அக்காலத்தில் எல்லா மாணவர்களைப்போலவே உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது ஒரே குறிக்கோள் எனக்கு பொறியியல் கல்லூரியில் சேர்வதுதான். மிகவும் முயன்றேன். எனது முயற்சிகள் பலமாகத் தெரிந்த அளவு முடிவுகள் வரவில்லை. 84% மட்டுமே MPC -இல் எடுத்திருந்தேன். நம்பமுடியாத அதிர்ச்சியில் மிகவும் சோர்ந்து போன நாட்கள் அவை.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் துறையில் சேர்ந்தேன். கல்லூரிக்குப் போகவே மனமில்லாமல் போய்வந்தேன். எதிர்காலமே இல்லை இனி என முடிவானது. "டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட்,வங்கிப் பரீட்சை எழுது." என அறிவுறுத்தல்களுக்கு சோர்வோடு உடன்பட்டேன்.
வ.உ.சி கல்லூரி நான் சேர்ந்த காலத்தில் அதன் பேர் கெட்டிருந்தது. ஸ்ட்ரைக், கல்வீச்சு, காலவரையற்ற மூடுதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. கல்லூரியின் பழம்புகழ், ஆசிரியர்களது சிறப்பு கொண்டு மட்டுமே அங்கு அட்மிஷன் வந்தது.
எனக்குப் பேச்சு தெளிவுற்றிருந்தது, ஆங்கிலம் ஓரளவு பேசவும் தெரிந்தது என்றாலும் எஞ்சினீயரிங் கிடைக்கததால் தளர்ந்திருந்ததாலும், பயம் காரணமாகவும் ஆரம்பத்தில் தனித்தே இருந்தேன். 'என்னமோ படிச்சோம், வெளியே போனோம் என்றிருப்போம்' என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
முதல்நாள் தமிழ் வகுப்பிற்கு டாக்டர்.பிரதாப் சிங் வந்தார். அவர் வந்த இருபது நிமிடங்களில் ஒரு மாணவர் கூட்டம் வகுப்பில் வந்து " காண்டீன்ல வடை இல்லையென்கிறார்கள். கேட்டால் அலட்சியமாகப் பதில்வருது. இதைக்கண்டித்து இன்று ஸ்ட்ட்ரைக்" என அறிவித்துப் போனது. 'பத்து நிமிடத்தில் வகுப்பு கலையவேண்டும்' என்ற எச்சரிக்கையுடன்..
டாக்டர். பிரதாப் சிங் எதைத்தான் படிக்கவில்லை எனத்தெரியவில்லை. தமிழ், ஆங்கிலம் , பொருளாதாரம், வரலாறு இவற்றில் முதுகலை, ஹோமியோபதி , தமிழில் முனைவர் பட்டம் இத்தோடு என்.சி.சி யில் கடற்படை பிரிவின் தலைவர் (naval wing I). அவரது பட்டங்களின் எண்ணிக்கையில் கவரப்பட்டு அவருடன் வகுப்பு கலைந்தபின்னும் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது என்.சி.சியில் சேரவேண்டுவோர் பேர் கொடுக்கும்படி அறிவிப்பை பியூன் கொண்டுவந்தார். அது பிரதாப் சிங் அவர்களின் யூனிட்-காகவே இருந்தது. பூரி செட்டு தின்னக்கிடைக்கும் என்ற அல்ப ஆசையில் நானும் பெயர் கொடுத்தேன். பி.எஸ்.சி இயற்பியல், கணிதம் படித்தவர்களுக்கு என்.சி.சி C சான்றிதழ் கிடைத்தால் இராணுவத்தில் சேர எளிது என்று கேள்விப்பட்டதால், அங்கயாவது வேலை கிடைக்குமே என்ற நம்பிக்கை வேறு.
முதல்நாள் சீரணிவகுப்பில் பிரதாப்சிங் உரையாற்றினார். நான்குவருடம் முன்பு அவர் பூனாவில் ஒரு மலையேறும் குழுவில் இருந்ததைச் சொன்னார். அசந்துபோனேன். இந்த வயதில் மலையேறுவதா? நானாகவே அவரிடம் சீரணிவகுப்பு முடிந்ததும் சென்று பேச்சுக்கொடுத்தேன்.
"என்ன செய்யலாம் சார்? ஒண்ணுமே பிடிக்கலை. தோத்துட்டேன்-னு தோணுது" நான் கேட்க நினைத்தது வேலை கிடைக்க என்ன படிக்கலாம் என்ன செய்யலாம் என்றுதான். அவர் சொன்னது ஏமாற்றமாக இருந்தது.
" நீ எந்தப் போர்-ல ஈடுபட்டதா நினைச்சு ' தோத்துட்டேன்'ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுத? "
எனக்கு கோபம் வந்தது. நான் முயற்சிக்கலை என்றா சொல்கிறார்?
" இல்லடே. எல்லாருக்கும் உழைக்கும் விதம் ஒண்ணுகிடையாது. உனக்கு இன்னும் மேலே முயற்சி தேவைப்பட்டிருக்கு. ஏன் இப்படி ஓரே இஞ்சினீயரிங்ல முட்டி மோதுத? உன்னோட பலம் என்னன்னு தெரிஞ்சுக்க. அதுல வளத்துக்க"
"பலம் என்னன்னு தெரிஞ்சாத்தானே சார் வளத்துக்க முடியும்?"
"உன் பலவீனம் தெரியணும்டே அதுக்கு"
நான் பொறுமையிழந்தேன்.
அவர் தொடர்ந்தார் "நீ பயப்படுற விஷயம் என்ன?"
பயப்படுற விஷயம்னா? சற்று யோசித்தேன் " மேடைல பேசப் பயம் உண்டு சார்"
"சரி. ஒழுங்கா கட்டுரை மாதிரி எழுதத்தெரியுமா?"
தயக்கத்தோடு "இல்லை" என்றேன்.
"நீ எதச் செய்யப் பயப்படுறயோ, அதை முதல்ல கண்டுபிடி. அதை தைரியமா செய்யப் பாரு. உன் பயமெல்லாம் தேவையில்லாததுன்னு தெரியும்"
"தோத்துட்டேன்னா?"
"தோத்துப்போனா என்ன? நீ பயந்ததுதானே? அதுனாலதான் தோத்தேன்னு நினைச்சுக்க. விழுந்தா திரும்பி திரும்பி எழுந்திக்கணும். மத்தவங்களுக்காகப் பயப்படாதே.அவனா உன் வாழ்க்கைய வாழப்போறான்?"
"நானும் போராடித்தான் பாக்கிறேன் சார். ஒண்ணும் கிடைக்கமாட்டேங்குது"
"போராடுறேன்னு ரொம்ப ஈஸியாச் சொல்லறே. போராடறதுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? தடுப்பு முயற்சிகள் போர் ஆகாது. எப்ப போராடறதுன்னு முடிவு பண்ணிட்டியோ, அதுக்கப்புறம் அது பத்தி மறு பரிசீலனைன்னு நினைக்கவே கூடாது. உன்னோட போரை நீ தான் தீர்மானிக்கணும். நீதான் போராடணும். வெளங்குதா?"
எழுந்து போகுமுன் அவர் ஒரு நிமிடம் யோசித்தார்.
" இந்த மூணு வார்த்தைகளை எப்பவும் ஞாபகம் வச்சுக்க. கடற்படையில் சொல்லுவாங்க. HIT FIRST. HIT HARD. KEEP HITTING TILL HE ( enemy) FALLS-ன்னு. எது கூட போரிடப்போற?-ன்னு தெளிவாக முடிவெடு. அதுக்கப்புறம் நீ தாக்குதல்தான் நடத்தணும். போர் என்பது வந்துவிட்டால் Defensiveஆகப் போகக்கூடாது.போர்க்களத்துல புண்களை நக்குறதற்கும்,அழறதுக்கும் நேரம் கிடையாது."
எழுந்தேன். என்னமோ இந்த வார்த்தைகள் ஆழப்பதிந்தன.
வீட்டுக்கு நேரே வராமல் கடற்கரைக்குப் போனேன். ஈர மணலில் நான் என்ன செய்யப் பயப்படுகிறேன் என்பதை எழுதினேன். அலைகளில் அக்கோடுகள் ஈரமணலால் நிரம்பி அழிவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
தொடரும்
Welcome! This blog is about the ripples on my mind pool by the impact of life. Your comments would be greatly appreciated
Saturday, April 15, 2006
தூத்துக்குடி தெய்வங்கள்-2 (2)
சைக்கிள் மிதித்ததால் மூச்சு இழைக்க,குட்டியின் ஏமாற்றம் எரிச்சலாக வெளிப்பட்டது.
'லே மக்கா, ஒரு வார்த்தை நமக்கு இங்கிலீஷ்ல பேசத் தெரியாமாடே. ஊட்டி ஞாபகமிருக்குல்லா?" பாயிண்டைப் பிடித்தேன். சட்டென அமைதியாகிவிட்டான்
ஊட்டிக்கு நானும் அவனும் மாவட்ட அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிக்காக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு சென்றிருந்தோம் ('81 என நினைக்கிறேன்). சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்து வந்த பையன்கள் பெண்கள் 'தஸ் புஸ்' என ஆங்கிலத்தில் பேசவும் , அரண்டே போனோம். நாங்கள் மட்டுமே தமிழில் பேசிக்கொண்டிருந்தோம் அறிமுகப்படுத்திக்கொண்ட நகரத்துப் பையன்கள் நாங்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவது கண்டு, மெல்ல விலகினர்.
அதைவிடப் பெரிய தாக்கம்... பெண்கள் யாரும் எங்களிடம் பேசவே இல்லை. இங்கிலீஷ் பேசின பயல்கள் கிட்ட மட்டும் சிரித்து சிரித்து....
அந்த அனுபவம் குட்டியையும் என்னையும் மிகவும் தாக்கியிருந்தது எனக்கு அஸ்திரமாகப் பயன்பட்டது.
' ஆமால" என்றான் கொஞ்சம் சிந்தித்து.
"எங்க ஸ்கூல்ல எல்மர் சார் கூட 'இங்கிலீஷ்ல பேசுடே, இங்கிலீஷ் புக் படிடே'-ன்னு சொல்லுதாரு.என்னல செய்ய?" என்றான் கவலையோடு.
கடற்கரை பேச்சு அனுபவம் முன்பு இருந்ததால், அவனிடம் மட்டும் அதைச் சொன்னேன். யாரும் எங்களைக் கண்டு கொள்ள மாட்டார்களென்பதால் அவனுக்கும் அந்த யோசனை சரியாகவே பட்டது.
"நம்ம ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் கடற்கரைல மட்டும் இங்கிலீஷ்ல பேசுவம். நீ சொல்றதுல எதாச்சும் தப்பு இருந்தா நான் உடனே சொல்லுவேன். நான் பேசும்போது நீ திருத்தணும்"
உடன்படிக்கை தயாரானது. 'தப்பைத் திருத்தினா சொணங்கக்கூடாதுடே' என்னும் rider உடனே இணைக்கப்பட்டது.
பேசுவதென்பது முடிவானதும் பெரிய இரு கேள்விகள் முன்நின்றன.
முதல் கேள்வி 'என்ன பேசுவது?'
இரண்டாவது மிக முக்கியமான கேள்வி ' எது தப்பு என எப்படி கண்டுபிடிப்பது?' எங்களது இங்கிலீஷ் இலக்கண அறிவு குறித்தான நம்பிக்கை இக்கேள்வியை மலையென மாற்றியது!
'முதல்ல பேசுவோம். அப்புறம் தப்பு பத்தி யோசிப்போம்' என முடிவு செய்தோம்.
குட்டிதான் முதலில் ." நான் ஆரம்பிக்கேன்" என்றான். ஐந்து நிமிடம் மொளனமாய் நடந்திருப்போம். அவன் பேசுகிற வழியாய்த் தெரியவில்லை.
"என்னலே?" என்றேன்
" என்ன பேசுறதுன்னு தெரியல மக்கா." என்றான் அழமாட்டாக்குறையாய்.
எதைப் பேச உந்தினாலும், ஆங்கிலத்தில் பேசப்போகிறோம் என்ற உள்ளுணர்வு, பேச்சு வருவதை அமுக்கிவிடுகிறது என்பதை உணர்ந்தோம். அதை எப்படி மீறுவதென்பது தெரியவில்லை.
'மக்கா ஒரு ஐடியா சொல்லுதேன். நம்ம பாடத்துல வரும்லா.. மனப்பாடப் பாட்டு. அதுல நீ ஒரு வரி சொல்லு. நான் சொல்லுதேன். என்னலா?" என்றான். இது கொஞ்சம் சுளுவாக இருக்கும் எனத் தோன்றியது.
நன்றாக ஞாபகமிருக்கிறது.. தாகூரின் கீதாஞ்சலியில் ஒரு பாட்டு மனப்பாடப் பாட்டாக 9ம் வகுப்பில் இருந்தது.அதனை நினைவுக்குக் கொண்டுவந்தோம்.
'This is my prayer to thee my Lord" என்றேன். பொங்கிய சிரிப்பை அடக்கியவாறே.
"Strike strike at the root of penury in my heart" என்றான் குட்டி.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு,திடீரென அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டோ ம். 'என்ன கேணக்கூத்துல இது?' எனக் கேட்டுக்கொண்டாலும், இந்த ஆரம்பம், தயக்கம் என்னும் பனிச்சுவரை உடைத்தது என்பது உண்மை.
'லே மக்கா, ஒரு வார்த்தை நமக்கு இங்கிலீஷ்ல பேசத் தெரியாமாடே. ஊட்டி ஞாபகமிருக்குல்லா?" பாயிண்டைப் பிடித்தேன். சட்டென அமைதியாகிவிட்டான்
ஊட்டிக்கு நானும் அவனும் மாவட்ட அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிக்காக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு சென்றிருந்தோம் ('81 என நினைக்கிறேன்). சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்து வந்த பையன்கள் பெண்கள் 'தஸ் புஸ்' என ஆங்கிலத்தில் பேசவும் , அரண்டே போனோம். நாங்கள் மட்டுமே தமிழில் பேசிக்கொண்டிருந்தோம் அறிமுகப்படுத்திக்கொண்ட நகரத்துப் பையன்கள் நாங்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவது கண்டு, மெல்ல விலகினர்.
அதைவிடப் பெரிய தாக்கம்... பெண்கள் யாரும் எங்களிடம் பேசவே இல்லை. இங்கிலீஷ் பேசின பயல்கள் கிட்ட மட்டும் சிரித்து சிரித்து....
அந்த அனுபவம் குட்டியையும் என்னையும் மிகவும் தாக்கியிருந்தது எனக்கு அஸ்திரமாகப் பயன்பட்டது.
' ஆமால" என்றான் கொஞ்சம் சிந்தித்து.
"எங்க ஸ்கூல்ல எல்மர் சார் கூட 'இங்கிலீஷ்ல பேசுடே, இங்கிலீஷ் புக் படிடே'-ன்னு சொல்லுதாரு.என்னல செய்ய?" என்றான் கவலையோடு.
கடற்கரை பேச்சு அனுபவம் முன்பு இருந்ததால், அவனிடம் மட்டும் அதைச் சொன்னேன். யாரும் எங்களைக் கண்டு கொள்ள மாட்டார்களென்பதால் அவனுக்கும் அந்த யோசனை சரியாகவே பட்டது.
"நம்ம ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் கடற்கரைல மட்டும் இங்கிலீஷ்ல பேசுவம். நீ சொல்றதுல எதாச்சும் தப்பு இருந்தா நான் உடனே சொல்லுவேன். நான் பேசும்போது நீ திருத்தணும்"
உடன்படிக்கை தயாரானது. 'தப்பைத் திருத்தினா சொணங்கக்கூடாதுடே' என்னும் rider உடனே இணைக்கப்பட்டது.
பேசுவதென்பது முடிவானதும் பெரிய இரு கேள்விகள் முன்நின்றன.
முதல் கேள்வி 'என்ன பேசுவது?'
இரண்டாவது மிக முக்கியமான கேள்வி ' எது தப்பு என எப்படி கண்டுபிடிப்பது?' எங்களது இங்கிலீஷ் இலக்கண அறிவு குறித்தான நம்பிக்கை இக்கேள்வியை மலையென மாற்றியது!
'முதல்ல பேசுவோம். அப்புறம் தப்பு பத்தி யோசிப்போம்' என முடிவு செய்தோம்.
குட்டிதான் முதலில் ." நான் ஆரம்பிக்கேன்" என்றான். ஐந்து நிமிடம் மொளனமாய் நடந்திருப்போம். அவன் பேசுகிற வழியாய்த் தெரியவில்லை.
"என்னலே?" என்றேன்
" என்ன பேசுறதுன்னு தெரியல மக்கா." என்றான் அழமாட்டாக்குறையாய்.
எதைப் பேச உந்தினாலும், ஆங்கிலத்தில் பேசப்போகிறோம் என்ற உள்ளுணர்வு, பேச்சு வருவதை அமுக்கிவிடுகிறது என்பதை உணர்ந்தோம். அதை எப்படி மீறுவதென்பது தெரியவில்லை.
'மக்கா ஒரு ஐடியா சொல்லுதேன். நம்ம பாடத்துல வரும்லா.. மனப்பாடப் பாட்டு. அதுல நீ ஒரு வரி சொல்லு. நான் சொல்லுதேன். என்னலா?" என்றான். இது கொஞ்சம் சுளுவாக இருக்கும் எனத் தோன்றியது.
நன்றாக ஞாபகமிருக்கிறது.. தாகூரின் கீதாஞ்சலியில் ஒரு பாட்டு மனப்பாடப் பாட்டாக 9ம் வகுப்பில் இருந்தது.அதனை நினைவுக்குக் கொண்டுவந்தோம்.
'This is my prayer to thee my Lord" என்றேன். பொங்கிய சிரிப்பை அடக்கியவாறே.
"Strike strike at the root of penury in my heart" என்றான் குட்டி.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு,திடீரென அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டோ ம். 'என்ன கேணக்கூத்துல இது?' எனக் கேட்டுக்கொண்டாலும், இந்த ஆரம்பம், தயக்கம் என்னும் பனிச்சுவரை உடைத்தது என்பது உண்மை.
Friday, April 14, 2006
தூத்துக்குடி தெய்வங்கள் 2 (1)
தூத்துக்குடி போன்ற சிறுநகரங்களின் பெரிய சாபக்கேடு 'போலித்தனம்" எனலாம். படித்தவர்கள் என ஒரு கூட்டம் இருக்கும். அவர்களுக்குள்ளேயே பேச்சுக்கள்,புத்தகப் பரிமாற்றங்கள்,கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். கிராமங்களிலிருந்து வந்தவர்கள் அதனோடு இணைய முடியாமல், புரிந்துகொள்ள இயலாமல் திணறுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இத்திணறல்கள், குமுறல்கள், எதிர்குரலாக எந்த வளர்முயற்சிக்கும் எதிர்ப்ப்பாக, கிண்டலாகவும் மட்டம்தட்டும் வேலைகளாகவும் வெளிப்படும்.
பள்ளிகள் 'சிறிய உலகம்' என்பதால் இத்தகைய இடையூறுகள் சகஜம்.
'சார் படிக்கச் சொன்னாரே' என ஒரு மூலையில் உட்கார்ந்து அக்கறையாகப்படிக்கத் தொடங்கும் பையனை,சக மாணவர்கள், " பாருலே மக்கா, இவன் படிக்கத் துவங்கிட்டான். ஸ்டேட் பர்ஸ்ட்தான்..இல்லடே?" என கிண்டலடித்துத் தொடங்கி, அவன் வரும்போதெல்லாம் " எய்யா.. படிப்பாளி வர்ரான்டே, இடம் விட்டு நில்லுங்கலே" எனத் தொடர்ந்து, அவன் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தால்.'என்னடே, புஸ்தகத்துலேயே முங்கிக்கிடந்த?மார்க்கெல்லாம் சாரு தொலைச்சுட்டாராங்கும்?" என புண்ணாக அடித்து அவன் வெறுத்து விடும்வரை நீளும். இது விளையாட்டுகளுக்கும், பாடம் சேரா போட்டிகளுக்கும் பொருந்தும். தானும் வளராமல், அடுத்தவனையும் வளரவிடாமல் இருக்கும் 'பரந்த மனப்பான்மை' சிறுநகரங்களின் பெரும் சாபக்கேடு. இதற்கு தூத்துக்குடி விதிவிலக்கல்ல.
இந்த லட்சணத்தில் ஆங்கிலத்தில் பேசப்போனால், கல்லெறியே விழும் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். ஒரு நண்பன், ரஷ்ய -தமிழாக்கப் புத்தகங்களைப் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-ன் மலிவு விலைப்புத்தகங்கள் தங்குதடையின்றி கிடைத்த நேரம் அது) படித்துவிட்டு, கம்யூனிசம் பற்றி தான் அறிந்ததை ஒரு படபடப்பில் என் நண்பர் குழுவில் சொல்லிவிட, அவனை " யோல, நீ பெரிய கம்யூனிஸ்ட்டுல்லா?" எனக் கிண்டலடித்து அவன் பேரையே ரஷ்யத்தனமாக அய்யாகுட்டியோவ் ( எதனோடும் யோவ், இஸ்கி சேர்த்தால் ரஷ்யப்பெயர்!) என மாற்றி வைத்து, அவனைக்கிட்டத்தட்ட பைத்தியமாகவே ஆக்கியது எனக்கு நல்ல நினைவிருந்தது. 'பட்ட அறிவினால்', பொதுவில் ஆங்கிலத்தில் பேசப் பயந்தேன்.
சிகாமணி சாரிடம் மீண்டும் சென்றேன் " ·பாதர் , ஒருத்தனும் இங்கிலீஷ்ல பேசமாட்டேங்கான் "
புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்தவர், புன்னகைத்தார் " உன்னை மாதிரி நிறையப் பேர் மனசுக்குள்ளேயே பயந்துகொண்டிருக்கிறான். உன் நெருங்கிய நண்பன் ஒருத்தன்கிட்ட தனியே பேசிப்பாரு, தெரியும்" விடமாட்டார் எனப் புரிந்தது. மீண்டும் ஏமாற்றத்தோடு திரும்பினேன்.
'யாரிடம் கேட்கலாம்?' என யோசித்துக்கொண்டிருக்கையில்,குட்டி நினைவுக்கு வந்தான். குட்டி என்பது அவன் பட்டப்பெயர். பேருக்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆஜானுபாகுவாக அப்பவே 5 அடி இருப்பான். இயற்பெயர் சுந்தரராஜனான அவன் பாஸ்கெட்பால் விளையாட்டு வீரன். . கால்டுவெல் பள்ளியில் படித்துவந்த,மிக நெருங்கிய தோழன்.( இவன் பெயரையே எனது கதைகளிலும் வைத்து குட்டியென்ற கற்பனைப்பாத்திரம் படைத்தேன். என் மனத்தின் உள்ளொலியாக)
"லே, குட்டி, ஒண்டியா உங்கிட்ட பேசணும்டே" என்றேன்
அவன் 'என்னமோ ரகசியம் போலிருக்கு' என்ற ஆவலோடு கடற்கரைக்கு வந்தான்.
விஷயத்தைச் சொன்னேன்.
'போல..மூதி. வேற வேலையில்ல உனக்கு. இதுக்குத்தான் வரச்சொன்னியாங்கும்? உன்னை வைச்சு சைக்கிள்ள மிதிச்சு வந்தேன் பாரு..அதுவும் எதிர்காத்து"
தொடரும்..
பள்ளிகள் 'சிறிய உலகம்' என்பதால் இத்தகைய இடையூறுகள் சகஜம்.
'சார் படிக்கச் சொன்னாரே' என ஒரு மூலையில் உட்கார்ந்து அக்கறையாகப்படிக்கத் தொடங்கும் பையனை,சக மாணவர்கள், " பாருலே மக்கா, இவன் படிக்கத் துவங்கிட்டான். ஸ்டேட் பர்ஸ்ட்தான்..இல்லடே?" என கிண்டலடித்துத் தொடங்கி, அவன் வரும்போதெல்லாம் " எய்யா.. படிப்பாளி வர்ரான்டே, இடம் விட்டு நில்லுங்கலே" எனத் தொடர்ந்து, அவன் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தால்.'என்னடே, புஸ்தகத்துலேயே முங்கிக்கிடந்த?மார்க்கெல்லாம் சாரு தொலைச்சுட்டாராங்கும்?" என புண்ணாக அடித்து அவன் வெறுத்து விடும்வரை நீளும். இது விளையாட்டுகளுக்கும், பாடம் சேரா போட்டிகளுக்கும் பொருந்தும். தானும் வளராமல், அடுத்தவனையும் வளரவிடாமல் இருக்கும் 'பரந்த மனப்பான்மை' சிறுநகரங்களின் பெரும் சாபக்கேடு. இதற்கு தூத்துக்குடி விதிவிலக்கல்ல.
இந்த லட்சணத்தில் ஆங்கிலத்தில் பேசப்போனால், கல்லெறியே விழும் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். ஒரு நண்பன், ரஷ்ய -தமிழாக்கப் புத்தகங்களைப் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-ன் மலிவு விலைப்புத்தகங்கள் தங்குதடையின்றி கிடைத்த நேரம் அது) படித்துவிட்டு, கம்யூனிசம் பற்றி தான் அறிந்ததை ஒரு படபடப்பில் என் நண்பர் குழுவில் சொல்லிவிட, அவனை " யோல, நீ பெரிய கம்யூனிஸ்ட்டுல்லா?" எனக் கிண்டலடித்து அவன் பேரையே ரஷ்யத்தனமாக அய்யாகுட்டியோவ் ( எதனோடும் யோவ், இஸ்கி சேர்த்தால் ரஷ்யப்பெயர்!) என மாற்றி வைத்து, அவனைக்கிட்டத்தட்ட பைத்தியமாகவே ஆக்கியது எனக்கு நல்ல நினைவிருந்தது. 'பட்ட அறிவினால்', பொதுவில் ஆங்கிலத்தில் பேசப் பயந்தேன்.
சிகாமணி சாரிடம் மீண்டும் சென்றேன் " ·பாதர் , ஒருத்தனும் இங்கிலீஷ்ல பேசமாட்டேங்கான் "
புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்தவர், புன்னகைத்தார் " உன்னை மாதிரி நிறையப் பேர் மனசுக்குள்ளேயே பயந்துகொண்டிருக்கிறான். உன் நெருங்கிய நண்பன் ஒருத்தன்கிட்ட தனியே பேசிப்பாரு, தெரியும்" விடமாட்டார் எனப் புரிந்தது. மீண்டும் ஏமாற்றத்தோடு திரும்பினேன்.
'யாரிடம் கேட்கலாம்?' என யோசித்துக்கொண்டிருக்கையில்,குட்டி நினைவுக்கு வந்தான். குட்டி என்பது அவன் பட்டப்பெயர். பேருக்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆஜானுபாகுவாக அப்பவே 5 அடி இருப்பான். இயற்பெயர் சுந்தரராஜனான அவன் பாஸ்கெட்பால் விளையாட்டு வீரன். . கால்டுவெல் பள்ளியில் படித்துவந்த,மிக நெருங்கிய தோழன்.( இவன் பெயரையே எனது கதைகளிலும் வைத்து குட்டியென்ற கற்பனைப்பாத்திரம் படைத்தேன். என் மனத்தின் உள்ளொலியாக)
"லே, குட்டி, ஒண்டியா உங்கிட்ட பேசணும்டே" என்றேன்
அவன் 'என்னமோ ரகசியம் போலிருக்கு' என்ற ஆவலோடு கடற்கரைக்கு வந்தான்.
விஷயத்தைச் சொன்னேன்.
'போல..மூதி. வேற வேலையில்ல உனக்கு. இதுக்குத்தான் வரச்சொன்னியாங்கும்? உன்னை வைச்சு சைக்கிள்ள மிதிச்சு வந்தேன் பாரு..அதுவும் எதிர்காத்து"
தொடரும்..
Thursday, April 13, 2006
தூத்துக்குடி தெய்வங்கள் -2
தெய்வம் -2 ஆங்கிலத்தில் பேசு
பத்தாவது வகுப்பு வரை நான் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். ஆங்கில மீடியம் என்றால் பணம் கட்டவேண்டும்
ஆங்கிலம் ஒரு பாடமாகவே இருந்ததே தவிர, தொடர்புகொள்ளும் ஊடகம் என நான் கருதவில்லை. படித்தால் புரி
யும். சரளமாகப் பேச, எழுதத் தெரியாது. இது ஒரு பெரிய குறையாக அன்று நான் நினைக்கவில்லை.
பதினோராம் வகுப்பில் சேர்ந்தது ஆங்கில மீடியத்தில். புரிந்துகொள்வது கடினமாக இருக்கவில்லை. படித்ததைச் சொல்லத்தான் தெரியவில்லை.
ஒரு நாள் இயற்பியல் வகுப்பில் " what is the phenomenon of surface tension?" ஆசிரியர் கேட்டதற்கு விழித்தேன்.
surface tension தெரியும்... phenomenon என்றால் யார்? என்ற கேள்விகளுடன் நின்றுகொண்டிருந்தேன்.
ஆசிரியர் பொறுமையிழந்தார் , " Don't you understand ?"
"ஆமாம்" என தலையாட்டினேன்
"என்ன ஆமா? இங்கிலீஷ்லதான கேக்கிறேன்? இது கூடப் புரியலைன்னா என்ன படிச்சே இத்தனை வருசமா?"
எனது வகுப்பில் ஆங்கில மீடியத்திலேயே படித்து வந்த பையன்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு இது புதிது போலும்.. வியப்பாக என்னைப் பார்த்தார்கள்.
எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.. பேசாம தமிழ் மீடியத்திலேயே போய்ச் சேர்ந்துரலாம் என முடிவு செய்தேன்.
"Get out of the class" ஆசிரியர் அன்பாகப் பணித்தார். எங்கள் பள்ளி வழக்கப்படி வகுப்பை விட்டு வெளியேறினாலும், கதவு பக்கமே நிற்கவேண்டும் ஒரு ஓரமாக.
முதல்முறையாக வகுப்பைவிட்டு வெளியேற்றப்பட்டேன். கதவருகில் நின்றுகொண்டேன்.
"Outstanding student" என்றார் ஆசிரியர். அர்த்தம் புரிந்த பையன்கள் சிரித்தார்கள். எனக்குப் புரியவில்லை.
எதோ என்னைக்குறித்தான கேலி என்பது மட்டும் தெரிந்தது. உள்ளுக்குள் கொதித்தாலும் சொல்ல முடியாத நிலை.
பியூன் வந்து அழைத்தார்.
" அசிஸ்டெண்ட் ஃபாதர் கூப்புடறாரு. போ"
தந்தை சிகாமணி ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவர். எங்களுக்கு ஆங்கில வகுப்பு எடுத்தார்.
"என்ன வகுப்புக்கு வெளியே நிக்கிற?"
சொன்னேன்.
" ஃபாதர், நான் தமிழ் மீடியத்துக்கு போயிடறேன். இது கஷ்டமாயிருக்கு. புரியமாட்டேங்குது"
அவர் என்னை நேராக கண்ணில் ஊடுருவிப் பார்த்தார்.
" சரி. எதாவது கஷ்டமாயிருந்தா அதைவிட்டு ஓடிடணும்.அப்படித்தானே?"
மெளனமாய் நின்றேன்.
"நான் தமிழ்மீடியம் சார். எனக்கு இங்கிலீஷ் தெரியாது"
"எல்லாரும் பிறக்கும்போதே இங்கிலீஷ் தெரிஞ்சேவா வர்றோம்? நீ அத ஒரு பாடமா மட்டுமே பார்க்கிற. பேசற மொழியா நினைச்சு பயிற்சி பண்ணு.வந்துடும்."
"ஃபாதர். யார் கிட்ட பேசுவேன்?இங்கிலீஷ்ல பேசினா பசங்க சிரிப்பாங்க."
"அம்மணமா அலையறவங்க ஊர்ல , கோவணம் கட்டினவன் கோட்டிக்காரன்தான்" அவர் குரல் உயர்ந்தது.
" நீ அம்மணமா அலையணுமா, கோவணம் கட்டிகிட்டு வேட்டி கட்ட முயற்சிக்கணுமாங்கிற முடிவை நீ தான் எடுக்கணும்." .
தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தேன். அவரது மேசையின் மூலையில்
கைவிரல்களால் தன்னிச்சையாகக்கோடு போட்டவாறே.
"நானும் உனக்கு ஆங்கிலம் எடுத்திருக்கேன். எடுக்கிறேன். நீ இப்படி
கோழைத்தனமா விலகி ஓடினேன்னா, நான் உன்னை சரியா படிப்பிக்கலைன்னு
அர்த்தம்.வெளங்குதா?"என்றதோடு "நீ போகலாம்" என்று தலையசைத்தார்.
வெளியே வந்தேன். உச்சி வெயில் சுட்டெரித்தது.
இன்னும் வரும்
பத்தாவது வகுப்பு வரை நான் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். ஆங்கில மீடியம் என்றால் பணம் கட்டவேண்டும்
ஆங்கிலம் ஒரு பாடமாகவே இருந்ததே தவிர, தொடர்புகொள்ளும் ஊடகம் என நான் கருதவில்லை. படித்தால் புரி
யும். சரளமாகப் பேச, எழுதத் தெரியாது. இது ஒரு பெரிய குறையாக அன்று நான் நினைக்கவில்லை.
பதினோராம் வகுப்பில் சேர்ந்தது ஆங்கில மீடியத்தில். புரிந்துகொள்வது கடினமாக இருக்கவில்லை. படித்ததைச் சொல்லத்தான் தெரியவில்லை.
ஒரு நாள் இயற்பியல் வகுப்பில் " what is the phenomenon of surface tension?" ஆசிரியர் கேட்டதற்கு விழித்தேன்.
surface tension தெரியும்... phenomenon என்றால் யார்? என்ற கேள்விகளுடன் நின்றுகொண்டிருந்தேன்.
ஆசிரியர் பொறுமையிழந்தார் , " Don't you understand ?"
"ஆமாம்" என தலையாட்டினேன்
"என்ன ஆமா? இங்கிலீஷ்லதான கேக்கிறேன்? இது கூடப் புரியலைன்னா என்ன படிச்சே இத்தனை வருசமா?"
எனது வகுப்பில் ஆங்கில மீடியத்திலேயே படித்து வந்த பையன்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு இது புதிது போலும்.. வியப்பாக என்னைப் பார்த்தார்கள்.
எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.. பேசாம தமிழ் மீடியத்திலேயே போய்ச் சேர்ந்துரலாம் என முடிவு செய்தேன்.
"Get out of the class" ஆசிரியர் அன்பாகப் பணித்தார். எங்கள் பள்ளி வழக்கப்படி வகுப்பை விட்டு வெளியேறினாலும், கதவு பக்கமே நிற்கவேண்டும் ஒரு ஓரமாக.
முதல்முறையாக வகுப்பைவிட்டு வெளியேற்றப்பட்டேன். கதவருகில் நின்றுகொண்டேன்.
"Outstanding student" என்றார் ஆசிரியர். அர்த்தம் புரிந்த பையன்கள் சிரித்தார்கள். எனக்குப் புரியவில்லை.
எதோ என்னைக்குறித்தான கேலி என்பது மட்டும் தெரிந்தது. உள்ளுக்குள் கொதித்தாலும் சொல்ல முடியாத நிலை.
பியூன் வந்து அழைத்தார்.
" அசிஸ்டெண்ட் ஃபாதர் கூப்புடறாரு. போ"
தந்தை சிகாமணி ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவர். எங்களுக்கு ஆங்கில வகுப்பு எடுத்தார்.
"என்ன வகுப்புக்கு வெளியே நிக்கிற?"
சொன்னேன்.
" ஃபாதர், நான் தமிழ் மீடியத்துக்கு போயிடறேன். இது கஷ்டமாயிருக்கு. புரியமாட்டேங்குது"
அவர் என்னை நேராக கண்ணில் ஊடுருவிப் பார்த்தார்.
" சரி. எதாவது கஷ்டமாயிருந்தா அதைவிட்டு ஓடிடணும்.அப்படித்தானே?"
மெளனமாய் நின்றேன்.
"நான் தமிழ்மீடியம் சார். எனக்கு இங்கிலீஷ் தெரியாது"
"எல்லாரும் பிறக்கும்போதே இங்கிலீஷ் தெரிஞ்சேவா வர்றோம்? நீ அத ஒரு பாடமா மட்டுமே பார்க்கிற. பேசற மொழியா நினைச்சு பயிற்சி பண்ணு.வந்துடும்."
"ஃபாதர். யார் கிட்ட பேசுவேன்?இங்கிலீஷ்ல பேசினா பசங்க சிரிப்பாங்க."
"அம்மணமா அலையறவங்க ஊர்ல , கோவணம் கட்டினவன் கோட்டிக்காரன்தான்" அவர் குரல் உயர்ந்தது.
" நீ அம்மணமா அலையணுமா, கோவணம் கட்டிகிட்டு வேட்டி கட்ட முயற்சிக்கணுமாங்கிற முடிவை நீ தான் எடுக்கணும்." .
தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தேன். அவரது மேசையின் மூலையில்
கைவிரல்களால் தன்னிச்சையாகக்கோடு போட்டவாறே.
"நானும் உனக்கு ஆங்கிலம் எடுத்திருக்கேன். எடுக்கிறேன். நீ இப்படி
கோழைத்தனமா விலகி ஓடினேன்னா, நான் உன்னை சரியா படிப்பிக்கலைன்னு
அர்த்தம்.வெளங்குதா?"என்றதோடு "நீ போகலாம்" என்று தலையசைத்தார்.
வெளியே வந்தேன். உச்சி வெயில் சுட்டெரித்தது.
இன்னும் வரும்
Tuesday, April 11, 2006
தூத்துக்குடி தெய்வங்கள்-1
தூத்துக்குடி தெய்வங்கள்-1
கடவுள்/மதம் குறித்தான பதிவு என நினைத்துவிடவேண்டாம். 'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்பது பழமொ
ழி. இறைவன் ஒவ்வொரு ஆண்டும் புது அவதாரமெடுத்து எனக்கு அருளியிருக்கிறான். எனக்கு பலமுறை வாழ்வைப்
புதிதாக உண்டாக்கித்தந்த ஆசிரியர்களைப் பற்றிய பதிவுத் தொடர் இது. பலர் இருப்பினும், மிக மிக முக்கியமான
திருப்பங்களை என் வாழ்வில் உருவாக்கிய சிலரைப் பற்றி மட்டும் இங்கே பதிகிறேன்.
தெய்வம் -1 தி..தி..திக்கு வ்..வ்வா..ய்ய்
___________________________________________
மிகச்சிறு வயதில் நான் பலமுறை பேச்சுப்போட்டிகளில் வென்றிருக்கிறேன். ( 1ம் 2ம் வகுப்பு அளவில்)" நேரு மாமா
வந்தாராம்.." என்னுமளவில் இருக்கும் பேச்சுகள் அவை.
மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது திடீரென எனக்குத் திக்குவாய் ஏற்பட்டது. கொன்னல் என்றால் மிகமிக மோசமான
அளவில் இருந்தது அது. பள்ளியிலும், சொந்தக்காரர்களிடம் பேசும்போதும் "அடப்பாவமே" என்னும் பச்சாதாபமே கி
ட்டியது.
சரியாகப் படித்திருந்தும், இந்தத் திக்குவாய் காரணமாகவே பல முறை பதிலளிக்க முயலாமல் உள்ளே குமுறியிருக்கி
றேன். 'என்னமோ படிப்பான். உருப்போட்டு எழுதுவான்' என்னுமளவிலேயே என்னைக்குறித்தான கணிப்பு ஆசிரியர்க
ளிடம் இருந்தது. ஒரு கல்வி சார்ந்த, கல்வி சாராத போட்டிகளிலும் நான் பங்கெடுத்துக்கொண்டதில்லை. நானே வி
லகியிருந்ததால், சீக்கிரம் விலக்கவும் பட்டேன். இந்த விஷச் சுழற்றலில் தாழ்வு மனப்பான்மை மட்டும் வளர்ந்துகொ
ண்டே போனது.இது பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது.
தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி. பத்தாம் வகுப்பில் (10 H வகுப்பு)எனக்கு வகுப்பாசிரியராக வந்தார்
ஜோசப் ஜெயராஜ் சார். வகுப்பு ஆசிரியர் என்பதோடு இல்லாமல் ஆங்கிலமும் எடுப்பார். 10 B வகுப்பிற்கு அவர்
சரித்திரம் எடுத்தார். சிறிது தடித்த சரீரம். உருண்டு உருண்டு அவர் வகுப்பறை தாழ்வாரத்தில் நடந்து வருவதை எளி
தில் தெரிந்துகொண்டு, அவர் வகுப்பு ஆரம்பமாகுமுன் அவரவர் இடத்தில் போய் அமர்ந்துவிடுவோம்.
நான் முன்பெஞ்சு( 'கண்ணாடி போட்ட பையன்களெல்லாம் முன்னால வாங்கல' - என்று அவர்தான் முன்னால் உட்கார
வைத்தார். அதுவரை 2வது 3வத் பெஞ்சு ஒரு மூலையில் யார் கண்ணுலயும் படாம உட்கார்ந்திருப்பேன்).
Tempest ஒரு பாடமாக உரைநடையில் இருந்தது. ஒருநாள் கதை சொல்லிக்கொண்டே வந்தவர் திடீரென நிறுத்தினார்.
வகுப்பின் பின்பெஞ்சுகளில் சலசலப்பு காரணமாக இருக்கும்.
"இங்க்லீசு எல்லாம் படிச்சிட்டீய? பாடம் நடத்த வேண்டாம்.என்னலா? சரி. சரித்திரம் தெரியுதான்னு பாக்கேன்" அவர் சொல்லவும், விவகாரம் முத்துகிறது என அனைவருக்கும் புரிந்தது.
" வெள்ளைக்காரன் ஏன் இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கணும்-னு முனைப்பா நின்னான்?" வகுப்பு மெளனமா
னது.
பிரம்பைச் சுழற்றிக்கொண்டே பெஞ்சுகளுக்கு இடையில் நடந்தார் " எவனுக்குல தெரியும்? எந்திரி..பாப்பம்"
மீண்டும் மயான அமைதி.
எனக்கு பதில் தெரியும். மனசு மோதுகிறது..சொல்லிவிடவேண்டும்.. கையைத் தூக்கு...கையைத் தூக்கு...
வழக்கமான பயம் என்னை வென்றது. என் முகத்தில் அவர் ஏதோ கண்டிருக்கவேண்டும். நின்றார்.
" ஏல, கண்ணாடி.. எந்திரு."
எழுந்தேன். " நீ சொல்லு"
வாய் திறந்தேன். வழக்கம் போல வார்த்தைகள் வரவில்லை . உதடுகள் மட்டும் துடித்துக்கொண்டிருந்தன..
"இ..இ..இ..." இஸ்தான்புல் நகரை ஓட்டாமான் துருக்கியர் கைப்பற்றினர் எனச் சொல்லவேண்டும்- இஸ்தான்புல் இ..இ.இ
ய்ல் நின்றது
அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.
" சார் அவனுக்கு திக்குவாயி. இன்னிக்கு பூரா அப்படியே நிப்பான்" பின்னாலிருந்து எவனோ சொன்னான். ஒரு சிரி
ப்பலை மோதியது.
கையை மேலே தூக்கி, கண்களைத் துடைத்துக்கொண்டேன். வாய் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது.
அருகே வந்தார். " சாயங்காலம் வீட்டுக்குப் போறதுக்கு முன்னால என்னைப் பாத்துட்டுப் போ. வெளங்குதா?'
சரியென தலையாட்டினேன். " உக்காரு" என்றவர் வகுப்பு முழுதையும் எழுந்து பெஞ்சு மேல் நிற்கச் சொன்னார். அந
னவருக்கும் கையில் இரண்டு அடி - செமத்தியாக..
"வெக்கமாயில்ல? உங்கூடப் படிக்கிற பயலுக்கு திக்குவாயின்னா சிரிக்கேங்களே? நீங்கெல்லாம் ஓவியமோ?அடுத்தவன்
கஷ்டத்தப்பாத்து சிரிக்கவால சொல்லிக்கொடுத்திருக்கு ? சோத்தத் திங்கீயளா ** யத் திங்கீயளா?" அவர் போட்ட
சத்தத்திலும் அடியிலும் வகுப்பு உறைந்து தலை குனிந்தது.
சாயங்காலம் , ஆசிரியர் அறையில் அவரைப் பார்க்கப் போனேன். கிளம்பியிருந்தார். சைக்கிள் ஸ்டாண்டு வரை
அவருடன் நடந்தேன்.
"நீ பேசணும்டா. நிறையப் பேசணும்.. தைரியமா பேசு.பேசப்பேசத்தான் நீ புத்திசாலின்னு தெரிஞ்சுக்குவாங்க?"
அவரது வார்த்தைகளில் விம்மினேன்.
"இல்ல சார். எனக்கு படிப்பு வராது. நான் மக்குளி சார்."
" இல்லடே. நீ படிப்பே. ஒரு நாளு நீ மேடைல பேசுவ. பெரிசா பரிசெல்லாம் வாங்குவ பாரு. " அன்போடு தோளில் கை போட்டு அழுத்தினார்.
"எங்கேந்துடே வார?"
"ஹார்பர் குவார்டர்ஸ் சார்"
" கடற்கரைக்குப் போ. தனியா நீ பாட்டுக்கு கத்தி கத்திப் பேசு. என்னதான் பேசணும்னு இல்ல. நீ படிச்ச பாடத்தை
உரக்கச் சொல்லிப்பாரு. உம்-முன்னால இருக்கிற மணலெல்லாம் ஆளுங்கன்னு நினைச்சுக்க."
என் தலையில் வலக்கையை வைத்தார் " என் பிள்ளேள் எவனும் சோடைபோனதில்ல. போவ விடமாட்டேன். கர்த்தர் இருக்காரு. தைரியமா இரு ராசா"
கிளம்பினவனை மீண்டும் நிறுத்தினார்
" திக்குவாயி நோயில்ல தம்பி. தைரியமாப் போராடு. ஓடியே போயிரும். முதல்ல உன்னை நம்பு"
மறுநாள் தனியே கடற்கரைக்குப் போனேன். அலைகள் சோம்பலாக அடித்துக்கொண்டிருந்தன.தெரிந்த கேள்வி பதில்களைச் சொல்லத்தொடங்கினேன். முதலில் வெட்கமாக இருந்தது. 'கோட்டிக்காரங்கணக்கா என்னல தனியா பினாத்திக்கிட்டு கிடக்கே?'ன்னு எவனாச்சும் கேட்டான்னா?
யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த இராவணன் மீசை முட்களைப் பார்த்து கொஞ்சம்
கத்திப் பேசத் தொடங்கினேன்.
நானே கேள்வி கேட்டேன். நானே பதிலும் சொன்னேன். சில சமயங்களில் கையைத் தூக்கியும் "சார் சார்" எனக் கூவி
சொல்லிப்பார்த்துப் பழகினேன். கொஞ்சம் கொஞ்சமாக வெட்கம் விட்டு , சுவாரசியமாக ஆனது.
பேசுமுன் ஒரு முறை மனதுள் " பொறுமை.பொறுமை" எனச் சொல்லிக்கொண்டு நிதானமாகப் பேசத் தொடங்கினேன்.
இருநாட்களில் அம்மா ஆச்சரியப்பட்டாள். " என்னடா, இன்னிக்கு கொன்னலே இல்லையே?!" அண்ணன் சந்தோஷத்தில் முதுகில் தட்டினார். தனிமையான கடற்கரைப் பேச்சுப் பயிற்சி மறைமுகமாகத் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சம
க என் பேச்சு தெளிவானது. திக்குவாய் நின்றே போனது.
இரு வருடங்கள் பின் கல்லூரியில் தமிழ், ஆங்கிலப் பேச்சுப்போட்டி, பட்டிமன்றம் என மேடையேறி பரிசுகளை
வென்றேன். ஒவ்வொரு முறையும் ஜோசப் ஜெயராஜ் சாரை மனத்துக்குள் நினைத்துக்கொள்வேன்.
இன்று வருடங்கள் பல கழிந்து, கோப்பைகளுடன் நான் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கையில் அவர் நினைவு வந்தது. அதுதான் இப்பதிவின் உந்துதல்.
"இறைவனுக்கு எந்த மொழி தெரியும்?" என யாராவது என்னிடம் கேட்டால், சொல்லுவேன். " அராமிக்கோ, அரபியோ, சமஸ்க்ருதமோ அல்ல.
தமிழ்.. தூத்துக்குடித் தமிழ்”
கடவுள்/மதம் குறித்தான பதிவு என நினைத்துவிடவேண்டாம். 'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்பது பழமொ
ழி. இறைவன் ஒவ்வொரு ஆண்டும் புது அவதாரமெடுத்து எனக்கு அருளியிருக்கிறான். எனக்கு பலமுறை வாழ்வைப்
புதிதாக உண்டாக்கித்தந்த ஆசிரியர்களைப் பற்றிய பதிவுத் தொடர் இது. பலர் இருப்பினும், மிக மிக முக்கியமான
திருப்பங்களை என் வாழ்வில் உருவாக்கிய சிலரைப் பற்றி மட்டும் இங்கே பதிகிறேன்.
தெய்வம் -1 தி..தி..திக்கு வ்..வ்வா..ய்ய்
___________________________________________
மிகச்சிறு வயதில் நான் பலமுறை பேச்சுப்போட்டிகளில் வென்றிருக்கிறேன். ( 1ம் 2ம் வகுப்பு அளவில்)" நேரு மாமா
வந்தாராம்.." என்னுமளவில் இருக்கும் பேச்சுகள் அவை.
மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது திடீரென எனக்குத் திக்குவாய் ஏற்பட்டது. கொன்னல் என்றால் மிகமிக மோசமான
அளவில் இருந்தது அது. பள்ளியிலும், சொந்தக்காரர்களிடம் பேசும்போதும் "அடப்பாவமே" என்னும் பச்சாதாபமே கி
ட்டியது.
சரியாகப் படித்திருந்தும், இந்தத் திக்குவாய் காரணமாகவே பல முறை பதிலளிக்க முயலாமல் உள்ளே குமுறியிருக்கி
றேன். 'என்னமோ படிப்பான். உருப்போட்டு எழுதுவான்' என்னுமளவிலேயே என்னைக்குறித்தான கணிப்பு ஆசிரியர்க
ளிடம் இருந்தது. ஒரு கல்வி சார்ந்த, கல்வி சாராத போட்டிகளிலும் நான் பங்கெடுத்துக்கொண்டதில்லை. நானே வி
லகியிருந்ததால், சீக்கிரம் விலக்கவும் பட்டேன். இந்த விஷச் சுழற்றலில் தாழ்வு மனப்பான்மை மட்டும் வளர்ந்துகொ
ண்டே போனது.இது பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது.
தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி. பத்தாம் வகுப்பில் (10 H வகுப்பு)எனக்கு வகுப்பாசிரியராக வந்தார்
ஜோசப் ஜெயராஜ் சார். வகுப்பு ஆசிரியர் என்பதோடு இல்லாமல் ஆங்கிலமும் எடுப்பார். 10 B வகுப்பிற்கு அவர்
சரித்திரம் எடுத்தார். சிறிது தடித்த சரீரம். உருண்டு உருண்டு அவர் வகுப்பறை தாழ்வாரத்தில் நடந்து வருவதை எளி
தில் தெரிந்துகொண்டு, அவர் வகுப்பு ஆரம்பமாகுமுன் அவரவர் இடத்தில் போய் அமர்ந்துவிடுவோம்.
நான் முன்பெஞ்சு( 'கண்ணாடி போட்ட பையன்களெல்லாம் முன்னால வாங்கல' - என்று அவர்தான் முன்னால் உட்கார
வைத்தார். அதுவரை 2வது 3வத் பெஞ்சு ஒரு மூலையில் யார் கண்ணுலயும் படாம உட்கார்ந்திருப்பேன்).
Tempest ஒரு பாடமாக உரைநடையில் இருந்தது. ஒருநாள் கதை சொல்லிக்கொண்டே வந்தவர் திடீரென நிறுத்தினார்.
வகுப்பின் பின்பெஞ்சுகளில் சலசலப்பு காரணமாக இருக்கும்.
"இங்க்லீசு எல்லாம் படிச்சிட்டீய? பாடம் நடத்த வேண்டாம்.என்னலா? சரி. சரித்திரம் தெரியுதான்னு பாக்கேன்" அவர் சொல்லவும், விவகாரம் முத்துகிறது என அனைவருக்கும் புரிந்தது.
" வெள்ளைக்காரன் ஏன் இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கணும்-னு முனைப்பா நின்னான்?" வகுப்பு மெளனமா
னது.
பிரம்பைச் சுழற்றிக்கொண்டே பெஞ்சுகளுக்கு இடையில் நடந்தார் " எவனுக்குல தெரியும்? எந்திரி..பாப்பம்"
மீண்டும் மயான அமைதி.
எனக்கு பதில் தெரியும். மனசு மோதுகிறது..சொல்லிவிடவேண்டும்.. கையைத் தூக்கு...கையைத் தூக்கு...
வழக்கமான பயம் என்னை வென்றது. என் முகத்தில் அவர் ஏதோ கண்டிருக்கவேண்டும். நின்றார்.
" ஏல, கண்ணாடி.. எந்திரு."
எழுந்தேன். " நீ சொல்லு"
வாய் திறந்தேன். வழக்கம் போல வார்த்தைகள் வரவில்லை . உதடுகள் மட்டும் துடித்துக்கொண்டிருந்தன..
"இ..இ..இ..." இஸ்தான்புல் நகரை ஓட்டாமான் துருக்கியர் கைப்பற்றினர் எனச் சொல்லவேண்டும்- இஸ்தான்புல் இ..இ.இ
ய்ல் நின்றது
அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.
" சார் அவனுக்கு திக்குவாயி. இன்னிக்கு பூரா அப்படியே நிப்பான்" பின்னாலிருந்து எவனோ சொன்னான். ஒரு சிரி
ப்பலை மோதியது.
கையை மேலே தூக்கி, கண்களைத் துடைத்துக்கொண்டேன். வாய் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது.
அருகே வந்தார். " சாயங்காலம் வீட்டுக்குப் போறதுக்கு முன்னால என்னைப் பாத்துட்டுப் போ. வெளங்குதா?'
சரியென தலையாட்டினேன். " உக்காரு" என்றவர் வகுப்பு முழுதையும் எழுந்து பெஞ்சு மேல் நிற்கச் சொன்னார். அந
னவருக்கும் கையில் இரண்டு அடி - செமத்தியாக..
"வெக்கமாயில்ல? உங்கூடப் படிக்கிற பயலுக்கு திக்குவாயின்னா சிரிக்கேங்களே? நீங்கெல்லாம் ஓவியமோ?அடுத்தவன்
கஷ்டத்தப்பாத்து சிரிக்கவால சொல்லிக்கொடுத்திருக்கு ? சோத்தத் திங்கீயளா ** யத் திங்கீயளா?" அவர் போட்ட
சத்தத்திலும் அடியிலும் வகுப்பு உறைந்து தலை குனிந்தது.
சாயங்காலம் , ஆசிரியர் அறையில் அவரைப் பார்க்கப் போனேன். கிளம்பியிருந்தார். சைக்கிள் ஸ்டாண்டு வரை
அவருடன் நடந்தேன்.
"நீ பேசணும்டா. நிறையப் பேசணும்.. தைரியமா பேசு.பேசப்பேசத்தான் நீ புத்திசாலின்னு தெரிஞ்சுக்குவாங்க?"
அவரது வார்த்தைகளில் விம்மினேன்.
"இல்ல சார். எனக்கு படிப்பு வராது. நான் மக்குளி சார்."
" இல்லடே. நீ படிப்பே. ஒரு நாளு நீ மேடைல பேசுவ. பெரிசா பரிசெல்லாம் வாங்குவ பாரு. " அன்போடு தோளில் கை போட்டு அழுத்தினார்.
"எங்கேந்துடே வார?"
"ஹார்பர் குவார்டர்ஸ் சார்"
" கடற்கரைக்குப் போ. தனியா நீ பாட்டுக்கு கத்தி கத்திப் பேசு. என்னதான் பேசணும்னு இல்ல. நீ படிச்ச பாடத்தை
உரக்கச் சொல்லிப்பாரு. உம்-முன்னால இருக்கிற மணலெல்லாம் ஆளுங்கன்னு நினைச்சுக்க."
என் தலையில் வலக்கையை வைத்தார் " என் பிள்ளேள் எவனும் சோடைபோனதில்ல. போவ விடமாட்டேன். கர்த்தர் இருக்காரு. தைரியமா இரு ராசா"
கிளம்பினவனை மீண்டும் நிறுத்தினார்
" திக்குவாயி நோயில்ல தம்பி. தைரியமாப் போராடு. ஓடியே போயிரும். முதல்ல உன்னை நம்பு"
மறுநாள் தனியே கடற்கரைக்குப் போனேன். அலைகள் சோம்பலாக அடித்துக்கொண்டிருந்தன.தெரிந்த கேள்வி பதில்களைச் சொல்லத்தொடங்கினேன். முதலில் வெட்கமாக இருந்தது. 'கோட்டிக்காரங்கணக்கா என்னல தனியா பினாத்திக்கிட்டு கிடக்கே?'ன்னு எவனாச்சும் கேட்டான்னா?
யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த இராவணன் மீசை முட்களைப் பார்த்து கொஞ்சம்
கத்திப் பேசத் தொடங்கினேன்.
நானே கேள்வி கேட்டேன். நானே பதிலும் சொன்னேன். சில சமயங்களில் கையைத் தூக்கியும் "சார் சார்" எனக் கூவி
சொல்லிப்பார்த்துப் பழகினேன். கொஞ்சம் கொஞ்சமாக வெட்கம் விட்டு , சுவாரசியமாக ஆனது.
பேசுமுன் ஒரு முறை மனதுள் " பொறுமை.பொறுமை" எனச் சொல்லிக்கொண்டு நிதானமாகப் பேசத் தொடங்கினேன்.
இருநாட்களில் அம்மா ஆச்சரியப்பட்டாள். " என்னடா, இன்னிக்கு கொன்னலே இல்லையே?!" அண்ணன் சந்தோஷத்தில் முதுகில் தட்டினார். தனிமையான கடற்கரைப் பேச்சுப் பயிற்சி மறைமுகமாகத் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சம
க என் பேச்சு தெளிவானது. திக்குவாய் நின்றே போனது.
இரு வருடங்கள் பின் கல்லூரியில் தமிழ், ஆங்கிலப் பேச்சுப்போட்டி, பட்டிமன்றம் என மேடையேறி பரிசுகளை
வென்றேன். ஒவ்வொரு முறையும் ஜோசப் ஜெயராஜ் சாரை மனத்துக்குள் நினைத்துக்கொள்வேன்.
இன்று வருடங்கள் பல கழிந்து, கோப்பைகளுடன் நான் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கையில் அவர் நினைவு வந்தது. அதுதான் இப்பதிவின் உந்துதல்.
"இறைவனுக்கு எந்த மொழி தெரியும்?" என யாராவது என்னிடம் கேட்டால், சொல்லுவேன். " அராமிக்கோ, அரபியோ, சமஸ்க்ருதமோ அல்ல.
தமிழ்.. தூத்துக்குடித் தமிழ்”
Saturday, April 08, 2006
தவறிய உடைகளும் மனங்களும்
இரு நாட்களுக்கு முன் என் பையன் அவன் நண்பர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது , துரத்திய ஒரு சிறுவனின் டிராயர் நழுவிவிட்டது. ஒரு கையால் பிடித்துக்கொண்டே துரத்திய அவனைப் பார்த்து என் பையன் சொன்னான்."ஹே. உனக்கு வார்டுரோப் மால்ஃபங்க்ஷன்(wardrobe malfunction)." கூடியிருந்த பெரியவர்கள் சிரித்து விட்டு அவரவர் குழுவில் கதையடிக்கத் தொடங்கினர்.
எனக்கு ஒரு குறுகுறுப்பு... இந்தப் பதத்தை என்னவென இந்தச் சிறுவர்/சிறுமியர் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என அறியும் ஆவல். காதைத் தீட்டிக்கொண்டு சிறுவர்கள் கூட்டமாக இருந்து பேசுவதைக் கவனிக்கலானேன்.
ஒரு சிறுமி சொல்கிறாள் " அன்னிக்கு நியூஸ்-ல காமிச்சாங்க. ஸ்டேஜ்ல ஒரு ஆண்ட்டிக்கு கவுண் பிஞ்சுபோச்சாம்... "
கெக்கே பிக்கேவென சிரிப்பலைகள்.
"ஷேம் ஷேம்.."
"சீய்ய்..." யோடு ஒரு குரல் கேட்டது
"அந்த ஆண்ட்டி ஏன் ஜட்டி போடாம போனாங்க? வேணும்.. எங்க டீச்சர் இருந்தா அடிச்சிருப்பாங்க"
குழந்தைகள் பேச்சை விடுங்கள். ஒரு விஷயம் சரியெனவே படுகிறது எனக்கும். அண்மையில் நடந்த ஃபாஷன் நிகழ்ச்சிகளில் மேடையில் திடீரென உடைகள் அவிழ்ந்து விழுவதும், கிழிந்து போவதுமாக நடந்த அசம்பாவிதங்களை FTV காட்டியிருந்தால் சரியென்று சொல்லலாம். Breaking News என்னுமளவில் முன்னிலை தொலைக்காட்சி செய்தி சேனல்கள் பரபரப்பாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி அனைவரையும் பார்க்கச் செய்ததை எப்படி பத்திரிகை ஒழுங்கு என்பது? இது ஒரு முக்கியச் செய்தியா? அது குறித்து விவாதங்கள் அலசல்கள்... போதும் போதுமென சலிப்படையச் செய்துவிட்டார்கள்.
இந்த செய்திச் சேனல்கள் வீட்டில் அனைவரும் பார்க்கும் சேனல்கள் என்பதால் பெரும்பாலோர்க்கு அதிர்ச்சியாகவும், தர்மசங்கடமாகவும் இருந்தது என்றால் மிகையில்லை. ஒன்பது வயதுப்பையன் wardrobe malfunction என்னும் வார்த்தை கற்று பயன்படுத்துகிறான் என்றால் எத்தனை முறை இந்த விஷ அலைகள் அவனைத் தாக்கியிருக்கக் கூடும்?
குழந்தைகள் வெளிப்படையாகக் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. சில ஆடைகளுக்கு உள்ளாடை அணியமுடியாது. தொலைகிறது. கவுண் போன்றவற்றிற்குமா? உள்ளாடைகள் அணிந்து வரக்கூடாது எனச் சட்டமிருக்கிறதா என்ன? இதனைப்பார்க்கும்போது இந்நிகழ்ச்சிகளின் அடியோடும் குறிக்கோள் என்ன என்பதிலேயே சந்தேகம் வருகிறது.
ஒழுங்கு என்பதும் நாகரீகம் என்பதும் நவீனம்/புரட்சி என்னும் வார்த்தைகளால் கேவலப்படுத்தப்படுவது சரியல்ல என நினைக்கிறேன். எது அழகுணர்வு எது அழகு எனக் காட்டப்படுகின்ற வக்கிரம் என்ற எல்லைக்கோட்டினை இவர்கள் கடந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது. எங்கு பாலுணர்வு இருபால் தன்மைகளை கூசச்செய்து வெளிக்காட்டப்படுகிறதோ , அங்கு உரத்த குரலில் எதிர்ப்புகள் சொல்லப்படவேண்டும். மேல்மட்ட வர்க்கத்தினர் மட்டுமல்ல பார்வையாளர்கள்... தொலைக்காட்சிகளால் , அனைத்து தர மக்களின் வீட்டிலும் வழிகிறது இவ்விரசம்... அனைவருக்கும் அனைத்து நேரத்திலும் அழகுணர்வு என்னும் கோணத்தில் பார்க்க முடியும் என நினைப்பது சாத்தியமில்லை.
இம்மாடல் பெண்கள் மட்டுமல்ல அவமானப்பட்டது... பெண்ணினமே ஒரு வக்கிரமான ஆணாதிக்க பாலுணர்வு மிகுந்த கும்பலால் காட்சிப்பொருளாக சிதைபட்டது என்பது நிதர்சனம். இதற்கு இந்நிகழ்ச்சி நடத்துபவர்களும்,அவற்றிற்கு அதிகமான விளம்பரம் அளித்த ஊடகங்களும் தார்மீகப் பொறுப்பு ஏற்கவேண்டும்.
மேடையில் தவறாகச் செயல்பட்டது உடைகளல்ல... உடல் காட்டி வியாபாரம் செய்ய நினைக்கும் மனங்கள்...
என்று தணியும் இச்"சுதந்திர" தாகம்?
எனக்கு ஒரு குறுகுறுப்பு... இந்தப் பதத்தை என்னவென இந்தச் சிறுவர்/சிறுமியர் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என அறியும் ஆவல். காதைத் தீட்டிக்கொண்டு சிறுவர்கள் கூட்டமாக இருந்து பேசுவதைக் கவனிக்கலானேன்.
ஒரு சிறுமி சொல்கிறாள் " அன்னிக்கு நியூஸ்-ல காமிச்சாங்க. ஸ்டேஜ்ல ஒரு ஆண்ட்டிக்கு கவுண் பிஞ்சுபோச்சாம்... "
கெக்கே பிக்கேவென சிரிப்பலைகள்.
"ஷேம் ஷேம்.."
"சீய்ய்..." யோடு ஒரு குரல் கேட்டது
"அந்த ஆண்ட்டி ஏன் ஜட்டி போடாம போனாங்க? வேணும்.. எங்க டீச்சர் இருந்தா அடிச்சிருப்பாங்க"
குழந்தைகள் பேச்சை விடுங்கள். ஒரு விஷயம் சரியெனவே படுகிறது எனக்கும். அண்மையில் நடந்த ஃபாஷன் நிகழ்ச்சிகளில் மேடையில் திடீரென உடைகள் அவிழ்ந்து விழுவதும், கிழிந்து போவதுமாக நடந்த அசம்பாவிதங்களை FTV காட்டியிருந்தால் சரியென்று சொல்லலாம். Breaking News என்னுமளவில் முன்னிலை தொலைக்காட்சி செய்தி சேனல்கள் பரபரப்பாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி அனைவரையும் பார்க்கச் செய்ததை எப்படி பத்திரிகை ஒழுங்கு என்பது? இது ஒரு முக்கியச் செய்தியா? அது குறித்து விவாதங்கள் அலசல்கள்... போதும் போதுமென சலிப்படையச் செய்துவிட்டார்கள்.
இந்த செய்திச் சேனல்கள் வீட்டில் அனைவரும் பார்க்கும் சேனல்கள் என்பதால் பெரும்பாலோர்க்கு அதிர்ச்சியாகவும், தர்மசங்கடமாகவும் இருந்தது என்றால் மிகையில்லை. ஒன்பது வயதுப்பையன் wardrobe malfunction என்னும் வார்த்தை கற்று பயன்படுத்துகிறான் என்றால் எத்தனை முறை இந்த விஷ அலைகள் அவனைத் தாக்கியிருக்கக் கூடும்?
குழந்தைகள் வெளிப்படையாகக் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. சில ஆடைகளுக்கு உள்ளாடை அணியமுடியாது. தொலைகிறது. கவுண் போன்றவற்றிற்குமா? உள்ளாடைகள் அணிந்து வரக்கூடாது எனச் சட்டமிருக்கிறதா என்ன? இதனைப்பார்க்கும்போது இந்நிகழ்ச்சிகளின் அடியோடும் குறிக்கோள் என்ன என்பதிலேயே சந்தேகம் வருகிறது.
ஒழுங்கு என்பதும் நாகரீகம் என்பதும் நவீனம்/புரட்சி என்னும் வார்த்தைகளால் கேவலப்படுத்தப்படுவது சரியல்ல என நினைக்கிறேன். எது அழகுணர்வு எது அழகு எனக் காட்டப்படுகின்ற வக்கிரம் என்ற எல்லைக்கோட்டினை இவர்கள் கடந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது. எங்கு பாலுணர்வு இருபால் தன்மைகளை கூசச்செய்து வெளிக்காட்டப்படுகிறதோ , அங்கு உரத்த குரலில் எதிர்ப்புகள் சொல்லப்படவேண்டும். மேல்மட்ட வர்க்கத்தினர் மட்டுமல்ல பார்வையாளர்கள்... தொலைக்காட்சிகளால் , அனைத்து தர மக்களின் வீட்டிலும் வழிகிறது இவ்விரசம்... அனைவருக்கும் அனைத்து நேரத்திலும் அழகுணர்வு என்னும் கோணத்தில் பார்க்க முடியும் என நினைப்பது சாத்தியமில்லை.
இம்மாடல் பெண்கள் மட்டுமல்ல அவமானப்பட்டது... பெண்ணினமே ஒரு வக்கிரமான ஆணாதிக்க பாலுணர்வு மிகுந்த கும்பலால் காட்சிப்பொருளாக சிதைபட்டது என்பது நிதர்சனம். இதற்கு இந்நிகழ்ச்சி நடத்துபவர்களும்,அவற்றிற்கு அதிகமான விளம்பரம் அளித்த ஊடகங்களும் தார்மீகப் பொறுப்பு ஏற்கவேண்டும்.
மேடையில் தவறாகச் செயல்பட்டது உடைகளல்ல... உடல் காட்டி வியாபாரம் செய்ய நினைக்கும் மனங்கள்...
என்று தணியும் இச்"சுதந்திர" தாகம்?
Monday, April 03, 2006
வலையில் வக்கிரங்கள்.
சில நாட்களாக எனது மின்மடலில் வெறுப்பு உமிழும் மடல்கள் வருவது அதிகரித்திருக்கிறது. காரணம் பாரதி குறித்த பதிவு. என்ன எழுதுவது என்றெல்லாம் வரம்பு இல்லை போலும். டோ ண்டு அவர்களுக்கு 60ம் திருமண வாழ்த்துச் சொல்வது குற்றம் என ஒன்று... தேவுடா..
எப்படி ஒருவருக்கு தன் கருத்தைச் சொல்ல உரிமை உண்டோ அதனைப் போலவே அதன் மாற்றுக் கருத்துக்கும் உரிமையுண்டு என்னும் சனநாயகப் போக்கு புதைக்கப்பட்டு தனிமனித வெறுப்புமடல்கள் நிரம்பி வழிவதைப்பார்க்கையில் நிஜமாகவே சந்தேகம்வருகிறது. " நாம் சமூக முதிர்வு பெற்றிருக்கிறோமா? குறைந்த பட்சம் அதனை நோக்கி வளரவாவது செய்கிறோமா?"
வலைப்பதிவுகளில் வரும் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துகள் அக்கருத்துகளைச் சார்ந்து இருப்பது பண்பு என்பது தவிர்க்கப்பட்டு வேண்டுமென்றே கருத்துகளுக்குப்பதிலாக காழ்ப்புணர்வு பரப்பபடுகிறது. பல வகையான பின்னூட்டங்கள் இதற்கு ஆதாரம். இது ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றத்தை அடியோடு ஒழிப்பதோடு நில்லாமல், மேலும் பிளவுகள் ஏற்படவும், தன் அடிமட்ட சிந்தனை சார்ந்த ஒரு கும்பலை வளர்வதையும் துரிதப்படுத்துகிறது.
வலைப்பதிவுகளை பின்னாளில் பார்த்துவளரும் ஒரு சமுதாயம் இந்த சீர்கேடலில் முழுகித் தன்னைத் தொலைத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அதனைக்கருதியாவது நம் நண்பர்கள் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்.
இந்த வெறுப்பு மடல்கள் spamல் இடப்பட்டிருப்பதால் இப்போதைக்கு எனக்கு பிரச்சினையில்லை. பின்னாளில் மற்றொரு மடல் முகவரி/மற்றொரு தொடர் வெறுப்பு மடல்கள்...காலம் இப்படியே வலைக்குள் நகரும் போலும்.
எப்படி ஒருவருக்கு தன் கருத்தைச் சொல்ல உரிமை உண்டோ அதனைப் போலவே அதன் மாற்றுக் கருத்துக்கும் உரிமையுண்டு என்னும் சனநாயகப் போக்கு புதைக்கப்பட்டு தனிமனித வெறுப்புமடல்கள் நிரம்பி வழிவதைப்பார்க்கையில் நிஜமாகவே சந்தேகம்வருகிறது. " நாம் சமூக முதிர்வு பெற்றிருக்கிறோமா? குறைந்த பட்சம் அதனை நோக்கி வளரவாவது செய்கிறோமா?"
வலைப்பதிவுகளில் வரும் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துகள் அக்கருத்துகளைச் சார்ந்து இருப்பது பண்பு என்பது தவிர்க்கப்பட்டு வேண்டுமென்றே கருத்துகளுக்குப்பதிலாக காழ்ப்புணர்வு பரப்பபடுகிறது. பல வகையான பின்னூட்டங்கள் இதற்கு ஆதாரம். இது ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றத்தை அடியோடு ஒழிப்பதோடு நில்லாமல், மேலும் பிளவுகள் ஏற்படவும், தன் அடிமட்ட சிந்தனை சார்ந்த ஒரு கும்பலை வளர்வதையும் துரிதப்படுத்துகிறது.
வலைப்பதிவுகளை பின்னாளில் பார்த்துவளரும் ஒரு சமுதாயம் இந்த சீர்கேடலில் முழுகித் தன்னைத் தொலைத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அதனைக்கருதியாவது நம் நண்பர்கள் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்.
இந்த வெறுப்பு மடல்கள் spamல் இடப்பட்டிருப்பதால் இப்போதைக்கு எனக்கு பிரச்சினையில்லை. பின்னாளில் மற்றொரு மடல் முகவரி/மற்றொரு தொடர் வெறுப்பு மடல்கள்...காலம் இப்படியே வலைக்குள் நகரும் போலும்.
Thursday, March 30, 2006
மூலக்கூறிலிருந்து மருந்து வரை -V
இவ்வாறு மூலக்கூறுகளை சல்லடையிட்டு சலித்து, "இவைதான் மருந்து மூலக்கூறாக இருக்கலாம்" எனக் கருதப்பட்டு பொறுக்கியெடுக்கப்பட்ட மூலக்கூறுகள் ADME ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின் நச்சுத்தன்மைக்கான (Toxicology)ஆய்வுகளை வெற்றிகரமாகக் கடந்த பிறகு அம்மூலக்கூறுகள் பட்டியலிடப்படும். இவற்றை புதிய வேதியல் பொருட்கள் (New Chemical Entity - NCE)என அடையாளம் இடுவர்.
இவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்ட வேதியல் மூலக்கூறிகளில் மருந்தாக ஊகிக்கப்படும் பொருட்களை சோதனைக்கால புதிய மருந்து மூலகங்கள் என்பர் ( Investigative New Drugs -IND)
உயிரினங்களின் மேல் இம்மூலக்கூறுகளின் பண்பு ஆராய்வதை பயோஅனலிசிஸ்(Bioanalysis - in vivo studies) என்பர். இவை முறையே PK PD( Pharmaco Kinetics , Pharmaco Dynamics) என்னும் ஆய்வுகளின் விளைவுகளாக நிறுவப்படும். மேற்கொண்டு இம்மூலக்கூறுகள் சந்தையில் மருந்தாகும் தன்மை உடையதுதானா என்பதை ஆய்வர். இதன் பதில் 'ஆம்' எனில், இம்மூலக்குற்றினை மருந்தாக்குவதற்காக மருந்துகளை தர நிர்ணயிக்கும் அமைப்புகளுக்கு முறையான விண்ணப்பம் செய்வர். இந்த நிலையை New Drug Application-NDA என்பர்.
இந்த உயிரினப் பரிசோதனைகளை இரு விதமாகப் பிரிக்கலாம்.
1. விலங்கினங்களில் செய்யப்படும் சோதனைகள்.
இங்குதான் முயல், எலி, குரங்கு,குதிரை ( யானை கூட உண்டு )முதலியவற்றைப் பயன்படுத்டுவர். எல்லா விலங்குகளையும் பயன்படுத்டமுடியாது. எந்த சோதனைக்கு எந்த விலங்கு, அதன் எந்த பாகம் உபயோகிக்க வேண்டும் என நிர்ணயம் இருக்கிறது. இது உலகளவில் நிர்ணயிக்கப்பட்டது என்பதால், மிகுந்த கெடுபிடியான சோதனைகள் இவை.
ஒவ்வொரு சோதனையும் செயுமுன் திட்டமிடப்பட வேண்டும். அதனை யார் செய்வது, யார் அனுமதிப்பது என்பதிலிருந்து, எந்த விலங்கு, எந்த உயிர்ப்பொருள் ( சாம்பிள் என்பது இரத்தம், சீரம், மலம் , சிறுநீர் என உயிரினப் பொருட்கள்லிருந்து, ஈரல், நிரையீரல், குடல் என உடல்பொருள் துண்டுகள் வரை இருக்கலாம்), எந்த இயந்திரம், எந்த முறை கொண்டு ஆய்வு செய்வது , ஆய்வின் முடிவுகளை எங்கு சேமிப்பது , ஆய்வு முடிந்தபின் , மீதமிருக்கும் சாம்பிள் எங்கு சேமிப்பது என்பது வரை மிகக்கடுமையான ஆவணக் குறிப்புகளுடன் சோதனைகள் நடத்தப்படும். Standard Operating Procedures (SOP)என்பன முதலில் வரையறுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, பின் சோதனைகளில் நிகழ்த்தப்படும். ஒவ்வொரு நிலையிலும் ஆவணங்கள் பாதுகாக்கப்படவேண்டும். சோதனைகள் தோல்வியடைந்தாலும் அதன் முடிவுகளும், ஏன் தோல்வியுற்றன என்பதும் ஆவணப்படுத்தவேண்டும். தணிக்கைக் குழுக்கள் இவற்றை குடைந்து குடைந்து பார்ப்பார்கள்.
2.மருத்துவ சோதனைகள்(Clinical Trials) மனிதரில் இதன்பின் நடத்தப்படும். மருத்துவச் சோதனையில் நான்கு நிலைகள்(Phases) உள்ளன.
முதன் நிலையில் மருந்தாக வேண்டிய பொருள் ஆரோக்கியமாக இருக்கும் மனிதரில் செலுத்தப்படும். இவ்வாறு சோதனகளுக்கு தானாக வரும் மனிதர்களை சப்ஜெக்டுகள் (subjects)என்பர்.
மருந்து கொடுக்குமுன் உயிரினப் பொருட்களின் சாம்பிள்(Bio samples) எடுக்கப்படும். பின் மருந்து செலுத்தப்பட்ட சில குறிப்பிட்ட நேர இடைவெளியில் சாம்பிள்கள் எடுக்கப்படும். இது ஆய்வின் நோக்கம் கொண்டு நிர்ணயிக்கப்படும். உதராணமாக 0 நிமிடம்,30 நிமிடம், 1 மணிநேரம், 2 மணிநேரம் என இந்நேர இடைவெளிகள் அமைந்திருக்கும். இவ்வாறு எடுக்கப்பட்ட உயிரியல்பொருட்கள் மிகக் குறைந்த வெப்பநிலையுள்ள பெட்டிகளில் பாதுகாக்கப்ட்டு (deep freezers)சோதனைச் சாலைக்கு அனுப்பப்படும். இதன் வெப்பநிலை -80 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும்.
இவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்ட வேதியல் மூலக்கூறிகளில் மருந்தாக ஊகிக்கப்படும் பொருட்களை சோதனைக்கால புதிய மருந்து மூலகங்கள் என்பர் ( Investigative New Drugs -IND)
உயிரினங்களின் மேல் இம்மூலக்கூறுகளின் பண்பு ஆராய்வதை பயோஅனலிசிஸ்(Bioanalysis - in vivo studies) என்பர். இவை முறையே PK PD( Pharmaco Kinetics , Pharmaco Dynamics) என்னும் ஆய்வுகளின் விளைவுகளாக நிறுவப்படும். மேற்கொண்டு இம்மூலக்கூறுகள் சந்தையில் மருந்தாகும் தன்மை உடையதுதானா என்பதை ஆய்வர். இதன் பதில் 'ஆம்' எனில், இம்மூலக்குற்றினை மருந்தாக்குவதற்காக மருந்துகளை தர நிர்ணயிக்கும் அமைப்புகளுக்கு முறையான விண்ணப்பம் செய்வர். இந்த நிலையை New Drug Application-NDA என்பர்.
இந்த உயிரினப் பரிசோதனைகளை இரு விதமாகப் பிரிக்கலாம்.
1. விலங்கினங்களில் செய்யப்படும் சோதனைகள்.
இங்குதான் முயல், எலி, குரங்கு,குதிரை ( யானை கூட உண்டு )முதலியவற்றைப் பயன்படுத்டுவர். எல்லா விலங்குகளையும் பயன்படுத்டமுடியாது. எந்த சோதனைக்கு எந்த விலங்கு, அதன் எந்த பாகம் உபயோகிக்க வேண்டும் என நிர்ணயம் இருக்கிறது. இது உலகளவில் நிர்ணயிக்கப்பட்டது என்பதால், மிகுந்த கெடுபிடியான சோதனைகள் இவை.
ஒவ்வொரு சோதனையும் செயுமுன் திட்டமிடப்பட வேண்டும். அதனை யார் செய்வது, யார் அனுமதிப்பது என்பதிலிருந்து, எந்த விலங்கு, எந்த உயிர்ப்பொருள் ( சாம்பிள் என்பது இரத்தம், சீரம், மலம் , சிறுநீர் என உயிரினப் பொருட்கள்லிருந்து, ஈரல், நிரையீரல், குடல் என உடல்பொருள் துண்டுகள் வரை இருக்கலாம்), எந்த இயந்திரம், எந்த முறை கொண்டு ஆய்வு செய்வது , ஆய்வின் முடிவுகளை எங்கு சேமிப்பது , ஆய்வு முடிந்தபின் , மீதமிருக்கும் சாம்பிள் எங்கு சேமிப்பது என்பது வரை மிகக்கடுமையான ஆவணக் குறிப்புகளுடன் சோதனைகள் நடத்தப்படும். Standard Operating Procedures (SOP)என்பன முதலில் வரையறுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, பின் சோதனைகளில் நிகழ்த்தப்படும். ஒவ்வொரு நிலையிலும் ஆவணங்கள் பாதுகாக்கப்படவேண்டும். சோதனைகள் தோல்வியடைந்தாலும் அதன் முடிவுகளும், ஏன் தோல்வியுற்றன என்பதும் ஆவணப்படுத்தவேண்டும். தணிக்கைக் குழுக்கள் இவற்றை குடைந்து குடைந்து பார்ப்பார்கள்.
2.மருத்துவ சோதனைகள்(Clinical Trials) மனிதரில் இதன்பின் நடத்தப்படும். மருத்துவச் சோதனையில் நான்கு நிலைகள்(Phases) உள்ளன.
முதன் நிலையில் மருந்தாக வேண்டிய பொருள் ஆரோக்கியமாக இருக்கும் மனிதரில் செலுத்தப்படும். இவ்வாறு சோதனகளுக்கு தானாக வரும் மனிதர்களை சப்ஜெக்டுகள் (subjects)என்பர்.
மருந்து கொடுக்குமுன் உயிரினப் பொருட்களின் சாம்பிள்(Bio samples) எடுக்கப்படும். பின் மருந்து செலுத்தப்பட்ட சில குறிப்பிட்ட நேர இடைவெளியில் சாம்பிள்கள் எடுக்கப்படும். இது ஆய்வின் நோக்கம் கொண்டு நிர்ணயிக்கப்படும். உதராணமாக 0 நிமிடம்,30 நிமிடம், 1 மணிநேரம், 2 மணிநேரம் என இந்நேர இடைவெளிகள் அமைந்திருக்கும். இவ்வாறு எடுக்கப்பட்ட உயிரியல்பொருட்கள் மிகக் குறைந்த வெப்பநிலையுள்ள பெட்டிகளில் பாதுகாக்கப்ட்டு (deep freezers)சோதனைச் சாலைக்கு அனுப்பப்படும். இதன் வெப்பநிலை -80 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும்.
Wednesday, March 29, 2006
நெஞ்சு பொறுக்குதில்லையே....
பாரதி பற்றிய இந்த கட்டுரை திண்ணையில் கிடைத்தது.
அறிவியல் கட்டுரை/ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்கள் முதலிலேயே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, பின் அவர்கள் முடிவுக்கு சாதகமாக வரலாற்று/அறிவியல் நிரூபணங்களைத் திரித்து பயன்படுத்துவதென்பது வழக்கமாகிவிட்டது. பாரதியையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை போலும்.
உங்கள் கருத்துகளை திண்ணையிலும் பிற ஊடகங்களிலும் தெரிவியுங்கள். பாரதியைக் குறித்து எவ்வளவோ நல்லது சொல்லுவதற்கு இருக்க, "விருப்பு வெறுப்பின்றி" நடுநிலையாக எழுதுவது போல அமைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற கட்டுரைகள் வருவது வருத்தற்குரியது. தமிழகம் தந்த ஒரு மானுடம்பாடியின் வாழ்க்கை வலியறியாது அலட்சியப்படுத்துவது இதுவே இறுதியாக இருக்கட்டும்.
அறிவியல் கட்டுரை/ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்கள் முதலிலேயே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, பின் அவர்கள் முடிவுக்கு சாதகமாக வரலாற்று/அறிவியல் நிரூபணங்களைத் திரித்து பயன்படுத்துவதென்பது வழக்கமாகிவிட்டது. பாரதியையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை போலும்.
உங்கள் கருத்துகளை திண்ணையிலும் பிற ஊடகங்களிலும் தெரிவியுங்கள். பாரதியைக் குறித்து எவ்வளவோ நல்லது சொல்லுவதற்கு இருக்க, "விருப்பு வெறுப்பின்றி" நடுநிலையாக எழுதுவது போல அமைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற கட்டுரைகள் வருவது வருத்தற்குரியது. தமிழகம் தந்த ஒரு மானுடம்பாடியின் வாழ்க்கை வலியறியாது அலட்சியப்படுத்துவது இதுவே இறுதியாக இருக்கட்டும்.
Sunday, March 19, 2006
நேதாஜியின் மரணம் - இன்னும் மர்மம்?
நேதாஜியின் மரணம் மர்மமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதைய முகர்ஜி கமிஷன் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்னும் ஆர்வத்தைக் கிளப்பியிருக்கிறது.
சில ஆராய்வுகள் அவர் டைப்பியில் ஆகஸ்ட் 18 1945 அன்று விமானவிபத்தில் இறந்ததாகக் கூறுகின்றன. இதனை காங்கிரஸ் அரசுகள் தீவிரமாகப் பரப்பிவந்தன. 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிஷன் தன் முதலறிக்கையைச் சமர்பித்தது. அது நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாகவே அறிவித்தது. பின் வந்த கமிஷனும் அதனையே சொன்னது.
இரண்டிலும் இருந்த ஓட்டைகளை சிலர் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தனர்.
1. ஷா நவாஸ் கமிஷன் , தைவான் போகாமலேயே ( மிக முக்கிய தடையங்கள் கிடைத்திருக்கக் கூடிய இடம்), தன் அறிக்கையை சமர்ப்பித்தது.
2. ரஷ்ய ஆவணங்கள் கிடைக்காத நிலையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் இன்னும் தடையங்கள் கிடைத்திருக்கக் கூடும். நேதாஜி தைவானிலிருந்து ரஷ்யாவிற்குச் சென்றார் என ஒரு கருத்து உண்டு. அங்கு அவர் போர்க்கைதியாக இருந்ததாகவும் அதன் ஆவணங்கள் உண்டு எனவும் நம்பப்பட்டது. பின்னர் அவர் ரஷ்யாவில் கொலை செய்யப்பட்டதாக ஒரு வதந்தி. மற்றொன்று அவர் ஃபைசியாபாத் நகரில் ஒரு துறவியாக 1985 வரை வாழ்ந்ததாகவும், அவரது படையின் முக்கிய அதிகாரிகள் வருடம்தோறும் அவரது பிறந்த நாளன்று அவரை சந்தித்ததாகவும் வதந்தியுண்டு.
இதற்கெல்லாம் சான்றுகள் இல்லை என இதுவரை அரசாங்கம் சொல்லிவந்தது. முகர்ஜி கமிஷனின் நாட்களை நீட்டிக்கவேண்டும் என்னும் கோரிக்கையை ஹிண்டுஸ்தான் டைம்ஸில் பணிபுரிந்த தர் முன்வைத்ததை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர் இது அரசால் நீட்டிக்கப்பட்டு, அதன் அறிக்கை நடப்பாண்டில் பாராளுமன்றத்தில் தாக்கம் செய்யப்படும் எனத் தோன்றுகிறது. இதில் காங்கிரஸ் தனது அரசியல் ஆதாயம் கருதி "அறிக்கையை அடக்கிவாசிக்கும்" என்ற அச்சம் பலருக்கு உண்டு.
மேலும் அறிய இச்சுட்டிகளைக் காணுங்கள்.
http://www.missionnetaji.org
http://in.rediff.com/news/2006/mar/17spec.htm
சில ஆராய்வுகள் அவர் டைப்பியில் ஆகஸ்ட் 18 1945 அன்று விமானவிபத்தில் இறந்ததாகக் கூறுகின்றன. இதனை காங்கிரஸ் அரசுகள் தீவிரமாகப் பரப்பிவந்தன. 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிஷன் தன் முதலறிக்கையைச் சமர்பித்தது. அது நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாகவே அறிவித்தது. பின் வந்த கமிஷனும் அதனையே சொன்னது.
இரண்டிலும் இருந்த ஓட்டைகளை சிலர் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தனர்.
1. ஷா நவாஸ் கமிஷன் , தைவான் போகாமலேயே ( மிக முக்கிய தடையங்கள் கிடைத்திருக்கக் கூடிய இடம்), தன் அறிக்கையை சமர்ப்பித்தது.
2. ரஷ்ய ஆவணங்கள் கிடைக்காத நிலையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் இன்னும் தடையங்கள் கிடைத்திருக்கக் கூடும். நேதாஜி தைவானிலிருந்து ரஷ்யாவிற்குச் சென்றார் என ஒரு கருத்து உண்டு. அங்கு அவர் போர்க்கைதியாக இருந்ததாகவும் அதன் ஆவணங்கள் உண்டு எனவும் நம்பப்பட்டது. பின்னர் அவர் ரஷ்யாவில் கொலை செய்யப்பட்டதாக ஒரு வதந்தி. மற்றொன்று அவர் ஃபைசியாபாத் நகரில் ஒரு துறவியாக 1985 வரை வாழ்ந்ததாகவும், அவரது படையின் முக்கிய அதிகாரிகள் வருடம்தோறும் அவரது பிறந்த நாளன்று அவரை சந்தித்ததாகவும் வதந்தியுண்டு.
இதற்கெல்லாம் சான்றுகள் இல்லை என இதுவரை அரசாங்கம் சொல்லிவந்தது. முகர்ஜி கமிஷனின் நாட்களை நீட்டிக்கவேண்டும் என்னும் கோரிக்கையை ஹிண்டுஸ்தான் டைம்ஸில் பணிபுரிந்த தர் முன்வைத்ததை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர் இது அரசால் நீட்டிக்கப்பட்டு, அதன் அறிக்கை நடப்பாண்டில் பாராளுமன்றத்தில் தாக்கம் செய்யப்படும் எனத் தோன்றுகிறது. இதில் காங்கிரஸ் தனது அரசியல் ஆதாயம் கருதி "அறிக்கையை அடக்கிவாசிக்கும்" என்ற அச்சம் பலருக்கு உண்டு.
மேலும் அறிய இச்சுட்டிகளைக் காணுங்கள்.
http://www.missionnetaji.org
http://in.rediff.com/news/2006/mar/17spec.htm
Tuesday, March 14, 2006
பண்டிகைகளும் பின்விளைவுகளும்.
புகை மண்டி மூச்சுத்திணறிக்கிடக்கிறது மும்பை.
இன்று ஹோலி. நிறங்களின் விழா. இப்போதெல்லாம் ஏண்டா இதெல்லாம் வருது ? எனத் தோன்றிவிடுகிறது. நேற்று இரவே பண்டிகை தொடங்கிவிட்டது. நமது போகிப்பண்டிகை போல , வீட்டில் இருக்கும் வேண்டாத பொருட்களை குவியலாக இட்டு எரித்துக் குலவையிடுவார்கள். இப்போதெல்லாம் என்ன எரிக்கப்படுகிறது தெரியுமோ?
பிளாஸ்டிக் பைகள், உடைந்த வாளிகள், டயர், வீடியோ கேசட்டுகள், பிய்ந்த செருப்புகள்... பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
அனைத்து நச்சுப் பொருட்களும் வாயுமண்டலத்தில்.. கரிகரியாகப் புகை. எரிச்சலூட்டி, மூச்சுத் திணறி ஏற்கெனவே ஆஸ்துமாவால் அவதிப்படும் மும்பை இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது. மருத்துவர்களும், தன்னார்வலக்குழுக்களும் எத்தனைதான் கத்தினாலும் இக்கூச்சலின் முன் எடுபடாமல் அழுந்திப்போயினர்.
முன்பெல்லாம் இப்பண்டிகைகளுக்கான நிறக்கலவையை வீட்டிலேயே செய்வர். குலால் (Gulal) என்பது மாவுக்கலவையில் செய்யப்பட்டது. இயற்கைச் சாயங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, கடுமையாக அரிக்கும் ரசாயனக்கலவைகள். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இப்போது சந்தைகளில் விற்கப்படும் நிறக்கலவையில் இருக்கும் நச்சுப்பொருட்களைக் குறித்து எழுதியிருந்தது. (உருப்படியாக தற்காலத்தில் அதில் வந்த ஒரே செய்திக்குறிப்பு இதுதான்).
காலத்தின் தேவைக்கேற்ப குப்பைகளும் மாறிவிட்டன. அவற்றை பழையபடியே எரிப்பது என்னும் சம்ப்ரதாயம் என்பதை முட்டாள்தனமாகப் புரிந்துகொண்டு பின்பற்றி வரும் கேணத்தனம். வேறுவகையில் இவற்றை அப்புறப்படுத்திக் கொண்டாடுங்களேன். சொல்லப்போனால் வேறுவகையாகப் புரிந்துகொண்டுவிடும் அபாயம்..
கிறிஸ்துமஸ் மரம் வேண்டி பல மரக்கிளைகள் முறிக்கப்படுவதைப்போல , இந்த ஹோலியின் முந்திய நாள் எரிப்பதற்கும் சிலர் சாலையோரம் வளர்ந்திருந்த வேப்ப மரக் கிளைகளை ஒடித்துச் செல்வது அதிர்ச்சிக்குரியது. ஏற்கெனவே பச்சையென்பது மும்பையில் குறைவு. இது இன்னும் குறைக்கிறது.
இதுபோல பக்ரீத் பண்டிகையின் போது, சில இடங்களில் கழுத்தறுபட்ட ஆடுகள் அப்படியே சாலையோரம் விடப்பட்டிருந்தன. இரத்தம் வழிந்தபடி கிடக்கும் அவற்றைப் பின் உண்பவர்களிடம் சுகாதாரக்கேடு குறித்து யார் சொல்வது?
எதைச் சொல்லப்போனாலும் நமது ஜாதகம் பார்க்கப்படும். வேற்று மதக்காரன் யார்டா எங்களுக்கு புத்தி சொல்ல வர்றான்? என்னும் கேள்விகள் எழும். எழுந்திருக்கின்றன.
மதங்கள் உருவாக்கிய பண்டிகைகளின் அர்த்தம் விபரீதமாகப் போவதைத் தடுக்க, தனிமனிதன் மட்டுமல்ல மதங்களின் தலைமைப் பீடங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.
செய்வார்களா?
இன்று ஹோலி. நிறங்களின் விழா. இப்போதெல்லாம் ஏண்டா இதெல்லாம் வருது ? எனத் தோன்றிவிடுகிறது. நேற்று இரவே பண்டிகை தொடங்கிவிட்டது. நமது போகிப்பண்டிகை போல , வீட்டில் இருக்கும் வேண்டாத பொருட்களை குவியலாக இட்டு எரித்துக் குலவையிடுவார்கள். இப்போதெல்லாம் என்ன எரிக்கப்படுகிறது தெரியுமோ?
பிளாஸ்டிக் பைகள், உடைந்த வாளிகள், டயர், வீடியோ கேசட்டுகள், பிய்ந்த செருப்புகள்... பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
அனைத்து நச்சுப் பொருட்களும் வாயுமண்டலத்தில்.. கரிகரியாகப் புகை. எரிச்சலூட்டி, மூச்சுத் திணறி ஏற்கெனவே ஆஸ்துமாவால் அவதிப்படும் மும்பை இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது. மருத்துவர்களும், தன்னார்வலக்குழுக்களும் எத்தனைதான் கத்தினாலும் இக்கூச்சலின் முன் எடுபடாமல் அழுந்திப்போயினர்.
முன்பெல்லாம் இப்பண்டிகைகளுக்கான நிறக்கலவையை வீட்டிலேயே செய்வர். குலால் (Gulal) என்பது மாவுக்கலவையில் செய்யப்பட்டது. இயற்கைச் சாயங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, கடுமையாக அரிக்கும் ரசாயனக்கலவைகள். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இப்போது சந்தைகளில் விற்கப்படும் நிறக்கலவையில் இருக்கும் நச்சுப்பொருட்களைக் குறித்து எழுதியிருந்தது. (உருப்படியாக தற்காலத்தில் அதில் வந்த ஒரே செய்திக்குறிப்பு இதுதான்).
காலத்தின் தேவைக்கேற்ப குப்பைகளும் மாறிவிட்டன. அவற்றை பழையபடியே எரிப்பது என்னும் சம்ப்ரதாயம் என்பதை முட்டாள்தனமாகப் புரிந்துகொண்டு பின்பற்றி வரும் கேணத்தனம். வேறுவகையில் இவற்றை அப்புறப்படுத்திக் கொண்டாடுங்களேன். சொல்லப்போனால் வேறுவகையாகப் புரிந்துகொண்டுவிடும் அபாயம்..
கிறிஸ்துமஸ் மரம் வேண்டி பல மரக்கிளைகள் முறிக்கப்படுவதைப்போல , இந்த ஹோலியின் முந்திய நாள் எரிப்பதற்கும் சிலர் சாலையோரம் வளர்ந்திருந்த வேப்ப மரக் கிளைகளை ஒடித்துச் செல்வது அதிர்ச்சிக்குரியது. ஏற்கெனவே பச்சையென்பது மும்பையில் குறைவு. இது இன்னும் குறைக்கிறது.
இதுபோல பக்ரீத் பண்டிகையின் போது, சில இடங்களில் கழுத்தறுபட்ட ஆடுகள் அப்படியே சாலையோரம் விடப்பட்டிருந்தன. இரத்தம் வழிந்தபடி கிடக்கும் அவற்றைப் பின் உண்பவர்களிடம் சுகாதாரக்கேடு குறித்து யார் சொல்வது?
எதைச் சொல்லப்போனாலும் நமது ஜாதகம் பார்க்கப்படும். வேற்று மதக்காரன் யார்டா எங்களுக்கு புத்தி சொல்ல வர்றான்? என்னும் கேள்விகள் எழும். எழுந்திருக்கின்றன.
மதங்கள் உருவாக்கிய பண்டிகைகளின் அர்த்தம் விபரீதமாகப் போவதைத் தடுக்க, தனிமனிதன் மட்டுமல்ல மதங்களின் தலைமைப் பீடங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.
செய்வார்களா?
Monday, March 13, 2006
குழந்தைகளும் கல்விமுறையும்
பேராசிரியர் இராமானுஜம் சமீபத்தில் தஞ்சைக்கு அருகே ஒரு கிராமப் பள்ளியில் ஆசிரிய/ஆசிரியைகளுடன் பேசியதின் சாராம்சம் இது.
" குழந்தைகளுக்கான நாடக அனுபவத்தில், குழந்தைகளுடனான உரையாடல்கள் எனக்குப் பல பரிமாணங்களைத் தந்திருக்கின்றன. அவர்கள் உலகம் தனியானது. அலாதியான, வெளிப்படையான பேச்சுகள் பல சமயங்களில் தீவிரமாக என்னை சிந்திக்க வைத்திருக்கின்றன. குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் கட்டாயமாக அறிவுறுத்தப்படுவதை வெறுக்கின்றனர். Children love to learn; they hate to be educated.
இதன் மூலம் என்ன? பள்ளிகள்,குழந்தைகளை தங்களிடம் ஈர்க்கும் முயற்சியில் தோற்றுவிட்டன. அவர்களது சுதந்திரம், கல்வியென நாம் நினைத்து வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் dataவிற்கு பண்டமாற்று செய்யப்படுவதை எதிர்த்து தங்களுக்கே உரித்தான பாணியில் சிறு கோபங்கள், விளையாட்டுகள் மூலம் வெளிக்காட்டுகின்றனர். இதனைப் புரிந்துகொள்ளாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் ' குழந்தைகள் எப்போதும் ஒழுங்கு முயற்சிகளுக்கு எதிராகவே சிந்திக்கும் 'எனவும் 'அவர்களுக்கு ஒழுங்கு என்பது கட்டாயமாகப் புகட்டப்படவேண்டும்- கசப்பாக இருக்குமெனினும்' எனவும் தங்களது கட்டாயக்கல்வி முயற்சிகளுக்கு சமாதானம் சொல்கின்றனர். உண்மையில் , குழந்தைகள் லாஜிக்காக நிறையவே யோசிக்கின்றன. கல்வி குறித்தான அவர்கள் சிந்தனை வியப்பானது.
உதாரணம் ஒன்றுசொல்கிறேன். எனது பேரன், ஒரு நாள் "தாத்தா, நான் அம்மா, அப்பா வாங்கித்தர்ற புத்தகமெல்லாம் ஒழுங்கா படிக்கத்தானே செய்யறேன்? " என்றான். ஆமாமென்றேன். எதாவது அறிவியல்/பொது அறிவு புத்தகமோ ,விளையாட்டுப் பொருட்களோ வாங்கிக்கொடுத்தால் குழந்தைகள் ஆர்வமுடன் கற்றுக்கொள்வதென்பது இயல்பு. "நாந்தான் படிக்கிறேனே? அப்புறம் எதுக்கு ஸ்கூலுக்குப்போகணும்?" என்றான். என்னால்தான் வீட்டிலேயே அல்லது பிற ஊடகங்கள் மூலமாகவே அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமே? அப்படியானால் பள்ளிக்கூடம் என்றொரு கட்டிடம் எதற்கு? என்பது இதன் சாராம்சம்.
"பள்ளிக்கூடத்தில் நீ மத்த பையன்களோட விளையாடலாம். டீச்சரோட பேசி பலதும் புதுசாப் புரிஞ்சுக்கலாம். புஸ்தகத்துல இதெல்லாம் கிடைக்காது" என்றேன். ஒரு சமூக இணைவுத் தொடர்பு (social interaction)என்பது முக்கியம் என்பது மறைமுகமாக அவனுக்குப் புரியப்படுத்தும் முயற்சி இது. அதற்கு வந்த பதில்தான் என்னை சிந்திக்க வைத்தது.
" பள்ளிக்கூடத்துல யார் பேச விடறாங்க? எப்பப் பாத்தாலும் பேசாதே பேசாதே-ன்னு தானே டீச்சர் சொல்றாங்க?" சிரிக்காதீர்கள். மிகவும் சிந்திக்க வேண்டிய விடயம் இது.
புத்தகங்களும் ஊடகங்களும் கொடுக்கமுடியாத சமூகத் தொடர்பை உருவாக்க வேண்டிய பள்ளிகளே அதனைச் சிதைத்தால்? ஆசிரியர்கள் பாடம் முடித்தபின்போ அல்லது பாடம் நடத்தும்போதோ புத்தகங்களின் வரிகளிலிருந்து சற்றே வெளிவந்து புதிய பரிமாணங்களை இக்குழந்தைகளுக்குக் கொடுக்கும்நிலையில் பள்ளிகளோ, பாடத்திட்டங்களோ இருக்கின்றனவா? புத்தகத்திலிருப்பதையே ஒரு முதிர்ந்த குரலில் சொல்வதுதான் ஆசிரியப் பண்பா?
பின்னும் சொன்னான் " எல்லாத்துக்கும் ஒரு வகுப்பு இருக்கு. டிராயிங், விளையாட்டுக்குக் கூட வகுப்பு இருக்கு. பேசறதுக்கு ஒரு வகுப்பு இருக்கா எங்களுக்கு? பேசவிட்டா என்ன?"
ஆசிரியர்களே, இது யோசிக்கவேண்டிய ஒன்று. விளையாட்டு வகுப்பிலும் ஒரு மிலிடரி ஒழுங்குமுறை. ஒன்றன்பின் ஒன்றாக குழந்தைகள் வந்து ஓடி, குதிக்கவேண்டும். அதனை அளவெடுக்க ஒரு ஆசிரியர். இதற்கும் கைதிகளின் உடல்நல அளவெடுப்பதற்கும் என்ன வித்தியாசம்?
பேச்சு என்பது குழந்தைகளின் அபூர்வச் சொத்து. தான் நினைப்பதையும் , சிந்திப்பதையும் குழந்தைகள் தங்களால் இயன்றமுறையில் வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். சிலகுழந்தைகள் திடீரென கத்தி கூப்பாடு போடும். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வரும் வெளிப்பாடு அது. பேசாதே பேசாதே என அடக்கி அடக்கி வைத்து வெளிப்படுத்தும் திறனொற்றை மழுங்க அடிக்கிறோம். விளைவு? சரியாக சிந்திக்கத் தெரியாத, தனது சிந்தனைகளை வெளிப்படுத்தத் தெரியாத , ஒழுங்காக சொன்னபடி நடக்கும் சிறந்த குமாஸ்தாக்களை வளர்க்கும் ஆங்கிலேய பள்ளிமுறையில் இன்னும் சுதந்திர அடிமைகளை வளர்த்துவருகிறோம்.
குழந்தைகளை உங்கள் வகுப்பில் ஒரு சிறு இடைவேளை நேரத்தில் பேசும் வகுப்பு என அறிவித்து விட்டு அவர்கள் போக்கில் பேச விட்டுவிட்டு கவனியுங்கள். நாளடைவில் புதுப்புது பரிமாணங்களுடன் ஒவ்வொரு குழந்தையும் மிளிர்வதைக் காண்பீர்கள்.
மந்தமான குழந்தை என ஒன்று உலகில் எங்கும் கிடையாது. நாம்தான் மந்தமாக அவற்றைக் காண்கிறோம்."
I was born intelligent. Made fool by education என எதோவொரு டீ ஷர்ட்டில் பார்த்த ஞாபகம்.
பேசிய பையன் -என் மகன்.
" குழந்தைகளுக்கான நாடக அனுபவத்தில், குழந்தைகளுடனான உரையாடல்கள் எனக்குப் பல பரிமாணங்களைத் தந்திருக்கின்றன. அவர்கள் உலகம் தனியானது. அலாதியான, வெளிப்படையான பேச்சுகள் பல சமயங்களில் தீவிரமாக என்னை சிந்திக்க வைத்திருக்கின்றன. குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் கட்டாயமாக அறிவுறுத்தப்படுவதை வெறுக்கின்றனர். Children love to learn; they hate to be educated.
இதன் மூலம் என்ன? பள்ளிகள்,குழந்தைகளை தங்களிடம் ஈர்க்கும் முயற்சியில் தோற்றுவிட்டன. அவர்களது சுதந்திரம், கல்வியென நாம் நினைத்து வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் dataவிற்கு பண்டமாற்று செய்யப்படுவதை எதிர்த்து தங்களுக்கே உரித்தான பாணியில் சிறு கோபங்கள், விளையாட்டுகள் மூலம் வெளிக்காட்டுகின்றனர். இதனைப் புரிந்துகொள்ளாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் ' குழந்தைகள் எப்போதும் ஒழுங்கு முயற்சிகளுக்கு எதிராகவே சிந்திக்கும் 'எனவும் 'அவர்களுக்கு ஒழுங்கு என்பது கட்டாயமாகப் புகட்டப்படவேண்டும்- கசப்பாக இருக்குமெனினும்' எனவும் தங்களது கட்டாயக்கல்வி முயற்சிகளுக்கு சமாதானம் சொல்கின்றனர். உண்மையில் , குழந்தைகள் லாஜிக்காக நிறையவே யோசிக்கின்றன. கல்வி குறித்தான அவர்கள் சிந்தனை வியப்பானது.
உதாரணம் ஒன்றுசொல்கிறேன். எனது பேரன், ஒரு நாள் "தாத்தா, நான் அம்மா, அப்பா வாங்கித்தர்ற புத்தகமெல்லாம் ஒழுங்கா படிக்கத்தானே செய்யறேன்? " என்றான். ஆமாமென்றேன். எதாவது அறிவியல்/பொது அறிவு புத்தகமோ ,விளையாட்டுப் பொருட்களோ வாங்கிக்கொடுத்தால் குழந்தைகள் ஆர்வமுடன் கற்றுக்கொள்வதென்பது இயல்பு. "நாந்தான் படிக்கிறேனே? அப்புறம் எதுக்கு ஸ்கூலுக்குப்போகணும்?" என்றான். என்னால்தான் வீட்டிலேயே அல்லது பிற ஊடகங்கள் மூலமாகவே அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமே? அப்படியானால் பள்ளிக்கூடம் என்றொரு கட்டிடம் எதற்கு? என்பது இதன் சாராம்சம்.
"பள்ளிக்கூடத்தில் நீ மத்த பையன்களோட விளையாடலாம். டீச்சரோட பேசி பலதும் புதுசாப் புரிஞ்சுக்கலாம். புஸ்தகத்துல இதெல்லாம் கிடைக்காது" என்றேன். ஒரு சமூக இணைவுத் தொடர்பு (social interaction)என்பது முக்கியம் என்பது மறைமுகமாக அவனுக்குப் புரியப்படுத்தும் முயற்சி இது. அதற்கு வந்த பதில்தான் என்னை சிந்திக்க வைத்தது.
" பள்ளிக்கூடத்துல யார் பேச விடறாங்க? எப்பப் பாத்தாலும் பேசாதே பேசாதே-ன்னு தானே டீச்சர் சொல்றாங்க?" சிரிக்காதீர்கள். மிகவும் சிந்திக்க வேண்டிய விடயம் இது.
புத்தகங்களும் ஊடகங்களும் கொடுக்கமுடியாத சமூகத் தொடர்பை உருவாக்க வேண்டிய பள்ளிகளே அதனைச் சிதைத்தால்? ஆசிரியர்கள் பாடம் முடித்தபின்போ அல்லது பாடம் நடத்தும்போதோ புத்தகங்களின் வரிகளிலிருந்து சற்றே வெளிவந்து புதிய பரிமாணங்களை இக்குழந்தைகளுக்குக் கொடுக்கும்நிலையில் பள்ளிகளோ, பாடத்திட்டங்களோ இருக்கின்றனவா? புத்தகத்திலிருப்பதையே ஒரு முதிர்ந்த குரலில் சொல்வதுதான் ஆசிரியப் பண்பா?
பின்னும் சொன்னான் " எல்லாத்துக்கும் ஒரு வகுப்பு இருக்கு. டிராயிங், விளையாட்டுக்குக் கூட வகுப்பு இருக்கு. பேசறதுக்கு ஒரு வகுப்பு இருக்கா எங்களுக்கு? பேசவிட்டா என்ன?"
ஆசிரியர்களே, இது யோசிக்கவேண்டிய ஒன்று. விளையாட்டு வகுப்பிலும் ஒரு மிலிடரி ஒழுங்குமுறை. ஒன்றன்பின் ஒன்றாக குழந்தைகள் வந்து ஓடி, குதிக்கவேண்டும். அதனை அளவெடுக்க ஒரு ஆசிரியர். இதற்கும் கைதிகளின் உடல்நல அளவெடுப்பதற்கும் என்ன வித்தியாசம்?
பேச்சு என்பது குழந்தைகளின் அபூர்வச் சொத்து. தான் நினைப்பதையும் , சிந்திப்பதையும் குழந்தைகள் தங்களால் இயன்றமுறையில் வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். சிலகுழந்தைகள் திடீரென கத்தி கூப்பாடு போடும். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வரும் வெளிப்பாடு அது. பேசாதே பேசாதே என அடக்கி அடக்கி வைத்து வெளிப்படுத்தும் திறனொற்றை மழுங்க அடிக்கிறோம். விளைவு? சரியாக சிந்திக்கத் தெரியாத, தனது சிந்தனைகளை வெளிப்படுத்தத் தெரியாத , ஒழுங்காக சொன்னபடி நடக்கும் சிறந்த குமாஸ்தாக்களை வளர்க்கும் ஆங்கிலேய பள்ளிமுறையில் இன்னும் சுதந்திர அடிமைகளை வளர்த்துவருகிறோம்.
குழந்தைகளை உங்கள் வகுப்பில் ஒரு சிறு இடைவேளை நேரத்தில் பேசும் வகுப்பு என அறிவித்து விட்டு அவர்கள் போக்கில் பேச விட்டுவிட்டு கவனியுங்கள். நாளடைவில் புதுப்புது பரிமாணங்களுடன் ஒவ்வொரு குழந்தையும் மிளிர்வதைக் காண்பீர்கள்.
மந்தமான குழந்தை என ஒன்று உலகில் எங்கும் கிடையாது. நாம்தான் மந்தமாக அவற்றைக் காண்கிறோம்."
I was born intelligent. Made fool by education என எதோவொரு டீ ஷர்ட்டில் பார்த்த ஞாபகம்.
பேசிய பையன் -என் மகன்.
Saturday, March 11, 2006
மூலக்கூறிலிருந்து மருந்து வரை IV
வாயின்வழி உட்கொள்ளும் மருந்துமூலக்கூறுகள், பித்தநீருடன் சேர்ந்து புரதக் கலவை ( protein complex) உருவாக்கும். இந்த புரதக்கலவை எந்த அளவில் குடல் திசுக்களால் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் கலந்து, நோய் கொண்ட திசுக்களிடம் செல்கிறது என்பதையும், எத்தகைய வேதிவினை நிகழ்வுகள் நடக்கின்றன, அதன்மூலம் எத்தகைய, எத்தனைய புதிய மூலக்கூறுகள் உண்டாகின்றன என்பதையும் காண ADM உதவும். பின்னர் எவ்வாறு இம்மூலக்கூறுகள் வெளியேறுகின்றன எனபதை excretion analysis கண்டறியும். இத்தோடு முடிவதில்லை.
இந்த புரதங்கள் பிற மூலக்கூறுகளுடன் வேகமாக வினைபுரிந்து, தன்னிலை இழந்து செயலற்றுப்போவதை தற்கொலை என்பர் . இதனை இம்மூலக்கூறு தடுக்கும் சக்தி கொண்டுள்ளதா? ஆம் எனில் எத்தகைய சக்தி என்பதைக் காண்பது protein suicidal inhibition studies என்னும் ஆய்வுகள். இவை ADMEன் ஒரு பகுதி எனலாம்.
சரி, இவ்வாறு மருந்தாக வந்த மூலக்கூறுகள் பிற வேதிவினைகளால் புதிய வினைப்பொருட்களை உண்டாக்கி அதன்மூலம் உடலின் நல்ல பகுதிகள் தாக்கப்படுமானால்? இந்த பக்க விளைவுகளையும், இம்மூலக்கூறுகளின் நச்சுத்தன்மையை ஆய்வதும் toxicology ஆய்வுகள்.
மருந்தாக ஒரு வேதிப்பொருள் உடலில் நுழைந்தால் , உடல் அதனை எவ்வாறு வரவேற்கிறது/ எதிர்க்கிறது என்பதை உடல் இம்மூலக்கூறுகளை என்ன செய்கிறது என்பதன் மூலம் அறியலாம். இதனை Pharamaco Kinetics(PK) ஆய்வுகள் உறுதிசெய்யும்.
மாறாக, உடலில் நுழைந்த வேதிப்பொருள் உடலுக்கு என்ன செய்கிறது என்பதைக் காண்பது PharmacoDynamics (PD)ஆய்வுகள் உறுதிசெய்யும். இந்த PK/PD ஆய்வுகள் drug discovery நிலை மட்டுமல்லாது, உயிராய்வுகள் நிலையிலும் (Bio analysis)மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த புரதங்கள் பிற மூலக்கூறுகளுடன் வேகமாக வினைபுரிந்து, தன்னிலை இழந்து செயலற்றுப்போவதை தற்கொலை என்பர் . இதனை இம்மூலக்கூறு தடுக்கும் சக்தி கொண்டுள்ளதா? ஆம் எனில் எத்தகைய சக்தி என்பதைக் காண்பது protein suicidal inhibition studies என்னும் ஆய்வுகள். இவை ADMEன் ஒரு பகுதி எனலாம்.
சரி, இவ்வாறு மருந்தாக வந்த மூலக்கூறுகள் பிற வேதிவினைகளால் புதிய வினைப்பொருட்களை உண்டாக்கி அதன்மூலம் உடலின் நல்ல பகுதிகள் தாக்கப்படுமானால்? இந்த பக்க விளைவுகளையும், இம்மூலக்கூறுகளின் நச்சுத்தன்மையை ஆய்வதும் toxicology ஆய்வுகள்.
மருந்தாக ஒரு வேதிப்பொருள் உடலில் நுழைந்தால் , உடல் அதனை எவ்வாறு வரவேற்கிறது/ எதிர்க்கிறது என்பதை உடல் இம்மூலக்கூறுகளை என்ன செய்கிறது என்பதன் மூலம் அறியலாம். இதனை Pharamaco Kinetics(PK) ஆய்வுகள் உறுதிசெய்யும்.
மாறாக, உடலில் நுழைந்த வேதிப்பொருள் உடலுக்கு என்ன செய்கிறது என்பதைக் காண்பது PharmacoDynamics (PD)ஆய்வுகள் உறுதிசெய்யும். இந்த PK/PD ஆய்வுகள் drug discovery நிலை மட்டுமல்லாது, உயிராய்வுகள் நிலையிலும் (Bio analysis)மேற்கொள்ளப்படுகின்றன.
Friday, March 10, 2006
லே மக்கா! Thanks to Google
கூகிள் எனக்குச் செய்த பெரிய உதவியென இதைத்தான் கருதுகிறேன். 19 வருடம் முன்பு பள்ளியிலும் கல்லூரியிலும் கூடப்படித்த ந்ண்பர்கள் பெயரை இணையத்தில் சும்மா பொழுது போகாமல் தேடிப்பார்த்துக்கொண்டிருப்பேன். எப்பவாவது அதிர்ஷடம் அடிக்கும்.
இப்படித்தான் போன கிறிஸ்துமஸ் அன்று, பழைய நாள் ஞாபகத்தில் நண்பன் felcitas பெயரை கூகிளில் தேடினேன்.
மக்கா கிடைச்சுட்டான்..! கனடாவில் குடும்பத்தோடு நம்ம மக்கா சந்தோஷமா இருக்கிற போட்டா பார்த்தப்போது கண்ணு கொஞ்சம் கசிஞ்சிட்டுல்லா. ஒருகாலத்துல நானும் ஒல்லிப்பாச்சானா அவனை மாதிரித்தான் இருந்தேன்.. ( இப்ப? ஹூம்...). இவன் மட்டும் அப்படியே இருக்கான்..
உடனே ஒரு மின்னஞ்சல் தட்டினேன். 19 வருசம் கழிச்சு ஒரு கேணையன் இப்படி எழுதுவான் என அவன் நினைச்சுப்பாத்திருக்கமாட்டான். திடீர்னு ஒரு நாள் ராத்திரி தொலைபேசி அழைப்பு. " லே மக்கா!".. அவன் தான்..
குரலும் அங்கனயே இருக்கு. உணர்ச்சி பொங்கப்பொங்க, வார்த்தைகள் தடுமாறி சிரிச்சு, அழுது என்னமோ போங்க..என்னத்தப் பேசினேன்ன்னு எனக்கு ஞாபகமில்ல. பேசினோம் என்பதுதான் முக்கியம்.
அதுவும் தூத்துக்குடித் தமிழ் (இது திருநெல்வேலித் தமிழ்ல இருந்து கொஞ்சம் மாறும்)-ல வேகமாப் பேசினோம்னா கூட இருக்கிறவ்ங்களுக்கு சத்தியமா ஒண்ணும் புரியாது.
" நீங்க தமிழ்லயா பேசினீங்க?" என்றாள் என் மனைவி. விடுங்க. தஞ்சாவூர், தூத்துக்குடியைப் புரிஞ்சுக்க நாளாகும்!
கொஞ்சம் முன்னாடியே இந்த கூகிள் நடந்திருந்தா, அவனைப் பாத்துட்டே வந்திருக்கலாம்.
இதே மாதிரி நம்ம சுப்பிரமணியன் நியூஜெர்ஸியிலே இருந்து பேசினப்போவும், தூத்துக்குடித்தமிழ் பிரவாகம். என் மகன் பேந்தப் பேந்த முழிச்சான்."இவன் இப்பவரை நல்லத்தானே புரியர மாதிரிப் பேசிகிட்டிருந்தான்?" என அவன் முழி சொல்லிச்சு. இந்ததமிழெல்லாம் சொல்லிக்கொடுத்தா வரப்போவுது?
எங்கனகூடி போனாலும், நம்ம மொழி மறக்காம அப்படியே இருக்கான்கள்லா? அதுக்குப் பாராட்டியே தீரணும்.
லே மக்கா! நல்லா இருங்கடே!
இப்படித்தான் போன கிறிஸ்துமஸ் அன்று, பழைய நாள் ஞாபகத்தில் நண்பன் felcitas பெயரை கூகிளில் தேடினேன்.
மக்கா கிடைச்சுட்டான்..! கனடாவில் குடும்பத்தோடு நம்ம மக்கா சந்தோஷமா இருக்கிற போட்டா பார்த்தப்போது கண்ணு கொஞ்சம் கசிஞ்சிட்டுல்லா. ஒருகாலத்துல நானும் ஒல்லிப்பாச்சானா அவனை மாதிரித்தான் இருந்தேன்.. ( இப்ப? ஹூம்...). இவன் மட்டும் அப்படியே இருக்கான்..
உடனே ஒரு மின்னஞ்சல் தட்டினேன். 19 வருசம் கழிச்சு ஒரு கேணையன் இப்படி எழுதுவான் என அவன் நினைச்சுப்பாத்திருக்கமாட்டான். திடீர்னு ஒரு நாள் ராத்திரி தொலைபேசி அழைப்பு. " லே மக்கா!".. அவன் தான்..
குரலும் அங்கனயே இருக்கு. உணர்ச்சி பொங்கப்பொங்க, வார்த்தைகள் தடுமாறி சிரிச்சு, அழுது என்னமோ போங்க..என்னத்தப் பேசினேன்ன்னு எனக்கு ஞாபகமில்ல. பேசினோம் என்பதுதான் முக்கியம்.
அதுவும் தூத்துக்குடித் தமிழ் (இது திருநெல்வேலித் தமிழ்ல இருந்து கொஞ்சம் மாறும்)-ல வேகமாப் பேசினோம்னா கூட இருக்கிறவ்ங்களுக்கு சத்தியமா ஒண்ணும் புரியாது.
" நீங்க தமிழ்லயா பேசினீங்க?" என்றாள் என் மனைவி. விடுங்க. தஞ்சாவூர், தூத்துக்குடியைப் புரிஞ்சுக்க நாளாகும்!
கொஞ்சம் முன்னாடியே இந்த கூகிள் நடந்திருந்தா, அவனைப் பாத்துட்டே வந்திருக்கலாம்.
இதே மாதிரி நம்ம சுப்பிரமணியன் நியூஜெர்ஸியிலே இருந்து பேசினப்போவும், தூத்துக்குடித்தமிழ் பிரவாகம். என் மகன் பேந்தப் பேந்த முழிச்சான்."இவன் இப்பவரை நல்லத்தானே புரியர மாதிரிப் பேசிகிட்டிருந்தான்?" என அவன் முழி சொல்லிச்சு. இந்ததமிழெல்லாம் சொல்லிக்கொடுத்தா வரப்போவுது?
எங்கனகூடி போனாலும், நம்ம மொழி மறக்காம அப்படியே இருக்கான்கள்லா? அதுக்குப் பாராட்டியே தீரணும்.
லே மக்கா! நல்லா இருங்கடே!
இவனுக எல்லாம் என்னத்தைப் படிச்சு....
இங்கு கல்லூரிகளில், "கட்டாயக் கல்விச் சுற்றுலா"வென ஒரு வருடாவருடம் ஒரு கூத்து நடக்கும். ஏட்டுச்சுரைக்காய் எப்படி கூட்டிற்கு உதவும் எனப்புரிந்துகொள்ளக் கிடைக்கும் இந்த வாய்ப்பினை மாணவ/மாணவியர் தங்களது கனவுகளை நனவாக்கும் பொன்னான தருணமாக ஆக்கிக்கொள்வார்கள். இந்த வருடம் நடந்ததாக நான் கேட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
நடந்தது இதுதான். சில வகுப்புமாணவ/மாணவியர் ஒரு தொழிற்பேட்டைக்கு ஆசிரியர்களுடன் இந்தச் சுற்றுலா சென்றிருக்கின்றனர். விடுதியில் , இரவில், ஆசிரியர்கள் கண்காணிப்பாக அறைகளில் சென்று பார்த்தபோது, ஒரு மாணவன் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு படு கவலைக்கிடமாக, நாடி அடங்கி, கண்கள் சொருகிய நிலையில் கிடந்திருக்கிறான். ஆசிரியர்கள் எதாவது சொல்வார்களோ எனப் பயந்து,கூட இருந்த பயல்கள் சத்தமே போடாமல் அவனைக் கிடத்தியிருக்கின்றனர். கண்டு பிடித்து அவனை சுய நினைவுக்குக் கொண்டுவருவதற்குள் படாத பாடு பட்டுப்போனார்களாம்.உயிர் போய்விடும் என அஞ்சும் அளவிற்கு அவனது நிலை இருந்திருக்கிறது. இரவு நேரம் மருத்துவர் எவரும் வர முடியாத அந்த தொலைதூர விடுதியில் அவனை சில ஆசிரியர்கள் கவனித்துக்கொண்டிருக்க, பிற மாணவர்கள் அறைகளில் சோதனை நடத்தியபோது, குடித்துவிட்டு அலங்கோலமாக இப்பயல்கள் கிடந்தகாட்சி... படுகேவலமாக இருந்திருக்கக்கூடும்.
இத்தோடு தொலைந்ததா? விடுதியில் தங்கியிருந்த சிலர் வந்து ,ஆசிரியர்களிடம் சில மாணவ மாணவியர் டிஸ்கொதேயில் "ஆடிக்கொண்டிருப்பது" குறித்துப் புகார் செய்ய, அங்கு விரைந்து சென்று பார்த்தால், அது வேறொரு நிலை. தரதரவென்று இழுத்துவந்து அவரவர் அறைகளில் சேர்த்திருக்கிறார்கள். இம்மாணவ மாணவியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் இளைய தலைமுறையினர்? நானும் 80களில் இந்த மாதிரி சுற்றுலா போயிருக்கிறேன். கொஞ்சம் சீண்டுதல் இருக்கும்... காதல்ஜோடிகள் இருக்கும்...மிஞ்சிப்போனால் சிகரெட்.. அதுவும் ஆசிரியர்களுக்குத் தெரியாமல்... தண்ணியெல்லாம் அடித்து நாறிக்கிடப்பதும், அலங்கோலமாக டிஸ்கொதேயில் ஆபாசமாக ஆடுவதும்...என்ன நாகரீகம்?
இவர்களை மட்டும் குற்றம் சொல்லுவதில் அர்த்தமில்லை. விடுதியில் மாணவர்களுக்கு மது வழங்கிய பணியாளர்கள், மது கிடைக்கும்படி செய்த விடுதி நிர்வாகம், பெற்றோரிடமிருந்து அபரிமிதமாகக் கிடைக்கும் பணம்..பார்க்கும் படங்கள், கேட்கும் இசை.. இவற்றையும்தான் சொல்லவேண்டும். 24 மணிநேரமும் காமம் பொங்கிவழியும் பாடல்களும், காட்சிகளும் திரையினூடே கசிந்து, கண்ணுள்ளூம் காதுள்ளும் புகுந்தால் புத்தி மழுங்கத்தான் செய்யும். நடை தடுமாறத்தான் செய்யும்.
ஒரு தனிக் கட்டுப்பாட்டு காவல்படை (moral police) வேண்டுமெனச் சொல்லவில்லை. அண்மையில் மீரட் நகரில் காவல்படை பூங்காக்களில் ஜோடிகளை அடித்து வெளியேற்றியதை பலரும் கண்டித்தனர். ஆனால் இது போன்றவற்றைக் குறித்து யாரும் பேசுவதில்லை. தனிமனித சுதந்திரம் எப்போது பரிந்து பேசப்படவேண்டும்... யாருக்காகப் பரிந்து பேசப்படவேண்டுமென விதியில்லாததால் இந்த அத்துமீறல்கள்.. இரு தரப்பிலும்.
சுயக்கட்டுப்பாடு குறித்து எத்தனைதூரம் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் அறிவுறுத்தப்படுகின்றது எனத் தெரியவில்லை. இந்த விஷங்கள் காற்றில் பரவிவருவதைத் தடுக்க எதாவது முயற்சி எடுக்கிறார்களா? பண்பலை வானொலிகளில் கல்லூரி மாணவர்களுக்கென நிகழ்ச்சி.... கல்லூரி மாணவர்களுக்கென இவர்கள் பேசும் மொழியும், தரமும், ஒலி பரப்பும் பாடல்களும்..கேட்டால் நொந்து போவீர்கள். தமிழ்நாட்டில் எப்படியெனத் தெரியவில்லை.
என்னமோ உருப்பட்டாச் சரி.
நடந்தது இதுதான். சில வகுப்புமாணவ/மாணவியர் ஒரு தொழிற்பேட்டைக்கு ஆசிரியர்களுடன் இந்தச் சுற்றுலா சென்றிருக்கின்றனர். விடுதியில் , இரவில், ஆசிரியர்கள் கண்காணிப்பாக அறைகளில் சென்று பார்த்தபோது, ஒரு மாணவன் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு படு கவலைக்கிடமாக, நாடி அடங்கி, கண்கள் சொருகிய நிலையில் கிடந்திருக்கிறான். ஆசிரியர்கள் எதாவது சொல்வார்களோ எனப் பயந்து,கூட இருந்த பயல்கள் சத்தமே போடாமல் அவனைக் கிடத்தியிருக்கின்றனர். கண்டு பிடித்து அவனை சுய நினைவுக்குக் கொண்டுவருவதற்குள் படாத பாடு பட்டுப்போனார்களாம்.உயிர் போய்விடும் என அஞ்சும் அளவிற்கு அவனது நிலை இருந்திருக்கிறது. இரவு நேரம் மருத்துவர் எவரும் வர முடியாத அந்த தொலைதூர விடுதியில் அவனை சில ஆசிரியர்கள் கவனித்துக்கொண்டிருக்க, பிற மாணவர்கள் அறைகளில் சோதனை நடத்தியபோது, குடித்துவிட்டு அலங்கோலமாக இப்பயல்கள் கிடந்தகாட்சி... படுகேவலமாக இருந்திருக்கக்கூடும்.
இத்தோடு தொலைந்ததா? விடுதியில் தங்கியிருந்த சிலர் வந்து ,ஆசிரியர்களிடம் சில மாணவ மாணவியர் டிஸ்கொதேயில் "ஆடிக்கொண்டிருப்பது" குறித்துப் புகார் செய்ய, அங்கு விரைந்து சென்று பார்த்தால், அது வேறொரு நிலை. தரதரவென்று இழுத்துவந்து அவரவர் அறைகளில் சேர்த்திருக்கிறார்கள். இம்மாணவ மாணவியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் இளைய தலைமுறையினர்? நானும் 80களில் இந்த மாதிரி சுற்றுலா போயிருக்கிறேன். கொஞ்சம் சீண்டுதல் இருக்கும்... காதல்ஜோடிகள் இருக்கும்...மிஞ்சிப்போனால் சிகரெட்.. அதுவும் ஆசிரியர்களுக்குத் தெரியாமல்... தண்ணியெல்லாம் அடித்து நாறிக்கிடப்பதும், அலங்கோலமாக டிஸ்கொதேயில் ஆபாசமாக ஆடுவதும்...என்ன நாகரீகம்?
இவர்களை மட்டும் குற்றம் சொல்லுவதில் அர்த்தமில்லை. விடுதியில் மாணவர்களுக்கு மது வழங்கிய பணியாளர்கள், மது கிடைக்கும்படி செய்த விடுதி நிர்வாகம், பெற்றோரிடமிருந்து அபரிமிதமாகக் கிடைக்கும் பணம்..பார்க்கும் படங்கள், கேட்கும் இசை.. இவற்றையும்தான் சொல்லவேண்டும். 24 மணிநேரமும் காமம் பொங்கிவழியும் பாடல்களும், காட்சிகளும் திரையினூடே கசிந்து, கண்ணுள்ளூம் காதுள்ளும் புகுந்தால் புத்தி மழுங்கத்தான் செய்யும். நடை தடுமாறத்தான் செய்யும்.
ஒரு தனிக் கட்டுப்பாட்டு காவல்படை (moral police) வேண்டுமெனச் சொல்லவில்லை. அண்மையில் மீரட் நகரில் காவல்படை பூங்காக்களில் ஜோடிகளை அடித்து வெளியேற்றியதை பலரும் கண்டித்தனர். ஆனால் இது போன்றவற்றைக் குறித்து யாரும் பேசுவதில்லை. தனிமனித சுதந்திரம் எப்போது பரிந்து பேசப்படவேண்டும்... யாருக்காகப் பரிந்து பேசப்படவேண்டுமென விதியில்லாததால் இந்த அத்துமீறல்கள்.. இரு தரப்பிலும்.
சுயக்கட்டுப்பாடு குறித்து எத்தனைதூரம் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் அறிவுறுத்தப்படுகின்றது எனத் தெரியவில்லை. இந்த விஷங்கள் காற்றில் பரவிவருவதைத் தடுக்க எதாவது முயற்சி எடுக்கிறார்களா? பண்பலை வானொலிகளில் கல்லூரி மாணவர்களுக்கென நிகழ்ச்சி.... கல்லூரி மாணவர்களுக்கென இவர்கள் பேசும் மொழியும், தரமும், ஒலி பரப்பும் பாடல்களும்..கேட்டால் நொந்து போவீர்கள். தமிழ்நாட்டில் எப்படியெனத் தெரியவில்லை.
என்னமோ உருப்பட்டாச் சரி.
மூலக்கூறிலிருந்து மருந்து வரை III
மூலக்கூறிலிருந்து மருந்து வரை III
ஒரு மூலக்கூறை மருந்தாகத் தேர்வு செய்ய மருந்து ஆராய்வுக் குழு ஆய்வு செய்யும் ( Drug discovery department). லட்சக்கணக்கான மூலக்கூறுகளிலிருந்து பல்லாயிரம் மூலக்கூறுகள் முதலில் சல்லடை செய்யப்படும். பின்னர் அவை மேலும் சலிக்கப்பட்டு சில ஆயிரங்கள் பட்டியலிடப்படும். இந்த சல்லடை என்பது பல ஆய்வுகளுக்குப் பின்னர் கிடைத்த சில அனுபவங்கள். உதாரணமாக ஒரு மூலக்கூறு மிக எளிதில் உயிரியல் திரவங்களில் வேதிவினை புரிந்து வேறு மூலக்கூறாக மாறிவிடலாம்.அவ்வாறு மாறுகையில் அதன் மருத்துவ சக்தி போய்விடக்கூடும். இந்த செய்தி கிடைக்கையில் அம்மூலக்கூறு கைவிடப்படும். மற்றொன்று வினை புரியாது நின்றாலும், தயாரிக்கப் படாத பாடு பட வேண்டிவரும். எனவே கைவிடப்படலாம். இவ்வாறு சில மூலக்கூறுகள் பட்டியலில் தேர்வு செய்யப்பட எத்தனை காலம் ஆகலாம்? மூச்சை அடக்கிக்கொள்ளுங்கள்.
சுமார் 8 வருடம் முதல் 15 வருடம் வரை ..
இத்தனை வருடங்கள் என்ன செய்வார்கள்? இவ்வாறு சல்லடையில் சலித்தெடுத்த மூலக்கூறுகளை நமது திசுக்கள் போலவே செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அரைசவ்வூடு பரவும் சவ்வுகளில் ( semi permebale membrane) ஒரு பகுதியில் வைத்து, மறுபுறம் சவ்வூடு பரவிவரும் அம்மூலக்கூறைக் கணிப்பார்கள். உயிரற்ற நிலையில் இவ்வாய்வுகள் மேற்கொள்வதை invitro studies என்பர். இந்த செயற்கையாÉ சவ்வுகள் மட்டுமல்ல, நமது உடலிலிலுள்ள திசுக்களின் படுகை caco-2 cells , எலிகளின் வயிற்றிலுள்ள திசுக்களின் படுகை (வட்டமாக வெட்டப்பட்டு) முதலானவும் உபயோகிக்கப்படுகிறது. இன்னும், மயக்கமூட்டப்பட்ட எலிகளின் வயிற்றைத் திறந்து அதில் இருக்கும் குடல் திசுக்களில் செலுத்தப்பட்டு ஒரே முறையோ அல்லது திரும்பத்திரும்பச் செலுத்தியோ அம்மூலக்கூற்றின் பரவலைக் கணிக்கலாம். இது அதிக நேரம்/பணம் செலவாகுமெனினும் மனிதனில் பயன்படுத்துவதைப்போலவே ஆய்வுமுடிவுகள் கிட்டத்தட்ட வருவதால் இன்னும் சில இடங்களில் பிரபலமாக இருக்கிறது.
இம்மூலக்கூறுகளின் நான்குவித பண்புகளை ஆய்வின் மூலம் அறிகின்றனர்.
1.இம்மூலக்கூறு நமது உடலில் சென்றதும், நம்து திசுக்களுக்குள் எத்தனை தூரம் பரவ முடியும் என்பதை கணிக்கத்தான் இச்சோதனை. இது ஒரு மருந்தின் "உறிஞ்சப்படும் பண்பு" ( Absorption) குறித்து அறிவது.
2.இவ்வாறு உறிஞ்சப்பட்ட மூலக்கூறு பரவும் பண்பு கொண்டுள்ளதா ( Distribution) என்பதை அறிவது.
3.இந்த மூலக்கூறுகள் உயிர்த்திரவங்களுடன் ( ஈரல் சுரக்கும் பித்தநீர் போல) வினைசெய்து விளைக்கும் பண்புகள் ( metabolism) எந்த அளவில் உருவாகின்றன என்பதைக் கண்டறிவது.
4.இம்மூலக்கூறுகள் எவ்வாறு உடலைவிட்டு வெளியேறுகிறது (Excretion) என்னும் ஆய்வு
ADME என்று இச்சோதனைகளைச் சொல்வர். இவை மருந்து கண்டுபிடிக்கும் நிலையில் மட்டுமல்ல , பின்னாளில் அம்மருந்து மூலக்கூறு எவ்வாறு உயிருள்ள உடலில் வேலைசெய்கிறது என்பதைக் காண்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனை invivo studies என்பர். உயிராய்வுகள் (பயோ அனலிசிஸ் -bio analysis) invivo studies வகையைச் சேர்ந்தவை
ஒரு மூலக்கூறை மருந்தாகத் தேர்வு செய்ய மருந்து ஆராய்வுக் குழு ஆய்வு செய்யும் ( Drug discovery department). லட்சக்கணக்கான மூலக்கூறுகளிலிருந்து பல்லாயிரம் மூலக்கூறுகள் முதலில் சல்லடை செய்யப்படும். பின்னர் அவை மேலும் சலிக்கப்பட்டு சில ஆயிரங்கள் பட்டியலிடப்படும். இந்த சல்லடை என்பது பல ஆய்வுகளுக்குப் பின்னர் கிடைத்த சில அனுபவங்கள். உதாரணமாக ஒரு மூலக்கூறு மிக எளிதில் உயிரியல் திரவங்களில் வேதிவினை புரிந்து வேறு மூலக்கூறாக மாறிவிடலாம்.அவ்வாறு மாறுகையில் அதன் மருத்துவ சக்தி போய்விடக்கூடும். இந்த செய்தி கிடைக்கையில் அம்மூலக்கூறு கைவிடப்படும். மற்றொன்று வினை புரியாது நின்றாலும், தயாரிக்கப் படாத பாடு பட வேண்டிவரும். எனவே கைவிடப்படலாம். இவ்வாறு சில மூலக்கூறுகள் பட்டியலில் தேர்வு செய்யப்பட எத்தனை காலம் ஆகலாம்? மூச்சை அடக்கிக்கொள்ளுங்கள்.
சுமார் 8 வருடம் முதல் 15 வருடம் வரை ..
இத்தனை வருடங்கள் என்ன செய்வார்கள்? இவ்வாறு சல்லடையில் சலித்தெடுத்த மூலக்கூறுகளை நமது திசுக்கள் போலவே செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அரைசவ்வூடு பரவும் சவ்வுகளில் ( semi permebale membrane) ஒரு பகுதியில் வைத்து, மறுபுறம் சவ்வூடு பரவிவரும் அம்மூலக்கூறைக் கணிப்பார்கள். உயிரற்ற நிலையில் இவ்வாய்வுகள் மேற்கொள்வதை invitro studies என்பர். இந்த செயற்கையாÉ சவ்வுகள் மட்டுமல்ல, நமது உடலிலிலுள்ள திசுக்களின் படுகை caco-2 cells , எலிகளின் வயிற்றிலுள்ள திசுக்களின் படுகை (வட்டமாக வெட்டப்பட்டு) முதலானவும் உபயோகிக்கப்படுகிறது. இன்னும், மயக்கமூட்டப்பட்ட எலிகளின் வயிற்றைத் திறந்து அதில் இருக்கும் குடல் திசுக்களில் செலுத்தப்பட்டு ஒரே முறையோ அல்லது திரும்பத்திரும்பச் செலுத்தியோ அம்மூலக்கூற்றின் பரவலைக் கணிக்கலாம். இது அதிக நேரம்/பணம் செலவாகுமெனினும் மனிதனில் பயன்படுத்துவதைப்போலவே ஆய்வுமுடிவுகள் கிட்டத்தட்ட வருவதால் இன்னும் சில இடங்களில் பிரபலமாக இருக்கிறது.
இம்மூலக்கூறுகளின் நான்குவித பண்புகளை ஆய்வின் மூலம் அறிகின்றனர்.
1.இம்மூலக்கூறு நமது உடலில் சென்றதும், நம்து திசுக்களுக்குள் எத்தனை தூரம் பரவ முடியும் என்பதை கணிக்கத்தான் இச்சோதனை. இது ஒரு மருந்தின் "உறிஞ்சப்படும் பண்பு" ( Absorption) குறித்து அறிவது.
2.இவ்வாறு உறிஞ்சப்பட்ட மூலக்கூறு பரவும் பண்பு கொண்டுள்ளதா ( Distribution) என்பதை அறிவது.
3.இந்த மூலக்கூறுகள் உயிர்த்திரவங்களுடன் ( ஈரல் சுரக்கும் பித்தநீர் போல) வினைசெய்து விளைக்கும் பண்புகள் ( metabolism) எந்த அளவில் உருவாகின்றன என்பதைக் கண்டறிவது.
4.இம்மூலக்கூறுகள் எவ்வாறு உடலைவிட்டு வெளியேறுகிறது (Excretion) என்னும் ஆய்வு
ADME என்று இச்சோதனைகளைச் சொல்வர். இவை மருந்து கண்டுபிடிக்கும் நிலையில் மட்டுமல்ல , பின்னாளில் அம்மருந்து மூலக்கூறு எவ்வாறு உயிருள்ள உடலில் வேலைசெய்கிறது என்பதைக் காண்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனை invivo studies என்பர். உயிராய்வுகள் (பயோ அனலிசிஸ் -bio analysis) invivo studies வகையைச் சேர்ந்தவை
Sunday, March 05, 2006
மூலக்கூறிலிருந்து மருந்து வரை II
மூலக்கூறிலிருந்து மருந்து வரை
சந்தையில் கிடைக்கும் மருந்துகளில் இரு முக்கியமான மூலக்கூறுகள் இருக்கும்.
1. மருத்துவ சக்தி வாய்ந்த மூலக்கூறுகளை API ( Active Pharmaceutical Ingredients) எனவும்,
2.«வை வேதியல் வினை புரியாமல் கலந்து நின்று, மனிதன் உட்கொள்ளூம் வகையில் மருந்தாக மாற, அவற்றுடன் கலக்கப்படும் மூலக்கூறுகளை excipients எனவும் அழைக்கிறோம்.
ஒரு மருந்து பாட்டிலையோ, அல்லது மாத்திரை பொதிந்து இருக்கும் ஷீட்டினையோ உற்றுப்பார்த்தால் அம்மருந்தின் கலவைபற்றிய பட்டியல் தெரியும். அதில் API ,excipients பட்டியலிடப்பட்டிருக்கும். அதன் கலவை விகிதமும் இடப்பட்டிருக்கும். ஒரு மனிதனின் biomass , நோயின் தீவிரம் அனுசரித்து, எவ்வளவு மருந்து உட்கொள்ளவேண்டுமென்பதை மருத்துவர் தீர்மானிப்பர்.
இவற்றை சந்தைக்கு அனுமதிக்க பல அரசாங்கக் குழுக்கள் இருக்கின்றன. eg.USFDA, இவையெல்லாம் தனது விதிகளைமட்டுமே பயன்படுத்துவதால், பன்னாட்டு சந்தையில் வரும் குழப்பங்களைத் தவிர்க்க ஒருங்கிணைந்த பன்னாட்டு ICH என அமைக்கப்பட்டது. இதன் விதிமுறைகள் ICH guidelines என வழங்கப்படுகின்றன. எனவே ஒரு அமெரிக்க மருந்துக்கம்பெனி அமெரிக்காவில் மருந்தை விற்பதற்கு USFDA அனுமதியும், பிறநாட்டில் விற்பதற்கு அந்நாட்டு விதிமுறைகள் கொண்ட குழுமத்தின் அனுமதியும் பெற்றிறுக்கவேண்டும். ICH guidelines படி செய்யப்படும் மருந்துகள் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட அனுமதி கிட்டும்.
இம்மருந்துகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?
மருத்துவக் கம்பெனிகளில் இருவிதமான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
1. ஏற்கெனவே சந்தைக்கு வந்து, நோய்களைத் தீர்க்கும் மருந்துகளின் மூலக்கூறுகள் போலவே வேலைசெய்யும் மூலக்கூறுகள், அல்லது அதே சக்திவாய்ந்த மூலக்கூறுகள் பிற மூலக்கூறுகளுடன் உண்டான புதிய கலவை. இவற்றை generics எனலாம்.
2. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மூலக்கூறுகள் , மருந்தாவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிக்கப்பட்டு, வெளிவந்த புது மருந்துகள். இவற்றை NDA ( New Drug Application ) எனலாம்.
எல்லா மருந்துகளும் சந்தைக்கு வருமுன் பல சோதனைக்கட்டங்களைத் தாண்டித்தான் வருகின்றன.
இந்த நிலைகள்
Drug Discovery
Preclinical
Clinical (Trials Phase 1 - IV)
Production and Marketing
என வகைப்படுத்தலாம். இந்த நிலைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
சந்தையில் கிடைக்கும் மருந்துகளில் இரு முக்கியமான மூலக்கூறுகள் இருக்கும்.
1. மருத்துவ சக்தி வாய்ந்த மூலக்கூறுகளை API ( Active Pharmaceutical Ingredients) எனவும்,
2.«வை வேதியல் வினை புரியாமல் கலந்து நின்று, மனிதன் உட்கொள்ளூம் வகையில் மருந்தாக மாற, அவற்றுடன் கலக்கப்படும் மூலக்கூறுகளை excipients எனவும் அழைக்கிறோம்.
ஒரு மருந்து பாட்டிலையோ, அல்லது மாத்திரை பொதிந்து இருக்கும் ஷீட்டினையோ உற்றுப்பார்த்தால் அம்மருந்தின் கலவைபற்றிய பட்டியல் தெரியும். அதில் API ,excipients பட்டியலிடப்பட்டிருக்கும். அதன் கலவை விகிதமும் இடப்பட்டிருக்கும். ஒரு மனிதனின் biomass , நோயின் தீவிரம் அனுசரித்து, எவ்வளவு மருந்து உட்கொள்ளவேண்டுமென்பதை மருத்துவர் தீர்மானிப்பர்.
இவற்றை சந்தைக்கு அனுமதிக்க பல அரசாங்கக் குழுக்கள் இருக்கின்றன. eg.USFDA, இவையெல்லாம் தனது விதிகளைமட்டுமே பயன்படுத்துவதால், பன்னாட்டு சந்தையில் வரும் குழப்பங்களைத் தவிர்க்க ஒருங்கிணைந்த பன்னாட்டு ICH என அமைக்கப்பட்டது. இதன் விதிமுறைகள் ICH guidelines என வழங்கப்படுகின்றன. எனவே ஒரு அமெரிக்க மருந்துக்கம்பெனி அமெரிக்காவில் மருந்தை விற்பதற்கு USFDA அனுமதியும், பிறநாட்டில் விற்பதற்கு அந்நாட்டு விதிமுறைகள் கொண்ட குழுமத்தின் அனுமதியும் பெற்றிறுக்கவேண்டும். ICH guidelines படி செய்யப்படும் மருந்துகள் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட அனுமதி கிட்டும்.
இம்மருந்துகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?
மருத்துவக் கம்பெனிகளில் இருவிதமான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
1. ஏற்கெனவே சந்தைக்கு வந்து, நோய்களைத் தீர்க்கும் மருந்துகளின் மூலக்கூறுகள் போலவே வேலைசெய்யும் மூலக்கூறுகள், அல்லது அதே சக்திவாய்ந்த மூலக்கூறுகள் பிற மூலக்கூறுகளுடன் உண்டான புதிய கலவை. இவற்றை generics எனலாம்.
2. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மூலக்கூறுகள் , மருந்தாவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிக்கப்பட்டு, வெளிவந்த புது மருந்துகள். இவற்றை NDA ( New Drug Application ) எனலாம்.
எல்லா மருந்துகளும் சந்தைக்கு வருமுன் பல சோதனைக்கட்டங்களைத் தாண்டித்தான் வருகின்றன.
இந்த நிலைகள்
Drug Discovery
Preclinical
Clinical (Trials Phase 1 - IV)
Production and Marketing
என வகைப்படுத்தலாம். இந்த நிலைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
மூலக்கூறிலிருந்து மருந்து வரை
மூலக்கூறிலிருந்து மருந்து வரை
மூன்று மாதங்கள் முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை.
மருத்துவமனையில் அன்று கூட்டம் அதிகம் இல்லை. காலைத்தூக்கிவைத்துக்கொண்டு எனது ஊன்றுகோலை ஒரு மூலையில் சாய்த்துவைத்துவிட்டு பெஞ்சில் அமர்ந்தேன். கால் ஒடிந்ததின் பின் இரண்டாவது பரிசோதனைக்காக வரச்சொல்லியிருந்த தேதி இன்றுதானே எனச் சரிபார்த்துக்கொண்டேன். மருத்துவர் வ்ர இன்னும் நேரம் பத்து நிமிடங்கள் பாக்கியிருந்தன.
அருகே இருந்தவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். அவரோடு வந்திருந்த பெண்மணி , தள்ளு நாற்காலியிலிருந்து பெஞ்சில் மாறுவதற்கு கைத்தாங்கலாக பணிப்பெண் இல்லாது திணறினார். கொஞ்சம் இடம் கொடுத்து ஒதுங்கி, தள்ளுநாற்காலியை முன்னே செல்லாவண்ணம் பிடித்துக்கொண்டேன்.
நன்றி எனப் புன்னகைத்த பெண்மணி, " உங்களூக்கு என்ன?" என்றார். ரயிலிலிருந்து விழுந்த கதையைச் சொன்னேன். "நான் பாத்ரூமில் விழுந்துவிட்டேன். லோ பி.பி" என்றார்.
"என்ன மருந்து கொடுக்கிறான்கள்? கால்வலி குறையறதுக்கு கொடுத்த மாத்திரையிலே வயித்துவலி வந்துடுச்சு. ஒரு வாரமா ஒண்ணுமே சாப்பிட முடியலை. வெறும் தயிர்சாதம்தான். மாட்டுப்பொண் வேலைக்குப் போறா. அவசரத்துல எனக்குன்னும், அவளுக்குன்ன்னும் தனித்தனியா சாதம் பண்ணமுடியுமா? " எனப் புலம்பினார்.
"இவளுக்குக் கொடுத்த மாத்திரைல வந்த பக்க விளைவுதான் இந்த வயித்துவலி. அதுக்குமுன்னாடி வயித்துவலியெல்லாம் வந்ததே இல்லை இவளுக்கு" கோபத்தில் அவரது கணவரின் வார்த்தைகள் தடுமாறின.
"டாக்டர் கொடுத்த மாத்திரை இதுவரை நான் கேட்டதேயில்லை. கடைல, இது புதுசு சார்-ங்கிறான். இவங்க சோதனை பண்ண இவள்தான் கிடைச்சாளா?"
"ஒரு மாத்திரை என்னமாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என சோதனைகள் செய்யப்பட்டபின்னரே சந்தைக்கு வருகிறது. எதுக்கும் டாக்டர்கிட்ட சொல்லுங்க" என்றேன்.
அவர் சமாதானமானதாய்த் தெரியலை." மாத்திரை எப்படிப் பண்ணறாங்கன்னு நமக்கு என்ன தெரியும்? இவள் மாதிரி எத்தனை பேர் மேல சோதனை பண்ணறாங்களோ? என்ன எழவுன்னு சொல்லித்தொலைக்கலாம்ல?" என்று முணுமுணுத்தார்.
அவரது கேள்வி புதியதில்லை.
நம்மில் பலருக்கும் வரும் கேள்விதான் இது. எப்படி ஒரு கெமிக்கல் ஒரு மருந்தாகிறது? எப்படி அதன் விளைவுகளையும், பக்க விளைவுகளையும் அனுமானிக்கிறார்கள்? என்னமோ எலி,குரங்கு,குதிரை,மனிதன் என சோதிப்பார்களாமே? அதற்குப்பிறகும் எப்படி சில மருந்துகள் விஷமாகின்றன? போனவாரம் பார்வை மங்கலாய் இருந்ததே - நாம் தலைவலிக்கு எடுத்துக்கொள்ளூம் மருந்துதான் காரணமோ? எனப் பலப்பல சந்தேகங்கள்..
அலோபதி மருந்துகள் தயாரிக்கப்படும் நிலைகள் பற்றி கொஞ்சம் மேலோட்டமாய்ப் பார்ப்போம்.
ஒரு disclaimer : எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். இது முழுதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கட்டுரையில்லை.
தெரிந்தவர்கள் திருத்தவும். சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். நானும் புரிந்துகொள்கிறேன்.
மூன்று மாதங்கள் முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை.
மருத்துவமனையில் அன்று கூட்டம் அதிகம் இல்லை. காலைத்தூக்கிவைத்துக்கொண்டு எனது ஊன்றுகோலை ஒரு மூலையில் சாய்த்துவைத்துவிட்டு பெஞ்சில் அமர்ந்தேன். கால் ஒடிந்ததின் பின் இரண்டாவது பரிசோதனைக்காக வரச்சொல்லியிருந்த தேதி இன்றுதானே எனச் சரிபார்த்துக்கொண்டேன். மருத்துவர் வ்ர இன்னும் நேரம் பத்து நிமிடங்கள் பாக்கியிருந்தன.
அருகே இருந்தவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். அவரோடு வந்திருந்த பெண்மணி , தள்ளு நாற்காலியிலிருந்து பெஞ்சில் மாறுவதற்கு கைத்தாங்கலாக பணிப்பெண் இல்லாது திணறினார். கொஞ்சம் இடம் கொடுத்து ஒதுங்கி, தள்ளுநாற்காலியை முன்னே செல்லாவண்ணம் பிடித்துக்கொண்டேன்.
நன்றி எனப் புன்னகைத்த பெண்மணி, " உங்களூக்கு என்ன?" என்றார். ரயிலிலிருந்து விழுந்த கதையைச் சொன்னேன். "நான் பாத்ரூமில் விழுந்துவிட்டேன். லோ பி.பி" என்றார்.
"என்ன மருந்து கொடுக்கிறான்கள்? கால்வலி குறையறதுக்கு கொடுத்த மாத்திரையிலே வயித்துவலி வந்துடுச்சு. ஒரு வாரமா ஒண்ணுமே சாப்பிட முடியலை. வெறும் தயிர்சாதம்தான். மாட்டுப்பொண் வேலைக்குப் போறா. அவசரத்துல எனக்குன்னும், அவளுக்குன்ன்னும் தனித்தனியா சாதம் பண்ணமுடியுமா? " எனப் புலம்பினார்.
"இவளுக்குக் கொடுத்த மாத்திரைல வந்த பக்க விளைவுதான் இந்த வயித்துவலி. அதுக்குமுன்னாடி வயித்துவலியெல்லாம் வந்ததே இல்லை இவளுக்கு" கோபத்தில் அவரது கணவரின் வார்த்தைகள் தடுமாறின.
"டாக்டர் கொடுத்த மாத்திரை இதுவரை நான் கேட்டதேயில்லை. கடைல, இது புதுசு சார்-ங்கிறான். இவங்க சோதனை பண்ண இவள்தான் கிடைச்சாளா?"
"ஒரு மாத்திரை என்னமாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என சோதனைகள் செய்யப்பட்டபின்னரே சந்தைக்கு வருகிறது. எதுக்கும் டாக்டர்கிட்ட சொல்லுங்க" என்றேன்.
அவர் சமாதானமானதாய்த் தெரியலை." மாத்திரை எப்படிப் பண்ணறாங்கன்னு நமக்கு என்ன தெரியும்? இவள் மாதிரி எத்தனை பேர் மேல சோதனை பண்ணறாங்களோ? என்ன எழவுன்னு சொல்லித்தொலைக்கலாம்ல?" என்று முணுமுணுத்தார்.
அவரது கேள்வி புதியதில்லை.
நம்மில் பலருக்கும் வரும் கேள்விதான் இது. எப்படி ஒரு கெமிக்கல் ஒரு மருந்தாகிறது? எப்படி அதன் விளைவுகளையும், பக்க விளைவுகளையும் அனுமானிக்கிறார்கள்? என்னமோ எலி,குரங்கு,குதிரை,மனிதன் என சோதிப்பார்களாமே? அதற்குப்பிறகும் எப்படி சில மருந்துகள் விஷமாகின்றன? போனவாரம் பார்வை மங்கலாய் இருந்ததே - நாம் தலைவலிக்கு எடுத்துக்கொள்ளூம் மருந்துதான் காரணமோ? எனப் பலப்பல சந்தேகங்கள்..
அலோபதி மருந்துகள் தயாரிக்கப்படும் நிலைகள் பற்றி கொஞ்சம் மேலோட்டமாய்ப் பார்ப்போம்.
ஒரு disclaimer : எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். இது முழுதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கட்டுரையில்லை.
தெரிந்தவர்கள் திருத்தவும். சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். நானும் புரிந்துகொள்கிறேன்.
Saturday, March 04, 2006
மும்பை சேரிகள் (இறுதிப் பாகம்)
மும்பை சேரிகள் (இறுதிப் பாகம்)
சாமானிய மும்பை எப்படி சேரிகளை சமாளிக்கிறது? சில தன்னார்வலக் குழுக்கள் இம்மக்கள் வாழ்வு முன்னேற உழைக்கிறார்கள். சில அரசியல்வாதத் தூண்டுதல்களாலும், வீணர்களாலும் அம்முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன. நாராயணன் சொன்னமாதிரி கோத்ரெஜ் ஜல்லியடிக்கவில்லை. கோத்ரெஜ் குடும்பத்தினரால்தான் இன்னும் மும்பையில் மாங்குரோவ் காடுகள் விக்ரோலி பகுதியில் உருப்படியாக இருக்கின்றன. இல்லாவிட்டால் சேரிகள் வந்து,பின்னர் அவை தகர்க்கப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் வந்திருக்கும். கோத்ரெஜ் குடும்பம் மும்பைக்குச் செய்திருக்கும் பங்கு மகத்தானது. ( கோத்ரெஜ் இதற்காக எனக்கு something தந்துவிடவில்லை!). சேரிமக்களுக்காகவும் அக்குடும்பம் பல சேவைகளைச் செய்திருக்கிறது.
சேரிகள் வெறுக்கப்படுகின்றன. சில இடங்களில் சேரிமக்களையும் வெறுக்கிறார்கள். காரணம் இருக்கிறது.கழிப்பிடங்களை பிடிவாதமாக உபயோகிக்காமல் சாலைகளின் ஓரங்களிலும், தண்டவாளங்களின் ஓரங்களிலும் விக்கட் கீப்பர் போல அமர்ந்திருப்பது மிகவும் வெறுப்பேற்றியிருக்கிறது. இதனால்தான், ரயில்வே பயணிகள் /சேரிமக்கள் கலவரங்கள் ஏற்பட்டு, சேரிமக்கள் ரயில்கள் மேல் கல்லெறிந்து ஒரு அப்பாவிப் பெண்ணின் கண் போயிற்று. இன்னும் இது தொடர்கிறது ( போரிவல்லி -விரார் ரயில்களில் பயணித்த அனுபவம்).
ஒரு சேரி உருவானபின் எப்படி தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது? இரு முறைகள் . ஒன்று மதம். ஒரு சிறு கோவில்/புத்த விகாரம்/மசூதி என அவசரமாக ஒன்று முளைத்துவிடும். அதன் திறப்பு விழா/ வருட விழா என ஒன்றிற்கு ஒரு அரசியல்வாதி வந்துவிடுவார். இரண்டாவது ஒரு சங்கம் உருவாகும் - அது எதாவது ஜாதி/மத அடிப்படையில் அமைந்திருக்கும். இதன் ஒரே பங்கு " நாங்கள் ஒரே ஓட்டு வங்கி" என்பதை பறை சாற்றுவதுதான். மெதுவாக சாலைகள் ஆக்ரமிக்கப் படும். போலீஸ்காரர்களுக்கு மாமூல் கொடுத்து அடக்கிவிடுவர்.
பின்னர் எதாவது ஒருநாள் மழை வெள்ளம், உலகவங்கி கட்டளைகள் என ஒன்று வந்து சேரிகள் பிரிக்கப்படும். அன்று இருக்கிறது போராட்டம்.. இப்படித்தான் போரிவல்லி-தஹிசர் இடையே தண்டவாளங்களின் அருகே அமைந்திருக்கும் சேரி அப்புறப்படுத்தப் படாதபாடு படுகிறார்கள். நாலு டிராக் தண்டவாளங்கள் அமைக்க இது தேவையானது. உலகமயமாக்கலின் அழுத்தம் அல்ல. தினசரி வாழ்வின் அழுத்தம். போரிவல்லி -விரார் வண்டியில் போய்ப்பாருங்கள் தெரியும்.. இது எத்தனை அவசியம் என. எத்தனை அப்பாவி மக்கள் ரயில் நெரிசலில் தினமும் விழுந்து சாகிறார்கள் என்பது அப்பட்டமான புள்ளிவிவரம்.
சேரிகள் தேவையில்லை. சேரிமக்களுக்கு வாழ்வு தேவை. மும்பை இன்னும் விரிவாக முடியாது- டெல்லி/சென்னை போ. மூன்று புறமும் கடல். எனவே செங்குத்தான வளர்ச்சி என்பது மும்பயின் விதி. இருக்கும் இடத்தை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பது ஒரு சவால். இதில் சேரிகள் 60% என்றால் எப்படி இதனை ஒரு காஸ்மோபோலிடன் நகராக வளர்க்கமுடியும்? உலகமயமாக்கலின் அழுத்தம் இல்லை. வளர்ச்சியென்பது மும்பைக்கு வேண்டுமென்றால், சீர்த்திருத்தம் அவசியம்.
பண்டைய மும்பையில் சால் (chawl) என்னும் அமைப்பு இருந்தது. நம்ம ஊர்களில் store என குடியமப்புகள் இருக்குமே அதுபோல. பெரும்பாலும் நூலாலைகளில் பணியாற்றியவர்களின் இருப்பிடமாக இருந்தது. அவை எளிமையாக ,சுத்தமாக இருக்கும். " நகரில் ஏழைகள் சுத்தமாக வாழமுடியாது" எனச் சேரிகளுக்கு பரிந்துவருபவர்கள் இச் சால்களைப் போய்ப் பார்க்கவேண்டும்.
70களில் வந்த migrant population இந்த வகையைச் சேர்ந்தவர்களில்லை. உ.பி, பிஹார் , பெங்கால் ,தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த சால் சமூகத்தில் வாழவில்லை. சேரிகள் இங்குதான் உருவாகின. வளர்த்த அரசியல்கட்சிகள் இவர்களைப் பற்றி கவலைப்படவும் இல்லை.
பாந்திரா ரயில்வே நிலையம் அமைக்க முடிவெடுத்தபோது, அங்கிருக்கும் சேரியை அப்புறப்படுத்தக்கூடாது என சுனில்தத் எதிர்த்தார். விளைவு ரயில்நிலையம் 10வருடங்களின் பின் மிகுந்த பொருட்செலவுடன் ஏற்பட்டது. அதுவும் ஒரு அணுகுமுறை வசதியும் இன்றி.
மும்பை விமானநிலையத்தில் தரை இறங்குமுன் ஒருமுறை நோக்குங்கள். "எவனாவது இந்த ஊரில் வாழ்வானா ?" எனத் தோன்றும். மீண்டும் சொல்கிறேன்... உலகமயமாக்கல் மாயை இல்லை இது. சுகாதாரமாக வாழ நினைப்பதே தவறா? எத்தனை முறை முயன்றும் பிடிவாதமாக அசுத்தப்படுத்துவதும், அதனை அரசியல்கட்சிகள் "ஏழை வயிற்றிலடிக்க்காதே" எனப் போலிக்கூச்சல் போட்டு, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதும் எத்தனை வருடங்களுக்கு செல்லும்?
மணியன் எழுதியிருந்தார்.. சேரிமக்களுக்கு வீடுகட்டிக் கொடுத்தால் அதனை விற்றுவிட்டு மீண்டும் வேறு இடத்தில் சேரிகட்டச் செல்கிறார்கள் என.. விற்பதற்க்கு சட்டம் , அரசாங்கம் எப்படி அனுமதிக்கிறது? அனைவருக்கும் இதில் ஒரு கட் செல்கிறது என்பது அப்பட்டமான உண்மை.
மும்பை ஒரு நகரமாக ,சுத்தமாக வேண்டுமானால், இச்சேரிமக்கள் வாழ்க்கைத்தரம் வளரவேண்டும்.. அரசியல் வணிக இடையூறின்றி.. இம்மக்கள் முன்னேறினால் சேரிகள் மறையும். மறையவேண்டும். சேரிகள் ஒரு நாட்டின் விகார அரசியலின், சமச்சீரில்லாத வளர்ச்சியின் வெளிப்பாடு. இவை தொலையவேண்டும்.
சாமானிய மும்பை எப்படி சேரிகளை சமாளிக்கிறது? சில தன்னார்வலக் குழுக்கள் இம்மக்கள் வாழ்வு முன்னேற உழைக்கிறார்கள். சில அரசியல்வாதத் தூண்டுதல்களாலும், வீணர்களாலும் அம்முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன. நாராயணன் சொன்னமாதிரி கோத்ரெஜ் ஜல்லியடிக்கவில்லை. கோத்ரெஜ் குடும்பத்தினரால்தான் இன்னும் மும்பையில் மாங்குரோவ் காடுகள் விக்ரோலி பகுதியில் உருப்படியாக இருக்கின்றன. இல்லாவிட்டால் சேரிகள் வந்து,பின்னர் அவை தகர்க்கப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் வந்திருக்கும். கோத்ரெஜ் குடும்பம் மும்பைக்குச் செய்திருக்கும் பங்கு மகத்தானது. ( கோத்ரெஜ் இதற்காக எனக்கு something தந்துவிடவில்லை!). சேரிமக்களுக்காகவும் அக்குடும்பம் பல சேவைகளைச் செய்திருக்கிறது.
சேரிகள் வெறுக்கப்படுகின்றன. சில இடங்களில் சேரிமக்களையும் வெறுக்கிறார்கள். காரணம் இருக்கிறது.கழிப்பிடங்களை பிடிவாதமாக உபயோகிக்காமல் சாலைகளின் ஓரங்களிலும், தண்டவாளங்களின் ஓரங்களிலும் விக்கட் கீப்பர் போல அமர்ந்திருப்பது மிகவும் வெறுப்பேற்றியிருக்கிறது. இதனால்தான், ரயில்வே பயணிகள் /சேரிமக்கள் கலவரங்கள் ஏற்பட்டு, சேரிமக்கள் ரயில்கள் மேல் கல்லெறிந்து ஒரு அப்பாவிப் பெண்ணின் கண் போயிற்று. இன்னும் இது தொடர்கிறது ( போரிவல்லி -விரார் ரயில்களில் பயணித்த அனுபவம்).
ஒரு சேரி உருவானபின் எப்படி தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது? இரு முறைகள் . ஒன்று மதம். ஒரு சிறு கோவில்/புத்த விகாரம்/மசூதி என அவசரமாக ஒன்று முளைத்துவிடும். அதன் திறப்பு விழா/ வருட விழா என ஒன்றிற்கு ஒரு அரசியல்வாதி வந்துவிடுவார். இரண்டாவது ஒரு சங்கம் உருவாகும் - அது எதாவது ஜாதி/மத அடிப்படையில் அமைந்திருக்கும். இதன் ஒரே பங்கு " நாங்கள் ஒரே ஓட்டு வங்கி" என்பதை பறை சாற்றுவதுதான். மெதுவாக சாலைகள் ஆக்ரமிக்கப் படும். போலீஸ்காரர்களுக்கு மாமூல் கொடுத்து அடக்கிவிடுவர்.
பின்னர் எதாவது ஒருநாள் மழை வெள்ளம், உலகவங்கி கட்டளைகள் என ஒன்று வந்து சேரிகள் பிரிக்கப்படும். அன்று இருக்கிறது போராட்டம்.. இப்படித்தான் போரிவல்லி-தஹிசர் இடையே தண்டவாளங்களின் அருகே அமைந்திருக்கும் சேரி அப்புறப்படுத்தப் படாதபாடு படுகிறார்கள். நாலு டிராக் தண்டவாளங்கள் அமைக்க இது தேவையானது. உலகமயமாக்கலின் அழுத்தம் அல்ல. தினசரி வாழ்வின் அழுத்தம். போரிவல்லி -விரார் வண்டியில் போய்ப்பாருங்கள் தெரியும்.. இது எத்தனை அவசியம் என. எத்தனை அப்பாவி மக்கள் ரயில் நெரிசலில் தினமும் விழுந்து சாகிறார்கள் என்பது அப்பட்டமான புள்ளிவிவரம்.
சேரிகள் தேவையில்லை. சேரிமக்களுக்கு வாழ்வு தேவை. மும்பை இன்னும் விரிவாக முடியாது- டெல்லி/சென்னை போ. மூன்று புறமும் கடல். எனவே செங்குத்தான வளர்ச்சி என்பது மும்பயின் விதி. இருக்கும் இடத்தை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பது ஒரு சவால். இதில் சேரிகள் 60% என்றால் எப்படி இதனை ஒரு காஸ்மோபோலிடன் நகராக வளர்க்கமுடியும்? உலகமயமாக்கலின் அழுத்தம் இல்லை. வளர்ச்சியென்பது மும்பைக்கு வேண்டுமென்றால், சீர்த்திருத்தம் அவசியம்.
பண்டைய மும்பையில் சால் (chawl) என்னும் அமைப்பு இருந்தது. நம்ம ஊர்களில் store என குடியமப்புகள் இருக்குமே அதுபோல. பெரும்பாலும் நூலாலைகளில் பணியாற்றியவர்களின் இருப்பிடமாக இருந்தது. அவை எளிமையாக ,சுத்தமாக இருக்கும். " நகரில் ஏழைகள் சுத்தமாக வாழமுடியாது" எனச் சேரிகளுக்கு பரிந்துவருபவர்கள் இச் சால்களைப் போய்ப் பார்க்கவேண்டும்.
70களில் வந்த migrant population இந்த வகையைச் சேர்ந்தவர்களில்லை. உ.பி, பிஹார் , பெங்கால் ,தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த சால் சமூகத்தில் வாழவில்லை. சேரிகள் இங்குதான் உருவாகின. வளர்த்த அரசியல்கட்சிகள் இவர்களைப் பற்றி கவலைப்படவும் இல்லை.
பாந்திரா ரயில்வே நிலையம் அமைக்க முடிவெடுத்தபோது, அங்கிருக்கும் சேரியை அப்புறப்படுத்தக்கூடாது என சுனில்தத் எதிர்த்தார். விளைவு ரயில்நிலையம் 10வருடங்களின் பின் மிகுந்த பொருட்செலவுடன் ஏற்பட்டது. அதுவும் ஒரு அணுகுமுறை வசதியும் இன்றி.
மும்பை விமானநிலையத்தில் தரை இறங்குமுன் ஒருமுறை நோக்குங்கள். "எவனாவது இந்த ஊரில் வாழ்வானா ?" எனத் தோன்றும். மீண்டும் சொல்கிறேன்... உலகமயமாக்கல் மாயை இல்லை இது. சுகாதாரமாக வாழ நினைப்பதே தவறா? எத்தனை முறை முயன்றும் பிடிவாதமாக அசுத்தப்படுத்துவதும், அதனை அரசியல்கட்சிகள் "ஏழை வயிற்றிலடிக்க்காதே" எனப் போலிக்கூச்சல் போட்டு, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதும் எத்தனை வருடங்களுக்கு செல்லும்?
மணியன் எழுதியிருந்தார்.. சேரிமக்களுக்கு வீடுகட்டிக் கொடுத்தால் அதனை விற்றுவிட்டு மீண்டும் வேறு இடத்தில் சேரிகட்டச் செல்கிறார்கள் என.. விற்பதற்க்கு சட்டம் , அரசாங்கம் எப்படி அனுமதிக்கிறது? அனைவருக்கும் இதில் ஒரு கட் செல்கிறது என்பது அப்பட்டமான உண்மை.
மும்பை ஒரு நகரமாக ,சுத்தமாக வேண்டுமானால், இச்சேரிமக்கள் வாழ்க்கைத்தரம் வளரவேண்டும்.. அரசியல் வணிக இடையூறின்றி.. இம்மக்கள் முன்னேறினால் சேரிகள் மறையும். மறையவேண்டும். சேரிகள் ஒரு நாட்டின் விகார அரசியலின், சமச்சீரில்லாத வளர்ச்சியின் வெளிப்பாடு. இவை தொலையவேண்டும்.
Friday, March 03, 2006
மும்பை சேரிகள் -II
மும்பை சேரிகள் -II
ஷெர்வின் ஸை - தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவத்துறை மென்பொருள் வல்லுநர். அவரது பெற்றோர் பிலிப்பைன்ஸிலிருந்து கனடாவில் குடியேறிய சீனர்கள். சீனா குறித்தான ஆவலில் ,செர்வின் பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் சில தகவல்கள் கிடைத்தன.
பனிக்காற்று பேயாக வெளியில் அடித்துக்கொண்டிருக்க, அவரது அறையில் சூடாக காபி குடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தேன்.
" சீனாவைக் குறித்து அமெரிக்கா பயப்படுவதற்கு பொருளாதார வளர்ச்சி, மிலிடரி சக்தி மட்டுமல்ல, மற்றொரு விசயமும் இருக்கிறது" என்றார் செர்வின் காபியை உறிஞ்சியபடியே.
"சீனா, தனது ஏற்றுமதியில் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகையை டாலர் பாண்ட் (Bonds) களில் முதலீடு செய்து வைத்திருக்கிறது. மற்றொரு தொகையை தனது உள்நாட்டு வளர்ச்சிக்கு செலவிடுகிறது (infrastructure). சிறிது தொகையே , வேலைசெய்யும் மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்கு செலவிடுகிறது. குறைந்த வருமானத்தை பல ஆண்டுகளாகத் தந்துகொண்டிருப்பதாலும், பொருட்களின் விலையைக் குறைத்தே வைத்திருப்பதாலும், தனது நாணயத்தினை இன்னும் குறைவான மதிப்பீட்டில் வைத்திருப்பதாலும், சீனர்கள் குறைந்த சம்பளத்தில் வாழமுடிகிறது. எனவே, பெரும்பாலான சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்கள் தயாரித்துக்கொடுக்க முடிகிறது. இந்த competitive advantage பலவருடங்களுக்கு நீடிக்கும்.
திடீரென, சீனா US bondகளை சந்தையில் விற்கிறது என வைத்துக்கொள்வோம். டாலர் தடாலென வீழும். அமெரிக்க வியாபாரத்தை இது பெருமளவில் பாதிக்கும். short term தாக்கங்கள் மிக அதிகமாக இருப்பதோடு, உலகளவில் பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவை சந்திக்கும். எனவே நிக்கி, சிங்கப்பூர் பங்குச்சந்தை, ஹான்செங்,NYSE, LSE, NASDAQ என பல பங்குச்சந்தைகளின் சிம்ம சொப்பனம்.. இந்தக் காட்சி." என்றார்.
" எந்த அளவில் இது சாத்தியம்?" என்றேன்.
" ஒரு அணுகுண்டு தாக்குதலுக்கு சமம் இது. மிகப்பயங்கர விளைவுகளை ஏற்படுத்த முடியும். ஆனால் நடக்குமா என்றால் சந்தேகம்தான்."
" பின் ஏன் பயப்படவேண்டும்? சீனாவும்தான் இதில் அடிபடும்" என்றேன் கேணத்தனமாய்.
" சுதாகர். மரணத்தைவிட மரணபயம் கொடியது" என்றார் செர்வின் சிரித்தபடி.
கொஞ்சம் புரிந்தது. ஏழ்மை என்பது வளர்ச்சிக்கு மூலதனம். அது இருக்கும்வரை competitive advantage இருக்கும். எவனிடம் வியாபார பலம் இருக்கிறதோ அவன் உலகாள்வான். இது கம்யூனிசம் தழைக்கும் சீனாவானாலும், தன்னோக்கு அரசியல் தழைக்கும் சனநாயக இந்தியாவானாலும் ஒன்றுதான். ஏழை ஏழையாகவே இருக்கும்வரை, அவன் அதிகம் கேட்காமல், அடிப்படைத் தேவைகள் தீர்வதில் சந்தோஷம் அடைவதில், எனது B.M.W கார் செல்லமுடியும். அவன் கேட்கத் தொடங்குகையில், போட்டிக்கு ஆட்கள் வந்துவிட்டால், அவனது தேவைகளைக் குறைத்துக்கொள்வான். எனவே, நகரமயமாக்குதலும், எளிய மக்கள் அங்கு புலம்பெயர்தலும் தலைவலியாக இருந்தாலும் வியாபார நோக்கில் அது தேவைதான்.
சீனா, உள்நாட்டுக் கட்டுமாணப்பணிகள் செய்து, சேரிகளை ஒழிக்கிறது - ஷாங்காய், பீஜிங், குவாங்ஷோ போன்ற சில நகரங்களில் மட்டுமே. வெளிநாட்டு முதலீடு வரவேண்டுமானால் வறுமை தெரியக்கூடாது என்ற "நல்லெண்ணத்தில்".
நமது அரசியல்வாதிகள் இன்னும் மோசம். எவன் எக்கேடு கெட்டால் என்ன? சேரிகள் விமானநிலையமருகே இருந்தாலென்ன இல்லாட்டி போனாலென்ன என் வேலை நடக்கிறது - என்னும் மெத்தெனப் போக்கு.
இரண்டிலும் சேரி வாழ் மக்கள் அதே நிலைதான். சேரிகள் மாறியிருக்கின்றன சீனாவில் சில இடங்களில். இங்கு அதுவும் இல்லை.
.ஏன் மும்பையில் இத்தனை சேரிகள், ஏழ்மை என இப்போது கொஞ்சம் புரிகிறது எனக்கும்.
ஷெர்வின் ஸை - தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவத்துறை மென்பொருள் வல்லுநர். அவரது பெற்றோர் பிலிப்பைன்ஸிலிருந்து கனடாவில் குடியேறிய சீனர்கள். சீனா குறித்தான ஆவலில் ,செர்வின் பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் சில தகவல்கள் கிடைத்தன.
பனிக்காற்று பேயாக வெளியில் அடித்துக்கொண்டிருக்க, அவரது அறையில் சூடாக காபி குடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தேன்.
" சீனாவைக் குறித்து அமெரிக்கா பயப்படுவதற்கு பொருளாதார வளர்ச்சி, மிலிடரி சக்தி மட்டுமல்ல, மற்றொரு விசயமும் இருக்கிறது" என்றார் செர்வின் காபியை உறிஞ்சியபடியே.
"சீனா, தனது ஏற்றுமதியில் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகையை டாலர் பாண்ட் (Bonds) களில் முதலீடு செய்து வைத்திருக்கிறது. மற்றொரு தொகையை தனது உள்நாட்டு வளர்ச்சிக்கு செலவிடுகிறது (infrastructure). சிறிது தொகையே , வேலைசெய்யும் மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்கு செலவிடுகிறது. குறைந்த வருமானத்தை பல ஆண்டுகளாகத் தந்துகொண்டிருப்பதாலும், பொருட்களின் விலையைக் குறைத்தே வைத்திருப்பதாலும், தனது நாணயத்தினை இன்னும் குறைவான மதிப்பீட்டில் வைத்திருப்பதாலும், சீனர்கள் குறைந்த சம்பளத்தில் வாழமுடிகிறது. எனவே, பெரும்பாலான சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்கள் தயாரித்துக்கொடுக்க முடிகிறது. இந்த competitive advantage பலவருடங்களுக்கு நீடிக்கும்.
திடீரென, சீனா US bondகளை சந்தையில் விற்கிறது என வைத்துக்கொள்வோம். டாலர் தடாலென வீழும். அமெரிக்க வியாபாரத்தை இது பெருமளவில் பாதிக்கும். short term தாக்கங்கள் மிக அதிகமாக இருப்பதோடு, உலகளவில் பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவை சந்திக்கும். எனவே நிக்கி, சிங்கப்பூர் பங்குச்சந்தை, ஹான்செங்,NYSE, LSE, NASDAQ என பல பங்குச்சந்தைகளின் சிம்ம சொப்பனம்.. இந்தக் காட்சி." என்றார்.
" எந்த அளவில் இது சாத்தியம்?" என்றேன்.
" ஒரு அணுகுண்டு தாக்குதலுக்கு சமம் இது. மிகப்பயங்கர விளைவுகளை ஏற்படுத்த முடியும். ஆனால் நடக்குமா என்றால் சந்தேகம்தான்."
" பின் ஏன் பயப்படவேண்டும்? சீனாவும்தான் இதில் அடிபடும்" என்றேன் கேணத்தனமாய்.
" சுதாகர். மரணத்தைவிட மரணபயம் கொடியது" என்றார் செர்வின் சிரித்தபடி.
கொஞ்சம் புரிந்தது. ஏழ்மை என்பது வளர்ச்சிக்கு மூலதனம். அது இருக்கும்வரை competitive advantage இருக்கும். எவனிடம் வியாபார பலம் இருக்கிறதோ அவன் உலகாள்வான். இது கம்யூனிசம் தழைக்கும் சீனாவானாலும், தன்னோக்கு அரசியல் தழைக்கும் சனநாயக இந்தியாவானாலும் ஒன்றுதான். ஏழை ஏழையாகவே இருக்கும்வரை, அவன் அதிகம் கேட்காமல், அடிப்படைத் தேவைகள் தீர்வதில் சந்தோஷம் அடைவதில், எனது B.M.W கார் செல்லமுடியும். அவன் கேட்கத் தொடங்குகையில், போட்டிக்கு ஆட்கள் வந்துவிட்டால், அவனது தேவைகளைக் குறைத்துக்கொள்வான். எனவே, நகரமயமாக்குதலும், எளிய மக்கள் அங்கு புலம்பெயர்தலும் தலைவலியாக இருந்தாலும் வியாபார நோக்கில் அது தேவைதான்.
சீனா, உள்நாட்டுக் கட்டுமாணப்பணிகள் செய்து, சேரிகளை ஒழிக்கிறது - ஷாங்காய், பீஜிங், குவாங்ஷோ போன்ற சில நகரங்களில் மட்டுமே. வெளிநாட்டு முதலீடு வரவேண்டுமானால் வறுமை தெரியக்கூடாது என்ற "நல்லெண்ணத்தில்".
நமது அரசியல்வாதிகள் இன்னும் மோசம். எவன் எக்கேடு கெட்டால் என்ன? சேரிகள் விமானநிலையமருகே இருந்தாலென்ன இல்லாட்டி போனாலென்ன என் வேலை நடக்கிறது - என்னும் மெத்தெனப் போக்கு.
இரண்டிலும் சேரி வாழ் மக்கள் அதே நிலைதான். சேரிகள் மாறியிருக்கின்றன சீனாவில் சில இடங்களில். இங்கு அதுவும் இல்லை.
.ஏன் மும்பையில் இத்தனை சேரிகள், ஏழ்மை என இப்போது கொஞ்சம் புரிகிறது எனக்கும்.
மும்பை சேரிகள்
மும்பை சேரிகள்
___________________
உருப்படாதது நாராயணன் மும்பை சேரிகள் குறித்து எழுதியிருந்தார்.மணியனின் பதிவு சிறப்பாக அமைந்திருந்தது. சேரியில் வாழ்ந்திராவிட்டாலும், எனது மும்பை வாழ்வின் ஆரம்பக்காலங்களில் சேரிகளின் மிக மிக அருகில் வாழ்ந்ததாலும், அங்கு வாழும் மக்களின் சிலரின் நட்பு கிடைத்ததாலும் இச்சேரி வாழ்வு குறித்து ஓரளவு எனக்குத் தெரியும். சில இடங்கள் தவிர்த்து பெரும்பாலும் பொதுவாகச் சேரிகள் எனவே இக்கட்டுரையில் அழைத்திருக்கிறேன். முகமூடியின் பதிவுகளில் அவர் சுட்டியிருக்கும் பாதுகாப்பு நோக்கம்தான் இதற்கும்!
சேரிவாழ்வு குறித்து எழுதுமுன் சில விளக்கங்கள் அவசியம். மும்பை slum என்பதை சேரியென நான் இங்கு விளித்திருக்கிறேன். மும்பையில் சேரி என்பது குடில்/குடிசை என்றல்ல. வறுமை என்பதற்கும் எளிமைக்கும் உள்ள வித்தியாசம். சேரியின் வீடுகள் தகரடப்பாக்கள், திருடிக்கொண்டுவந்த செங்கல்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள் கொண்டு கன்னாபின்னாவென ஏதோ அமைக்கப்பட்ட ஒரு குடியமைப்பு. இவை ஒரு சீராகவும் அமைந்திருக்காது. ஏதோ ஒரிடத்தில் இருக்கவேண்டுமென்பதால் அமைக்கப்பட்டவை. ஒரு வீட்டின் கழிவுநீர் மற்றவீட்டினுள்வழி புகுந்து செல்வது சாதாரணம். "எப்பவேணுமானாலும் கலைக்கச் சொல்லலாம்" என்ற பயத்தின் அடிப்படையில் அமைந்தவை. பெரும்பாலான சேரிகள் சட்டத்திற்கு புறம்பாக, அனுமதிக்கப்படாத இடங்களில் அமைக்கப்பட்டவை. இக்குடியிருப்புகள் ஒரு மதம் /மொழி/இனம் சார்ந்தவர்கள் கூட்டாக அமைத்தவை. இவற்றிற்கும் கிராமங்களில் இருக்கும் குடிசைகளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.
எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால் சேரிகள் என்றால் வறுமையில் வாடுபவர்கள், அன்றாடங்காய்ச்சிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் வாழும் இடமல்ல. இவற்றின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களின் அடியூடு. தாராவி போன்ற இடங்களில் பெரும்பணம் புரளும் மனிதர்கள் சேரிகளில் வாழ்ந்து ஆதிக்கம் செய்து வருகின்றனர். பெரும்பாலான சேரிக்குடியிருப்புகள் அங்கு வாழ்பவர்களுக்குச் சொந்தமில்லை. அரசியல் செல்வாக்கு மிகுந்த லோக்கல் தாதாக்களின் கையில் இவை இருக்கின்றன. பலரும் அங்கு வாடகை கொடுத்து விலங்குகளுக்கும் கீழான நிலையில் கொத்தடிமைகள் போல வாழ்வதைக் கண்கூடாகக் காணலாம். இக்குடியிருப்புகளில் வாடகை முன்னமே தரவேண்டும் ( ஒரு வருடத்திற்கு இவ்வளவு என விவரம் இருக்கின்றது). சில இடங்களில் மாத வாடகை. தராவிட்டால் தாதாக்களின் தொல்லை.
பெரும்பாலான சேரிவாசிகள் புலம் பெயர்ந்தவர்கள். உ.பி, பீஹார், பங்களாதேஷ், தமிழ்நாடு இவைதான் சேரிகளின் அடையாளங்கள். இன அடிப்படையில் சில இடங்களில் சேரிகள் வளர்ந்தன. 1993 கலவரங்களுக்குப் பின் இவை கொஞ்சம் நீர்த்துப்போனாலும், மும்ரா, கோரேகாவ் , கோவண்டி போன்ற இடங்கள் இன்னும் இன/மத அடிப்படையிலேயே பலம் பெற்றிருக்கின்றன.
இங்கு காலம்காலமாக வாழும் மக்கள் சேரிகளிலிருந்து வளர்ச்சி பெறமுடியாது. மிக மிகக் கடினம். சேரிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகள் அவர்களை வளர விடமாட்டார்கள். அரசியல் பொருளாதார ஆதாயம். இவ்வளவு மலிவு விலையில் வோட்டுகளும், வேலையாட்களும் எப்படிக் கிடைப்பார்கள்? இந்த விகாரமான தன்னோக்கு அரசியல் மட்டுமே மும்பையின் அவல நிலைக்கும், இச்சேரிகளின் வளர்ச்சிக்கும் காரணம். இன்னும் சொல்லப்போனால் சில கட்சிகள் தங்கள் கூட்டணியரசு பலம்பெற்றிருக்கையில், மும்பையின் புறநகர்ப்பகுதிகளில் முன்பு வாழ்ந்திருந்தவர்களை விரட்டிவிட்டு, சேரிகளை அவர்கள் அடியாட்கள் அமைக்க உதவினர். குடிநீர், மின்சார இணைப்புகள் அக்குடியிருப்ப்புகளுக்கு விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டன. பின்னர் ஓவ்வொரு கட்சியின் ஆட்சிக்காலத்திலும், " இந்தக் குறிப்பிட்ட வருடத்திற்கு முன் வந்தவர்கள் சேரிகளில் இருக்க அனுமதிக்கப்படுவர்" என cut off வருடங்கள் வரையறுக்கப்பட்டன. 1970- 1990,95,2000 என வருடங்களின் வரையறுப்பு எல்லைகள் நீண்டுகொண்டே போயின. அனைத்தும் வோட்டுகளுக்காகவும், அடிமட்ட விலையில் அக்கட்சிகளுக்கு இம்மக்கள் வேலை செய்வதற்காகவும் மட்டும். இக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் தொழிற்பேட்டைகளும், அவர்களுக்குச் சொந்தமான ஆட்டோ ரிக்ஷாக்களுமே இம்மக்களுக்கு வேலைக்கான வழி. மீறமுடியாது... வேலைக்கான போட்டியும் அப்படி.
பொருளாதாரத்தில் இச்சேரிகள் கட்சிகளுக்கும் வணிகர்களுக்கும் எப்படி உதவுகின்றன எனப்பார்ப்போம்.
___________________
உருப்படாதது நாராயணன் மும்பை சேரிகள் குறித்து எழுதியிருந்தார்.மணியனின் பதிவு சிறப்பாக அமைந்திருந்தது. சேரியில் வாழ்ந்திராவிட்டாலும், எனது மும்பை வாழ்வின் ஆரம்பக்காலங்களில் சேரிகளின் மிக மிக அருகில் வாழ்ந்ததாலும், அங்கு வாழும் மக்களின் சிலரின் நட்பு கிடைத்ததாலும் இச்சேரி வாழ்வு குறித்து ஓரளவு எனக்குத் தெரியும். சில இடங்கள் தவிர்த்து பெரும்பாலும் பொதுவாகச் சேரிகள் எனவே இக்கட்டுரையில் அழைத்திருக்கிறேன். முகமூடியின் பதிவுகளில் அவர் சுட்டியிருக்கும் பாதுகாப்பு நோக்கம்தான் இதற்கும்!
சேரிவாழ்வு குறித்து எழுதுமுன் சில விளக்கங்கள் அவசியம். மும்பை slum என்பதை சேரியென நான் இங்கு விளித்திருக்கிறேன். மும்பையில் சேரி என்பது குடில்/குடிசை என்றல்ல. வறுமை என்பதற்கும் எளிமைக்கும் உள்ள வித்தியாசம். சேரியின் வீடுகள் தகரடப்பாக்கள், திருடிக்கொண்டுவந்த செங்கல்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள் கொண்டு கன்னாபின்னாவென ஏதோ அமைக்கப்பட்ட ஒரு குடியமைப்பு. இவை ஒரு சீராகவும் அமைந்திருக்காது. ஏதோ ஒரிடத்தில் இருக்கவேண்டுமென்பதால் அமைக்கப்பட்டவை. ஒரு வீட்டின் கழிவுநீர் மற்றவீட்டினுள்வழி புகுந்து செல்வது சாதாரணம். "எப்பவேணுமானாலும் கலைக்கச் சொல்லலாம்" என்ற பயத்தின் அடிப்படையில் அமைந்தவை. பெரும்பாலான சேரிகள் சட்டத்திற்கு புறம்பாக, அனுமதிக்கப்படாத இடங்களில் அமைக்கப்பட்டவை. இக்குடியிருப்புகள் ஒரு மதம் /மொழி/இனம் சார்ந்தவர்கள் கூட்டாக அமைத்தவை. இவற்றிற்கும் கிராமங்களில் இருக்கும் குடிசைகளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.
எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால் சேரிகள் என்றால் வறுமையில் வாடுபவர்கள், அன்றாடங்காய்ச்சிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் வாழும் இடமல்ல. இவற்றின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களின் அடியூடு. தாராவி போன்ற இடங்களில் பெரும்பணம் புரளும் மனிதர்கள் சேரிகளில் வாழ்ந்து ஆதிக்கம் செய்து வருகின்றனர். பெரும்பாலான சேரிக்குடியிருப்புகள் அங்கு வாழ்பவர்களுக்குச் சொந்தமில்லை. அரசியல் செல்வாக்கு மிகுந்த லோக்கல் தாதாக்களின் கையில் இவை இருக்கின்றன. பலரும் அங்கு வாடகை கொடுத்து விலங்குகளுக்கும் கீழான நிலையில் கொத்தடிமைகள் போல வாழ்வதைக் கண்கூடாகக் காணலாம். இக்குடியிருப்புகளில் வாடகை முன்னமே தரவேண்டும் ( ஒரு வருடத்திற்கு இவ்வளவு என விவரம் இருக்கின்றது). சில இடங்களில் மாத வாடகை. தராவிட்டால் தாதாக்களின் தொல்லை.
பெரும்பாலான சேரிவாசிகள் புலம் பெயர்ந்தவர்கள். உ.பி, பீஹார், பங்களாதேஷ், தமிழ்நாடு இவைதான் சேரிகளின் அடையாளங்கள். இன அடிப்படையில் சில இடங்களில் சேரிகள் வளர்ந்தன. 1993 கலவரங்களுக்குப் பின் இவை கொஞ்சம் நீர்த்துப்போனாலும், மும்ரா, கோரேகாவ் , கோவண்டி போன்ற இடங்கள் இன்னும் இன/மத அடிப்படையிலேயே பலம் பெற்றிருக்கின்றன.
இங்கு காலம்காலமாக வாழும் மக்கள் சேரிகளிலிருந்து வளர்ச்சி பெறமுடியாது. மிக மிகக் கடினம். சேரிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகள் அவர்களை வளர விடமாட்டார்கள். அரசியல் பொருளாதார ஆதாயம். இவ்வளவு மலிவு விலையில் வோட்டுகளும், வேலையாட்களும் எப்படிக் கிடைப்பார்கள்? இந்த விகாரமான தன்னோக்கு அரசியல் மட்டுமே மும்பையின் அவல நிலைக்கும், இச்சேரிகளின் வளர்ச்சிக்கும் காரணம். இன்னும் சொல்லப்போனால் சில கட்சிகள் தங்கள் கூட்டணியரசு பலம்பெற்றிருக்கையில், மும்பையின் புறநகர்ப்பகுதிகளில் முன்பு வாழ்ந்திருந்தவர்களை விரட்டிவிட்டு, சேரிகளை அவர்கள் அடியாட்கள் அமைக்க உதவினர். குடிநீர், மின்சார இணைப்புகள் அக்குடியிருப்ப்புகளுக்கு விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டன. பின்னர் ஓவ்வொரு கட்சியின் ஆட்சிக்காலத்திலும், " இந்தக் குறிப்பிட்ட வருடத்திற்கு முன் வந்தவர்கள் சேரிகளில் இருக்க அனுமதிக்கப்படுவர்" என cut off வருடங்கள் வரையறுக்கப்பட்டன. 1970- 1990,95,2000 என வருடங்களின் வரையறுப்பு எல்லைகள் நீண்டுகொண்டே போயின. அனைத்தும் வோட்டுகளுக்காகவும், அடிமட்ட விலையில் அக்கட்சிகளுக்கு இம்மக்கள் வேலை செய்வதற்காகவும் மட்டும். இக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் தொழிற்பேட்டைகளும், அவர்களுக்குச் சொந்தமான ஆட்டோ ரிக்ஷாக்களுமே இம்மக்களுக்கு வேலைக்கான வழி. மீறமுடியாது... வேலைக்கான போட்டியும் அப்படி.
பொருளாதாரத்தில் இச்சேரிகள் கட்சிகளுக்கும் வணிகர்களுக்கும் எப்படி உதவுகின்றன எனப்பார்ப்போம்.
Monday, February 27, 2006
அறியாமையில் மறையும் வரலாற்றுப் பொக்கிஷம்
அறியாமையில் மறையும் வரலாற்றுப் பொக்கிஷம்
__________________________________________________
அகமதாபாத் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது.போன வாரம் சென்றபோது , மீண்டும் சொந்த ஊருக்குப் போகும் போது வருமே அந்த உற்சாகம் தொத்திக்கொண்டது. நாலு வருடங்கள் வாழ்ந்த ஊர். அதென்னமோ தெரியவில்லை.. இதுவரை நான் பார்த்த தமிழர்கள் அகமதாபாத் பிடிக்கவில்லை எனச் சொன்னதில்லை.
இத்தனைக்கும் மாசு அப்பிக்கிடக்கும் காற்றும், தூசியும், அனல் பறக்கும் கோடையும், ஒழுங்கு என்பதே இல்லாத சாலைப்போக்குவரத்தும் அகமதாபாத்தின் ஆழமான முத்திரைகள். இதெல்லாவற்றையும் தாண்டி அது ஈர்க்கிறதென்றால் -அது புதிர்தான்.
அகமதாபாத்தின் இஸ்லாமிய கட்டிடக்கலையின் வேலைப்பாடுகள் நெரிசல் மிகுந்த சாலையோரம் சர்வசாதாரணமாகத் தென்படும். புகழ்பெற்ற ஜூம்மா மசூதிச் சன்னல், ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் சின்னத்தில் இன்று ஜொலிக்கிறது. என்ன கொடுமையென்றால், வரலாற்றுச் சின்னங்கள் இப்படி அலட்டலில்லாமல் பொதுப்படையாகக் கிடப்பது என்பது இப்போது அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது என்ற நிலையாக மாறியிருப்பதுதான்.
ஊசலாடும் மினாரெட்டுகள் (swinging minarets) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரே மாதிரியான இரு மினாரெட் தூண்கள் மிக்க கலைவடிவுடன் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். ஒன்றில் ஆட்கள் ஏறி, அசைத்தால், இருபது அடி தூரத்தில் இருக்கும் மற்ற மினாரெட் ஊசலாடும்.. இந்த அதிசய மினாரெட்டுகள் அகமதாபாத்தில் பல இருந்தன. ஆங்கிலேயர் காலத்தில், இந்த அதிசயத்தின் ஆணிவேர் காண, அதனைத் தோண்டி நிரந்தரமான பழுதுகளை ஒரு மினாரெட் இணையில் (pair) ஏற்படுத்திவிட்டனர். மற்றொரு மினாரெட் செட் ஒன்று அகமதாபாத் காலுப்பூர் இரயில்வே நிலையத்தின் அருகே இருக்கிறது. இப்போதெல்லாம் ஏறி மினாரெட்டை உலுக்க முடியாது. கீறல்கள் விழுந்துவிடும் என தடை விதித்துவிட்டனர்.
அத்தோடு முடிந்தது அதன் பாதுகாப்பும், பராமரிப்பும்.. இருளடைந்து கிடக்கும் அம்மினாரெட்டுகள் அருகே இம்முறை சென்று பார்த்தேன். இரயில்வே பிளாட்பாரம் முடியும் எல்லையில் புதர்கள் மண்டி , வேலிக்குள் அடைந்துகிடக்கிறது மினாரெட் அதிசயம். அதன் அருகே இரயில்வே நிர்வாகத்தின் அலுவலகம்.. சோம்பலாக குழல்விளக்கொளியில் குளித்து நிற்க... நம்பினால் நம்புங்கள்.. இப்படி ஒரு அதிசயம் ஒரு விளக்கும் இல்லாமல் பேய் பங்களா மாதிரி இருளில் அழுந்திக்கிடக்கிறது.
ஜனவரியில் பிலடெல்பியாவில் நான் சந்தித்த ஒரு பெண், தனது பெற்றோர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றார். இந்த ஊசலாடும் மினாரெட்டுகள் பற்றிச் சொன்னபோது அவர் வியப்பில் ஆழ்ந்தார். " இப்படி ஒன்று இருக்கிறதா? யாரும் சொல்லவேயில்லையே? இரண்டு வருடம் முன்னால்தான் அகமதாபாத் போய் வந்தேன்" என்றார். இதுதான் நமது பொக்கிஷங்கள் குறித்த அறிவு. இதற்கு பிலடெல்பியா போகவேண்டாம். மும்பையில் அந்தேரி போனால்கூடப் போதும்.
அகமதாபாத்திலேயே பலருக்கும் இதுகுறித்துத் தெரியாது. " என்னமோ மசூதி அல்லது சமாதியாயிருக்கும்" என்பார்கள். இதுமட்டும் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ இருந்திருந்தால் சுற்றுலாப் பயணிகள் மொய்த்திருக்க எக்கச்சக்கமாக விளம்பரப்படுத்தி தூள் கிளப்பியிருப்பார்கள். மினாரெட்டுகளையும் நன்றாகப் பராமரித்திருப்பார்கள். ஹூம்..மினாரெட்டுகளுக்கு அதிர்ஷ்டமில்லை.
என்றுதான் நமக்கு "பழமை இருந்தநிலை" தெரியுமோ?
__________________________________________________
அகமதாபாத் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது.போன வாரம் சென்றபோது , மீண்டும் சொந்த ஊருக்குப் போகும் போது வருமே அந்த உற்சாகம் தொத்திக்கொண்டது. நாலு வருடங்கள் வாழ்ந்த ஊர். அதென்னமோ தெரியவில்லை.. இதுவரை நான் பார்த்த தமிழர்கள் அகமதாபாத் பிடிக்கவில்லை எனச் சொன்னதில்லை.
இத்தனைக்கும் மாசு அப்பிக்கிடக்கும் காற்றும், தூசியும், அனல் பறக்கும் கோடையும், ஒழுங்கு என்பதே இல்லாத சாலைப்போக்குவரத்தும் அகமதாபாத்தின் ஆழமான முத்திரைகள். இதெல்லாவற்றையும் தாண்டி அது ஈர்க்கிறதென்றால் -அது புதிர்தான்.
அகமதாபாத்தின் இஸ்லாமிய கட்டிடக்கலையின் வேலைப்பாடுகள் நெரிசல் மிகுந்த சாலையோரம் சர்வசாதாரணமாகத் தென்படும். புகழ்பெற்ற ஜூம்மா மசூதிச் சன்னல், ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் சின்னத்தில் இன்று ஜொலிக்கிறது. என்ன கொடுமையென்றால், வரலாற்றுச் சின்னங்கள் இப்படி அலட்டலில்லாமல் பொதுப்படையாகக் கிடப்பது என்பது இப்போது அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது என்ற நிலையாக மாறியிருப்பதுதான்.
ஊசலாடும் மினாரெட்டுகள் (swinging minarets) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரே மாதிரியான இரு மினாரெட் தூண்கள் மிக்க கலைவடிவுடன் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். ஒன்றில் ஆட்கள் ஏறி, அசைத்தால், இருபது அடி தூரத்தில் இருக்கும் மற்ற மினாரெட் ஊசலாடும்.. இந்த அதிசய மினாரெட்டுகள் அகமதாபாத்தில் பல இருந்தன. ஆங்கிலேயர் காலத்தில், இந்த அதிசயத்தின் ஆணிவேர் காண, அதனைத் தோண்டி நிரந்தரமான பழுதுகளை ஒரு மினாரெட் இணையில் (pair) ஏற்படுத்திவிட்டனர். மற்றொரு மினாரெட் செட் ஒன்று அகமதாபாத் காலுப்பூர் இரயில்வே நிலையத்தின் அருகே இருக்கிறது. இப்போதெல்லாம் ஏறி மினாரெட்டை உலுக்க முடியாது. கீறல்கள் விழுந்துவிடும் என தடை விதித்துவிட்டனர்.
அத்தோடு முடிந்தது அதன் பாதுகாப்பும், பராமரிப்பும்.. இருளடைந்து கிடக்கும் அம்மினாரெட்டுகள் அருகே இம்முறை சென்று பார்த்தேன். இரயில்வே பிளாட்பாரம் முடியும் எல்லையில் புதர்கள் மண்டி , வேலிக்குள் அடைந்துகிடக்கிறது மினாரெட் அதிசயம். அதன் அருகே இரயில்வே நிர்வாகத்தின் அலுவலகம்.. சோம்பலாக குழல்விளக்கொளியில் குளித்து நிற்க... நம்பினால் நம்புங்கள்.. இப்படி ஒரு அதிசயம் ஒரு விளக்கும் இல்லாமல் பேய் பங்களா மாதிரி இருளில் அழுந்திக்கிடக்கிறது.
ஜனவரியில் பிலடெல்பியாவில் நான் சந்தித்த ஒரு பெண், தனது பெற்றோர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றார். இந்த ஊசலாடும் மினாரெட்டுகள் பற்றிச் சொன்னபோது அவர் வியப்பில் ஆழ்ந்தார். " இப்படி ஒன்று இருக்கிறதா? யாரும் சொல்லவேயில்லையே? இரண்டு வருடம் முன்னால்தான் அகமதாபாத் போய் வந்தேன்" என்றார். இதுதான் நமது பொக்கிஷங்கள் குறித்த அறிவு. இதற்கு பிலடெல்பியா போகவேண்டாம். மும்பையில் அந்தேரி போனால்கூடப் போதும்.
அகமதாபாத்திலேயே பலருக்கும் இதுகுறித்துத் தெரியாது. " என்னமோ மசூதி அல்லது சமாதியாயிருக்கும்" என்பார்கள். இதுமட்டும் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ இருந்திருந்தால் சுற்றுலாப் பயணிகள் மொய்த்திருக்க எக்கச்சக்கமாக விளம்பரப்படுத்தி தூள் கிளப்பியிருப்பார்கள். மினாரெட்டுகளையும் நன்றாகப் பராமரித்திருப்பார்கள். ஹூம்..மினாரெட்டுகளுக்கு அதிர்ஷ்டமில்லை.
என்றுதான் நமக்கு "பழமை இருந்தநிலை" தெரியுமோ?
தேவை- பெற்றோர்களுக்கு ஒரு பள்ளி
தேவை- பெற்றோர்களுக்கு ஒரு பள்ளி
__________________________________________
எனது மகனின் பள்ளியில் இன்று விசேட பயிற்சி முகம் இருக்கவே, அவனுடன் நானும் சென்றிருந்தேன்.( வீட்டுல இருந்து என்ன வெட்டிமுறிக்கிறீங்க? அவனையாச்சும் பள்ளிக்கூடத்துல விட்டுட்டு திரும்ப கூட்டிட்டு வாங்களேன்" -யார் குரல் என்பதை நான் சொல்லத்த்தேவையில்லை).
ஒரு துறுதுறு சிறுமி என் கவனத்தை ஈர்த்தது. அவளது அக்காவுக்கு பயிற்சி முகாம் போலும்.. தந்தையின் கை பிடித்து நின்றிருந்த குழந்தையின் கண்களில் ஒரு தயக்கம்..வேதனை..
" ஸே குட்மார்னிங் டூ டீச்சர்" தந்தை உரத்த குரலில் அக்குழந்தையை அன்புடன் வற்புறுத்த, அது முகத்தைத் திருப்பிக்கொண்டது. சாதாரணமான விசயம்தான்.. மனிதர் விட்டிருக்கலாம்.
அத்தனை பேர் முன்பாக அக்குழந்தையின் தோள்களை வலுக்கட்டாயமாகத் திருப்பினார். நெற்றி சுருங்கியதில் உலர்ந்த சந்தனப் பொடி கொஞ்சம் நொறுங்கி மனிதர் டீஷர்ட்டில் விழுந்தது. "ஐ ஸே.... ஸே குட்மார்னிங்" .. அந்த ஹால் முழுதும் கொஞ்சம் திரும்பிப் பார்த்தது. வசவு தொடங்கியது.
"எத்தனை தடவை சொல்லிக்கொடுத்திருக்கிறேன். ஸ்கூலுக்கு வந்தா எல்லார்கிட்டயும் சிரிச்சுப் பேசணும். ஹலோ ஆண்ட்டி, அங்கிள்னு சொல்லணும்னு? வாய்ல கொழுக்கட்டையா இருக்கு. சனியனே"
ஆசிரியை " விடுங்கள் சார். குழந்தைதானே. ஹலோ பேபி, கைஸீ ஹை தும்?" எனக் கொஞ்சிவிட்டு அவசரமாக அங்கிருந்து நடந்துவிட்டார்." இல்லேங்க. இதுக்கு இன்னும் ஒழுங்கா இருக்கணும்னு நினைப்பே வரலை. எப்படிப் பேசணும்னு தெரியலைன்னா என்ன படிக்கச்சு என்ன கிழிக்கப்போறா?" வசவு பாலக்காட்டுத் தமிழில் வலுத்தது.
அம்மனிதர் தனது மற்ற குழந்தையை பரீட்சை ஹாலில் பார்த்து விட்டு வரச் சென்ற பொழுதில், அவளை நான் அணுகினேன்.
" என்னம்மா? உம்பேரு என்ன?" எனக் கேட்டதில் அவள் சற்றே நிமிர்ந்து பார்த்தாள். உதடு துடித்தது. பேசவில்லை.
" என்னாச்சு உனக்கு? என்னவேணும்?" என்றேன்.
" எனிக்கு ஆத்யம் மூச்சா போணும்" என்றது குழந்தை விக்கி விக்கி.
"டாய்லெட் அங்கேயிருக்கு பாரு" எனக் காட்டியவுடன், அவசர அவசரமாக விரைந்த அக்குழந்தையைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.
குழந்தையின் தேவை புரியாத மடமனிதர்கள் , ஒழுங்கு சொல்லிக்கொடுக்கிறார்களாம்.. "ஹலோ, குட்மார்னிங், " எனச் செயற்கையாகச் சொல்லத் தூண்டுகிறவர்களுக்கு , தாய்மொழியில் குழந்தை தனக்கு என்ன வேண்டும் என்பதைச் வெளிப்படுத்துவதைக் கேட்க நேரமில்லைபோலும். குழந்தை தனது தேவைகளை வெளிப்படுத்துவதை அவமானமாகக் கருதுவது எந்தவகையில் டிசிப்ளின் ஆகிறது? இயற்கை உபாதையில் தத்தளிக்கும் ஒரு சிறுமி எப்படி சிரித்தபடி ஹலோ எனச் சொல்லமுடியும்? செயற்கையாகப் புன்னகைக்க ஒரு மலருக்குச் சொல்லிக்கொடுக்கும் விபரீதப் பாடங்களை எப்படி தணிக்கை செய்வது? பள்ளிக்கூடத்தில் ஒரு வகையான அழுத்தமென்றால், இந்த அரைகுறைப் பெற்றோர்கள் படுத்தும் பாடு..
பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் எனச் சொல்லிக்கொடுக்க எதாவது பள்ளிக்கூடம் இருக்கிறதா?
__________________________________________
எனது மகனின் பள்ளியில் இன்று விசேட பயிற்சி முகம் இருக்கவே, அவனுடன் நானும் சென்றிருந்தேன்.( வீட்டுல இருந்து என்ன வெட்டிமுறிக்கிறீங்க? அவனையாச்சும் பள்ளிக்கூடத்துல விட்டுட்டு திரும்ப கூட்டிட்டு வாங்களேன்" -யார் குரல் என்பதை நான் சொல்லத்த்தேவையில்லை).
ஒரு துறுதுறு சிறுமி என் கவனத்தை ஈர்த்தது. அவளது அக்காவுக்கு பயிற்சி முகாம் போலும்.. தந்தையின் கை பிடித்து நின்றிருந்த குழந்தையின் கண்களில் ஒரு தயக்கம்..வேதனை..
" ஸே குட்மார்னிங் டூ டீச்சர்" தந்தை உரத்த குரலில் அக்குழந்தையை அன்புடன் வற்புறுத்த, அது முகத்தைத் திருப்பிக்கொண்டது. சாதாரணமான விசயம்தான்.. மனிதர் விட்டிருக்கலாம்.
அத்தனை பேர் முன்பாக அக்குழந்தையின் தோள்களை வலுக்கட்டாயமாகத் திருப்பினார். நெற்றி சுருங்கியதில் உலர்ந்த சந்தனப் பொடி கொஞ்சம் நொறுங்கி மனிதர் டீஷர்ட்டில் விழுந்தது. "ஐ ஸே.... ஸே குட்மார்னிங்" .. அந்த ஹால் முழுதும் கொஞ்சம் திரும்பிப் பார்த்தது. வசவு தொடங்கியது.
"எத்தனை தடவை சொல்லிக்கொடுத்திருக்கிறேன். ஸ்கூலுக்கு வந்தா எல்லார்கிட்டயும் சிரிச்சுப் பேசணும். ஹலோ ஆண்ட்டி, அங்கிள்னு சொல்லணும்னு? வாய்ல கொழுக்கட்டையா இருக்கு. சனியனே"
ஆசிரியை " விடுங்கள் சார். குழந்தைதானே. ஹலோ பேபி, கைஸீ ஹை தும்?" எனக் கொஞ்சிவிட்டு அவசரமாக அங்கிருந்து நடந்துவிட்டார்." இல்லேங்க. இதுக்கு இன்னும் ஒழுங்கா இருக்கணும்னு நினைப்பே வரலை. எப்படிப் பேசணும்னு தெரியலைன்னா என்ன படிக்கச்சு என்ன கிழிக்கப்போறா?" வசவு பாலக்காட்டுத் தமிழில் வலுத்தது.
அம்மனிதர் தனது மற்ற குழந்தையை பரீட்சை ஹாலில் பார்த்து விட்டு வரச் சென்ற பொழுதில், அவளை நான் அணுகினேன்.
" என்னம்மா? உம்பேரு என்ன?" எனக் கேட்டதில் அவள் சற்றே நிமிர்ந்து பார்த்தாள். உதடு துடித்தது. பேசவில்லை.
" என்னாச்சு உனக்கு? என்னவேணும்?" என்றேன்.
" எனிக்கு ஆத்யம் மூச்சா போணும்" என்றது குழந்தை விக்கி விக்கி.
"டாய்லெட் அங்கேயிருக்கு பாரு" எனக் காட்டியவுடன், அவசர அவசரமாக விரைந்த அக்குழந்தையைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.
குழந்தையின் தேவை புரியாத மடமனிதர்கள் , ஒழுங்கு சொல்லிக்கொடுக்கிறார்களாம்.. "ஹலோ, குட்மார்னிங், " எனச் செயற்கையாகச் சொல்லத் தூண்டுகிறவர்களுக்கு , தாய்மொழியில் குழந்தை தனக்கு என்ன வேண்டும் என்பதைச் வெளிப்படுத்துவதைக் கேட்க நேரமில்லைபோலும். குழந்தை தனது தேவைகளை வெளிப்படுத்துவதை அவமானமாகக் கருதுவது எந்தவகையில் டிசிப்ளின் ஆகிறது? இயற்கை உபாதையில் தத்தளிக்கும் ஒரு சிறுமி எப்படி சிரித்தபடி ஹலோ எனச் சொல்லமுடியும்? செயற்கையாகப் புன்னகைக்க ஒரு மலருக்குச் சொல்லிக்கொடுக்கும் விபரீதப் பாடங்களை எப்படி தணிக்கை செய்வது? பள்ளிக்கூடத்தில் ஒரு வகையான அழுத்தமென்றால், இந்த அரைகுறைப் பெற்றோர்கள் படுத்தும் பாடு..
பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் எனச் சொல்லிக்கொடுக்க எதாவது பள்ளிக்கூடம் இருக்கிறதா?
Sunday, February 26, 2006
வந்துட்டான்யா.... வந்துட்டான்யா...
வந்துட்டான்யா.... வந்துட்டான்யா...
__________________________________
ஜனவரி முழுதும் வெளிநாட்டுப் பயணங்கள். சரி முடிந்தது என நிமிர்ந்தால், இந்த மாத முழுதும் மீண்டும் உள்ளூர்ப் பயணங்கள். அரக்கப்பரக்க அமெரிக்கா சென்றதில் நண்பர்கள் பலருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. நமது திருமலைராஜனுடன் மட்டும் பேசமுடிந்தது -அதுவும் தொலைபேசியில். அடுத்த முறை ஒழுங்காகத் திட்டமிட்டுச் செல்லவேண்டுமெனத் தீர்மானித்திருக்கிறேன். (ஒவ்வொரு முறையும் இதே கதைதான்!)
அமெரிக்க விசா காலத்தீர்வையானதால் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. டாக்டர்.கோவர்த்தன் மேத்தாவிற்கே இன்ன பாடு படுத்தினார்கள் என்றால் என்னளவில் எப்படியிருந்திருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை. வெறுப்பேத்திவிட்டார்கள். "என்ன வேலை உனக்கு?" என ஆரம்பித்தவர்கள் " குரோமோட்டாகிராபி என்றாலென்ன? மாஸ் ஸ்பெக்ட்ட்ரோமீட்டர் என்றால் யார் அல்லது என்ன?எனக்குப் புரியும்படி சொல்லு" எனப் பாதுகாப்பான கூண்டில் மறுபுறமிருந்து ஒருவர் கேட்டதில் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். இரண்டு நிமிஷத்தில் சொல்லமுடிகிற விஷயமா அது? நான் உளற ஆரம்பித்ததும், என்னமோ என் தலையெழுத்து நன்றாக இருந்ததில் "இனிமே இந்த வரிசையில் பத்துவருடத்திற்கு வராதே" என முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள். கிளம்ப ஒரு நாள் இருக்கும்போது விசா கிடைத்ததால் பலருக்கும் முன்பே சொல்ல முடியவில்லை. பல்குத்திக்கொண்டு ஹாய்யாக இருந்த நேரத்தில் சிலரைக் கண்டு அறுத்து எடுத்திருக்கலாம்.. பிழைத்துப்போனார்கள் நம் நண்பர்கள்.
இந்தக்கூத்திற்கெல்லாம் முந்திய நாள் எனது நண்பனின் தொலைபேசி வந்தது. " லே மக்கா. நீ ப்ளாக் எல்லாம் எழுதுவியா?' என்றான். அவனுக்கு படிக்கிற பழக்கம் பள்ளிக்கூடத்திலேயே கிடையாது.வலைப்பதிவு பக்கம் எட்டிக்கூடப்பார்க்கமாட்டான். " ஆமாடே" என்றேன். " அதுல அமெரிக்கா பத்தி தப்பா எதனாச்சும் எழுதியிருக்கியா? இருந்தா அழிச்சுருல" என்றான். விழித்தேன்.
"தப்பான்னா?"
" இராக் , ஒசாமா பத்தி, அமெரிக்க சமூகத்தைப்பத்தி எதாச்சும் காட்டமா எழுதியிருந்தா விசா கிடைக்காதாம்." என்றான்.
'இதெல்லாம் ஓவர். கொஞ்சம் விட்டாபோதுமே, சி.ஐ.ஏ உக்காந்து வேலை மெனக்ககெட்டு "எவண்டா தமிழ்ல தப்பா எழுதியிருக்கான்னு" பார்த்துக்கிட்டிருக்கு-ங்கிற லெவல்ல வம்பு பரப்புவது தவறு' என அவனுக்கு எடுத்துச்சொன்னேன்.
மறுத்தான். "மக்கா, வலையில் வன்முறை, வம்பு பரப்புவது பத்தி படு சீரியசாக அமெரிக்கா கவனித்து வருகிறது. முக்கியமா அமெரிக்கர்களை வெறுக்கும் வகையில் எழுதப்படுவது, அமெரிக்க கலாச்சாரத்தை உதாசீனப்படுத்துவது போன்றவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். பாத்துடே" என்றான். என்னமோ, என் வலைப்பதிவு அவர்களுக்கு அறுவையாக இருந்திருக்கிறது போலும்.. விட்டுவிட்டார்கள்.
இந்த முறை விமான ரூட் - படு கேணத்தனமாக அமைத்திருந்தார்கள். போய் வந்ததும் டிராவல் ஏஜன்ஸியை ஒரு பிடி பிடித்தேன். மிலான் விமான நிலையத்தில் 4 மணிநேரம்... நியூயார்க்கில் 3 மணிநேரம் காத்திருப்பு.. டாம்ப்பா போக இப்படி தவளை மாதிரி தத்தி தத்திப் போனது ஒரு லூசுத்தனமென்றால், திரும்பிவந்தது இன்னும் பைத்தியக்காரத்தனம்.. பிலடெல்பியாவிலிருந்து நேரே மிலான்/பிராங்க்பர்ட் - மும்பை எனப் போவதை விட்டுவிட்டு, பிலடெல்பியாவிலிருந்து நேரே கீழே அட்லாண்டா ( 4 மணிநேரம்காத்திருப்பு)-மிலான் -மும்பை என ஒரு எலும்பு ஒடியும் பயணம்.. கொடுமை மிலான் விமானதளம் - கழிவறைகள் மும்பையை விட மோசம்.
பொதுவாக இந்த காத்திருப்பு நேரங்களில் கொஞ்சமாக ஆட்களைப் பிடித்து அறுத்து பொழுதுபோக்குவேன். எதாவது விமான நிலையத்தில் கொஞ்சம் லூசு மாதிரி ஒரு ஆள் உங்களோடு இலக்கியம்/ கவிதை/சமூகம் எனப் பேசத்தொடங்கினால் "நீ சுதாகர்தானே" எனத் தைரியமாகக் கேட்டுவிடாதீர்கள். என்னைப்போல பலரும் இருக்கிறார்கள் என்பதை மிலான் நிரூபித்தது.
அதுபற்றி அப்புறம் எழுதுகிறேன்.
__________________________________
ஜனவரி முழுதும் வெளிநாட்டுப் பயணங்கள். சரி முடிந்தது என நிமிர்ந்தால், இந்த மாத முழுதும் மீண்டும் உள்ளூர்ப் பயணங்கள். அரக்கப்பரக்க அமெரிக்கா சென்றதில் நண்பர்கள் பலருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. நமது திருமலைராஜனுடன் மட்டும் பேசமுடிந்தது -அதுவும் தொலைபேசியில். அடுத்த முறை ஒழுங்காகத் திட்டமிட்டுச் செல்லவேண்டுமெனத் தீர்மானித்திருக்கிறேன். (ஒவ்வொரு முறையும் இதே கதைதான்!)
அமெரிக்க விசா காலத்தீர்வையானதால் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. டாக்டர்.கோவர்த்தன் மேத்தாவிற்கே இன்ன பாடு படுத்தினார்கள் என்றால் என்னளவில் எப்படியிருந்திருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை. வெறுப்பேத்திவிட்டார்கள். "என்ன வேலை உனக்கு?" என ஆரம்பித்தவர்கள் " குரோமோட்டாகிராபி என்றாலென்ன? மாஸ் ஸ்பெக்ட்ட்ரோமீட்டர் என்றால் யார் அல்லது என்ன?எனக்குப் புரியும்படி சொல்லு" எனப் பாதுகாப்பான கூண்டில் மறுபுறமிருந்து ஒருவர் கேட்டதில் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். இரண்டு நிமிஷத்தில் சொல்லமுடிகிற விஷயமா அது? நான் உளற ஆரம்பித்ததும், என்னமோ என் தலையெழுத்து நன்றாக இருந்ததில் "இனிமே இந்த வரிசையில் பத்துவருடத்திற்கு வராதே" என முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள். கிளம்ப ஒரு நாள் இருக்கும்போது விசா கிடைத்ததால் பலருக்கும் முன்பே சொல்ல முடியவில்லை. பல்குத்திக்கொண்டு ஹாய்யாக இருந்த நேரத்தில் சிலரைக் கண்டு அறுத்து எடுத்திருக்கலாம்.. பிழைத்துப்போனார்கள் நம் நண்பர்கள்.
இந்தக்கூத்திற்கெல்லாம் முந்திய நாள் எனது நண்பனின் தொலைபேசி வந்தது. " லே மக்கா. நீ ப்ளாக் எல்லாம் எழுதுவியா?' என்றான். அவனுக்கு படிக்கிற பழக்கம் பள்ளிக்கூடத்திலேயே கிடையாது.வலைப்பதிவு பக்கம் எட்டிக்கூடப்பார்க்கமாட்டான். " ஆமாடே" என்றேன். " அதுல அமெரிக்கா பத்தி தப்பா எதனாச்சும் எழுதியிருக்கியா? இருந்தா அழிச்சுருல" என்றான். விழித்தேன்.
"தப்பான்னா?"
" இராக் , ஒசாமா பத்தி, அமெரிக்க சமூகத்தைப்பத்தி எதாச்சும் காட்டமா எழுதியிருந்தா விசா கிடைக்காதாம்." என்றான்.
'இதெல்லாம் ஓவர். கொஞ்சம் விட்டாபோதுமே, சி.ஐ.ஏ உக்காந்து வேலை மெனக்ககெட்டு "எவண்டா தமிழ்ல தப்பா எழுதியிருக்கான்னு" பார்த்துக்கிட்டிருக்கு-ங்கிற லெவல்ல வம்பு பரப்புவது தவறு' என அவனுக்கு எடுத்துச்சொன்னேன்.
மறுத்தான். "மக்கா, வலையில் வன்முறை, வம்பு பரப்புவது பத்தி படு சீரியசாக அமெரிக்கா கவனித்து வருகிறது. முக்கியமா அமெரிக்கர்களை வெறுக்கும் வகையில் எழுதப்படுவது, அமெரிக்க கலாச்சாரத்தை உதாசீனப்படுத்துவது போன்றவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். பாத்துடே" என்றான். என்னமோ, என் வலைப்பதிவு அவர்களுக்கு அறுவையாக இருந்திருக்கிறது போலும்.. விட்டுவிட்டார்கள்.
இந்த முறை விமான ரூட் - படு கேணத்தனமாக அமைத்திருந்தார்கள். போய் வந்ததும் டிராவல் ஏஜன்ஸியை ஒரு பிடி பிடித்தேன். மிலான் விமான நிலையத்தில் 4 மணிநேரம்... நியூயார்க்கில் 3 மணிநேரம் காத்திருப்பு.. டாம்ப்பா போக இப்படி தவளை மாதிரி தத்தி தத்திப் போனது ஒரு லூசுத்தனமென்றால், திரும்பிவந்தது இன்னும் பைத்தியக்காரத்தனம்.. பிலடெல்பியாவிலிருந்து நேரே மிலான்/பிராங்க்பர்ட் - மும்பை எனப் போவதை விட்டுவிட்டு, பிலடெல்பியாவிலிருந்து நேரே கீழே அட்லாண்டா ( 4 மணிநேரம்காத்திருப்பு)-மிலான் -மும்பை என ஒரு எலும்பு ஒடியும் பயணம்.. கொடுமை மிலான் விமானதளம் - கழிவறைகள் மும்பையை விட மோசம்.
பொதுவாக இந்த காத்திருப்பு நேரங்களில் கொஞ்சமாக ஆட்களைப் பிடித்து அறுத்து பொழுதுபோக்குவேன். எதாவது விமான நிலையத்தில் கொஞ்சம் லூசு மாதிரி ஒரு ஆள் உங்களோடு இலக்கியம்/ கவிதை/சமூகம் எனப் பேசத்தொடங்கினால் "நீ சுதாகர்தானே" எனத் தைரியமாகக் கேட்டுவிடாதீர்கள். என்னைப்போல பலரும் இருக்கிறார்கள் என்பதை மிலான் நிரூபித்தது.
அதுபற்றி அப்புறம் எழுதுகிறேன்.
Sunday, January 01, 2006
சாத்தான் ஓதிய வேதத்திலிருந்து
விஜெய் டி.வி "இதுவா புத்தாண்டு?" என பகலில் ஒரு நிகழ்ச்சி நடத்தியிருந்தது. கறுப்பு அங்கி அணிந்து பூதாகரமான வேஷம் போட்டு என்னமோ 10ம் நூற்றாண்டு ஐரோப்பிய எமன் போல ஒருவர் தொண்டை கட்டியதோடு புத்தாண்டு கொண்டாடுவர்களை " இதாடா கொண்டாட்டம்?" என்ற ஒருமைவிளியில் பேசியது கடுப்பாக இருந்தாலும் கொஞ்சம் உண்மை ஒட்டிக்கொண்டிருந்தது.
கிரிகேரியன் காலண்டர் புத்தாண்டை சீனர்களும், யூதர்களும் இஸ்லாமிய நாடுகளும் கொண்டாடுவதில்லை என்றார் வி.ஹெச்.பி பிரமுகர் ( அதானே பார்த்தேன்?). புத்தாண்டு கொண்டாடுபவர்கள் அனைவரும் ரோட்டில் சீட்டியடித்து, குடித்து ஆடுகிறார்கள் என்ற அளவில் அனைவரும் பேசியது வருத்தமளித்தது. முறைதவறி நடப்பவர்களை தண்டிக்கவேண்டுமென்பது சரி. அதற்காக கொண்டாடுவதே தவறென்பது எப்படி சரியாகும்? புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலாச்சாரம் போய்விடுகிறது என்பவர்கள் நவராத்திரி ஆட்டங்களின் பின் குஜராத்திலும் ,மும்பையிலும் கருக்கலைப்பு அதிகமாயிருக்கிறது என்ற புள்ளிவிவர ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதை எப்படி ஜீரணித்துக்கொள்ளப்போகிறார்கள்? கலாச்சாரச் சீரழிவு என்பது கொண்டாடுவதின் நடைமுறையாக்கலில் இருக்கிறது. கொண்டாட்டத்தில் அல்ல.
"கோயில்களில் நள்ளிரவு பூஜைகளும், விசேஷ ஆராதனைகளும் புத்தாண்டு தினத்ன்று நடப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது." என்றார் அவர். சரியானதே.புத்தாண்டு என்பது பண்டிகையல்ல ( கிறிஸ்துவர்களைத் தவிர்த்து). அன்று என்ன விசேஷமென கோயில்களில் கூட்டமென்பது நல்ல கேள்வி.
அறிவுறுத்தப்படவேண்டுமென்பது ஒத்துக்கொள்ளப்படவேண்டியதுதான். அதற்காக வலிந்து " கொண்டாடவே கூடாது' என்று சொல்வதை சில நாடுகளில் இருக்கும் பழைமை வாத தீவிரவாதத்துடன் சரியாகவே ஒப்பிடலாம். தனிமனிதனாகப் பார்த்து திருந்துவதென்பது சாத்தியம். அதற்கான வழிமுறைகளை அமைத்துக்கொடுப்போம். மதுக்கடைகளை தணிக்கை செய்வதும், 18 வயது நிறையாத மாணவ மாணவியர் கூத்தாடுவதை தடுப்பதும் அவசியம்.
பெரியார்தாசன் சொன்ன கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 'இன்னிக்கு இதைச்செய்தேன் எனச் சொல்வதைவிட இதைச் செய்யவிரும்புகிறேன் என திட்டமிடுவதாக நாட்குறிப்புகள் அமைவது நல்லது.' என்றார். சரியான ஆலோசனை.
"குடித்துவிட்டு கூத்தாடுவதும், ரோட்டில் கூவிக்கொண்டு போவதும், குப்பையாக்குவதுமாடா புத்தாண்டு?" என கறுப்புஅங்கி பூதம் கேட்டது சிந்திக்கவேண்டியது. அமைதியாக எதையும் ரசிப்பதென்பது நமக்கு தெரிவதில்லை. எதிலும் கூச்சலும், அமளியுமே நமக்கு கொண்டாட்டமெனத் தெரிகிறது போலும்.
ஒரு மாணவர் பொன்மொழி உதிர்த்தார் " கேர்ல் ஃப்ரெண்டோட சுத்தறதுதான் இன்னிக்கு முக்கியம்". என்ன தெளிவு?!
"போனவருஷம் இயற்கையின் சீற்றத்தில் தவித்தவர்களுக்கு ஒரு உதவியாச்சும் செஞ்சேன்னா , அதுதாண்டா புத்தாண்டு." என்றது பூதம். கொஞ்சம் ஓவர் என்றாலும், யோசிக்கவேண்டிய விசயம்தான்.
ஒரே ஒரு நபர் மட்டுமே கொஞ்சம் தெளிவாகச் சொன்னார் " போனவருடம் புத்தாண்டு உறுதிமொழியில், இரு குழந்தைகளை படிக்க உதவி செய்வேன் என எடுத்திருந்தேன். நிறைவேற்ற முடியலை. இந்த வருஷமாவது ஒரு குழந்தையை படிக்கவைக்கணும்-னு இருக்கேன்". இப்படி ஒருத்தர் சொல்வதற்காகவாவது, இத்தனை கும்மாளங்களை சகித்துக்கொண்டு ,ஒரு புத்தாண்டும் அதன் உறுதிமொழிகளும் வரவேற்கப்படவேண்டியவையே.
எல்லாம் சரி... இந்த அறிவுரைகளை அள்ளிவழங்கும் விஜெய் டி.வி , இன்றாவது மற்ற சேனல்கள் போல புத்தாண்டுநிகழ்சிகளில் இன்ன சினிமா நடிகர்/நடிகையுடன் பேட்டி, சினிமாப் பாடல்கள் என ஆபாசக்குப்பைகள் இல்லாமல், நாடக மேதை, விஞ்ஞானி, கணித நிபுணர், பொறியியல் நிபுணர் என ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினால், ஓதிய வேதத்தின் பின் இருப்பது சாத்தான் இல்லை என நிருபிக்கலாம். இல்லையென்றால் இது வெறும்
"ஊருக்குத்தான் உபதேசம்"
கிரிகேரியன் காலண்டர் புத்தாண்டை சீனர்களும், யூதர்களும் இஸ்லாமிய நாடுகளும் கொண்டாடுவதில்லை என்றார் வி.ஹெச்.பி பிரமுகர் ( அதானே பார்த்தேன்?). புத்தாண்டு கொண்டாடுபவர்கள் அனைவரும் ரோட்டில் சீட்டியடித்து, குடித்து ஆடுகிறார்கள் என்ற அளவில் அனைவரும் பேசியது வருத்தமளித்தது. முறைதவறி நடப்பவர்களை தண்டிக்கவேண்டுமென்பது சரி. அதற்காக கொண்டாடுவதே தவறென்பது எப்படி சரியாகும்? புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலாச்சாரம் போய்விடுகிறது என்பவர்கள் நவராத்திரி ஆட்டங்களின் பின் குஜராத்திலும் ,மும்பையிலும் கருக்கலைப்பு அதிகமாயிருக்கிறது என்ற புள்ளிவிவர ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதை எப்படி ஜீரணித்துக்கொள்ளப்போகிறார்கள்? கலாச்சாரச் சீரழிவு என்பது கொண்டாடுவதின் நடைமுறையாக்கலில் இருக்கிறது. கொண்டாட்டத்தில் அல்ல.
"கோயில்களில் நள்ளிரவு பூஜைகளும், விசேஷ ஆராதனைகளும் புத்தாண்டு தினத்ன்று நடப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது." என்றார் அவர். சரியானதே.புத்தாண்டு என்பது பண்டிகையல்ல ( கிறிஸ்துவர்களைத் தவிர்த்து). அன்று என்ன விசேஷமென கோயில்களில் கூட்டமென்பது நல்ல கேள்வி.
அறிவுறுத்தப்படவேண்டுமென்பது ஒத்துக்கொள்ளப்படவேண்டியதுதான். அதற்காக வலிந்து " கொண்டாடவே கூடாது' என்று சொல்வதை சில நாடுகளில் இருக்கும் பழைமை வாத தீவிரவாதத்துடன் சரியாகவே ஒப்பிடலாம். தனிமனிதனாகப் பார்த்து திருந்துவதென்பது சாத்தியம். அதற்கான வழிமுறைகளை அமைத்துக்கொடுப்போம். மதுக்கடைகளை தணிக்கை செய்வதும், 18 வயது நிறையாத மாணவ மாணவியர் கூத்தாடுவதை தடுப்பதும் அவசியம்.
பெரியார்தாசன் சொன்ன கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 'இன்னிக்கு இதைச்செய்தேன் எனச் சொல்வதைவிட இதைச் செய்யவிரும்புகிறேன் என திட்டமிடுவதாக நாட்குறிப்புகள் அமைவது நல்லது.' என்றார். சரியான ஆலோசனை.
"குடித்துவிட்டு கூத்தாடுவதும், ரோட்டில் கூவிக்கொண்டு போவதும், குப்பையாக்குவதுமாடா புத்தாண்டு?" என கறுப்புஅங்கி பூதம் கேட்டது சிந்திக்கவேண்டியது. அமைதியாக எதையும் ரசிப்பதென்பது நமக்கு தெரிவதில்லை. எதிலும் கூச்சலும், அமளியுமே நமக்கு கொண்டாட்டமெனத் தெரிகிறது போலும்.
ஒரு மாணவர் பொன்மொழி உதிர்த்தார் " கேர்ல் ஃப்ரெண்டோட சுத்தறதுதான் இன்னிக்கு முக்கியம்". என்ன தெளிவு?!
"போனவருஷம் இயற்கையின் சீற்றத்தில் தவித்தவர்களுக்கு ஒரு உதவியாச்சும் செஞ்சேன்னா , அதுதாண்டா புத்தாண்டு." என்றது பூதம். கொஞ்சம் ஓவர் என்றாலும், யோசிக்கவேண்டிய விசயம்தான்.
ஒரே ஒரு நபர் மட்டுமே கொஞ்சம் தெளிவாகச் சொன்னார் " போனவருடம் புத்தாண்டு உறுதிமொழியில், இரு குழந்தைகளை படிக்க உதவி செய்வேன் என எடுத்திருந்தேன். நிறைவேற்ற முடியலை. இந்த வருஷமாவது ஒரு குழந்தையை படிக்கவைக்கணும்-னு இருக்கேன்". இப்படி ஒருத்தர் சொல்வதற்காகவாவது, இத்தனை கும்மாளங்களை சகித்துக்கொண்டு ,ஒரு புத்தாண்டும் அதன் உறுதிமொழிகளும் வரவேற்கப்படவேண்டியவையே.
எல்லாம் சரி... இந்த அறிவுரைகளை அள்ளிவழங்கும் விஜெய் டி.வி , இன்றாவது மற்ற சேனல்கள் போல புத்தாண்டுநிகழ்சிகளில் இன்ன சினிமா நடிகர்/நடிகையுடன் பேட்டி, சினிமாப் பாடல்கள் என ஆபாசக்குப்பைகள் இல்லாமல், நாடக மேதை, விஞ்ஞானி, கணித நிபுணர், பொறியியல் நிபுணர் என ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினால், ஓதிய வேதத்தின் பின் இருப்பது சாத்தான் இல்லை என நிருபிக்கலாம். இல்லையென்றால் இது வெறும்
"ஊருக்குத்தான் உபதேசம்"
Saturday, December 31, 2005
ஒரு புத்தாண்டு பிரார்த்தனை
அன்பான ஆண்டவரே,
உமக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் நானும் தவறாது ஒரு புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதனை சரியாகச் செய்திட அருளும் எனக் கேட்கிறேன். நீவிர் ஒவ்வொருவருடமும் என்னைக் கைவிட்டுவிடுகிறீர். மனச்சாட்சியாக " நீதான் செய்யத்தவறுகிறாய்' எனச் சொல்லிவிடுகிறீர். போகட்டும்.
இந்தவருடம் சில வேண்டுதல்கள் மட்டும் முன்வைக்கிறேன். அதிகமில்லை. மூன்றே மூன்றுதான்.
1. எங்கள் அரசியல்வாதிகளில் ஒருவரையாவது மனிதனாக்கும்.
2. வருமான வரிக் கணக்கீடுகளைப் புரிந்து கொள்ளும் அறிவைத்தாரும்.
3. செய்தித்தாள்களில் சினிமா நட்சத்திரங்களின் அரைகுறை ஆடை அவலங்கள் மட்டுமன்றி செய்தியையும் வரவையும்.
சில உதிரிகள்.
1. எனது மகன் கார்ட்டூன் சேனல் தவிர மற்றதையும் பார்க்க வையும்.
2. ஒரு தொலைக்காட்சித் தொடரிலாவது கன்னத்தில் அறைவது, அழுவது என்றில்லாமல் ஒருநாள் வர வையும்.
3. போக்குவரத்து நெரிசலின்றி ஒரு நாளாவது நான் அலுவலகம் போக அருளும்.
எங்கே போய்விட்டீர்? ஹலோ? ஹலோ?...
உமக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் நானும் தவறாது ஒரு புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதனை சரியாகச் செய்திட அருளும் எனக் கேட்கிறேன். நீவிர் ஒவ்வொருவருடமும் என்னைக் கைவிட்டுவிடுகிறீர். மனச்சாட்சியாக " நீதான் செய்யத்தவறுகிறாய்' எனச் சொல்லிவிடுகிறீர். போகட்டும்.
இந்தவருடம் சில வேண்டுதல்கள் மட்டும் முன்வைக்கிறேன். அதிகமில்லை. மூன்றே மூன்றுதான்.
1. எங்கள் அரசியல்வாதிகளில் ஒருவரையாவது மனிதனாக்கும்.
2. வருமான வரிக் கணக்கீடுகளைப் புரிந்து கொள்ளும் அறிவைத்தாரும்.
3. செய்தித்தாள்களில் சினிமா நட்சத்திரங்களின் அரைகுறை ஆடை அவலங்கள் மட்டுமன்றி செய்தியையும் வரவையும்.
சில உதிரிகள்.
1. எனது மகன் கார்ட்டூன் சேனல் தவிர மற்றதையும் பார்க்க வையும்.
2. ஒரு தொலைக்காட்சித் தொடரிலாவது கன்னத்தில் அறைவது, அழுவது என்றில்லாமல் ஒருநாள் வர வையும்.
3. போக்குவரத்து நெரிசலின்றி ஒரு நாளாவது நான் அலுவலகம் போக அருளும்.
எங்கே போய்விட்டீர்? ஹலோ? ஹலோ?...
Sunday, December 25, 2005
எதற்கும் இலக்கு- பெண்கள்
சில வருடங்களுக்கு முன் மனநிலை சரியில்லாத சிறுமியை ஓடும் ரயிலில் பலர் பார்த்திருக்கக் கயவனொருவன் வன்புணர்ச்சி செய்திருந்த செய்தி மும்பையை உலுக்கியது. Last train to Borivali என நாடகமொன்றும் இதனை அடிப்படையாகக் கொண்டு வந்த ஞாபகம்...
சமீபத்தில் காவலன் ஒருவன் காவல் நிலையத்திலேயே ஒரு பெண்ணை பலவந்தப்படுத்திய செய்தியும் பின்னர், மற்றொரு காவலாளி விமான நிலையமருகே காவல் நிலையத்தில் சேரிச்சிறுமியொருத்தியை பலவந்தப்படுத்திய செய்தியும் வந்து மக்களிடையே வெறுப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது.
இப்போது, சில நாட்களுக்கு முன், மும்பையிலிருந்து லக்னோ செல்லும் ரயிலில் ஒரு பெண்ணை, அவள் கணவன் கண்ணெதிரேயே சின்னபின்னப்படுத்திய குண்டர்களின் அட்டூழியம் நடந்திருக்கிறது. இது வரை அவர்கள் பிடிபடவில்லை.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு செய்தி.. பஞ்சம் வந்ததால் வாங்கிய கடனைத் திருப்பித் தர இயலாத விவசாயியின் மனைவியை வன்புணர்ந்த கொடுமை, மகராஷ்டிராவில் சில தாலுகாக்களில் நடந்ததாக வெளிவந்திருக்கிறது. கடன் கொடுப்பதும், திருப்பித்தருவதும் தொழில் முறை என்பது காலம் காலமாக விவசாயத்தையும், கடன் கொடுத்துதவும் தொழிலையும் செய்துவரும் சமூகத்தினர் நன்கறிந்த ஒன்று. இதுபோன்ற ஒழுங்கீனம் இருந்ததாக இதுவரை கேட்டதில்லை. மிக அடிப்படையான சமூக ஒழுங்கு' தொழில் தருமம் என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருவது அதிர்ச்சிக்குரியது.
ஆக, இராணுவம், தீவிரவாத வெறிச்செயல் என்பதெல்லாம் ஒரு வெளிப்பாடே தவிர, சமூகத்தில் உள்ளிருப்பது மிருகம்..மிருகம் மட்டுமே.
பெண்களும், குழந்தைகளும் சீரழிக்கப்படவேண்டும் என்பது எல்லாவற்றிலும் வந்துள்ள புதிய நெறிபோலும்.
என்ன நடக்கிறது இங்கே?
சமீபத்தில் காவலன் ஒருவன் காவல் நிலையத்திலேயே ஒரு பெண்ணை பலவந்தப்படுத்திய செய்தியும் பின்னர், மற்றொரு காவலாளி விமான நிலையமருகே காவல் நிலையத்தில் சேரிச்சிறுமியொருத்தியை பலவந்தப்படுத்திய செய்தியும் வந்து மக்களிடையே வெறுப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது.
இப்போது, சில நாட்களுக்கு முன், மும்பையிலிருந்து லக்னோ செல்லும் ரயிலில் ஒரு பெண்ணை, அவள் கணவன் கண்ணெதிரேயே சின்னபின்னப்படுத்திய குண்டர்களின் அட்டூழியம் நடந்திருக்கிறது. இது வரை அவர்கள் பிடிபடவில்லை.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு செய்தி.. பஞ்சம் வந்ததால் வாங்கிய கடனைத் திருப்பித் தர இயலாத விவசாயியின் மனைவியை வன்புணர்ந்த கொடுமை, மகராஷ்டிராவில் சில தாலுகாக்களில் நடந்ததாக வெளிவந்திருக்கிறது. கடன் கொடுப்பதும், திருப்பித்தருவதும் தொழில் முறை என்பது காலம் காலமாக விவசாயத்தையும், கடன் கொடுத்துதவும் தொழிலையும் செய்துவரும் சமூகத்தினர் நன்கறிந்த ஒன்று. இதுபோன்ற ஒழுங்கீனம் இருந்ததாக இதுவரை கேட்டதில்லை. மிக அடிப்படையான சமூக ஒழுங்கு' தொழில் தருமம் என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருவது அதிர்ச்சிக்குரியது.
ஆக, இராணுவம், தீவிரவாத வெறிச்செயல் என்பதெல்லாம் ஒரு வெளிப்பாடே தவிர, சமூகத்தில் உள்ளிருப்பது மிருகம்..மிருகம் மட்டுமே.
பெண்களும், குழந்தைகளும் சீரழிக்கப்படவேண்டும் என்பது எல்லாவற்றிலும் வந்துள்ள புதிய நெறிபோலும்.
என்ன நடக்கிறது இங்கே?
Saturday, December 24, 2005
பின்னூட்டங்களுக்கு யார் பொறுப்பு?
பின்னூட்டங்களின் கருத்துகளுக்கு வலைப்பதிவின் ஆசிரியர் பொறுப்பாகவேண்டும் என இந்திய தகவல் தொடர்புச் சட்டம் இருப்பதாக ( அல்லது வரப்போவதாக?) பத்ரியின் பதிவில் படித்த ஞாபகம். தணிக்கை செய்தபின்னரே பின்னூட்டங்கள் பதிவில் வருவது நல்லது எனவும் நானும் சிந்தித்தேன். இத்தகைய கிறுக்குத்தனங்கள் இந்தியாவில் மட்டுமே சாத்தியமெனவும் பொருமிக்கொண்டிருந்தேன்.
ஜெர்மனியும் விதிவிலக்கல்ல என இப்பதிவு கூறுகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா குறித்த முதல் பத்தியை விடுங்கள். இரண்டாம் பத்தியிலிருந்து இறுதிவரை படித்தால், கோட்டிக்காரத்தனம் என்பது உலகப் பொதுச் சொத்து எனப் புரிகிறது.
பத்ரி, ரவி ஸ்ரீனிவாஸ் போன்றோர் இதுகுறித்து விளக்கம் தந்தால் நல்லது
ஜெர்மனியும் விதிவிலக்கல்ல என இப்பதிவு கூறுகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா குறித்த முதல் பத்தியை விடுங்கள். இரண்டாம் பத்தியிலிருந்து இறுதிவரை படித்தால், கோட்டிக்காரத்தனம் என்பது உலகப் பொதுச் சொத்து எனப் புரிகிறது.
பத்ரி, ரவி ஸ்ரீனிவாஸ் போன்றோர் இதுகுறித்து விளக்கம் தந்தால் நல்லது
Friday, December 23, 2005
பாகிஸ்தானுக்கு இந்திய உதவி
பாகிஸ்தானைத் தாக்கிய பூகம்பத்திற்கு நிதியுதவியாக இந்தியா அனுப்பிய அமெரிக்க டாலர் 25 மில்லியன் கொடையினைக் குறித்து அண்மையில் வாசித்த ஒரு ஆங்கில வலைப்பதிவு.
குறிப்பு: இவ்வலைப்பதிவின் ஆசிரியர் திரு.டே பொருளாதாரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். நல்ல கட்டுரைகளை எழுதியுள்ளவர்.
குறிப்பு: இவ்வலைப்பதிவின் ஆசிரியர் திரு.டே பொருளாதாரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். நல்ல கட்டுரைகளை எழுதியுள்ளவர்.
Thursday, December 22, 2005
புதிய வலைப்பதிவு
புதிய வலைப்பதிவு
புதியதாய் ஆங்கில வலைப்பதிவு ஒன்றை துவக்கியிருக்கிறேன். http://sudhathoughts.blogspot.com
சில தலைப்புகளை மட்டும் அங்கே உள்ளிடலாம் எனவிருக்கிறேன். நண்பர்களின் ஆதரவையும் பின்னூட்டத்தையும் நன்றியுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
க.சுதாகர்
புதியதாய் ஆங்கில வலைப்பதிவு ஒன்றை துவக்கியிருக்கிறேன். http://sudhathoughts.blogspot.com
சில தலைப்புகளை மட்டும் அங்கே உள்ளிடலாம் எனவிருக்கிறேன். நண்பர்களின் ஆதரவையும் பின்னூட்டத்தையும் நன்றியுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
க.சுதாகர்
Sunday, December 18, 2005
ஒரு கடிதம்..- A short story
ஒரு கடிதம்..
'அம்மா...
நீ நல்லாயிருக்கியா?
எதிர்வீட்டு முத்துராசு நேற்றுதான் இங்கே வந்தான். அவங்க அப்பா அவனைக் கொண்டுவந்து விடும்போது
உன்னைப்பத்திச் சொன்னாரு. இராத்திரி தூக்கம்வராம விசும்பிக்கொண்டிருந்தவன் "அம்மா ஞாபகம் வந்துச்சு"ன்னு
விக்கிக்கொண்டே சொன்னான். சின்னப்பய. 'நானும் முதல்ல அப்படித்தான் இருந்தேன். போகப்போக சரியாயிடும்'-னு
சொல்லி சமாதானப்படுத்தி வைச்சேன். அவங்க அம்மா கொடுத்த புளி,உப்பு முளகாய் முட்டாயை சூப்பிக்கொண்டே
தூங்கிப்போனான்.
எனக்கு இப்போ பெரிய சுத்தியல் கொடுத்திருக்காங்க. முதல்ல கல் உடைக்க சின்ன சுத்தியல்தான். வெயில்ல உக்கார்ந்து, கொஞ்சம் பெரிய கல்லாப் பாத்து பொறுக்கி எடுத்து உடைக்கணும். வெயில் சுள்ளுன்னு உரைக்கும். போனவாட்டி எழுதினேம்லா..
இப்போ பெரிய சுத்தியல்.. பெரியவங்க கணக்கா தூக்கி அடிக்கணும். விலாப்பக்கம் முதநாள் வீங்கி வலிச்சுச்சு.
வெள்ளையம்மா, சாராயத்தை விலாவில தடவினா.. 'வலி குறையும்'-னு சொன்னா. இப்போ பரவாயில்லை.
வெள்ளையம்மா நல்லவம்மா. ராத்திரி தூங்கும்போது பக்கத்துல படுத்துக்குவா. 'வலிக்கா ராசா?'ன்னு உன்னமாதிரியே
கேட்டுட்டு, தலைய தடவி விடுவா. ரொம்ப வலிச்சா 'சேசுவே, கிருபையாயிரும்'னு' வேண்டிக்கச் சொன்னா. 'அவரும்
நம்மமாதிரியே கல்லு உடைச்சாரா?'ன்னு கேட்டேன். கிட்டத்தட்ட அது மாதிரித்தான் கஷ்டப்பட்டாருன்னு சொன்னா.
அவரும் பாவம்மா.
வெள்ளையம்மா ஒண்ணும் வெள்ளையாயிருக்கமாட்டாம்ம்மா! சும்மா பேருதான் அப்படி. ..அத மாதிரித்தான். அவள சில ராத்திரி மேஸ்திரி எங்கனயோ கூட்டிட்டுப்
போறாரு. அதுதான் கோவமா வருது.
நீ போனதடவ என் கடுதாசியப் பாத்துட்டு,மேல்வீட்டம்மா கிட்ட சொல்லி அழுதியாம்மா? சின்னராசு அம்மாகிட்ட
அவங்க பால் வாங்கும்போது சொன்னாங்களாம். அழாதம்மா. நான் நல்லா சம்பாரிப்பேன். பெரிய பெரிய கல்லெல்லாம்
உடைச்சு ஒரு நாளைக்கு பத்து ரூவா வரை சம்பாதிப்பேன் பாரு. அடுத்த தரவ உன்ன எப்பப் பாப்பேன்னு தெரியல.
இங்கேயிருந்து வடக்காம கூட்டிட்டுப் போவப்போறாங்களாம். ஆந்திராக் காரங்க இருக்காங்க. கோவில்பட்டி தெலுங்கு
மாதிரியில்ல இவங்க பேசற தெலுங்கு. கொஞ்சம் கொஞ்சம் வெளங்குது.
நேத்திக்கு பெரியய்யா வந்து சம்பளம் கொடுத்தாரு. அஞ்சு ரூவா. 'நீ இதுவர வேலைசெஞ்சதுக்கு'-ன்னு சிரிச்சுகிட்டே
சொன்னாரு. 'நான் வந்து ஒரு வருசம் ஆயிருச்சுய்யா'ன்னேன். 'அதுதான் தினமும் சோறு திங்கேல்லா?'ன்னு கேட்டாரு.
'போனவாரம்கூட மீன் வருவல் போட்டேம்ல்லால? வக்கணயாத் .தின்னுட்டு இன்னும் காசுகேக்கிய..மூதி'ன்னு திட்டினாரு. 'அம்மாவுக்கு பணம் அனுப்பணும்'னேன். 'அப்புறம் அனுப்பலாம்'-னுட்டாரு. போவட்டும் அவரு கிடக்காரும்மா. உனக்கு பணம் அனுப்புதேன். சரியா?
அய்யப்பன் தெரியும்லாம்மா? போன மாசம் ,நாசிக் பக்கத்துல, மலை ரோடு போடற வேலைல போனான். நாலுநாளு
முந்தி, பாறை உடைக்க வெடி வைச்சப்போ, கல்லு தெறிச்சு, மண்டை பொளந்து செத்துப்போயிட்டானாம்.
வெள்ளையம்மா சொல்லி அழுதுச்சு. அவன அங்கேயே எரிச்சுட்டாங்களாம். அவங்கம்மாகிட்ட இப்ப சொல்லாத.
முதலாளி என்ன வெளிய அனுப்பிருவாரு. அவங்க வீட்டுக்கு ஆயிரம் ரூவா கொடுக்கப்போறதா, மேஸ்திரி
வெள்ளையம்மா கிட்ட சொல்லிக்கிட்டிருந்தாரு. 'ரயில்ல போகும்போது தண்டவாளத்துல விழுந்து செத்துட்டதாப் பின்ன
சொல்லிக்கலாம். எதாச்சும் அழுகின அனாதப்பொணத்தைக் காட்டி இதான் அய்யப்பன்-ன்னு சொல்லி அமுக்கிரலாம்'ன்னு மேஸ்திரி பெரியய்யாகிட்ட சொன்னாரு. நான் காணாமப் போனா இப்படித்தான் உனக்கும் ஆயிரம் ரூவா கொடுப்பாங்க.பொணம் எதனாச்சும் காட்டுவாங்க. அதான் நான்னு நம்பிராத என்ன? ஆயிரம் ரூவா உனக்கு கிடச்சா நல்லதுதான்.என்னம்மா?
மணிக்குட்டி இப்போ பெரிசாயிருக்கும்லா? 'அது சொறிநாய்"ன்னு கதிரேசன் சொன்னதுக்கு, அவன் கன்னத்துல
அறைஞ்ச்சேன்னு மணிக்குட்டிகிட்ட சொல்லிரு.என்ன?
வடக்காம போயிட்டு பொறவு எழுதுதேன். இத எழுதற அக்கா நான் சொல்லச்சொல்ல அழுதுகிட்டே எழுதுது. அது
எதோ இஸ்கோல்ல படிக்காம்.
இப்படிக்கு
ராசுக்குட்டி.
பி.கு
ஆறு வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டிலிருந்து வேலைக்கு வந்த சிறுவர்களிடம் நாசிக் அருகே பேசியபோது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவு.
'அம்மா...
நீ நல்லாயிருக்கியா?
எதிர்வீட்டு முத்துராசு நேற்றுதான் இங்கே வந்தான். அவங்க அப்பா அவனைக் கொண்டுவந்து விடும்போது
உன்னைப்பத்திச் சொன்னாரு. இராத்திரி தூக்கம்வராம விசும்பிக்கொண்டிருந்தவன் "அம்மா ஞாபகம் வந்துச்சு"ன்னு
விக்கிக்கொண்டே சொன்னான். சின்னப்பய. 'நானும் முதல்ல அப்படித்தான் இருந்தேன். போகப்போக சரியாயிடும்'-னு
சொல்லி சமாதானப்படுத்தி வைச்சேன். அவங்க அம்மா கொடுத்த புளி,உப்பு முளகாய் முட்டாயை சூப்பிக்கொண்டே
தூங்கிப்போனான்.
எனக்கு இப்போ பெரிய சுத்தியல் கொடுத்திருக்காங்க. முதல்ல கல் உடைக்க சின்ன சுத்தியல்தான். வெயில்ல உக்கார்ந்து, கொஞ்சம் பெரிய கல்லாப் பாத்து பொறுக்கி எடுத்து உடைக்கணும். வெயில் சுள்ளுன்னு உரைக்கும். போனவாட்டி எழுதினேம்லா..
இப்போ பெரிய சுத்தியல்.. பெரியவங்க கணக்கா தூக்கி அடிக்கணும். விலாப்பக்கம் முதநாள் வீங்கி வலிச்சுச்சு.
வெள்ளையம்மா, சாராயத்தை விலாவில தடவினா.. 'வலி குறையும்'-னு சொன்னா. இப்போ பரவாயில்லை.
வெள்ளையம்மா நல்லவம்மா. ராத்திரி தூங்கும்போது பக்கத்துல படுத்துக்குவா. 'வலிக்கா ராசா?'ன்னு உன்னமாதிரியே
கேட்டுட்டு, தலைய தடவி விடுவா. ரொம்ப வலிச்சா 'சேசுவே, கிருபையாயிரும்'னு' வேண்டிக்கச் சொன்னா. 'அவரும்
நம்மமாதிரியே கல்லு உடைச்சாரா?'ன்னு கேட்டேன். கிட்டத்தட்ட அது மாதிரித்தான் கஷ்டப்பட்டாருன்னு சொன்னா.
அவரும் பாவம்மா.
வெள்ளையம்மா ஒண்ணும் வெள்ளையாயிருக்கமாட்டாம்ம்மா! சும்மா பேருதான் அப்படி. ..அத மாதிரித்தான். அவள சில ராத்திரி மேஸ்திரி எங்கனயோ கூட்டிட்டுப்
போறாரு. அதுதான் கோவமா வருது.
நீ போனதடவ என் கடுதாசியப் பாத்துட்டு,மேல்வீட்டம்மா கிட்ட சொல்லி அழுதியாம்மா? சின்னராசு அம்மாகிட்ட
அவங்க பால் வாங்கும்போது சொன்னாங்களாம். அழாதம்மா. நான் நல்லா சம்பாரிப்பேன். பெரிய பெரிய கல்லெல்லாம்
உடைச்சு ஒரு நாளைக்கு பத்து ரூவா வரை சம்பாதிப்பேன் பாரு. அடுத்த தரவ உன்ன எப்பப் பாப்பேன்னு தெரியல.
இங்கேயிருந்து வடக்காம கூட்டிட்டுப் போவப்போறாங்களாம். ஆந்திராக் காரங்க இருக்காங்க. கோவில்பட்டி தெலுங்கு
மாதிரியில்ல இவங்க பேசற தெலுங்கு. கொஞ்சம் கொஞ்சம் வெளங்குது.
நேத்திக்கு பெரியய்யா வந்து சம்பளம் கொடுத்தாரு. அஞ்சு ரூவா. 'நீ இதுவர வேலைசெஞ்சதுக்கு'-ன்னு சிரிச்சுகிட்டே
சொன்னாரு. 'நான் வந்து ஒரு வருசம் ஆயிருச்சுய்யா'ன்னேன். 'அதுதான் தினமும் சோறு திங்கேல்லா?'ன்னு கேட்டாரு.
'போனவாரம்கூட மீன் வருவல் போட்டேம்ல்லால? வக்கணயாத் .தின்னுட்டு இன்னும் காசுகேக்கிய..மூதி'ன்னு திட்டினாரு. 'அம்மாவுக்கு பணம் அனுப்பணும்'னேன். 'அப்புறம் அனுப்பலாம்'-னுட்டாரு. போவட்டும் அவரு கிடக்காரும்மா. உனக்கு பணம் அனுப்புதேன். சரியா?
அய்யப்பன் தெரியும்லாம்மா? போன மாசம் ,நாசிக் பக்கத்துல, மலை ரோடு போடற வேலைல போனான். நாலுநாளு
முந்தி, பாறை உடைக்க வெடி வைச்சப்போ, கல்லு தெறிச்சு, மண்டை பொளந்து செத்துப்போயிட்டானாம்.
வெள்ளையம்மா சொல்லி அழுதுச்சு. அவன அங்கேயே எரிச்சுட்டாங்களாம். அவங்கம்மாகிட்ட இப்ப சொல்லாத.
முதலாளி என்ன வெளிய அனுப்பிருவாரு. அவங்க வீட்டுக்கு ஆயிரம் ரூவா கொடுக்கப்போறதா, மேஸ்திரி
வெள்ளையம்மா கிட்ட சொல்லிக்கிட்டிருந்தாரு. 'ரயில்ல போகும்போது தண்டவாளத்துல விழுந்து செத்துட்டதாப் பின்ன
சொல்லிக்கலாம். எதாச்சும் அழுகின அனாதப்பொணத்தைக் காட்டி இதான் அய்யப்பன்-ன்னு சொல்லி அமுக்கிரலாம்'ன்னு மேஸ்திரி பெரியய்யாகிட்ட சொன்னாரு. நான் காணாமப் போனா இப்படித்தான் உனக்கும் ஆயிரம் ரூவா கொடுப்பாங்க.பொணம் எதனாச்சும் காட்டுவாங்க. அதான் நான்னு நம்பிராத என்ன? ஆயிரம் ரூவா உனக்கு கிடச்சா நல்லதுதான்.என்னம்மா?
மணிக்குட்டி இப்போ பெரிசாயிருக்கும்லா? 'அது சொறிநாய்"ன்னு கதிரேசன் சொன்னதுக்கு, அவன் கன்னத்துல
அறைஞ்ச்சேன்னு மணிக்குட்டிகிட்ட சொல்லிரு.என்ன?
வடக்காம போயிட்டு பொறவு எழுதுதேன். இத எழுதற அக்கா நான் சொல்லச்சொல்ல அழுதுகிட்டே எழுதுது. அது
எதோ இஸ்கோல்ல படிக்காம்.
இப்படிக்கு
ராசுக்குட்டி.
பி.கு
ஆறு வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டிலிருந்து வேலைக்கு வந்த சிறுவர்களிடம் நாசிக் அருகே பேசியபோது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவு.
Tuesday, November 29, 2005
மஹாநாயக் -by Vishwas Patil ( contd)
மஹாநாயக் - கதை
______________________
தில்லி செங்கோட்டையில் 1857ல் பகதூர் ஷா, கடைசி முகலாய மன்னர் ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டதில் தொடங்குகிறது கதை.. அதே செங்கோட்டையில் 1940களில் மூன்று ராணுவ அதிகாரிகளை
அரசுத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி முன் நிறுத்துகிற காட்சி விரிகிறது. குற்றம்?
நேதாஜியின் படைக்கு ஆதரவாகச் செயல்பட்டதுதான். புலாபாய் என்ற பிரபலமான வழக்கறிஞர் அவர்களுக்கு
வாதாடுகிறார்.. ஒரு நாடகத்தனமான தொடக்கம் என்றாலும், விறுவிறுப்பு ஏறுகிறது. கொஞ்சம் "Freedom at midnight" வாசனை அடிக்கிறது.
பின் , சுபாஷ் சந்திரபோஸின் இளமைக்காலம் விவரிக்கப்படுகிறது. அவர் விவேகானந்தரின் அறிவுரைகளில் தூண்டப்பட்டு, ஒரு புரட்சிக்காரனாகவே பள்ளி,கல்லூரிகளில் ஆவதைக் காட்டுவதில் சற்றே செயற்கைத்தனம் தெரிகிறது. சுபாஷ், தனது நண்பர்களுடன் பத்ரிநாத் மலைக்கும் அப்பாலிருக்கும் ஒரு மலைக்குகையில் வசிக்கும் ஒரு துறவியைத் தேடிப்போகிறார். விவேகானந்தருடன் பழகியிருக்கும் அத்துறவி, சுபாஷிடம் " இக்காட்டில் உன் வலிமையை வீணாக்காதே. மக்களுக்காக , அவர்கள் விடுதலைக்காகப் போராடு" எனச் சொல்வதாகவும், அதன் பின் சுபாஷ் சந்திரபோஸ் கல்கத்தா மீளுவதாகவும் கூறப்படும் செய்தி ஆதாரமானதுதானா?எனச் சந்தேகம் வருகிறது. அத்துறவியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விஷ்வாஸ் பாட்டில் எடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வு முயற்சியில் நம்பிக்கை இருப்பினும், சில இடங்களில் உண்மைப் பெயர்களையும் இட்டிருக்கலாம்.. கதை கலந்த வாழ்க்கை வரலாறு என்று இருப்பதால், எது கதை, எது நிஜம் எனச் சில இடங்களில் புரிபடவில்லை.
மெல்ல மெல்ல அவர் காங்கிரஸில் தீவிரப் பிரசாரம் செய்வதும், காங்கிரஸ் ப்ரஸிடென்ண்ட் ஆவதும் காட்டப்படுகிறது. இந்த இடங்கள் வரலாறு பூர்வமாக கோர்வையாக எழுதப்பட்டிருக்கிறது. திரிபுரி காங்கிரஸ் மாநாடு , போஸ்- காந்தியின் கொள்கையளவிலான மறுதலிப்பு, அரசியல் பின்னணி.. வாசிக்க அருமை..
ஆனால், மசாலா இன்னும் சேர்ந்திருக்கிறது.. தென் மாநில ஆளுநராக இருக்கும் இராஜாஜி , உ.பிரதேசத்திலிருந்து வந்திருந்த ஒரு காங்கிரஸ் தலைவரை அடக்க எத்தனிக்கையில் " நீ சும்மாயிரு, லுங்கிவாலா" என அவர் இராஜாஜியை அவமதித்ததாக எழுதப்பட்டிருக்கும் காட்சி.. உண்மையாயிருக்க சாத்தியமில்லை. என்னதான் ஆவேசப்பட்டிருப்பினும், அந்நாளைய அரசியல்வாதிகள், தொண்டர்கள் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் இத்தகைய மொழி பேசியிருக்க சாத்தியமில்லை எனவே நினைக்கிறேன்.
எமிலி என்னும் ஆஸ்திரியப்பெண்ணுடனான காதல்.. சுபாஷின் வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமையவில்லை. மாறாக, ஒரு சாதாரண மனிதனின் யதார்த்த வாழ்வின் தாக்கங்கள் , வளர்சிதை மாற்றங்களெனவே இதனைக் காட்டியிருக்கிறர் விஷ்வாஸ் பாட்டில். அந்த அளவில் கதைக்களம் சிதையாமல், சுபாஷ் என்னும் மனிதனின் ஆசாபாசங்கள், அவரது சிறு தவறுகள் நேர்த்தியாக , யதார்த்தமாகச் சுட்டிக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
நேருவின் காந்திப் பித்து..ஆச்சார்யா கிருபளானி,கோவிந்த் வல்லப் பந்த் போன்ற மிதவாதிகளின் போஸ் எதிர்ப்பு, இடது சாரிகளின் முரண்,போஸின் தாய்நாட்டுப் பற்று , காந்தியுடனான போஸின் மோதல்கள்.. அலையலையாக வந்து, எவ்வாறு அவரது காங்கிரஸ் உறவை பிரித்தன. பின்னர் கல்கத்தாவிலிருந்து இரகசியமாக ஆப்கானிஸ்தான்/பெஷாவர் சென்று அங்கிருந்து ஜெர்மனியில் ஹிட்லருடன் தொடர்புகொள்ளும் இடம்.. அருமையாக விளக்கியிருக்கிறார்.
ஜப்பானிய ராணுவத்தினரின் சுபாஷ் குறித்தான வாக்குமூலங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இது நமக்கு அறியாத கதை. மணிப்பூர் இயக்கம் என்பது ஜப்பானிய ராணுவ வல்லுநர்கள் முதலில் திட்டமிட்டுப் பின் கைவிடப்பட்ட ஒன்று. சுபாஷ் ( ராணுவ திட்டமிடுதல் பற்றிய பயிற்சி இல்லாமல்) , அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை பற்றிப் பேசி, பிரதம மந்திரியை மணிப்பூர் ஆக்கிரமிப்பிற்குச் சம்மதிக்க வைக்கிறார். சுபாஷின் இந்திய விடுதலை வெறி, அவர்களை அசர வைக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தினருக்கு , பர்மாவில் கைப்பற்றிய ஒரு பகுதி, அந்தமான் நிகோபார் தீவுகள் முதலியன ஜப்பானியரால் கொடுக்கப்படுகின்றன. 'இந்தியாவில் கைப்பற்றும் அனைத்துப் பகுதிகளும் , போஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கே அளிக்கப்படும்.' என்னும் உறுதியும் கொடுக்கப்படுகிறது. அவர்களது நம்பிக்கைக்கு ஒரே காரணம்... சுபாஷ் சந்திர போஸ்.
'வரலாற்றில் எங்கும் இது போல 40 லட்சம் பேர் கொண்ட நட்புப் படைக்கு எவரும் இத்தனை மரியாதை தந்ததாகத் தெரியவில்லை.' என்கிறார் பாட்டில்.
இந்திய தேசிய இராணுவத்தின் ஒவ்வொரு முன்னேற்ற அடியையும் கவனித்து எழுதியிருக்கிறார். கொஹிமா,மணிப்புரி போர்க்களங்கள், பேச்சுக்கள், ஜப்பானின் சரணடைதலில் போஸிற்கு ஏற்பட்ட பின்னடைவு. .படிக்கையில் நெஞ்சு கனப்பது நிஜம். ( இதனை விவரிக்க விரும்பவில்லை. படித்துப் பாருங்கள். ஆசிரியரின் உழைப்பு தெரியும்)
டைபியில் (Teipei) , விமான விபத்தின் பின், அவரது உடலை இந்தியா கொண்டுசெல்ல அனுமதிக்காத தைவான் இராணுவ அதிகாரிகள் , அங்கேயே எரியூட்டியதாக எழுதியிருக்கிறார். இது, போஸின் மறைவு குறித்தான பல மர்மங்களையும், கட்டுக்கதைகளையும் வெளிக்காட்டும்... இதாவது, அம்மாமனிதனின் இறப்பு குறித்தான மர்மங்களை வேரறுத்து, உலகிற்கு அவரது தீவிர நாட்டுப்பற்றை வெளிக்காட்டட்டும். இச்சம்பவம் குறித்தான வரலாற்று உண்மைகளை விஷ்வாஸ் பாட்டில் தனது குறிப்பில் எழுதியிருக்கலாம்.
இப்பேற்பட்ட மகாமனிதரைப்பற்றி அதிகம் நமக்குச் சொல்லாத பாடத்திட்டத்தின் மேலும், அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அரசியல் கருதி பாரத ரத்னா விருது கொடுக்க நினைத்த நம் அரசியல் வாதிகள் மேலும் கோபம் வருவது நியாயம்தான்.
தமிழில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.அந்நூல் குறித்தான தகவல் எனக்குத் தெரியவில்லை. பத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இறுதியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பு indialog பதிப்பில் வெளிவந்துள்ளது.( ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்காக விஷ்வாஸ் பாட்டிலுக்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாகத் தகவல். அருந்ததி ராய் 3 கோடி வாங்கும்போது இது குறைவுதான் என்கிறார்கள் மராத்தி மொழிவல்லுநர்கள். இந்தக் கணக்கும் அரசியலும் நமக்குப் புரிவதில்லை!) இந்நூல் குறித்து மேலும் அறிய விரும்புவோர் இச்சுட்டியில் non fiction பகுதியில் காணலாம்.
______________________
தில்லி செங்கோட்டையில் 1857ல் பகதூர் ஷா, கடைசி முகலாய மன்னர் ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டதில் தொடங்குகிறது கதை.. அதே செங்கோட்டையில் 1940களில் மூன்று ராணுவ அதிகாரிகளை
அரசுத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி முன் நிறுத்துகிற காட்சி விரிகிறது. குற்றம்?
நேதாஜியின் படைக்கு ஆதரவாகச் செயல்பட்டதுதான். புலாபாய் என்ற பிரபலமான வழக்கறிஞர் அவர்களுக்கு
வாதாடுகிறார்.. ஒரு நாடகத்தனமான தொடக்கம் என்றாலும், விறுவிறுப்பு ஏறுகிறது. கொஞ்சம் "Freedom at midnight" வாசனை அடிக்கிறது.
பின் , சுபாஷ் சந்திரபோஸின் இளமைக்காலம் விவரிக்கப்படுகிறது. அவர் விவேகானந்தரின் அறிவுரைகளில் தூண்டப்பட்டு, ஒரு புரட்சிக்காரனாகவே பள்ளி,கல்லூரிகளில் ஆவதைக் காட்டுவதில் சற்றே செயற்கைத்தனம் தெரிகிறது. சுபாஷ், தனது நண்பர்களுடன் பத்ரிநாத் மலைக்கும் அப்பாலிருக்கும் ஒரு மலைக்குகையில் வசிக்கும் ஒரு துறவியைத் தேடிப்போகிறார். விவேகானந்தருடன் பழகியிருக்கும் அத்துறவி, சுபாஷிடம் " இக்காட்டில் உன் வலிமையை வீணாக்காதே. மக்களுக்காக , அவர்கள் விடுதலைக்காகப் போராடு" எனச் சொல்வதாகவும், அதன் பின் சுபாஷ் சந்திரபோஸ் கல்கத்தா மீளுவதாகவும் கூறப்படும் செய்தி ஆதாரமானதுதானா?எனச் சந்தேகம் வருகிறது. அத்துறவியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விஷ்வாஸ் பாட்டில் எடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வு முயற்சியில் நம்பிக்கை இருப்பினும், சில இடங்களில் உண்மைப் பெயர்களையும் இட்டிருக்கலாம்.. கதை கலந்த வாழ்க்கை வரலாறு என்று இருப்பதால், எது கதை, எது நிஜம் எனச் சில இடங்களில் புரிபடவில்லை.
மெல்ல மெல்ல அவர் காங்கிரஸில் தீவிரப் பிரசாரம் செய்வதும், காங்கிரஸ் ப்ரஸிடென்ண்ட் ஆவதும் காட்டப்படுகிறது. இந்த இடங்கள் வரலாறு பூர்வமாக கோர்வையாக எழுதப்பட்டிருக்கிறது. திரிபுரி காங்கிரஸ் மாநாடு , போஸ்- காந்தியின் கொள்கையளவிலான மறுதலிப்பு, அரசியல் பின்னணி.. வாசிக்க அருமை..
ஆனால், மசாலா இன்னும் சேர்ந்திருக்கிறது.. தென் மாநில ஆளுநராக இருக்கும் இராஜாஜி , உ.பிரதேசத்திலிருந்து வந்திருந்த ஒரு காங்கிரஸ் தலைவரை அடக்க எத்தனிக்கையில் " நீ சும்மாயிரு, லுங்கிவாலா" என அவர் இராஜாஜியை அவமதித்ததாக எழுதப்பட்டிருக்கும் காட்சி.. உண்மையாயிருக்க சாத்தியமில்லை. என்னதான் ஆவேசப்பட்டிருப்பினும், அந்நாளைய அரசியல்வாதிகள், தொண்டர்கள் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் இத்தகைய மொழி பேசியிருக்க சாத்தியமில்லை எனவே நினைக்கிறேன்.
எமிலி என்னும் ஆஸ்திரியப்பெண்ணுடனான காதல்.. சுபாஷின் வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமையவில்லை. மாறாக, ஒரு சாதாரண மனிதனின் யதார்த்த வாழ்வின் தாக்கங்கள் , வளர்சிதை மாற்றங்களெனவே இதனைக் காட்டியிருக்கிறர் விஷ்வாஸ் பாட்டில். அந்த அளவில் கதைக்களம் சிதையாமல், சுபாஷ் என்னும் மனிதனின் ஆசாபாசங்கள், அவரது சிறு தவறுகள் நேர்த்தியாக , யதார்த்தமாகச் சுட்டிக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
நேருவின் காந்திப் பித்து..ஆச்சார்யா கிருபளானி,கோவிந்த் வல்லப் பந்த் போன்ற மிதவாதிகளின் போஸ் எதிர்ப்பு, இடது சாரிகளின் முரண்,போஸின் தாய்நாட்டுப் பற்று , காந்தியுடனான போஸின் மோதல்கள்.. அலையலையாக வந்து, எவ்வாறு அவரது காங்கிரஸ் உறவை பிரித்தன. பின்னர் கல்கத்தாவிலிருந்து இரகசியமாக ஆப்கானிஸ்தான்/பெஷாவர் சென்று அங்கிருந்து ஜெர்மனியில் ஹிட்லருடன் தொடர்புகொள்ளும் இடம்.. அருமையாக விளக்கியிருக்கிறார்.
ஜப்பானிய ராணுவத்தினரின் சுபாஷ் குறித்தான வாக்குமூலங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இது நமக்கு அறியாத கதை. மணிப்பூர் இயக்கம் என்பது ஜப்பானிய ராணுவ வல்லுநர்கள் முதலில் திட்டமிட்டுப் பின் கைவிடப்பட்ட ஒன்று. சுபாஷ் ( ராணுவ திட்டமிடுதல் பற்றிய பயிற்சி இல்லாமல்) , அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை பற்றிப் பேசி, பிரதம மந்திரியை மணிப்பூர் ஆக்கிரமிப்பிற்குச் சம்மதிக்க வைக்கிறார். சுபாஷின் இந்திய விடுதலை வெறி, அவர்களை அசர வைக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தினருக்கு , பர்மாவில் கைப்பற்றிய ஒரு பகுதி, அந்தமான் நிகோபார் தீவுகள் முதலியன ஜப்பானியரால் கொடுக்கப்படுகின்றன. 'இந்தியாவில் கைப்பற்றும் அனைத்துப் பகுதிகளும் , போஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கே அளிக்கப்படும்.' என்னும் உறுதியும் கொடுக்கப்படுகிறது. அவர்களது நம்பிக்கைக்கு ஒரே காரணம்... சுபாஷ் சந்திர போஸ்.
'வரலாற்றில் எங்கும் இது போல 40 லட்சம் பேர் கொண்ட நட்புப் படைக்கு எவரும் இத்தனை மரியாதை தந்ததாகத் தெரியவில்லை.' என்கிறார் பாட்டில்.
இந்திய தேசிய இராணுவத்தின் ஒவ்வொரு முன்னேற்ற அடியையும் கவனித்து எழுதியிருக்கிறார். கொஹிமா,மணிப்புரி போர்க்களங்கள், பேச்சுக்கள், ஜப்பானின் சரணடைதலில் போஸிற்கு ஏற்பட்ட பின்னடைவு. .படிக்கையில் நெஞ்சு கனப்பது நிஜம். ( இதனை விவரிக்க விரும்பவில்லை. படித்துப் பாருங்கள். ஆசிரியரின் உழைப்பு தெரியும்)
டைபியில் (Teipei) , விமான விபத்தின் பின், அவரது உடலை இந்தியா கொண்டுசெல்ல அனுமதிக்காத தைவான் இராணுவ அதிகாரிகள் , அங்கேயே எரியூட்டியதாக எழுதியிருக்கிறார். இது, போஸின் மறைவு குறித்தான பல மர்மங்களையும், கட்டுக்கதைகளையும் வெளிக்காட்டும்... இதாவது, அம்மாமனிதனின் இறப்பு குறித்தான மர்மங்களை வேரறுத்து, உலகிற்கு அவரது தீவிர நாட்டுப்பற்றை வெளிக்காட்டட்டும். இச்சம்பவம் குறித்தான வரலாற்று உண்மைகளை விஷ்வாஸ் பாட்டில் தனது குறிப்பில் எழுதியிருக்கலாம்.
இப்பேற்பட்ட மகாமனிதரைப்பற்றி அதிகம் நமக்குச் சொல்லாத பாடத்திட்டத்தின் மேலும், அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அரசியல் கருதி பாரத ரத்னா விருது கொடுக்க நினைத்த நம் அரசியல் வாதிகள் மேலும் கோபம் வருவது நியாயம்தான்.
தமிழில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.அந்நூல் குறித்தான தகவல் எனக்குத் தெரியவில்லை. பத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இறுதியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பு indialog பதிப்பில் வெளிவந்துள்ளது.( ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்காக விஷ்வாஸ் பாட்டிலுக்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாகத் தகவல். அருந்ததி ராய் 3 கோடி வாங்கும்போது இது குறைவுதான் என்கிறார்கள் மராத்தி மொழிவல்லுநர்கள். இந்தக் கணக்கும் அரசியலும் நமக்குப் புரிவதில்லை!) இந்நூல் குறித்து மேலும் அறிய விரும்புவோர் இச்சுட்டியில் non fiction பகுதியில் காணலாம்.
மஹாநாயக்' -(Great Hero)-fictional biography of Subhash Chandra Bose
' சுபாஷ் ரோஜா மலரின் காம்பை சிறிது ஒடித்து, ஜவஹரின் கோட்டுப் பொத்தான் துளையில் பொருத்தினார்.
"சுபாஷ்! இரு. ரத்தம்!"
பதறிய ஜவஹர்லால், சுபாஷின் விரலில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க கைக்குட்டையைத் தேடினார்.
"பரவாயில்லை , ஜவஹர்" , கையை விலக்கிக்கொண்ட சுபாஷ் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்," உனக்கு ரோஜா மலரையும், எனக்கு முட்களையும் கடவுள் விதித்திருக்கிறார்".
இதுபோன்ற வாசகங்களைக் கொண்ட புத்தகங்களை மிகக்கவனமாகவே நான் படிப்பது வழக்கம். மசாலா அதிகமாகவும், சரக்கு குறைவாகவும் கொண்ட வரலாறு அடிப்படையாகக் கொண்ட பல புத்தகங்கள் இத்தகைய வாசகங்கள் கொண்டும், பளபளப்பான அட்டைகள், கறுப்பு வெள்ளை மங்கலான புகைப்படங்கள் கொண்டும், சந்தையாக்கலில் ஜல்லி செய்து வந்துவிடுகின்றன. 'வாங்கிவிட்டு "சே" என இன்னுமொருமுறை ஏமாற நான் முட்டாளில்லை.'என நினைத்து, புத்தகத்தைத் திரும்ப வைக்க எத்தனிக்கையில் ஆசிரியரின் பெயர் கொஞ்சம் தயங்க வைத்தது. திரு. விஷ்வாஸ் பாட்டில்...
மராத்திய எழுத்தாளர்களில் புகழ்பெற்ற ஒருவரான விஷ்வாஸ் பாட்டில் ,சாகித்திய அகாடெமி விருது 1992-ல் வாங்கியவர். அவரது ஜாதசதாதி(Jahadazadati)என்னும் மராத்தி நாவல் புகழுடன்,சாகித்ய அகாடெமி விருதும் வாங்கித்தந்தது. நடப்புகளை , மாற்றாமல் பதிவு செய்து, நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பின் , நிகழ்வுகளைக் கோர்த்து, கற்பனைவளம் சேர்த்து அவர் எழுதும் நாவல்கள் மராத்தியில் ப்ரசித்தி பெற்றவை.
சுபாஷ் சந்திர போஸ் என்னும் தியாகியை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியில் பார்ப்பதென்பது எளிதல்ல. நமக்குத் போஸ் குறித்து மிக மிகச் சிறிதளவே தெரிந்திருக்கிறது என்பதை இக்கதையைப் படித்தபின் உணரமுடிகிறது.
தன் வழக்கம்போலவே, போஸ் குறித்து எழுதுமுன் கடுமையான ஆய்வுகளை மேற்கொண்ட பாட்டில், தனது முன்னுரையில் , தான் சந்தித்த இடர்களை சிறிது குறிப்பிடுகிறார். சுபாஷ் சந்திரபோஸ்-ஸின் வாழ்க்கையும் அவரது மரணம் போலவே புதிராக இருக்கிறது. அவரது ஜெர்மன், ஜப்பான் உறவுகள் குறித்த கோப்புகள் ஜெர்மன், ஜப்பானிய, பாலி மற்றும் பெங்காலி மொழிகளில் இருப்பதாலும், பெரும்பாலானவை உலகப்போர் குறித்தான ரகசியத் தகவல்கள் அடங்கிய பெட்டிகளுக்குள் கிடப்பதாலும், மிகக் குறைவான வரலாற்று உண்மைகளே நமக்குத் தெரிகின்றன. அவற்றைத் திரட்டி, படித்துப் புரிந்து... கோர்வையாக ஒரு புத்தகத்தில் கொண்டுவர மிகக் கடின உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. அயராது உழைத்திருக்கிறார் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி.
சில நண்பர்களின் ஆதரவால், ஜப்பான் சென்று, உலகப்போரில் சுபாஷ் சந்திரபோஸுடன் சேர்ந்து போரிட்ட வீரர்களைச் சந்தித்து, அவர்களிடம் விவரங்களைச் சேகரித்திருக்கிறார். நண்பர்களின் துணையுடன் ஜப்பானின் நூலகங்களில் கிடைத்த ஆவணங்கள், அதன் பாராளூமன்ற கூட்டத்தொடர் கோப்புகள் போன்றவற்றையும் ஆதாரங்களாகச் சேர்த்திருக்கிறார். இதனூடே, பர்மாவில் இரண்டாம் உலகப்போரின்போது போரிட்ட அமெரிக்க வீரர்கள் பர்மாவிற்கு உலகப்போரின் 51ம் ஆண்டு நிறைவுக்கு வர, இவரும் அங்கே சென்று, அவர்களிடம் தகவல் சேர்த்திருக்கிறார்.
பர்மா தாய்லாந்து எல்லையில் சுமார் 1800 கிமீ தொலைவு அடர்ந்த காட்டுப்பாதையில் இந்திய சுதந்திர ராணுவம் முன்பு போரிட்ட இடங்களில் சென்று பார்த்திருக்கிறார்- தடயங்கள் மற்றும் இடங்களின் ஆதாரம் தேடியபடி. கொஹிமா, மணிப்பூர் அஸ்ஸாம் எல்லையில் போஸின் படைகள் போரிட்ட இடங்களில் தகவல் சேர்த்திருக்கிறார். மிக மிக அயராத, பொருள் மட்டும் காலச் செலவு வாய்ந்த ஆய்வுப்பணி.
இத்தனை ஆய்வுகளுக்கும் முயற்சிகளுக்கும் பின் இப்படியொரு கதை வந்திருப்பதை அறிந்த பின்.. வார்த்தைகளின் ப்ரயோகத்திற்காக மட்டும் அதனை விட்டுவைக்க மனம் வரவில்லை.
கதைக்குப் போவோம்
"சுபாஷ்! இரு. ரத்தம்!"
பதறிய ஜவஹர்லால், சுபாஷின் விரலில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க கைக்குட்டையைத் தேடினார்.
"பரவாயில்லை , ஜவஹர்" , கையை விலக்கிக்கொண்ட சுபாஷ் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்," உனக்கு ரோஜா மலரையும், எனக்கு முட்களையும் கடவுள் விதித்திருக்கிறார்".
இதுபோன்ற வாசகங்களைக் கொண்ட புத்தகங்களை மிகக்கவனமாகவே நான் படிப்பது வழக்கம். மசாலா அதிகமாகவும், சரக்கு குறைவாகவும் கொண்ட வரலாறு அடிப்படையாகக் கொண்ட பல புத்தகங்கள் இத்தகைய வாசகங்கள் கொண்டும், பளபளப்பான அட்டைகள், கறுப்பு வெள்ளை மங்கலான புகைப்படங்கள் கொண்டும், சந்தையாக்கலில் ஜல்லி செய்து வந்துவிடுகின்றன. 'வாங்கிவிட்டு "சே" என இன்னுமொருமுறை ஏமாற நான் முட்டாளில்லை.'என நினைத்து, புத்தகத்தைத் திரும்ப வைக்க எத்தனிக்கையில் ஆசிரியரின் பெயர் கொஞ்சம் தயங்க வைத்தது. திரு. விஷ்வாஸ் பாட்டில்...
மராத்திய எழுத்தாளர்களில் புகழ்பெற்ற ஒருவரான விஷ்வாஸ் பாட்டில் ,சாகித்திய அகாடெமி விருது 1992-ல் வாங்கியவர். அவரது ஜாதசதாதி(Jahadazadati)என்னும் மராத்தி நாவல் புகழுடன்,சாகித்ய அகாடெமி விருதும் வாங்கித்தந்தது. நடப்புகளை , மாற்றாமல் பதிவு செய்து, நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பின் , நிகழ்வுகளைக் கோர்த்து, கற்பனைவளம் சேர்த்து அவர் எழுதும் நாவல்கள் மராத்தியில் ப்ரசித்தி பெற்றவை.
சுபாஷ் சந்திர போஸ் என்னும் தியாகியை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியில் பார்ப்பதென்பது எளிதல்ல. நமக்குத் போஸ் குறித்து மிக மிகச் சிறிதளவே தெரிந்திருக்கிறது என்பதை இக்கதையைப் படித்தபின் உணரமுடிகிறது.
தன் வழக்கம்போலவே, போஸ் குறித்து எழுதுமுன் கடுமையான ஆய்வுகளை மேற்கொண்ட பாட்டில், தனது முன்னுரையில் , தான் சந்தித்த இடர்களை சிறிது குறிப்பிடுகிறார். சுபாஷ் சந்திரபோஸ்-ஸின் வாழ்க்கையும் அவரது மரணம் போலவே புதிராக இருக்கிறது. அவரது ஜெர்மன், ஜப்பான் உறவுகள் குறித்த கோப்புகள் ஜெர்மன், ஜப்பானிய, பாலி மற்றும் பெங்காலி மொழிகளில் இருப்பதாலும், பெரும்பாலானவை உலகப்போர் குறித்தான ரகசியத் தகவல்கள் அடங்கிய பெட்டிகளுக்குள் கிடப்பதாலும், மிகக் குறைவான வரலாற்று உண்மைகளே நமக்குத் தெரிகின்றன. அவற்றைத் திரட்டி, படித்துப் புரிந்து... கோர்வையாக ஒரு புத்தகத்தில் கொண்டுவர மிகக் கடின உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. அயராது உழைத்திருக்கிறார் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி.
சில நண்பர்களின் ஆதரவால், ஜப்பான் சென்று, உலகப்போரில் சுபாஷ் சந்திரபோஸுடன் சேர்ந்து போரிட்ட வீரர்களைச் சந்தித்து, அவர்களிடம் விவரங்களைச் சேகரித்திருக்கிறார். நண்பர்களின் துணையுடன் ஜப்பானின் நூலகங்களில் கிடைத்த ஆவணங்கள், அதன் பாராளூமன்ற கூட்டத்தொடர் கோப்புகள் போன்றவற்றையும் ஆதாரங்களாகச் சேர்த்திருக்கிறார். இதனூடே, பர்மாவில் இரண்டாம் உலகப்போரின்போது போரிட்ட அமெரிக்க வீரர்கள் பர்மாவிற்கு உலகப்போரின் 51ம் ஆண்டு நிறைவுக்கு வர, இவரும் அங்கே சென்று, அவர்களிடம் தகவல் சேர்த்திருக்கிறார்.
பர்மா தாய்லாந்து எல்லையில் சுமார் 1800 கிமீ தொலைவு அடர்ந்த காட்டுப்பாதையில் இந்திய சுதந்திர ராணுவம் முன்பு போரிட்ட இடங்களில் சென்று பார்த்திருக்கிறார்- தடயங்கள் மற்றும் இடங்களின் ஆதாரம் தேடியபடி. கொஹிமா, மணிப்பூர் அஸ்ஸாம் எல்லையில் போஸின் படைகள் போரிட்ட இடங்களில் தகவல் சேர்த்திருக்கிறார். மிக மிக அயராத, பொருள் மட்டும் காலச் செலவு வாய்ந்த ஆய்வுப்பணி.
இத்தனை ஆய்வுகளுக்கும் முயற்சிகளுக்கும் பின் இப்படியொரு கதை வந்திருப்பதை அறிந்த பின்.. வார்த்தைகளின் ப்ரயோகத்திற்காக மட்டும் அதனை விட்டுவைக்க மனம் வரவில்லை.
கதைக்குப் போவோம்
Saturday, November 26, 2005
நோபல்பரிசும் இந்தியரும் ( Nobel Prize and Indians)
நோபல்பரிசும் இந்தியரும்
___________________________
2005ம் ஆண்டிற்கான இயற்பியல்துறை நோபல்பரிசுக்காக கலாநிதி. சுதர்ஷன் அவர்களின் முயற்சியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டி ,நோபல் பரிசு பரிந்துரைக்குழுவிற்கு இந்திய மற்றும் அமெரிக்க அறிவியல் அறிஞர்களின் கடிதங்கள் சென்றிருக்கின்றன.நார்வே நாட்டின் இந்திய தூதுவரிடமும் இது குறித்து கருத்து கூறப்பட்டுள்ளது. நோபல் பரிசு பரிந்துரைக்குழு இக்கண்டனங்களையும் பின்னூட்டத்தையும் கவனித்து உருப்படியாக எதாவது செய்யும் என நம்புவோம்.
நன்றி ;ஹிந்துஸ்தான் டைம்ஸ்..
இது குறித்து முன்பு எழுதப்பட்ட வலைப்பதிவு
___________________________
2005ம் ஆண்டிற்கான இயற்பியல்துறை நோபல்பரிசுக்காக கலாநிதி. சுதர்ஷன் அவர்களின் முயற்சியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டி ,நோபல் பரிசு பரிந்துரைக்குழுவிற்கு இந்திய மற்றும் அமெரிக்க அறிவியல் அறிஞர்களின் கடிதங்கள் சென்றிருக்கின்றன.நார்வே நாட்டின் இந்திய தூதுவரிடமும் இது குறித்து கருத்து கூறப்பட்டுள்ளது. நோபல் பரிசு பரிந்துரைக்குழு இக்கண்டனங்களையும் பின்னூட்டத்தையும் கவனித்து உருப்படியாக எதாவது செய்யும் என நம்புவோம்.
நன்றி ;ஹிந்துஸ்தான் டைம்ஸ்..
இது குறித்து முன்பு எழுதப்பட்ட வலைப்பதிவு
Monday, November 21, 2005
கஸாக்கிண்டெ இதிகாசம்: O.V.Vijayan's Novel
கஸாக்கிண்டெ இதிகாசம்:
மிகச் சிறந்த கதைகள், சுய அனுபவத்தை கற்பனையில் ஏற்றி, கதாபாத்திரத்தை ஒரு குறியீடாக
அமைக்கையில் உருவாவதுண்டு. ழட்டுமொத்தமான கதைச் சூழல், பலப்பல கதாபாத்திரங்கள்
இவ்வாறு குறியீடாக அமைவது அரிது. அதிலும் அரிது, அக்கதைச் சூழல் , ஆசிரியர் முன்பு
தீர்மானித்திருந்த அமைப்பை விட்டு விலகி, 360 பாகை திரிந்து, பின்னும் சுய அனுபவம்
ஏறிய கதையாக அமைவது.
கஸாக்கிண்டெ இதிகாசம் sவ்வாறு அமைந்தது என்கிறார் ஓ.வி.விஜயன் முடிவுரையில்.
கதை அமைவது கஸாக் என்னும் மலைக்கிராமத்தின் சூழலில். கஸாக் என்னும் கிராமமே அவர்
1956க்குப் பிறகு ,கல்லூரி வேலை போனதும், தமக்கையாரின் ஆசிரியப்பணி அமைந்த
கிராமமான தசராக் கிராமத்தின் தாக்கமான பெயரில் உருவானது. அங்கு, அவருக்குப் பல
செய்திகளைத் தந்த நண்பர்களான முல்லா மற்றும் காசி (khazi) வார்த்தைகளை
நினைவுகூறுகிறார் விஜயன்.
கம்யூனிஸக் கொள்கைகளில் நாட்டம் கொண்டிருந்த ஓ.வி.விஜயன், இக்கதையை முதலில்
கம்யூனிசக் கொள்கைத் தாக்கத்தில் எழுத முயன்றார். உலகளவில் மார்க்ஸிச இயக்கத்தை
வெகு உன்னிப்பாகக் கவனித்து வந்தவர், பெல்ஜியப் புரட்சியில் Imre nagy
கொலைசெய்யப்பட்டதில், மார்க்ஸிச இயக்கத்தின் மேலிருந்த நாட்டத்தைக் கைவிட்டார். அதன்
அடிப்படையில், அவர் தனது புதிய கதையின் போக்கையே மாற்றியமைக்க நேர்ந்தது. ஒரு
முக்கிய திருப்பம் மலையாள இலக்கியத்தில் இக்கதையால் வந்ததென தனது முடிவுரையில்
குறிப்பிடுகிறார். அதுவரை மலையாள இலக்கியத்தில் எழுதிவந்த நடை கஸாக்கிண்டெ
இதிகாசத்தில் மாறியது. எளிய மலையாளம், நிகழ்வுகளை மாயநிகழ்வியல் பிiனணியில்
எழுதுவது போன்றவை பின்னிப் பிணைந்து முதன்முதலில் வந்தது இக்கதையில்தான். இதனைப்
பற்றிக் மலையாள இலக்கியம் அறிந்தவர்கள் கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
இக்கதை மலையாள இலக்கியத்தில் மிகப் பிரபலமான பின், பல தீவிர வாசகர்கள் மேலும்
கதை பற்றி உணர்வதற்கு அக்கிராமத்திற்கே சென்றனர். அங்குள்ள மக்கள், தங்களுக்குக்
கிடைத்த புது அடையாளத்தை ஏற்றுக்கொண்டதோடு, வருபவர்களின் இலக்கியத் தேடல்களைத்
தங்கள் வாழ்வின் பகுதியாகவே ஏற்றனர். ஆர்.கே.நாராயணனின் மால்குடி கிராமமும் இவ்வாறு
அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
தசராக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞன் , ஓ.வி.விஜயனை ஒருமுறை இறுகத்
தழுவி " கிளியேட்டன் மரிச்சுப்போயி" எனத் தேம்பியழுததாகக் குறிப்பிடும் விஜயன், கதையில்
வரும் அப்புக் கிளி என்னும் கதாபாத்திரம் அக்கிராமத்தில் இருந்த ஒரு நபரைக் கொண்டு
உருவாக்கப்பட்டதில்லை எனினும், கதையின் தாக்கம் அக்கிராமமக்களிடம், எந்த அளவிற்கு
உண்டாயிருந்தது என்பதற்கு இதனை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் எனக் குறிப்பிடுகிறார்.
கிராம மக்கள், கதையில் வரும் கதாபாத்திரங்கள் தங்கள் கிராமத்தில் இருக்கும்
மக்களைக்கொண்டே உருவாகின என்பதில் உறுதியாயிருந்தனர். இப்புதிய ஒப்பீடு, அடையாளம்
காணுதல், ஒரு cult உருவாதல் என்பது இதிகாசங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் ,
கஸாக்கிண்டெ கத ஒரு இதிகாசம் என்பதில் ஐயமில்லை.
கதையெனப் பார்த்தால், நாலுவரிகளில் அடக்கிவிடலாம். .
படித்த இளைஞன், பள்ளியில்லாக் கிராமமொன்றில், ஒரு ஆசிரியர் பள்ளி ஒன்றிற்கு வேலை
கிடைத்து வருகிறான். மதறாஸா மட்டும் உள்ள அக்கிராமத்தில், பழமைவாதத்தினைச் சமாளித்து
அவன் கல்வியறிவூட்ட முனைகிறான். இறுதியில் பழமைவாதம், செந்நாடா என்னும்
கூட்டமைப்பு வெற்றிகொள்கிறது. அவனை வேலையிலிருந்து நீக்குமுன், தானே ராஜினாமா
செய்துவிட்டு கிராமத்தை விட்டுச் செல்கிறான். கம்யூனிச சங்கங்கள் அவனுக்காக உதவ
முன்வந்து போரிடத் தயாராவதை மறுத்துவிட்டு, தான் எடுத்த முடிவின்படி ஊர்விட்டுச்
செல்கிறான்.
கதாபாத்திர வலிமை, காட்சியமைப்பு, சூழல், நேர்த்தியாக எண்ணங்களைப் ப்ரதிபலிக்கும் திறன்,
நடை இவையே இக்கதையிi வலிமை
மார்க்ஸிச அமைப்புகளுடனான அவரது அப்போது மலர்ந்த வெறுப்பு, கதையில் மார்க்ஸிய
அமைப்புகள் கதாநாயகனுக்கு உதவவரும்போது, அவi அவர்களுடன் பேசும் விதத்தில்
தெரிகிறது.
பத்மா என்னும் தோழியின் வருகை .. முதலாளித்துவத்தைக் குறித்து அவர்கொண்டிருந்த
அவநம்பிக்கையைக் காட்டுவதாகத் தோன்றுஸிறது. அதென்னமோ, இந்த பத்மா என்னும் பெயர்
பிரபலமான கதைகளில் வருவது என்ன ஒரு co incidence எனப் புரியவில்லை. சல்மான்
ரஷ்டியின் Midnight children படித்தவர்கள் இதனை உணரலாம்.
பத்மாவுடனான ரவியின் உரையாடல் இவ்வாறு போகிறது.
"நீ அந்த சாமியாரிணியைப் பார்த்தாயோ? அவள் உன்னைப்பற்றி விசாரித்தாள்"
" ஓ"
"அவளது அழகு பிரமிப்பூட்டுகிறது"
" அமெரிக்காவில் நீ லெஸ்பியனிசத்தை ஆதரிப்பதை இப்போதுதான் உணர்கிறேன்"
..... பத்மாவிடம் ரவி (கதாநாயகன்) அலட்சியமாகப் பேசுவதற்காகக் காரணம் தேவையில்லை.
ஆனால், அமெரிக்கா என்னும் காரணம் மிக மிக வலுவானது.
இறுதிக்காட்சியில் மழையின் வருணனை, பேருந்திற்காகக் காத்திருக்கும் ரவியின் காலடியில்
நெருடும் பாம்பு.. உடலெங்கும் மழைநீரில் புளகித்து, வளருவதாகத்தோன்றும் புற்கள் என
வளரும் . மாயத் தோற்றம்... விஜயனின் முத்திரை.. இதுபோலவே கோடச்சி என்பவள் வீட்டில் சாராயம் அருந்தும் வேளையில் ரவிக்கு உண்டாகும் மாயத்தோற்றம்.... சில சமயங்களில் எது கதையோட்டம், எது மாயத்தோற்றம் என்பது புரிபடவில்லை.
கஸாக்கிண்டெ இதிகாசம் படிக்க நினைப்பவர்களுக்கு, நண்பன் குரியாக்கோஸின்
அறிவுரையையே மீண்டும் சொல்கிறேன்.
"மூணுபிராயஸமெங்கிலும் வாயிக்கியா. அப்போழே கிட்டுள்ளு"
அன்புடன்
க.சுதாகர்
மிகச் சிறந்த கதைகள், சுய அனுபவத்தை கற்பனையில் ஏற்றி, கதாபாத்திரத்தை ஒரு குறியீடாக
அமைக்கையில் உருவாவதுண்டு. ழட்டுமொத்தமான கதைச் சூழல், பலப்பல கதாபாத்திரங்கள்
இவ்வாறு குறியீடாக அமைவது அரிது. அதிலும் அரிது, அக்கதைச் சூழல் , ஆசிரியர் முன்பு
தீர்மானித்திருந்த அமைப்பை விட்டு விலகி, 360 பாகை திரிந்து, பின்னும் சுய அனுபவம்
ஏறிய கதையாக அமைவது.
கஸாக்கிண்டெ இதிகாசம் sவ்வாறு அமைந்தது என்கிறார் ஓ.வி.விஜயன் முடிவுரையில்.
கதை அமைவது கஸாக் என்னும் மலைக்கிராமத்தின் சூழலில். கஸாக் என்னும் கிராமமே அவர்
1956க்குப் பிறகு ,கல்லூரி வேலை போனதும், தமக்கையாரின் ஆசிரியப்பணி அமைந்த
கிராமமான தசராக் கிராமத்தின் தாக்கமான பெயரில் உருவானது. அங்கு, அவருக்குப் பல
செய்திகளைத் தந்த நண்பர்களான முல்லா மற்றும் காசி (khazi) வார்த்தைகளை
நினைவுகூறுகிறார் விஜயன்.
கம்யூனிஸக் கொள்கைகளில் நாட்டம் கொண்டிருந்த ஓ.வி.விஜயன், இக்கதையை முதலில்
கம்யூனிசக் கொள்கைத் தாக்கத்தில் எழுத முயன்றார். உலகளவில் மார்க்ஸிச இயக்கத்தை
வெகு உன்னிப்பாகக் கவனித்து வந்தவர், பெல்ஜியப் புரட்சியில் Imre nagy
கொலைசெய்யப்பட்டதில், மார்க்ஸிச இயக்கத்தின் மேலிருந்த நாட்டத்தைக் கைவிட்டார். அதன்
அடிப்படையில், அவர் தனது புதிய கதையின் போக்கையே மாற்றியமைக்க நேர்ந்தது. ஒரு
முக்கிய திருப்பம் மலையாள இலக்கியத்தில் இக்கதையால் வந்ததென தனது முடிவுரையில்
குறிப்பிடுகிறார். அதுவரை மலையாள இலக்கியத்தில் எழுதிவந்த நடை கஸாக்கிண்டெ
இதிகாசத்தில் மாறியது. எளிய மலையாளம், நிகழ்வுகளை மாயநிகழ்வியல் பிiனணியில்
எழுதுவது போன்றவை பின்னிப் பிணைந்து முதன்முதலில் வந்தது இக்கதையில்தான். இதனைப்
பற்றிக் மலையாள இலக்கியம் அறிந்தவர்கள் கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
இக்கதை மலையாள இலக்கியத்தில் மிகப் பிரபலமான பின், பல தீவிர வாசகர்கள் மேலும்
கதை பற்றி உணர்வதற்கு அக்கிராமத்திற்கே சென்றனர். அங்குள்ள மக்கள், தங்களுக்குக்
கிடைத்த புது அடையாளத்தை ஏற்றுக்கொண்டதோடு, வருபவர்களின் இலக்கியத் தேடல்களைத்
தங்கள் வாழ்வின் பகுதியாகவே ஏற்றனர். ஆர்.கே.நாராயணனின் மால்குடி கிராமமும் இவ்வாறு
அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
தசராக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞன் , ஓ.வி.விஜயனை ஒருமுறை இறுகத்
தழுவி " கிளியேட்டன் மரிச்சுப்போயி" எனத் தேம்பியழுததாகக் குறிப்பிடும் விஜயன், கதையில்
வரும் அப்புக் கிளி என்னும் கதாபாத்திரம் அக்கிராமத்தில் இருந்த ஒரு நபரைக் கொண்டு
உருவாக்கப்பட்டதில்லை எனினும், கதையின் தாக்கம் அக்கிராமமக்களிடம், எந்த அளவிற்கு
உண்டாயிருந்தது என்பதற்கு இதனை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் எனக் குறிப்பிடுகிறார்.
கிராம மக்கள், கதையில் வரும் கதாபாத்திரங்கள் தங்கள் கிராமத்தில் இருக்கும்
மக்களைக்கொண்டே உருவாகின என்பதில் உறுதியாயிருந்தனர். இப்புதிய ஒப்பீடு, அடையாளம்
காணுதல், ஒரு cult உருவாதல் என்பது இதிகாசங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் ,
கஸாக்கிண்டெ கத ஒரு இதிகாசம் என்பதில் ஐயமில்லை.
கதையெனப் பார்த்தால், நாலுவரிகளில் அடக்கிவிடலாம். .
படித்த இளைஞன், பள்ளியில்லாக் கிராமமொன்றில், ஒரு ஆசிரியர் பள்ளி ஒன்றிற்கு வேலை
கிடைத்து வருகிறான். மதறாஸா மட்டும் உள்ள அக்கிராமத்தில், பழமைவாதத்தினைச் சமாளித்து
அவன் கல்வியறிவூட்ட முனைகிறான். இறுதியில் பழமைவாதம், செந்நாடா என்னும்
கூட்டமைப்பு வெற்றிகொள்கிறது. அவனை வேலையிலிருந்து நீக்குமுன், தானே ராஜினாமா
செய்துவிட்டு கிராமத்தை விட்டுச் செல்கிறான். கம்யூனிச சங்கங்கள் அவனுக்காக உதவ
முன்வந்து போரிடத் தயாராவதை மறுத்துவிட்டு, தான் எடுத்த முடிவின்படி ஊர்விட்டுச்
செல்கிறான்.
கதாபாத்திர வலிமை, காட்சியமைப்பு, சூழல், நேர்த்தியாக எண்ணங்களைப் ப்ரதிபலிக்கும் திறன்,
நடை இவையே இக்கதையிi வலிமை
மார்க்ஸிச அமைப்புகளுடனான அவரது அப்போது மலர்ந்த வெறுப்பு, கதையில் மார்க்ஸிய
அமைப்புகள் கதாநாயகனுக்கு உதவவரும்போது, அவi அவர்களுடன் பேசும் விதத்தில்
தெரிகிறது.
பத்மா என்னும் தோழியின் வருகை .. முதலாளித்துவத்தைக் குறித்து அவர்கொண்டிருந்த
அவநம்பிக்கையைக் காட்டுவதாகத் தோன்றுஸிறது. அதென்னமோ, இந்த பத்மா என்னும் பெயர்
பிரபலமான கதைகளில் வருவது என்ன ஒரு co incidence எனப் புரியவில்லை. சல்மான்
ரஷ்டியின் Midnight children படித்தவர்கள் இதனை உணரலாம்.
பத்மாவுடனான ரவியின் உரையாடல் இவ்வாறு போகிறது.
"நீ அந்த சாமியாரிணியைப் பார்த்தாயோ? அவள் உன்னைப்பற்றி விசாரித்தாள்"
" ஓ"
"அவளது அழகு பிரமிப்பூட்டுகிறது"
" அமெரிக்காவில் நீ லெஸ்பியனிசத்தை ஆதரிப்பதை இப்போதுதான் உணர்கிறேன்"
..... பத்மாவிடம் ரவி (கதாநாயகன்) அலட்சியமாகப் பேசுவதற்காகக் காரணம் தேவையில்லை.
ஆனால், அமெரிக்கா என்னும் காரணம் மிக மிக வலுவானது.
இறுதிக்காட்சியில் மழையின் வருணனை, பேருந்திற்காகக் காத்திருக்கும் ரவியின் காலடியில்
நெருடும் பாம்பு.. உடலெங்கும் மழைநீரில் புளகித்து, வளருவதாகத்தோன்றும் புற்கள் என
வளரும் . மாயத் தோற்றம்... விஜயனின் முத்திரை.. இதுபோலவே கோடச்சி என்பவள் வீட்டில் சாராயம் அருந்தும் வேளையில் ரவிக்கு உண்டாகும் மாயத்தோற்றம்.... சில சமயங்களில் எது கதையோட்டம், எது மாயத்தோற்றம் என்பது புரிபடவில்லை.
கஸாக்கிண்டெ இதிகாசம் படிக்க நினைப்பவர்களுக்கு, நண்பன் குரியாக்கோஸின்
அறிவுரையையே மீண்டும் சொல்கிறேன்.
"மூணுபிராயஸமெங்கிலும் வாயிக்கியா. அப்போழே கிட்டுள்ளு"
அன்புடன்
க.சுதாகர்
Sunday, November 20, 2005
ஓ.வி.விஜயன் -சிறுகதைகள்:
ஓ.வி.விஜயன் மலையாளத்தில் அரசியல் கட்டுரைகள், கதைகள், நாவல்கள், குறுநாவல்கள், சி
றுகதைகள் என எழுதிக் கலக்கியதோடு, ஒரு கார்ட்டூனிஸ்டாகவும் இருந்திருக்கிறார் என்பது
எனக்குப் புதிய செய்தி. அவரது நகைச்சுவையுணர்வு கதைகளில் கரு நகைச்சுவையாக (black
humour) இழையோடுவதை உணரமுடிகிறது.
Magical realism, myth எனப் பம்மாத்துப் பண்ணும் சில எழுத்தாளர்கள் ஓ.வி.விஜயனைப்
படிப்பது நல்லது. அவரது சிறுகதைகளைப் படித்ததும், தமிழ் எழுத்தாளர்களில் இருவரை எ
ண்ணத்தோன்றியது.
ஒன்று லா.ச.ரா
மற்றொருவர் தஞ்சை பிரகாஷ்
சில நண்பர்களுக்கு இந்த ஒப்பீட்டில் எதிர்ப்பு இருக்கலாம். இது எனது எண்ணம் மட்டுமே.
எண்ணெ (oil) என்னும் கதையில் ஒரு கிராமத்திற்கு மலைக்கு அப்பாலிருக்கும் வெளியிலி
ருந்து குடியேறிய வணிகக் குடும்பம் எவ்வாறு கலப்பட எண்ணெயால் அக்கிராமத்தையே மு
டமாக்க்குகிறது என்பதைப் பின்புலமாக அமைகிறது. அவ்வணிகக் குடும்பம் , கிராமத்து மக்
களுக்கு தேவையான பணத்தை வட்டிக்குக் குடுத்தும், மருத்துவ உதவியும் செய்து மக்களின்
நன்மதிப்பைப் பெறுகிறது. வணிகனின் கலப்பட எண்ணெயால் ஒர் தலைமுறையே முடமாகும்
போது, அவர்கள் பலனளிக்காத மருந்து தருவதை உதவியெனவே கருதும் கிராமமக்கள்,உண்ந
மயறிந்தும், செய்நன்றியால் வாய்மூடி மொளனிக்கிறார்கள். எதிர்ப்பவர்களை எவ்வாறு ஆசைக
ட்டி ,அக்குடும்பம் வளைத்துப் போடுகிறது என்பதை இறுதிவரை காட்டும் வலிமிகுந்த கதை.
இதனை ஒரு உருவகக் கதையாகக் கொள்ளலாம். பாலியல் உணர்வு தூக்கிநிற்கும் இக்கதையை
முதலில் படித்தபோது ஏமாற்றமாயிருந்தது. குரியாக்கோஸ் சொன்னபடி மீண்டும் மீண்டும்
படித்தபோது, விஜயனின் நேர்த்தியான கதைசொல்லும் விதம் கொஞ்சம் புரிந்தது.
மாஜிக்கல் ரியலிஸம், பாலியல் உணர்வு என்னும் இரு இழைகள். அவற்றை குறுக்கும் நெ
டுக்குமாக வைத்து, வேண்டிய இடத்தில் மட்டும் மாறுபட்ட உணர்வு ,காட்சிகள் என்னும் நிறங்களை ஏற்றி, நெய்யப்பட்டிருக்கும் இக்கதைச் சேலை, ஒரு கைதேர்ந்த கதைசொல்லுபவனின் அற்புத நெசவு..
Foetus என்னும் கதை முழுக்கமுழுக்க mythical புலம் சார்ந்தது. இக்கதையைக் குறியீடுகள் அமைத்துக்கொள்ளாமல் படித்துணர்வெதென்பது கடினம். முதலிலேயே அதன் புலம் அறியாமல் குறியீடுகள் கொள்வதும் கடினம். எனவே குரியாக்கோஸ் சொன்னபடி"மூணுபிராயஸெமிங்கிலும் வாயிக்கியா" . குரூர பாலியல் தோற்றங்கள் சிறிது அருவெறுப்பு ஏற்படுத்துமெனினும், கதையின் ஓட்டத்திற்கும், ஆழத்திற்கும் தேவையெனவே தோன்றுகிறது.
Wart என்னும் கதையிலும் குறியீடுகளே பிரதானம். பாலியல் காட்சிகள் சில வலியவே வந்திருப்பதாகப் படுகிறது. கேரளத்தின் மலைவனப்பு, காட்சிகள் அமையும் விதம்... அங்கேயே கொண்டு போய் காலத்தையும் சேர்த்து நிறுத்திவிடுகிறது. கதாநாயகன் தன் மகனுடன் கோவில் குளமருகே பொழுதுசாயும் நேரம் அமரும் காட்சி 'சந்தனக்குறியொண்ணு சார்த்தி, கையில் துளசிதளமுமாய், அம்பலத்திண்ட குளக்கரையிலே அங்கனே கிடக்கும்' உணர்வுகள் வார்த்தைகளினூடே எழுந்து வருவது நிஜமா அல்லது மாஜிக்கல் ரியலிசப் பொய்ப் பிம்பங்களாவென அறியா மயக்கம்... ப்ரமாதம்.
ஆங்கிலமொழிபெயர்ப்பே இப்படியிருந்தால் மூலம்..? சே இதுதான் கேரளாவில் இருக்கும்போது பொண்ணுகளை ஜொள்ளுவிட்டு நடக்காமல் ஒழுங்கா மலையாளம் படிச்சிருக்கணும்-கிறது.
றுகதைகள் என எழுதிக் கலக்கியதோடு, ஒரு கார்ட்டூனிஸ்டாகவும் இருந்திருக்கிறார் என்பது
எனக்குப் புதிய செய்தி. அவரது நகைச்சுவையுணர்வு கதைகளில் கரு நகைச்சுவையாக (black
humour) இழையோடுவதை உணரமுடிகிறது.
Magical realism, myth எனப் பம்மாத்துப் பண்ணும் சில எழுத்தாளர்கள் ஓ.வி.விஜயனைப்
படிப்பது நல்லது. அவரது சிறுகதைகளைப் படித்ததும், தமிழ் எழுத்தாளர்களில் இருவரை எ
ண்ணத்தோன்றியது.
ஒன்று லா.ச.ரா
மற்றொருவர் தஞ்சை பிரகாஷ்
சில நண்பர்களுக்கு இந்த ஒப்பீட்டில் எதிர்ப்பு இருக்கலாம். இது எனது எண்ணம் மட்டுமே.
எண்ணெ (oil) என்னும் கதையில் ஒரு கிராமத்திற்கு மலைக்கு அப்பாலிருக்கும் வெளியிலி
ருந்து குடியேறிய வணிகக் குடும்பம் எவ்வாறு கலப்பட எண்ணெயால் அக்கிராமத்தையே மு
டமாக்க்குகிறது என்பதைப் பின்புலமாக அமைகிறது. அவ்வணிகக் குடும்பம் , கிராமத்து மக்
களுக்கு தேவையான பணத்தை வட்டிக்குக் குடுத்தும், மருத்துவ உதவியும் செய்து மக்களின்
நன்மதிப்பைப் பெறுகிறது. வணிகனின் கலப்பட எண்ணெயால் ஒர் தலைமுறையே முடமாகும்
போது, அவர்கள் பலனளிக்காத மருந்து தருவதை உதவியெனவே கருதும் கிராமமக்கள்,உண்ந
மயறிந்தும், செய்நன்றியால் வாய்மூடி மொளனிக்கிறார்கள். எதிர்ப்பவர்களை எவ்வாறு ஆசைக
ட்டி ,அக்குடும்பம் வளைத்துப் போடுகிறது என்பதை இறுதிவரை காட்டும் வலிமிகுந்த கதை.
இதனை ஒரு உருவகக் கதையாகக் கொள்ளலாம். பாலியல் உணர்வு தூக்கிநிற்கும் இக்கதையை
முதலில் படித்தபோது ஏமாற்றமாயிருந்தது. குரியாக்கோஸ் சொன்னபடி மீண்டும் மீண்டும்
படித்தபோது, விஜயனின் நேர்த்தியான கதைசொல்லும் விதம் கொஞ்சம் புரிந்தது.
மாஜிக்கல் ரியலிஸம், பாலியல் உணர்வு என்னும் இரு இழைகள். அவற்றை குறுக்கும் நெ
டுக்குமாக வைத்து, வேண்டிய இடத்தில் மட்டும் மாறுபட்ட உணர்வு ,காட்சிகள் என்னும் நிறங்களை ஏற்றி, நெய்யப்பட்டிருக்கும் இக்கதைச் சேலை, ஒரு கைதேர்ந்த கதைசொல்லுபவனின் அற்புத நெசவு..
Foetus என்னும் கதை முழுக்கமுழுக்க mythical புலம் சார்ந்தது. இக்கதையைக் குறியீடுகள் அமைத்துக்கொள்ளாமல் படித்துணர்வெதென்பது கடினம். முதலிலேயே அதன் புலம் அறியாமல் குறியீடுகள் கொள்வதும் கடினம். எனவே குரியாக்கோஸ் சொன்னபடி"மூணுபிராயஸெமிங்கிலும் வாயிக்கியா" . குரூர பாலியல் தோற்றங்கள் சிறிது அருவெறுப்பு ஏற்படுத்துமெனினும், கதையின் ஓட்டத்திற்கும், ஆழத்திற்கும் தேவையெனவே தோன்றுகிறது.
Wart என்னும் கதையிலும் குறியீடுகளே பிரதானம். பாலியல் காட்சிகள் சில வலியவே வந்திருப்பதாகப் படுகிறது. கேரளத்தின் மலைவனப்பு, காட்சிகள் அமையும் விதம்... அங்கேயே கொண்டு போய் காலத்தையும் சேர்த்து நிறுத்திவிடுகிறது. கதாநாயகன் தன் மகனுடன் கோவில் குளமருகே பொழுதுசாயும் நேரம் அமரும் காட்சி 'சந்தனக்குறியொண்ணு சார்த்தி, கையில் துளசிதளமுமாய், அம்பலத்திண்ட குளக்கரையிலே அங்கனே கிடக்கும்' உணர்வுகள் வார்த்தைகளினூடே எழுந்து வருவது நிஜமா அல்லது மாஜிக்கல் ரியலிசப் பொய்ப் பிம்பங்களாவென அறியா மயக்கம்... ப்ரமாதம்.
ஆங்கிலமொழிபெயர்ப்பே இப்படியிருந்தால் மூலம்..? சே இதுதான் கேரளாவில் இருக்கும்போது பொண்ணுகளை ஜொள்ளுவிட்டு நடக்காமல் ஒழுங்கா மலையாளம் படிச்சிருக்கணும்-கிறது.
Saturday, November 19, 2005
ஓ.வி.விஜயனின் கதைகள் - ஒரு கண்ணோட்டம்.
ஓ.வி.விஜயனின் கதைகள் - ஒரு கண்ணோட்டம்.
பிரபல எழுத்தாளர்களில் இருவரின் படைப்புகளைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வெகுநாளாக இருந்துவந்தது. ஒன்று தோப்பில் முகம்மது மீரான் , மற்றொருவர் ஒ.வி.விஜயன்.
வைகிங் ( பென்குவின் வெளியீடு)பதிப்பில் வந்திருக்கும் 'ஒ.வி.விஜயனின் படைப்புகள்' எ
ன்னும் பெருவெளியீடு (Omni edition) ஆங்கில மொழியாக்கத்தில் கிடைத்தது. ஆர அமரப்
படிக்கும் நேரமும் வெகுஅதிசயமாக ஒருவாரமாகக் கிடைத்தது அதிர்ஷ்டம் எனவே சொல்லவே
வண்டும்.
ஓ.வி.விஜயனின் கதைகள் குறித்து கொச்சியில் படிக்கும்போது கேட்டிருக்கிறேன். மலையாளம்
அறிந்திருந்தாலும் , படிப்பது, எழுதுவது எனக்கு வராது. அவரது படைப்புகள் பற்றி நான் அபிப்ராயம் கேட்ட ஒவ்வொரு மலையாளியும் ஒவ்வொருவிதமாகச் சொல்லி செமத்தியாகக் குழப்பிவிட்டிருந்தனர். சில பெண்கள் "யேயே...ய்! ஒரு பாடு செக்ஸாணு. ஸாதனம் அழுக்கா' எனச் சொல்ல, காவி கதர் முண்டு கட்டிநடக்கும் மார்க்ஸிய சிந்தனைவாதியும், பல்கலைக்கழக
அப்பொழுதைய SFI அமைப்பின் முக்கிய நபருமான குரியாக்கோஸ் , தாடி சொறிந்தபடி " உ
க்கிரன்,,, கேட்டோ ? செரிக்கும் மனசிலாக்கான் ஸ்ரமிக்கியா.மூணுப்ராயஸெமிங்கிலும் வாயிச்சு
நோக்கு. அப்போழே கிட்டுள்ளு" எனச் சொன்னது மற்றொரு விதம். அப்போது , 'தற்காலம்
வேண்டாம்' என ஒத்திப்போட்டிருந்தேன்.
இந்தப் பின்புலத்தில், பல வருடம் கழிந்து புத்தகம் கிடைத்ததும் கவனமாக எந்த தாக்கலும்
இன்றிப் படிக்கத் துணிந்தேன்.
புத்தகம் மூன்று பெரும்கதைகளையும், பல சிறுகதைகளையும், ஒரு பக்கத்தில் அடங்கும் வகை
யில்லாத கதைகள்/கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இதில் குருசாகரம் என்னும் சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற கதையும் அடங்கும். ஆங்கில மொழிபெயர்ப்பினை, பெரும்பாலான கதைகளுக்கு ஒ.வி.விஜயன் அவர்களே செய்திருக்கிறார். சில மலையாளச் சொற்பிரயோகங்கள் ஆங்கிலப்படுத்தப்படுகையில் அன்னியப்படுவதை உணர முடிகிறது.
பெரிய கதைகளான 'கஸாக்கிண்டெ இதிகாஸம்', 'குருசாகரம்' போன்றவற்றை முதலில் தள்ளி
வைத்துவிட்டு, சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கினேன்.
இன்னும் வரும்.
பிரபல எழுத்தாளர்களில் இருவரின் படைப்புகளைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வெகுநாளாக இருந்துவந்தது. ஒன்று தோப்பில் முகம்மது மீரான் , மற்றொருவர் ஒ.வி.விஜயன்.
வைகிங் ( பென்குவின் வெளியீடு)பதிப்பில் வந்திருக்கும் 'ஒ.வி.விஜயனின் படைப்புகள்' எ
ன்னும் பெருவெளியீடு (Omni edition) ஆங்கில மொழியாக்கத்தில் கிடைத்தது. ஆர அமரப்
படிக்கும் நேரமும் வெகுஅதிசயமாக ஒருவாரமாகக் கிடைத்தது அதிர்ஷ்டம் எனவே சொல்லவே
வண்டும்.
ஓ.வி.விஜயனின் கதைகள் குறித்து கொச்சியில் படிக்கும்போது கேட்டிருக்கிறேன். மலையாளம்
அறிந்திருந்தாலும் , படிப்பது, எழுதுவது எனக்கு வராது. அவரது படைப்புகள் பற்றி நான் அபிப்ராயம் கேட்ட ஒவ்வொரு மலையாளியும் ஒவ்வொருவிதமாகச் சொல்லி செமத்தியாகக் குழப்பிவிட்டிருந்தனர். சில பெண்கள் "யேயே...ய்! ஒரு பாடு செக்ஸாணு. ஸாதனம் அழுக்கா' எனச் சொல்ல, காவி கதர் முண்டு கட்டிநடக்கும் மார்க்ஸிய சிந்தனைவாதியும், பல்கலைக்கழக
அப்பொழுதைய SFI அமைப்பின் முக்கிய நபருமான குரியாக்கோஸ் , தாடி சொறிந்தபடி " உ
க்கிரன்,,, கேட்டோ ? செரிக்கும் மனசிலாக்கான் ஸ்ரமிக்கியா.மூணுப்ராயஸெமிங்கிலும் வாயிச்சு
நோக்கு. அப்போழே கிட்டுள்ளு" எனச் சொன்னது மற்றொரு விதம். அப்போது , 'தற்காலம்
வேண்டாம்' என ஒத்திப்போட்டிருந்தேன்.
இந்தப் பின்புலத்தில், பல வருடம் கழிந்து புத்தகம் கிடைத்ததும் கவனமாக எந்த தாக்கலும்
இன்றிப் படிக்கத் துணிந்தேன்.
புத்தகம் மூன்று பெரும்கதைகளையும், பல சிறுகதைகளையும், ஒரு பக்கத்தில் அடங்கும் வகை
யில்லாத கதைகள்/கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இதில் குருசாகரம் என்னும் சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற கதையும் அடங்கும். ஆங்கில மொழிபெயர்ப்பினை, பெரும்பாலான கதைகளுக்கு ஒ.வி.விஜயன் அவர்களே செய்திருக்கிறார். சில மலையாளச் சொற்பிரயோகங்கள் ஆங்கிலப்படுத்தப்படுகையில் அன்னியப்படுவதை உணர முடிகிறது.
பெரிய கதைகளான 'கஸாக்கிண்டெ இதிகாஸம்', 'குருசாகரம்' போன்றவற்றை முதலில் தள்ளி
வைத்துவிட்டு, சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கினேன்.
இன்னும் வரும்.
Friday, November 18, 2005
ஈயத்தைப்பார்த்து....
ஈயத்தைப்பார்த்து....
-------------------
தென்மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவரையுமே மதராஸிகள் எனச் சொல்லும் அறிவீனம் வட மற்றும் மேற்கு மாநிலங்களில் இன்னும் இருக்கிறது. மலையாளம் ஒரு மொழி எனவும், மலையாளி என்றால் கேரளச்சேர்ந்ததவர் என்னும் பொதுஅறிவு இன்னும் வளரவில்லை. அரசின் பண்பலை வானொலியில் கூட இரு நாட்களுக்கு முன் இரவு 9 மணி நிகழ்ச்சி நடத்தும் பெண்மணி மலையாளி தெரியாவிட்டால் தமிழ்நாடு கேரளாவில் சுமுகமாகப் போய்வரமுடியாது என திருவாய் மலர்ந்தருளினார். போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.
இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் மும்பைப் பதிப்பில் Unnatural politics please,we are Tamils என ஒரு கட்டுரை வந்திருக்கிறது. இதையெல்லாம் எப்படி பிரசுக்கிறார்கள் என இன்னும் எனக்குப் புரியவில்லை. குஷ்பு விவகாரம், ராமதாஸ் பேத்திகள் டெல்லியில் தமிழ் இல்லாத பள்ளியில் படிப்பது எனப் பல விஷயங்களைத் தொட்டிருக்கும் இக்கட்டுரையில் ஆழம் இல்லை. வேண்டாத சிந்தனைகளைத் தூண்டும் உணர்வே எதிரொளிக்கிறது. தொடங்குவதே "தமிழ்நாட்டில் 90களில் குஷ்புக்கு கோயில் கட்டப்பட்டது. அவ்வளவுக்கு பிரபலம் ஆனவரை இப்போது தமிழ் எதிரி என விரட்டுகிறார்கள் " என்னும்படியான பத்தியில்.
என்னமோ தமிழ்நாட்டில் அனைவரும்சேர்ந்து குஷ்புவுக்கு கோயில்கட்டி குடமுழுக்கு செய்ததுபோலவும், இப்போது ஒட்டுமொத்தமாக அனைவரும் அவரை தமிழினத்தின் எதிரி என ஓடஓட விரட்டுவதுபோலவும் சித்தரிக்கும் இக்கட்டுரையை தணிக்கை செய்யாமல் வெளியிட்டது ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ன் வடிகட்டிய முட்டாள்தனம். தென் மாநிலங்கள் குறித்தான சராசரி வட/மேற்கு மாநில வாழ் மக்களின் சிந்தனை என இதனைக்கொள்ளலாமா? இந்திப்படங்களில் மெகமூது 70 களில் தொடங்கிவைத்த மதராஸி இந்தி என்பதை இன்னும் தொலைக்காட்சித் தொடர்களில் சிரிப்பு (வலுக்கட்டாயமாக) வரவழைப்பதற்காக இழுக்கும் கேலிக்கூத்து தொடர்கிறது. எத்தனைபேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்? சேட் பேசும் "நம்பள் நிம்பள்' தமிழ் எல்லாம் 60 களிலேயே தமிழ்ப் படங்களில் முடிந்துவிட்டது. செருப்பால் அடித்துக்கொள்வதும், திட்டிக்கொள்வதுமே இப்போதைய நமது உயர்ந்த ஹாஸ்ய உணர்வு என இவர்களுக்குப் புரியவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ்த் திரையுலகம் கடமைப்பட்டிருக்கிறது.
அமிதாப் பச்சன் அடிபட்டுக்கிடந்தபோது பலர் கோயில்களில் சிறப்பு நேர்தல்கள் செய்ததையும்,அவருக்கு சிலைவத்து பூஜை இரு வருடங்களுக்கு முன் நடத்தியதையும், கங்குலி இந்திய கிரிக்கெட்டிற்கு மீண்டும் வந்து சேவைசெய்யவேண்டுமென கல்கத்தாவில் பூஜைகள் செய்ததையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியதை பார்த்துதான் இருக்கிறேன். அதற்காக, ஒட்டுமொத்தமாக பெங்காலிகள், வடவிந்தியர்கள் இப்படித்தான் என முத்திரை குத்துகிறோமா? முட்டாள்தனம் என்பது ஒரு இனத்திற்குச் சொந்தமில்லை என்பதை தமிழனும் குஷ்பு கோயில் மூலம் நிரூபித்திருக்கிறான். அவ்வளவே. இந்த அளவிற்கு தமிழர்கள் என்றாலே திரைப்பட நாயக/நாயகிகளுக்காக எதுவும் செய்வார்கள், இன,மொழி வெறியர்கள் எனப்படும்படி செய்திஊடகங்கள் விஷம் பரப்புவது ஆபத்தானது.
இதனைக் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு எழுதியிருக்கிறேன். கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. "kudos to your article dated..." என எழுதியிருந்தால் ஒரு வேளை எடுத்துக்கொள்வார்களாயிருக்கும்...
பி.கு: இந்த குஷ்பு கோயில் கட்டியவர்களை.........
-------------------
தென்மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவரையுமே மதராஸிகள் எனச் சொல்லும் அறிவீனம் வட மற்றும் மேற்கு மாநிலங்களில் இன்னும் இருக்கிறது. மலையாளம் ஒரு மொழி எனவும், மலையாளி என்றால் கேரளச்சேர்ந்ததவர் என்னும் பொதுஅறிவு இன்னும் வளரவில்லை. அரசின் பண்பலை வானொலியில் கூட இரு நாட்களுக்கு முன் இரவு 9 மணி நிகழ்ச்சி நடத்தும் பெண்மணி மலையாளி தெரியாவிட்டால் தமிழ்நாடு கேரளாவில் சுமுகமாகப் போய்வரமுடியாது என திருவாய் மலர்ந்தருளினார். போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.
இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் மும்பைப் பதிப்பில் Unnatural politics please,we are Tamils என ஒரு கட்டுரை வந்திருக்கிறது. இதையெல்லாம் எப்படி பிரசுக்கிறார்கள் என இன்னும் எனக்குப் புரியவில்லை. குஷ்பு விவகாரம், ராமதாஸ் பேத்திகள் டெல்லியில் தமிழ் இல்லாத பள்ளியில் படிப்பது எனப் பல விஷயங்களைத் தொட்டிருக்கும் இக்கட்டுரையில் ஆழம் இல்லை. வேண்டாத சிந்தனைகளைத் தூண்டும் உணர்வே எதிரொளிக்கிறது. தொடங்குவதே "தமிழ்நாட்டில் 90களில் குஷ்புக்கு கோயில் கட்டப்பட்டது. அவ்வளவுக்கு பிரபலம் ஆனவரை இப்போது தமிழ் எதிரி என விரட்டுகிறார்கள் " என்னும்படியான பத்தியில்.
என்னமோ தமிழ்நாட்டில் அனைவரும்சேர்ந்து குஷ்புவுக்கு கோயில்கட்டி குடமுழுக்கு செய்ததுபோலவும், இப்போது ஒட்டுமொத்தமாக அனைவரும் அவரை தமிழினத்தின் எதிரி என ஓடஓட விரட்டுவதுபோலவும் சித்தரிக்கும் இக்கட்டுரையை தணிக்கை செய்யாமல் வெளியிட்டது ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ன் வடிகட்டிய முட்டாள்தனம். தென் மாநிலங்கள் குறித்தான சராசரி வட/மேற்கு மாநில வாழ் மக்களின் சிந்தனை என இதனைக்கொள்ளலாமா? இந்திப்படங்களில் மெகமூது 70 களில் தொடங்கிவைத்த மதராஸி இந்தி என்பதை இன்னும் தொலைக்காட்சித் தொடர்களில் சிரிப்பு (வலுக்கட்டாயமாக) வரவழைப்பதற்காக இழுக்கும் கேலிக்கூத்து தொடர்கிறது. எத்தனைபேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்? சேட் பேசும் "நம்பள் நிம்பள்' தமிழ் எல்லாம் 60 களிலேயே தமிழ்ப் படங்களில் முடிந்துவிட்டது. செருப்பால் அடித்துக்கொள்வதும், திட்டிக்கொள்வதுமே இப்போதைய நமது உயர்ந்த ஹாஸ்ய உணர்வு என இவர்களுக்குப் புரியவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ்த் திரையுலகம் கடமைப்பட்டிருக்கிறது.
அமிதாப் பச்சன் அடிபட்டுக்கிடந்தபோது பலர் கோயில்களில் சிறப்பு நேர்தல்கள் செய்ததையும்,அவருக்கு சிலைவத்து பூஜை இரு வருடங்களுக்கு முன் நடத்தியதையும், கங்குலி இந்திய கிரிக்கெட்டிற்கு மீண்டும் வந்து சேவைசெய்யவேண்டுமென கல்கத்தாவில் பூஜைகள் செய்ததையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியதை பார்த்துதான் இருக்கிறேன். அதற்காக, ஒட்டுமொத்தமாக பெங்காலிகள், வடவிந்தியர்கள் இப்படித்தான் என முத்திரை குத்துகிறோமா? முட்டாள்தனம் என்பது ஒரு இனத்திற்குச் சொந்தமில்லை என்பதை தமிழனும் குஷ்பு கோயில் மூலம் நிரூபித்திருக்கிறான். அவ்வளவே. இந்த அளவிற்கு தமிழர்கள் என்றாலே திரைப்பட நாயக/நாயகிகளுக்காக எதுவும் செய்வார்கள், இன,மொழி வெறியர்கள் எனப்படும்படி செய்திஊடகங்கள் விஷம் பரப்புவது ஆபத்தானது.
இதனைக் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு எழுதியிருக்கிறேன். கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. "kudos to your article dated..." என எழுதியிருந்தால் ஒரு வேளை எடுத்துக்கொள்வார்களாயிருக்கும்...
பி.கு: இந்த குஷ்பு கோயில் கட்டியவர்களை.........
Subscribe to:
Posts (Atom)