ளுங்கள்.
சுமார் 8 வருடம் முதல் 15 வருடம் வரை ..
இத்தனை வருடங்கள் என்ன செய்வார்கள்? இவ்வாறு சல்லடையில் சலித்தெடுத்த மூலக்கூறுகளை நமது திசுக்கள் போலவே செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அரைசவ்வூடு பரவும் சவ்வுகளில் ( semi permebale membrane) ஒரு பகுதியில் வைத்து, மறுபுறம் சவ்வூடு பரவிவரும் அம்மூலக்கூறைக் கணிப்பார்கள். உயிரற்ற நிலையில் இவ்வாய்வுகள் மேற்கொள்வதை invitro studies என்பர். இந்த செயற்கையாÉ சவ்வுகள் மட்டுமல்ல, நமது உடலிலிலுள்ள திசுக்களின் படுகை caco-2 cells , எலிகளின் வயிற்றிலுள்ள திசுக்களின் படுகை (வட்டமாக வெட்டப்பட்டு) முதலானவும் உபயோகிக்கப்படுகிறது. இன்னும், மயக்கமூட்டப்பட்ட எலிகளின் வயிற்றைத் திறந்து அதில் இருக்கும் குடல் திசுக்களில் செலுத்தப்பட்டு ஒரே முறையோ அல்லது திரும்பத்திரும்பச் செலுத்தியோ அம்மூலக்கூற்றின் பரவலைக் கணிக்கலாம். இது அதிக நேரம்/பணம் செலவாகுமெனினும் மனிதனில் பயன்படுத்துவதைப்போலவே ஆய்வுமுடிவுகள் கிட்டத்தட்ட வருவதால் இன்னும் சில இடங்களில் பிரபலமாக இருக்கிறது.
இம்மூலக்கூறுகளின் நான்குவித பண்புகளை ஆய்வின் மூலம் அறிகின்றனர்.
1.இம்மூலக்கூறு நமது உடலில் சென்றதும், நம்து திசுக்களுக்குள் எத்தனை தூரம் பரவ முடியும் என்பதை கணிக்கத்தான் இச்சோதனை. இது ஒரு மருந்தின் "உறிஞ்சப்படும் பண்பு" ( Absorption) குறித்து அறிவது.
2.இவ்வாறு உறிஞ்சப்பட்ட மூலக்கூறு பரவும் பண்பு கொண்டுள்ளதா ( Distribution) என்பதை அறிவது.
3.இந்த மூலக்கூறுகள் உயிர்த்திரவங்களுடன் ( ஈரல் சுரக்கும் பித்தநீர் போல) வினைசெய்து விளைக்கும் பண்புகள் ( metabolism) எந்த அளவில் உருவாகின்றன என்பதைக் கண்டறிவது.
4.இம்மூலக்கூறுகள் எவ்வாறு உடலைவிட்டு வெளியேறுகிறது (Excretion) என்னும் ஆய்வு

ADME என்று இச்சோதனைகளைச் சொல்வர். இவை மருந்து கண்டுபிடிக்கும் நிலையில் மட்டுமல்ல , பின்னாளில் அம்மருந்து மூலக்கூறு எவ்வாறு உயிருள்ள உடலில் வேலைசெய்கிறது என்பதைக் காண்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனை invivo studies என்பர். உயிராய்வுகள் (பயோ அனலிசிஸ் -bio analysis) invivo studies வகையைச் சேர்ந்தவை

3 comments:

  1. பயனுள்ள பதிவு. இது போல் துறைசார் பதிவுகளைப் பலரும் எழுத வேண்டும்.

    ReplyDelete
  2. Anonymous9:55 PM

    Well done.even a layman can alsounderstand how a medicine is being synthesised and produced abd marketed. Very useful knowledge. Idly using this HI-TECH BLOGS to chatting in useless cinema, Politics wasting their valuable time and energy; always emotionally understanding, criricising unnecessary things mentioned above. Pickle is very useful and gives taste to curd bath but instead sambar, rasam they are taking pickle for their food. Please continue your blogs in this manner. My hearty congrats to you-thangam

    ReplyDelete
  3. Thanks a lot Selvaraj,Sarah and Thangam. This encourages me to take extra efforts to write more on these subjects. The idea is to simplify the complicated science for a general understanding.. Please correct me if you find any scientific view / data is wrong. I shall gladly accept and correct.
    anpudan
    K.Sudhakar

    ReplyDelete